கர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல; நாட்டின் உளவுத்துறையின் மீதே!

முஸ்லிம்கள் குறித்த கர்தினாலின் கருத்துக்கு சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் அளித்துள்ள பதில்

0 571

தமிழில் : எம்.எப்.எம்.பஸீர்
நன்றி : medialk.com

‘ உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் நீதி நிலை நாட்­டப்­ப­டு­வது தாம­த­மாகும் போது, அதனை நாட்டின் பிரச்­சி­னை­யாக கருதி, அதற்கு முன்­னு­ரிமை கொடுத்து எமக்­காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்­வ­ர­வில்லை.’

கொழும்பு பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித், கடந்த 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் நடந்து 2 வரு­டங்கள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு நடாத்­தப்­பட்ட விஷேட மத அனுஷ்­டாங்­களில் கலந்­து­கொண்டு பேசும் போது தெரி­வித்த விட­யமே இது.
இதில், ‘ நீங்கள்’ என்ற சொற் பதம் ஊடாக மெல்கம் கர்­தினால் ரஞ்சித், முஸ்லிம் சமூகம் குறித்தே கருத்­து­ரைத்­துள்ளார். இன்னும் முஸ்லிம் சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு எதி­ராக பாரிய அளவில் குரல் எழுப்­ப­வில்லை என மெல்கம் கர்­தினால் ரஞ்சித் கூற விளைந்­தாலும், முஸ்லிம் சமூகம் சஹ்ரான் உள்­ளிட்ட குழு­வி­ன­ருக்கு எதி­ராக தாக்­கு­த­லுக்கு இரண்டு மூன்று வரு­டங்­க­ளுக்கு முன் பிருந்தே குர­லெ­ழுப்பி வந்­துள்­ளனர் என்ற உண்­மையை பதிவு செய்­வதே இக் கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

மெள­ல­வி­மாரின் எதிர்ப்பு:
காத்­தான்­குடி அல் அமீன் வித்­தி­யா­ல­யத்தின் 5 ஆம் தரம் வரை கல்வி கற்ற சஹ்ரான் ஹாசிம், இஸ்லாம் மார்க்­கத்தை படிப்­ப­தற்­காக காத்­தான்­கு­டியில் உள்ள ஜாமி­யதுல் பலாஹ் மத்­ர­ஸாவில் சேர்ந்­தி­ருந்தார். எனினும் இவ­ரது சர்ச்­சைக்­கு­ரிய செயற்­பா­டுகள் கார­ண­மாக அவர் அங்­கி­ருந்து விலக்­கப்­பட்டார்.
பின்னர் அவ­ரது ஆரம்ப ஆசி­ரி­யர்­களில் ஒரு­வ­ரான நெளபர் மெள­லவி திரு­ம­ண­மா­கி­யி­ருந்த குரு­ணாகல் பகு­திக்கு சென்று, அப்­ப­கு­தியில் உள்ள மத்­ரஸா பாட­சாலை ஒன்றில் கற்­றி­ருந்தார். அதன் பின்னர் காத்­தான்­குடி பகு­தியில் உள்ள இஸ்­லா­மிய நிலையம் ஒன்றில் கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சஹ்ரான் சேர்ந்­தி­ருந்தார். அக்­கா­லப்­ப­கு­தியில், சஹ்­ரானின் அடிப்­ப­டை­வாத கருத்­துக்­க­ளுக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்த அந்த இஸ்­லா­மிய கற்­கைகள் நிலை­யத்தில் இருந்த ஏனைய மெள­ல­விமார், சஹ்­ரானை அங்­கி­ருந்து விலக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர்.

