ரமழான் வரு­கி­றது: பள்­ளிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்ப­டுமா?

0 552

றிப்தி அலி

அன்று வெள்­ளிக்­கி­ழமை… நண்­பகல் 12.05 மணி­ய­ளவில் ஜும்ஆத் தொழு­கைக்­காக விரைந்­து­கொண்­டி­ருந்தேன்.
அப்­போது, கொழும்பு நக­ரி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு அருகில் பாரிய கூட்டம். என்­ன­வென்று அருகில் நின்­ற­வ­ரிடம் கேட்டேன்.
“பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­காக ஒரு சம­யத்தில் 50 பேர் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். 50 பேர் பள்­ளிக்குள் ஏற்­க­னவே சென்­றுள்­ள­மை­யினால் பள்­ளி­வா­சலின் கத­வினை மூடி­விட்­டார்கள்.

முத­லா­வது ஜும்ஆ முடிந்த பின்னர், பி.ப 1.00 மணி­ய­ள­வி­லேயே மீண்டும் 50 பேரை பள்­ளிக்குள் அனு­ம­திப்­பார்­களாம். அது­வரை காத்­துக்­கொண்­டி­ருக்­கின்றேன்” என பள்­ளி­வா­சலின் கேட்­டி­யி­லி­ருந்­த­வாறு பதி­ல­ளித்தார் சுமார் 55 வயது மதிக்­கத்­தக்க ஒருவர். பின்னர் என்ன செய்­வது, நான் ஜும்ஆ தொழு­கை­யின்றி வீடு வந்து லுஹர் தொழு­கையினை நிறை­வேற்­றினேன்.

இதே­வேளை, கடந்த பெப்­ர­வரி 5ஆம் திகதி கொழும்­பிலுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு ஜும்ஆ தொழு­கைக்­காக சென்ற போது, கொவிட் – 19 கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக விரும்­பத்­தகாத சம்­ப­வ­மொன்­றினை எதிர்கொண்டதாக ஊட­க­வி­ய­லாளர் அஷ்ரப் ஏ. சமத் தனது பேஸ்­புக்கில் பதி­விட்­டி­ருந்தார்.
பள்­ளி­வா­சல்கள் மீது விதிக்­கப்­பட்­டுள்ள கொவிட் – 19 கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக இது போன்ற பல பிரச்­சி­னை­களை நாளாந்தம் தொழு­கைக்­காக செல்லும் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

கடந்த வருடம் நாட்டில் ஏற்­பட்ட கொரோனா வைரஸ் பரவல் கார­ண­மாக 2020 மார்ச் 15ஆம் திகதி நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­களும் மூடப்­பட்டு ஜூன் 12ஆம் திகதி பல்­வேறு நிபந்­த­னை­க­ளுக்கு மத்­தியில் திறக்­கப்­பட்­டன.

எனினும் கடந்த ஒக்­டோபர் 4ஆம் திகதி நாட்டில் மீண்டும் ஏற்­பட்ட இரண்­டா­வது கொரோனா வைரஸ் பரவல் கார­ண­மாக நாட்டின் பல பிர­தே­சங்கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டன. இந்த தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட பிர­தே­சங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­களும் மூடப்­பட்­டன.

அப்­பி­ர­தே­சங்­களில் தனி­மைப்­ப­டுத்தல் நீக்­கப்­பட்­ட­தனை அடுத்து பள்­ளி­வா­சல்கள் மீண்டும் திறக்­கப்­பட்­டன. எனினும், பள்­ளி­வா­சல்கள் மீது விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டுகள் இன்று வரை தொடர்ந்து வரு­கின்­றன.

