இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றியும் தவ­றாக சித்­த­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை

0 642

லத்தீப் பாரூக்

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் மற்றும் படு­கொ­லைகள் தொடர்­பாக ஆராய்ந்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றியும் குறிப்­பி­டப்­படும் விட­யங்கள் திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் தவ­றாக வழி­ந­டாத்தும் வகை­யிலும் அமைந்­துள்­ளன. இவ்­வ­றிக்கை, உல­க­ளா­விய முஸ்லிம் எதிர்ப்பு பிர­சா­ரத்தை கொண்டு செல்லும் போர் வெறி­யர்­க­ளான அமெ­ரிக்கா தலை­மை­யி­லான ஐரோப்­பா – இஸ்ரேல், இந்­தி­யாவின் ஆர்.எஸ்.எஸ் தலை­மை­யி­லான பிஜே­பி­யி­னரின் கண்­ணோட்­டங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­துடன் அவர்­க­ளது முஸ்­லிம்கள் மீதான அழிச்­சாட்­டி­யங்­களை நியா­யப்­ப­டுத்தும் வகை­யிலும் அமைந்­துள்­ளது.

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யினை ஒருவர் புரிந்­து­கொள்­வ­தாயின் இலங்­கையில் ஒழுங்­க­மைக்­கப்­பட்டு முதன் முத­லாக முன்­னெ­டுக்­கப்­பட்ட முஸ்லிம் எதிர்ப்பு பிர­சாரம் பற்றி தெரிந்­து­கொள்ள வேண்டும்.

விடு­தலைப் புலிகள் 2009 மே மாதத்தில் தோற்­க­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இஸ்­லாத்­துக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக வரிந்து கட்­டிக்­கொண்டு முன்­னிற்கும் எதி­ரி­க­ளான இஸ்­ரே­லுக்கும், இந்­தி­யாவின் பிஜே­பிக்கும் நாட்டைத் திறந்­து­கொ­டுத்த இந்த அரசு. அதன் பின்­னரே சிங்­கள மக்­க­ளது மனங்­களில் முஸ்­லிம்கள் பற்­றிய எதிர்ப்பை விதைக்கும் நாச­கார நச்சுப் பிரச்­சா­ரங்கள் வெளி­வர ஆரம்­பித்­தது.

இஸ்­லா­மோ­போ­பியா – இஸ்­லா­மிய விரோத – வியா­பா­ரத்தின் முக்­கிய தூண்­க­ளான இஸ்ரேல், பிஜேபி போன்ற சக்­திகள் இன­வா­தத்தின் மூலம் நாட்டின் ஸ்திரத்­தன்­மை­யினை குலைத்து சமூ­கங்­க­ளுக்­கி­டையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்தும் மோச­மான தீய நிகழ்ச்சி நிர­லுடன் இங்கு வந்­தி­ருக்­கி­றார்­களே ஒழிய இலங்கை மீது அவர்­க­ளுக்கு இருக்கும் அன்­பினால் அல்ல.

இஸ்­ரேலும் பிஜே­பியும் இங்கு வந்­த­துமே சிங்­கள அர­சி­யல்­வா­திகள், வியா­பா­ரிகள், தொழில்­வாண்­மை­யா­ளர்கள், பிக்­குகள் என பல இன­வாத சக்­தி­களைப் பயன்­ப­டுத்தி முஸ்லிம் எதிர்ப்பு பிர­சா­ரங்கள் ஆரம்­பிக்­கப்­படும் என நான் எனது பல கட்­டு­ரை­க­ளிலும் ஆரூடம் கூறி­யி­ருந்தேன்.

முஸ்லிம் விரோத மேற்­கத்­தய ஊட­கங்­களைப் பற்­றிய எது­வித கவ­னமும் இன்றி அவற்றைக் கண்­மூ­டித்­த­ன­மாக பின்­பற்றும் உள்­நாட்டு ஊட­கங்­க­ளையே பெரும்­பா­லான சிங்­கள மக்கள் பார்­வை­யி­டு­கின்­றனர். இதுவே சிங்­கள மக்­களை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திருப்­பி­விட்­டது.

இன்று, இந்த நாச­காரப் பிர­சா­ரங்கள் வெற்­றி­கண்­டு­விட்­டன. இஸ்­லாமும் முஸ்­லிம்­களும் ஓர் அச்­சு­றுத்தல் என சிங்­கள மக்கள் நம்ப வைக்­கப்­பட்­டுள்­ளனர். சமூ­கங்கள் பிளவு பட்­டு­விட்­டன. நாடும், மக்­களும் கொந்­த­ளித்துக் கொண்டும் அல்லல்பட்­டுக்­கொண்டும் இருக்க அர­சியல்வாதிகள் இன்னும் தேசப்­பற்று என்று முழங்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

இன்று உலகம் பூரா­கவும் நடந்­தேறிக் கொண்­டி­ருக்கும் இஸ்­லா­மோ­போ­பியா – இஸ்­லா­மிய வெறுப்பு – மற்றும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான மேற்­கத்­தய சதித்­திட்­டங்­களை புரிந்து கொள்­வ­தாயின் கடந்த நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் பிரித்­தா­னிய மற்றும் பிரெஞ்சு கால­னித்­துவ சக்­திகள் மத்­திய கிழக்கில் செய்த சதி­வே­லை­களை புரிந்­து­கொள்ள வேண்டும்.