காத்­தான்­குடி மக்கள்:
அதன் பின்னர் சஹ்ரான், அவ­னது ஆசி­ரியர் நெளபர் மெள­லவி மற்றும் சிலர் இணைந்து ‘ தாருல் அதர் ‘ எனும் அமைப்பை உரு­வாக்கி இருந்­தனர். அந்த அமைப்­பி­லி­ருந்து சஹ்ரான் கடந்த 2012 ஆம் ஆண்டில் வில­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. அதன் பின்னர் சஹ்­ரானின் தலை­மையில் தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. சஹ்­ரானின் சகோ­த­ரர்­க­ளான மொஹம்மட் காசிம் மொஹம்மட் சைனி, மொஹம்மட் காசிம் மொஹம்மட் ரில்வான் மற்றும் 15 வய­துக்கும் 25 வய­துக்கும் இடைப்­பட்ட இளை­ஞர்கள் சிலர் அந்த அமைப்பில் ஆரம்­பத்தில் உறுப்­பு­ரி­மையைப் பெற்­றுள்­ளனர். அந்த அமைப்­பூ­டாக சஹ்ரான் அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களை விதைக்க ஆரம்­பித்தன் பின்னர், காத்­தான்­குடி மக்கள் அதற்கு எதி­ராக தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­தனர். அதன் உச்ச கட்­டமே 2017 இல் வெளிப்­பட்­டுள்­ளது.

சஹ்­ரா­னுக்­காக
வளைக்­கப்­பட்ட சட்டம்:
கடந்த 2017 மார்ச் 10 ஆம் திகதி, காத்­தான்­குடி அலியார் சந்­தியில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்­பினர் மேடை போட்டு நிகழ்­வொன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளனர். இதற்கு அப் பகு­தியில் வாழும் சுன்னத் வல் ஜமாஅத் பிரிவின் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர். இந் நிலையில் சஹ்ரான் மற்றும் அவ­ருக்கு நெருக்­கா­மான சிலர், ‘ தேசிய தெளஹீத் ஜமா அத்’ என பொறிக்­கப்­பட்ட மஞ்சள் நிற ரீ சேட்­டுக்­க­ளுடன் குறித்த இடத்­துக்கு சென்று, வாள்கள், பொல்­லு­க­ளுடன் அவ்­வி­டத்தில் இருந்­த­வர்கள் மீது தக்­குதல் நடாத்­தி­யுள்­ளனர். இந்த சம்­பவம் நடக்கும் போது தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை வெறும் 60 மட்­டுமே என கூறப்­ப­டு­கி­றது.
இந்த தாக்­கு­தலில் இருவர் வெட்டுக் காயங்­க­ளுக்கு உள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அந்த சம்­ப­வத்தின் பின்னர் இரு தரப்­பிலும் சுமார் 10 பேர் வரை கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்கள் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் கூறு­கின்­றனர். எனினும் அது தொடர்பில் சஹ்­ரா­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என பிர­தே­ச­வா­சிகள் குற்றம் சுமத்­து­கின்­றனர். அந்த சம்­ப­வத்தின் பின்னர் சஹ்­ரா­னுக்கு எதி­ரான முஸ்­லிம்­களின் எதிர்ப்பு பிர­சித்­த­ம­டைய ஆரம்­பித்­தது.

திட்­ட­மி­டப்­பட்ட நட­வ­டிக்கை :
குறித்த சம்­பவம் நடந்து இரண்டு மூன்று நாட்­களில் சஹ்­ரா­னுக்கு எதி­ராக காத்­தான்­கு­டியில் முஸ்­லிம்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அவர்­களின் ஆர்ப்­பாட்ட பதா­தை­களில், சஹ்­ரானின் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் எழு­தப்­பட்­டி­ருந்­தன. அவ்­வார்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்டோர் சஹ்­ரானின் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­களை விமர்­சித்­தனர். சஹ்­ரானின் அமைப்பை தடை செய்­யு­மாறு கோரினர். அத்­துடன் முஸ்­லிம்கள் சஹ்­ரா­னுக்கு எதி­ராக பேஸ் புக் சமூக வலைத் தளம் ஊடா­கவும் பாரிய பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தனர்.

குற்­றத்தை குற்­ற­மாக காண்போம்:
இவ்­வாறு முஸ்­லிம்கள் சஹ்­ரா­னுக்கு எதி­ராக, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கு இரண்டு மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ரேயே குர­லெ­ழுப்­பி­யி­ருந்­தனர். ஏதேனும் ஒரு மதக் குழு, தனது மதத்­தினை சார்ந்த பிறி­தொரு குழுவை அடிப்­ப­டை­வா­திகள் எனக் கூறி எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­வதை குறைத்து மதிப்­பிட முடி­யாது. அது சாதா­ர­ண­மாக நிகழும் விட­ய­மல்ல. எவ்­வா­றா­யினும் இலங்கை முஸ்­லிம்கள் சஹ்ரான் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக குர­லெ­ழுப்­பினர்.

