சஹ்ரான் குறித்து முஸ்லிம்கள் பொறுப்புடனே செயற்பட்டனர்

நீதி அமைச்சர் அலிசப்ரி

0 522

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
கடந்­த­கால சம்­ப­வங்­களில் இருந்து பாடம் கற்­றுக்­கொண்டு இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­றுமை, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். மாறாக சுய­நல அர­சியல் நோக்­கத்தில் செயற்­பட்டு ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் பயங்­க­ர­வா­தத்­தின்பால் தள்­ளி­வி­டக்­கூ­டாது. அத்­துடன் இந்த தாக்­கு­தலின் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்டும் என நீதி அமைச்சர் அலி­சப்ரி தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற ஏப்ரல் தாக்­குதல் தொடர்பில் விசா­ரணை மேற்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை மீதான நான்­கா­வ­துநாள் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,
இந்த தாக்­கு­தலை தடுக்கக் கூடி­ய­தாக இருந்­தாலும் பொறுப்­பா­ன­வர்கள் தவறி விட்­ட­தாக ஆணைக்­கு­ழுவின் அறிக்கை சுட்­டிக்­காட்­டு­கி­றது. இரத்த தாகம் கொண்ட குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை முழு முஸ்லிம் சமூ­கமும் கண்­டித்­துள்­ளது. இத­னுடன் தொடர்­புள்ள அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும்.பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் எமது கவ­லையை தெரி­விக்­கிறோம்.

மேலும் 1100 வரு­டங்­க­ளாக ஏனைய சமு­கங்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழும் மக்­களை அடிப்­ப­டை­வா­தத்தின் பால் தள்­ளு­வ­தாக அமை­யக்­கூ­டாது. பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு பதி­லாக பிரி­வி­னையை வளர்ப்­ப­தாக இந்த அறிக்கை இருக்­கக்­ கூ­டாது.

அதே­போன்று சுய­லாப அர­சி­ய­லுக்­காக இந்த பிரச்­சி­னையை பயன்­ப­டுத்தி இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ண­க்கத்தை குழப்பும் வகையில் இந்த அறிக்­கையை யாரும் பயன்­ப­டுத்தக் கூடாது. இலங்­கையில் வாழும் மொத்த முஸ்­லிம்­களும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக எந்த சாட்­சியும் கிடை­யாது என அறிக்கை தெரி­விக்­கி­றது. அவ்­வாறு இருந்தும் அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டுகள் சமூக வலைத்­த­ளங்­களின் வாயி­லாக பரப்­பப்­ப­டு­கி­ன்றன.

மேலும் சாய்ந்­த­ம­ருதில் இயங்­கிய பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­புள்ள வீடு அப்­பி­ர­தேச மக்கள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்தே பிடி­பட்­ட­தையும் அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. எந்­த­வொரு மதமும் அடிப்­ப­டை­வாதம் இன­வா­தத்­துக்கு இட­ம­ளிப்­ப­தில்லை.

உங்­க­ளுக்கு உங்கள் மார்க்கம் எமக்கு எமது மார்க்கம் என்றே குர்ஆன் குறிப்­பி­டு­கி­றது. கொடை­வ­ழங்­குதல், தொழுதல் என்­ப­வற்றை விட மற்­ற­வர்கள் மத்­தியில் ஒற்­று­மையை வளர்ப்­பதை உயர்­வான விட­ய­மாக நபிகள் நாயகம் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். அதே­போன்று குரோ­தத்­தினால் மேலும் குரோதம் வளரும் என்று புத்­த­பிரான் போதித்­தி­ருக்­கிறார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் வாழும் நாங்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் குரோதம், சந்­தேகம்,வெறுப்பு என்­ப­வற்றில் இருந்து நீங்கி, ஒவ்­வொ­ரு­வர்­க­ளுக்கும் இடையில் நல்­லு­றவை வளர்­க்கவும் ஒற்­று­மை­யை­பே­ணவும் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். அவ்­வாறு இல்­லாமல் இறந்த காலத்தின் மோச­மான நினை­வு­களின் சிறைக்­கை­தி­க­ளாக மாறக் கூடாது.

இஸ்­லாத்தை அண்­டி­ய­தாக உரு­வாகும் பயங்­க­ர­வாத்தை ஒழிக்கும்போது முஸ்­லிம்­களின் ஒத்­து­ழைப்பை பெற­வேண்டும்.சஹ்ரான் உள்­ளிட்ட குழு தொடர்பில் முஸ்­லிம்கள் பொறுப்­புடன் செயற்­பட்­டார்கள். முஸ்­லிம்கள் பலர் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்கள். அடிப்­ப­டை­வா­திகள் தொடர்­பாக தகவல் வழங்­கிய மாவ­னல்ல பிர­தேச இளைஞர் சுடப்­பட்டார். நாட்டில் வாழும் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் நகைப்­புக்­குள்­ளாக்கி ஒதுக்­காமல், பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு அவர்களை பங்காளர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

பொதுவாக முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை ஆதரிக்கவில்லை.ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவே அவர்கள் விரும்புகின்றனர். இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றை பரப்பி மக்களை தூரமாக்காது மக்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும்.சந்தேகத்தை ஒதுக்கி கௌரவமான சமூகமாக வாழ்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.