இலங்­கையில் இந்த சக்­தி­களின் வரு­கை­யுடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான விரோதப் போக்­குகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தாக பலர் சந்­தே­கிக்­கின்­றனர். இது ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக அமை­தி­யு­டனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்த சிங்கள மக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தது.

20ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில், ஒட்டு மொத்த மத்­திய கிழக்கு மற்றும் வட­ஆ­பி­ரிக்க நாடுகள் துருக்­கிய உஸ்­மா­னிய சாம்­ராஜ்­யத்தின் ஆதிக்­கத்தின் கீழி­ருந்­தன. 1914 ஜூலை 28 தொடங்கி 1918 நவம்பர் 11 வரை நீடித்த முதலாம் உலகப் போரின் போது உஸ்­மா­னிய சம்­ராஜ்­ஜியம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­துடன் மத்­திய கிழக்கு மற்றும் வட­ஆ­பி­ரிக்க நாடுகள் பிரித்­தா­னி­ய -­– பி­ரான்சு ஆளு­கையின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

இந்த இரு கால­னித்­துவ சக்­தி­களும் யூத சியோ­னிச சக்­தி­க­ளுடன் இணைந்து இர­க­சிய (Sykes-Picot Agreement on 19 May 1916) ஒப்­பந்தம் ஒன்றைச் செய்து ஒரு­மித்த மத்­திய கிழக்கு நாடு­களை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­ப­தற்­காக பங்­கு­பி­ரித்­துக்­கொண்­டனர்.

பலஸ்தீன், ஜோர்தான், எகிப்து, ஈராக், சவூதி அரே­பியா மற்றும் வளை­குடா நாடுகள் உள்­ளிட்ட மத்­திய கிழக்கின் பெரும்­பான்மை நாடுகள் பிரித்­தா­னிய ஆளு­கையின் கீழும், வட ஆபி­ரிக்­காவின் பெரும்­பான்­மை­யான பகு­திகள் மற்றும் லெபனான் போன்­றன பிரான்சின் ஆளு­கையின் கீழும் கொண்­டு­வ­ரப்­பட்­டன. லிபியா, டியூ­னி­சியா, மொரோக்கோ, அல்­ஜீ­ரியா போன்ற நாடு­க­ளுடன் சேர்த்து முழு ஆபி­ரிக்­கா­விலும் இருப்­பது போல முஸ்லிம், முஸ்­லி­மல்­லாத நாடு­களும் இதனுள் அடங்­கி­யி­ருந்­தன.

பிரித்­தா­னி­யாவும் பிரான்சும் இணைந்து மதச்­சார்­பற்ற ஊழல் நிறைந்த தமக்கு அடி­ப­ணிந்து நடக்கும் கைப்­பொம்­மை­களை அவர்கள் புதி­தாக உரு­வாக்­கிய பிராந்­தி­யங்­களின் ஆட்­சி­யா­ளர்­க­ளாக நிய­மித்­தனர். இஸ்லாம் மீண்­டு­மொரு அர­சியல் சக்­தி­யாக உரு­வெ­டுக்­காது பார்த்­துக்­கொள்­வதே அவர்­க­ளது பிர­தான பணி­யாக இருந்­தது. இந்­நிலை நூற்­றாண்­டுகள் கடந்து இன்றும் தொடர்­கி­றது.

அதே நேரத்தில், பலஸ்­தீன மண்ணில் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வந்த மக்­களை வெளி­யேற்­றி­விட்டு யூதர்­க­ளுக்­கான தனி­நாடு ஒன்றை நிறுவ பிரித்­தா­னியா, பிரான்சு மற்றும் சியோ­னிச யூத சக்­திகள் விரும்­பின. இதற்­காக எந்­த­வித தார்­மீக, சட்ட விதி­மு­றை­களை மீறவும் அவர்கள் தயா­ராக இருந்­தனர்.