குறிப்­பாக பள்­ளி­வா­சலில் தொழு­கைக்கு ஒரு நேரத்தில் 50 பேர் அல்­லது அதை விட குறை­வா­னர்கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டுவர், பள்­ளி­வா­ச­லினுள் நுழை­வ­தற்கு, ஒரு நுழை­வா­யிலை மட்டும் பயன்­ப­டுத்தல், பள்­ளி­யினுள் இருக்­கின்ற போது ஒவ்­வொ­ரு­வரும் மாஸ்க் அணிந்­தி­ருப்­ப­தோடு ஒரு மீட்டர் இடை­வெ­ளி­யையும் பேண வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் தொழு­கைக்கு செல்­வ­ப­வர்கள் முஸல்லா எனப்­படும் தொழுகை விரிப்­பொன்றை கொண்டு செல்­வ­தோடு ஒரு மீட்டர் இடை­வெ­ளியை பேண வேண்டும், பள்­ளிக்கு வரு­ப­வர்கள் அனை­வ­ரது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடை­யாள அட்டை இலக்கம் ஆகி­ய­வற்­றினை பதி­வேட்டில் பதிய வேண்டும். ஒவ்­வொரு தொழு­கைக்­கான அதா­னுக்கு 15 நிமி­டங்­க­ளுக்கு முன்னர் பள்­ளி­வாசல் திறக்­கப்­பட்டு, தொழு­கையைத் தொடர்ந்து 45 நிமி­டங்­களில் மூடப்­பட வேண்டும். பள்­ளி­வா­சலில் வுழூச் செய்யும் பகுதி, மல­சல கூடங்கள் மறு அறி­வித்தல் வரை மூடப்­பட வேண்டும் உள்­ளிட்ட பல நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­டன.இன்று வரை தொடர்­கின்ற இந்த கட்­டுப்­பா­டு­கள் தலைநகரில் இறுக்கமாக பின்பற்றப்படுகின்ற போதிலும் ஏனைய பகுதிகளில் முறையாக அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனவா என்­பதும் கேள்­விக்­கு­றி­யாகும்.

நாட்­டி­லுள்ள பல பிர­தே­சங்­களில் இந்த சுகா­தார வழி­காட்­டல்­களை அமுல்­ப­டுத்­தப்­ப­டா­மை­யினை நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.
எவ்­வா­றா­யினும், “கொழும்பு மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களில் வக்பு சபை­யினால் வெளி­யி­டப்­பட்ட சுகா­தார வழி­காட்டல் இன்று வரை அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­தாக மாவட்ட பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார்.

இதன் கார­ண­மாக தூரப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து கொழும்­பிற்கு வரும் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்­கப்­ப­டு­வ­தையும் எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது. தூரப் பிர­தே­சங்­க­ளி­லிருந்து வரு­கின்­ற­வர்­களின் மார்க்க, இயற்கைத் தேவைகளை நிறைவேற்றவும் ஓய்­வெடுக்கவும் பள்­ளி­வா­சல்­களே பெரிதும் உதவுகின்றன.
எனினும் தொழுகை நிறை­வ­டைந்­த­வுடன் பள்­ளி­வா­சல்கள் மூடப்­ப­டு­கின்­ற­மை­யினால், பலர் பள்­ளி­வா­சலுக்குச் செல்ல முடி­யாது வீதி­களில் அலைந்து திரி­கின்­றனர்.
அது மாத்­தி­ர­மல்­லாமல், உட­ன­டி­யாக பள்­ளி­வா­சல்கள் மூடப்­ப­டு­கின்­ற­மை­யினால், ஜமாஅத் தொழு­கையில் கலந்­து­கொள்­ளா­வ­தர்களால் பள்­ளிக்குள் செல்ல முடி­யாதுள்ளது. இதனால் பலரின் தொழு­கை­கள் கழா­வா­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸல்லா இல்­லாமல் செல்­கின்­ற­வர்­க­ளுக்கு பள்­ளிக்கு அருகில் நிற்­ப­வர்கள் நன்மை என்ற அடிப்­ப­டையில் தங்­களின் முஸ­ல்லாக்­களை வழங்­கு­­கின்­றனர். இது­ ஒருவகையில் உதவியாக அமைகின்ற போதிலும் கொரோனா பரவலைப் பொறுத்தவரை பாரதூரமான செயற்­பா­டாகும். இதன் கார­ண­மாக கொரோனா வைரஸ் பர­வு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

“வக்பு சபை­யினால் வெளி­யி­டப்­பட்ட சுகா­தார வழி­காட்­டி­யினை எமது பள்­ளி­வாசல் இன்று வரை அமுல்­ப­டுத்தி வரு­கின்­றது” என கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் தலைவர் எம். தௌபீக் சுபைர் தெரி­வித்தார்.