செல்­வந்­த­ரான சஹ்ரான்:
சஹ்­ரா­னுக்கு எதி­ராக முஸ்­லிம்கள் பொலிஸில் முறைப்­பாடு செய்­தனர். பொது­வாக சொல்­வ­தென்றால், சஹ்­ரா­னுக்கு எதி­ராக காத்­தான்­குடி மற்றும் கல்­முனை முஸ்­லிம்கள் செய்த முறைப்­பாடு தொடர்பில் நியாயம் கிடைக்­க­வில்லை என்­பதே முஸ்­லிம்­களின் நிலைப்­பா­டாகும். 2017 ஆம் ஆண்டு சம்­ப­வத்தின் பின்னர் சஹ்ரான் காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து தலை­ம­றை­வாக வாழ்ந்­த­தாக கூறப்­பட்­டாலும், அவ்­வப்­போது சஹ்ரான் காத்­தான்­கு­டிக்கு வந்து சென்­றுள்­ள­தாக அப் பிர­தேச மக்கள் கூறு­கின்­றனர். இக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே சஹ்ரான் செல்­வந்­த­னாக மாற ஆரம்­பித்­த­தா­கவும் அம்­மக்கள் கூறு­கின்­றனர்.

உளவுப் பிரி­வு­களின்
அமைதி நிலை:
சஹ்­ரானின் புகைப்­ப­டத்தை காண்­பித்து, காத்­தான்­குடி மக்கள் நடு வீதியில் ஆர்ப்­பாட்டம் செய்யும் போதும், சஹ்ரான் ஒரு அடிப்­ப­டை­வாதி என்று கூறும் போதும், சஹ்­ரா­னுக்கு எதி­ராக சமூக வலைத் தளங்­களில் மக்­களை தெளி­வு­ப­டுத்தும் போதும் இலங்கை உளவுப் பிரி­வு­களின் அவ­தானம் அது தொடர்பில் செலுத்­தப்­ப­டாமை மிக ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரிய விட­ய­மாகும்.

தாக்­குதல் தொடர்பில் முஸ்­லிம்கள் கவ­லை­ய­டைய வேண்டும் என கூறும் கர்­தினால், தாக்­கு­த­லுக்கு முன்னர் முஸ்­லிம்கள் சஹ்ரான் தொடர்பில் வெளிச்சம் போட்டு காட்டும் போது உளவுப் பிரி­வுகள் அது தொடர்பில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தாமை, பாது­காப்புத் தரப்­பினர் அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்து எத­னையும் கூறாமல் அமைதி காப்­பது அத­னை­விட ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாகும்.

2 ஆம் கட்ட தாக்­கு­தலை
தடுத்­தது யார்?
இந்த தாக்­கு­தலைத் தொடர்ந்து அடிப்­ப­டை­வாத குழு, 2 ஆம் கட்ட தாக்­குதல் ஒன்­றுக்கும் தயா­ராக இருந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. அது, கல்­முனை – சாய்ந்­த­ம­ருது வீட்டில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வத்­து­ட­னேயே சாத்­தி­ய­மற்­ற­தாக போனது. கல்­முனை – சாய்ந்­த­ம­ருது பகுதி வீடொன்றில், முன் பின் தெரி­யாத முஸ்லிம் குழு­வொன்று ஒன்­று­கூ­டி­யி­ருப்­பதை அதன் அருகே வசிக்கும் முஸ்­லிம்கள் அறிந்­துள்­ளனர். இது தொடர்பில் அப்­ப­கு­தியைச் சேர்ந்த ஒருவர், விசா­ரிக்கச் சென்ற போது, அவ்­வீட்­டி­லி­ருந்த ஒருவர் அந் நபரை அச்­சு­றுத்­தி­யுள்ளார். அதன் பின்னர், சஹ்­ரானின் சகோ­த­ரர்கள் மறைந்­தி­ருந்த சாய்ந்­த­ம­ருது வீடு தொடர்­பி­லான தகவல் கூட பொலி­ஸா­ருக்கு அப்­ப­குதி முஸ்லிம் ஒரு­வ­ரா­லேயே வழங்­கப்­பட்­டது.