இந்த சதித்­திட்­டத்தின் ஓர் அங்­க­மாக 1917 இல் பலஸ்தீன் பிரித்­தா­னிய ஆக்­கி­ர­மிப்பின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்டு யூத குடி­யேற்­றங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இதற்­கெ­தி­ராக பலஸ்தீன் கிளர்ந்­தெ­ழுந்த போது சியோ­னிச யூதர்கள் மனாசெம் பெகின், இட்சாக் ஸாமிர், ஏரியல் ஷெரோன் போன்றோர் தலை­மை­தாங்கி வழி­ந­டாத்­திய ஹகானா, ஸ்டேர்ன், இரகன், வாய் லூமி போன்ற பயங்­க­ர­வாத ஆயு­தக்­கு­ழுக்­களை அமைத்து பலஸ்­தீ­னி­யர்­களை கொன்­று­கு­வித்­தனர்.

அவர்கள் மத்­திய கிழக்கின் பயங்­க­ர­வா­தத்தின் ”காட் பாதர்”­க­ளாகப் பார்க்­கப்­பட்­டனர். பலஸ்­தீ­னி­யர்­களை அருகில் இருக்கும் நாடு­க­ளுக்கு அபயம் தேடி ஓட­வைத்­தனர். 1947 இல் இஸ்ரேல் என்ற நாட்டை மத்­திய கிழக்கின் சரி மத்­தியில் துவக்­கு­கின்­றனர். இதனால் மத்­திய கிழக்கை எப்­போதும் ஒரு கொந்­த­ளிப்பு நிலையில் வைத்­தி­ருக்­கவும் பிரித்­தா­னிய – பிரான்சு கால­னித்­துவ சக்­தி­க­ளுக்கு மத்­திய கிழக்கின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டிக்­கவும் முடி­யு­மா­யி­ருந்­தது.

இஸ்­ரேலை உரு­வாக்­கு­வ­தற்கு பிரித்­தா­னிய – அரபு ஆட்­சி­யா­ளர்­களின் ஆத­ரவை திரட்ட ஆரம்­பித்த போது மத்­திய அரே­பி­யாவின் ஒரு சிறிய பழங்­கு­டி­களின் ஆட்­சி­யா­ள­ராக இருந்த அப்துல் அஸீஸ் இதற்கு தீவி­ர­மாக ஒத்­து­ழைக்கும் ஒரு­வ­ராக மாறினார். புனித பிர­தே­சங்­க­ளான மக்கா, மதீனா ஆகிய பகு­தி­களை உள்­ள­டக்­கிய ஹிஜாஸ் பிராந்­தி­யத்தின் உஸ்­மா­னிய பேர­ரசின் ஆளு­ந­ராக இருந்த ஷரீப் ஹுஸைன் இதனை தீவி­ர­மாக எதிர்க்க ஆரம்­பித்தார். பிரித்­தா­னி­யாவும் சியோ­னிச சக்­தி­களும் சேர்ந்து அப்துல் அஸீ­ஸுக்கு பணம், ஆயு­தங்­களை வழங்கி அவரை எதிர்க்கச் செய்து ஷரீப் ஹுஸைனை பதவி கவிழ்த்­தன.

இந்த சம்­ப­வத்­துடன் முஸ்­லிம்கள் அணி­தி­ரளும் புள்­ளி­யாக இருந்த கிலாபத் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­துடன் பிரித்­தா­னியா, பிரான்ஸ் மற்றும் யூத சக்­தி­களின் பலமும் இப்­பி­ராந்­தி­யத்தில் நிறு­வப்­பட்­டது. அப்­போ­தி­ருந்து அப்துல் அஸீஸின் வஹா­பிச போக்கும் – இஸ்­லாத்தின் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட வடிவம் – தடை­யின்றி நகர ஆரம்­பித்­தது.

இச்­ச­தித்­திட்­டத்தின் தொடர்ச்­சி­யாக பிரிட்டன், பிரான்ஸ் இவர்­க­ளுடன் சேர்ந்து இஸ்­ரேலும் அமெ­ரிக்­காவும் இணைந்து இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் தீய, அச்­சு­றுத்தும் ஒன்­றாக காட்ட ஆரம்­பித்­தன. இந்த வகையில், ஹஸனுல் பன்னா, முஹம்மத் குத்ப், ஆமினா குத்ப், யூஸுப் கர்­ளாவி, மௌலானா மெள­தூதி, ஷெய்க் யாஸீன் போன்ற முஸ்லிம் புல­மை­யா­ளர்­களை அடிப்­ப­டை­வா­தி­க­ளா­கவும், வன்­மு­றை­களை தூண்­டு­ப­வர்­க­ளா­கவும் காட்ட ஆரம்­பித்­தனர்.