“இதனால், தொழு­கைக்கு வரு­கின்­ற­வர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கு­வது எமக்கு தெரியும். எனினும் பள்­ளி­வா­சல்­களின் ஊடாக கொரோனா வைரஸ் பர­வி­விட்­டது என்ற குற்றச்சாட்டு வந்துவிடக்கூ­டாது என்­பதன் கார­ண­மாக இந்த வழி­காட்­டல்­களை தொடர்ச்சியாக பேணி வரு­கின்றோம்” என அவர் குறிப்­பிட்டார்.
இந்த நட­வ­டிக்­கை­யினால் தமது பள்­ளி­வா­சலில் கட­மை­யாற்­று­ப­வர்கள் பல்­வேறு சிக்­கல்­க­ளையும், எதிர்­நோக்­கி­ய­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை, கடந்த ரமழான் மாதத்தில் பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட்­ட­மை­யினால் வீடு­க­ளி­லி­ருந்தே ரமழான் மாத அமல்­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. வழ­மை­யாக ரமழான் மாதம் முழு­வதும் பள்­ளி­வா­சல்கள் சுறு­சு­றுப்­பாக இயங்­கு­வ­துடன் பல்­வேறு நிகழ்ச்­சிகள் தொடர்ந்து 30 நாட்­களும் இடம்­பெ­று­வது வழ­மை­யாகும்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், இப்தார், தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் போன்று இரவு நேரத் தொழு­கை­களும் இடம்­பெ­று­வது வழ­மை­யாகும். இந்த வருட ரம­ழா­னிற்கு இன்னும் 15 நாட்­களே மாத்­திரம் உள்­ளன.

எனினும் வக்பு சபை­யினால் விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டுகள் இது­வரை தளர்த்­தப்­ப­டா­மை­யினால், இந்த ரமழான் காலப் பகு­தியில் பள்­ளி­வா­சல்­களில் எவ்­வாறு நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்­வது என்­பது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­கள் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

இதன் கார­ண­மாக கொவிட் – 19க்கு மத்­தியில் எவ்­வாறு ரமழான் அமல்­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பி­லான வழி­காட்­டி­யொன்­றினை வெளி­யி­டு­மாறு முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்­திடம் கோரி­யுள்­ள­தாக கொழும்பு மாவட்ட பள்­ளி­வாசல் சம்­மே­ளத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார்.

“இந்த கோரிக்கை இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் அனுப்­பி­யி­ருந்தோம். எனினும் வக்பு சபை­யி­ட­மி­ருந்து இது­வரை எந்த பதி­லு­மில்லை” என அவர் குறிப்­பிட்டார்.
“தற்­போ­தைய சூழ்­நி­லையில் சுகா­தார வழி­காட்­டலுக்கு அதிக முக்­கி­யத்­துவம் வழங்க வேண்­டி­யுள்­ளது. பள்­ளி­வா­சல்­களில் அடிக்­கடி ஒன்­று­கூ­டல்கள் இடம்­பெ­று­வ­தனால் கொரோனா வைரஸ் இல­கு­வாக பரவும் என்ற அச்ச உணர்­வொன்­றுள்­ளது” என அவர் கூறினார்.

எவ்­வா­றா­யினும் ரமழான் மாதத்­தினை சிறப்­பாக அனுஷ்­டிப்­ப­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் சுகா­தார அமைச்­சுடன் இணைந்து வக்பு சபை உடன­டி­யாக எடுக்க வேண்டும் என அஸ்லம் ஒத்மான் வேண்­டுகோள் விடுத்தார்.

இதே­வேளை, “நாட்டுச் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்டு புனித ரமழான் மாத அமல்­களை இலங்கை முஸ்­லிம்கள் சிறப்­பாக முன்னெ­டுக்க வேண்டும்” என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பதில் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் தெரி­வித்தார்.

