முஸ்லிம் எம்.பி.க்கள் தமது பொறுப்பை உணர வேண்டும்

0 619

முஸ்லிம் சமூகம் இருள்­ம­ய­மான ஓர் எதிர்­கா­லத்தை நோக்கித் தள்­ளப்­பட்டு வரு­கி­றது. பெரும்­பான்மைப் பலத்­துடன் பத­விக்கு வந்த அர­சாங்கம் பெரும்­பான்மை மக்­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக முஸ்­லிம்­களைக் குறிவைத்­தி­ருப்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

கொவிட் 19 ஜனாஸா நல்­ல­டக்க உரி­மையைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக நடாத்­திய போராட்டம் முடி­வுக்கு வந்து நிம்­மதிப் பெரு­மூச்சு விடு­வ­தற்­கி­டையில் மேலும் பல சவால்­களை நாம் எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது.

அர­சாங்கம் திடீ­ரென முஸ்­லிம்கள் மீதான பல்­வேறு தடை­களை விதிக்­கவும் சீர்­தி­ருத்­தங்­களை அமுல்­ப­டுத்­தவும் முயற்­சிப்­பதன் காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­க­ளே­யாகும்.

இந்த அறிக்­கையின் சிபா­ரி­சுக்­க­மைய, முஸ்லிம் பெண்கள் அணியும் புர்­கா­வைத் ­தடை செய்­வ­தற்­கான முன்­னெ­டுப்­புகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. அதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர கையொப்­ப­மிட்­டுள்ளார். இன்னும் ஓரிரு வாரங்­களில் இது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யாடி அங்­கீ­காரம் பெற்­றுக்­கொள்­ளப்­படும் என அமைச்சர் சரத் வீர­சே­கர தெரி­வித்­துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ரணை நடாத்­திய பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கைகள் புர்கா தடை செய்­யப்­ப­ட­வேண்­டு­மென பரிந்­து­ரைத்­துள்­ளன. இப்­ப­ரிந்­து­ரையை முன்­வைத்­த­வர்­களில் முஸ்லிம் அர­சியல்வாதி­களும் உள்­ளார்கள்’’ எனவும் அமைச்சர் வீர­சே­கர வெளி­நாட்டு செய்திச் சேவைக்கு தெரி­வித்­துள்­ள­மையை இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும். அதே போன்று அமைச்­ச­ர­வையில் இருக்கும் ஒரே முஸ்லிம் அமைச்­ச­ரான நீதி­ய­மைச்சர் அலி சப்ரி இந்த விட­யத்தில் எதிர்ப்­பு­களைத் தெரி­விக்­க­வில்லை என்றும் சரத் வீர­சே­கர குறிப்­பிட்­டுள்ளார்.

மறு­புறம் மத்­ர­சாக்கள் தடை செய்­யப்­படும் என்ற தனது கருத்து தொடர்பில் அமைச்சர் சரத் வீர­சே­கர நேற்று பாரா­ளு­மன்­றத்தில் விளக்­க­ம­ளித்­துள்ளார். 5–16 வயது வரை­யான மாண­வர்­க­ளுக்கு இஸ்லாம் மற்றும் அரபு கற்­பிக்கும் மத்­ர­சாக்­களே தடை செய்­யப்­படும் என்றும் 16 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்­கான மத்­ர­சாக்கள் தடை செய்­யப்­ப­டாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அவ்­வா­றெனில் 5–16 வய­துக்­கி­டைப்­பட்ட மாண­வர்கள் தமது இஸ்­லா­மிய சம­யத்­தையோ அல்­லது அல்­குர்­ஆ­னையோ கற்க முடி­யாதா என்ற கேள்வி எழு­கி­றது. குறித்த வயதில் பாட­சாலைக் கல்­வியைக் கைவிட்டு இஸ்லாம் மற்றும் அரபு மொழியை மாத்­திரம் கற்­ப­தையோ கற்­பிப்­ப­தையோ ஏற்க முடி­யாது. ஆனால் தமது பாட­சாலைக் கல்­வியைத் தொடர்ந்து கொண்டே மார்க்­கத்­தையும் பயி­லு­கின்ற மாண­வர்­களின் மத ரீதி­யான உரி­மையைத் தடை செய்­வ­தா­கவே அமைச்சர் சரத் வீர­சே­க­ரவின் புதிய அறி­விப்பு அமைந்­துள்­ளது. இது ஆபத்­தா­ன­தாகும்.

அமைச்­சரின் அண்­மைக்­கால கருத்­துக்­களை நோக்­கும்­போது அவ­ருக்கு முஸ்லிம் சமூகம் குறித்தும் இஸ்­லா­மிய சமயம் குறித்தும் போதிய தெளி­வில்லை என்­பது நன்கு புரி­கி­றது. அவ­ச­ரப்­பட்ட வித­மான அவ­ரது அறிக்­கைகள் சர்­வ­தேச ரீதியில் நாட்­டுக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந் நிலையில் அமைச்­ச­ருக்கும் ஏனைய அர­சாங்க முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும் புர்கா, மத்­ரசா, முஸ்லிம் தனியார் சட்டம் உள்­ளிட்ட ஏனைய சமய, சமூக விவ­கா­ரங்கள் குறித்து தெளி­வு­களை வழங்க வேண்­டி­யது யார்? நிச்­ச­ய­மாக இந்தப் பொறுப்பு பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 19 முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கும் உரி­ய­தாகும். தமது சமூ­கத்தைப் பற்றி, சம­யத்தைப் பற்றி விளக்­க­ம­ளிப்­பதில் ஆளும் கட்சி, எதிர்க்­கட்சி என்ற பேதங்கள் அவ­சி­ய­மில்லை.

துர­திஷ்­ட­வ­ச­மாக, கடந்த மார்ச் 10 ஆம் திக­தியும் நேற்­றைய தினமும் பாரா­ளு­மன்­றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஆணைக்­குழு அறிக்கை விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது மேற்­படி முஸ்லிம் எம்.பி.க்களில் கணி­ச­மானோர் சபையில் கூட இருக்­க­வில்லை என்ற தக­வலை அறியும் போது மிகவும் கவ­லை­யா­க­வுள்­ளது.

குறித்த அறிக்­கையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான பல்­வேறு விட­யங்கள் உள்­ள­டங்­கி­யுள்ள நிலையில் அவற்­றுக்கு உரிய தெளி­வு­களை வழங்கி அவற்றை ஹன்­சார்டில் பதிய வைக்க வேண்­டிய வர­லாற்றுக் கட­மையை இந்த எம்.பி.க்கள் தவ­ற­விட்­டுள்­ளமை துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். இதற்கும் மேலாக எம்.பி.க்களுக்கு வழங்­கப்­பட்ட குறித்த அறிக்­கையின் பிர­தி­களைக் கூட பல முஸ்லிம் எம்.பி.க்கள் புரட்டி வாசிக்கவில்லை என்பதை அறியும்போது வெட்கப்பட வேண்டியுள்ளது.

இன்றைய தினமும் இந்த அறிக்கை மீதான இறுதி நாள் விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் ஆகக்குறைந்தது முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாவது சபையில் உரையாற்றுவதுடன் இவ்வறிக்கையின் உள்ளடக்கம் பற்றிய தமது அபிப்பிராயங்களையும் முஸ்லிம் சமூகத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கான பதில்களையும் முன்வைப்பார்கள் என நம்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.