குறித்த பகுதி முஸ்­லிம்­களின் எதிர்ப்பு கார­ண­மா­கவே, சஹ்­ரானின் சகோ­த­ரர்கள் உள்­ளிட்ட குழு­வினர், சாய்ந்­த­ம­ருது வீட்டில் தற்­கொலை செய்­து­கொள்ள வேண்­டிய நிலைக்கு ஆளா­கினர். தமது தக­வல்­களை வெளிப்­ப­டுத்த வேண்டாம் என குறித்த வீட்­டி­லி­ருந்­த­வர்கள் பண நோட்­டுக்­களை கூட வீசி­யெ­றிந்­த­தாக பதி­வா­கி­யுள்­ளது. இவை ஊட­கங்­க­ளிலும் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.

எனினும் மெல்கம் கர்­தினால் ரஞ்சித், இவை குறித்து அவ­தானம் செலுத்­தாமல், ‘ முஸ்­லிம்கள்’ மீதே விரல் நீட்­டிக்­கொண்­டி­ருக்­கின்றார்.

இலங்­கையின் முஸ்லிம் அமைப்­புக்கள் கூட, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக குர­லெ­ழுப்­பிய சந்­தர்ப்­பங்கள் ஏராளம் உள்­ளன. தாக்­கு­தலின் பின்­னரும் குர­லெ­ழுப்­பிய சந்­தர்ப்­பங்கள் பல உள்­ளன. அது எதுவும் மெல்கம் கர்­தினால் ரஞ்­சித்தின் அவ­தா­னத்­துக்கு உள்­ளா­காமை பிரச்­சி­னைக்­கு­ரி­யதே.

திசை மாறிச் செல்லும் கர்­தினால்:
தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்கள் கண்ணீர் வடிக்­கின்­றார்­களா என்­பது மெல்கம் கர்­தினால் ரஞ்சித் அவ­தா­னிக்க வேண்­டிய விட­ய­மல்ல. தாக்­கு­த­லுக்கு இரண்டு மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே முஸ்­லிம்கள் சஹ்ரான் தொடர்பில் குறிப்­பிட்ட போது, சஹ்ரான் கும்பல் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு தயா­ரா­வ­தாக கூறிய போது, சஹ்­ரா­னுக்கு நிதி கிடைக்கும் வழி­களை ஆரா­யு­மாறு கூறும் போது, தாக்­குதல் நடாத்­தப்­படும் வரை இலங்­கையின் உளவுப் பிரி­வுகள் அது தொடர்பில் அவ­தானம் செலுத்­தாமை ஏன் என்­பது தொடர்பில் மெல்கம் கர்­தினால் ரஞ்­சித்தின் அவ­தானம் செலுத்­தப்­பட வேண்டும்.

இலங்­கையில் பொலிஸ் உளவுப் பிரி­வுகள் பல உள்­ளன. இத­னை­விட முப்­ப­டை­களின் உளவுப் பிரி­வுகள் செயற்­ப­டு­கின்­றன. அப்­படி இருக்­கையில், இவ்­வா­றான தாக்­குதல் ஒன்று தொடர்பில் சரி­யான தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொள்­ளாமை குறித்து மெல்கம் கர்­தினால் ரஞ்சித் கேள்வி எழுப்­பாமல் இருப்­பது ஏன்? பொது மக்­களின் பணத்தில் சம்­பளம் பெறும் அரச அதி­கா­ரி­களை போலவே, மக்­களின் நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் ஏதோ ஒரு சிவில் அதி­கா­ரத்­துடன் செயற்­படும் மதத் தலை­வர்­க­ளுக்கும், வேறு ஒரு மத குழு­வினர் மீது விரல் நீட்­டி­விட்டு பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது.
எந்­த­வொரு இன, மதங்­க­ளி­டை­யேயும் அடிப்­ப­டை­வா­திகள் இருக்­கலாம். மெல்கம் கர்­தினால் ரஞ்சித் கூறி­யதைப் போலவே, அவர்­களை வேறு அர­சியல் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­வது மிக இல­கு­வா­ன­தா­கவும் இருக்­கலாம். அதனால் மத அடிப்­ப­டை­வாதம் தொடர்பில் அதே மதத்தைச் சேர்ந்தவர்கள் மிக அவதானமாக இருப்பதே மிக முக்கியமான விடயமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.