கொரோ­னா­விற்கு மத்­தியில் எவ்­வாறு ரமழான் மாத அமல்­களை மேற்­கொள்­வது என்­பது தொடர்­பான விசேட அறிக்­கை­யொன்­றினை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா இன்னும் ஓரிரு தினங்­களில் வெளி­யி­ட­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

கடந்த சில வரு­டங்­களில் புனித ரமழான் மாத அமல்­களை சிறப்­பாக நிறை­வேற்ற முடி­யாமல் போய்விட்­டது. இதன் கார­ண­மாக இந்த வருடம் புனித ரமழான் மாதத்தில் அதிக அமல்­களை நிறை­வேற்ற முயற்­சிக்­கு­மாறு அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் வேண்­டுகோள் விடுத்தார்.

“ரமழான் மாதத்தில் பள்­ளி­வா­சல்­களில் எவ்­வாறு செயற்­ப­டு­வது என்பது தொடர்பில் பிர­தேச சுகா­தார வைத்­திய அதி­கா­ரிகள் மற்றும் பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்கள் ஆகி­யோ­ருடன் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­கள் கலந்­து­ரை­யாடி சிறப்­பாக அமல்­களை மேற்கொள்ள நட­வ­டிக்கை எடுக்­க வேண்டும் என அவர் மேலும் தெரி­வித்தார்.
இதே­வேளை, “கொவிட் – 19க்கு மத்­தியில் ரமழான் அமல்­களை பள்­ளி­வா­சல்­களில் எவ்­வாறு மேற்­கொள்­வது என்­பது தொடர்­பான வழி­காட்­டி­யொன்று விரைவில் வெளி­யி­டப்­படும்” என முஸ்லிம் சமய கலா­சார திணைக்­கள பணிப்­பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரி­வித்தார்.

தராவீஹ், இப்தார், கஞ்சி வழங்கல் போன்ற செயற்­பா­டு­களை எவ்­வாறு மேற்­கொள்­வது என்­பது தொடர்பில் விளக்கம் கோரி பள்­ளி­வா­சல்­க­ளினால் திணைக்­க­ளத்­திற்கு கடிதங்கள் அனுப்­பப்பட்­டுள்­ள­தாகவும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் இன்று (நேற்று) நடை­பெ­ற­வுள்ள வக்பு சபையின் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. விரைவில் இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ முடிவு அறி­விக்­கப்­படும்” என பணிப்­பாளர் மேலும் கூறினார்.

இதே­வேளை, “ரமழான் மாதத்தில் பள்­ளி­வா­சல்கள் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பான வழிகாட்டல் சுற்றுநிருபம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்” என சுகாதா அமைச்சின் கொவிட் – 19 செயற்பாடுகளுக்கான இணைப்பு பொறுப்பதிகாரி வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறினார்.

ரமழான் மாதத்­தி­னை­யொட்டி பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களில் சில தளர்­வு­களை மேற்­கொள்ள சுகா­தார அமைச்சு எதிர்­பார்க்­கி­றது. அது­போன்று பள்­ளி­வா­சலின் பரப்­ப­ள­வினைப் பொறுத்தே தொழு­கைக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­பவர்­களின் எண்­ணிக்­கை­யினை தீர்­மா­னிப்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­ப­டு­வ­தாக தெரி­வித்த வைத்­தியர் அன்வர் ஹம்தானி, இது தொடர்பில் அமைச்சு மட்­டத்­தி­லான கலந்­து­ரை­யா­டல்கள் தற்­போது இடம்­பெற்று வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

நாட்டில் சினிமா திரை­யரங்­குகள், அர­சியல் மற்றும் பொது ஒன்­று­கூ­டல்கள் மற்றும் களி­யாட்ட நிகழ்­வு­களில் சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்கு அமைய சுமார் 100க்கு மேற்­பட்டோர் பங்­கு­பற்ற முடியும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­சல்­களில் மாத்­திரம் இவ்­வாறு 50 பேருக்­கான கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விதிகள் தளர்த்தப்பட்டு எதிர்வரும் புனித ரமழானை இலங்கை முஸ்லிம்கள், சுகாதார விதிகளை பேணியும் திருப்தியான முறையிலும் பள்ளிவாசல்களோடு இணைந்து சிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.