இஸ்லாம் ஒரு சக்­தி­யாக எழுச்­சி­ய­டை­வதை தடுக்கும் அத்­தனை முயற்­சி­க­ளையும் அவர்கள் எடுத்­தனர்.
உதா­ர­ண­மாக, ஆய­துல்லாஹ் கொமைனீ மேற்கு சார்பு கொள்கை கொண்ட “ஷாஹ்“ வினை பதவி கவிழ்த்து ஈரான் இஸ்­லா­மியக் குடி­ய­ர­சினைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­போது அமெ­ரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், சஊதி அரே­பியா இவர்­க­ளுடன் வளை­கு­டா­வினைச் சேர்ந்த ஷெய்க்­மார்­களை இணைத்­துக்­கொண்டு சதாம் ஹுஸைனை முன்­னி­லைப்­ப­டுத்தி வளை­குடாப் போரையும் முடுக்­கி­விட்­டனர். இந்தப் போரினால் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான ஈராக்­கிய, ஈரா­னிய வீரர்கள் உயி­ரி­ழந்­த­துடன் பல பில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான சேதங்­களும் ஏற்­பட்­டன. இப் போரினால் அமெ­ரிக்­க-­ – ஐ­ரோப்­பிய ஆயுத உற்­பத்­தி­யா­ளர்கள் செழித்து வளர்ந்­தனர்.

இந்த யுத்­தத்தை அடுத்து, பக்­தா­துக்­கான அமெ­ரிக்க தூதுவர் ஏப்ரில் காஸ்­பியின் தந்­தி­ர­மான தூண்­டு­தலால் சதாம் ஹுஸைன் குவைத்தை ஆக்­கி­ர­மித்தார். இதனால் குவைத்­து­ட­னான முறுகல் துவங்­கி­யது. குவைத்தை விடு­விக்கும் போர்­வையில் அமெ­ரிக்க தலை­மை­யி­லான ஐரோப்­பிய படைகள் ஈராக்கை ஆக்­கி­ர­மித்­த­துடன் கணி­ச­மான நாச­வே­லை­களை அங்கே நிகழ்த்தி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஈராக்­கி­யர்­க­ளையும் கொன்று குவித்­தனர்.

1991 டிசம்பர் மாதம் அல்­ஜீ­ரி­யாவில் முதன் முத­லாக நடை­பெற்ற பொதுத்­தேர்­தலில் எப் ஐ எஸ் – அர­சி­ய­லுடன் இஸ்­லா­மிய நெறி­மு­றைகள் பிணைந்­த­தாக அமைக்­கப்­பட்ட கட்சி – அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் வெற்­றி­யீட்­டி­யது. இருப்­பினும், பிரான்ஸ், அறபு கொடுங்­கோ­லர்­களின் உத­வி­யுடன் மிகவும் பிர­பல்­ய­மான இவ்­வ­மைப்பு சிதைக்­கப்­பட்­ட­துடன் 180,000 வரை­யான முஸ்­லிம்­களும் கொல்­லப்­பட்­டனர். அங்கு ஒரு மதச்­சார்­பற்ற இரா­ணுவ ஆட்­சியும் நிறு­வப்­பட்­டது.

ஈரான் தனது அணுத்­திட்­டங்­களை மேம்­ப­டுத்த முனையும் போது அமெ­ரிக்கா தலை­மை­யி­லான யுத்த வெறி­யர்கள் அதன் மீது தடை­களை விதிக்க ஆரம்­பித்­தனர். ஆனால் 300 ற்கும் அதி­க­மான அணு ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­படும் இஸ்­ரே­லுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை.

இத­னி­டையே அமெ­ரிக்க எப் பி ஐ யும் இஸ்­ரேலின் மொசாதும் சேர்ந்து செய்த உள் வேலை­யாக வர்­ணிக்­கப்­படும் நியூ­யோக்கில் இடம்­பெற்ற 9/11 தாக்­குதல் அரங்­கே­று­கி­றது. முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ரிக்கும் பூகோள பிர­சா­ரத்தை ஆரம்­பிப்­ப­தற்­கான துவக்­க­மாக அது பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இத்­தாக்­கு­தலைச் செய்­தது அல்­கைதா அமைப்பு என 24 மணி நேரத்­திற்­குள்­ளேயே அமெ­ரிக்கா குற்றம் சாட்­டி­ய­துடன் ஆப்­கா­னிஸ்தான் மீது குண்­டு­ம­ழை­களை பொழிந்து ஏலவே நசுங்­கிப்­போ­யி­ருந்த ஒரு நாட்டை தரிசு நில­மாக மாற்­றி­யது. அப்­பாவி மக்கள் கொல்­லப்­பட்டு, எது­வித கார­ணமும் இன்றி ஒரு நாடு அழிக்­கப்­பட்­ட­போது சுதந்­தி­ரத்தின் காவ­லர்கள், மனித உரிமை நாய­கர்கள் என தம்மை அழைத்துக் கொண்­ட­வர்­க­ளுக்கு இது பற்றி எந்த அக்­க­றையும் இருக்­க­வில்லை.

இப்­ப­டி­யாக அமெ­ரிக்க தலை­மை­யி­லான மேற்­கு­லகு சோவியத் யூனி­ய­னுக்குப் பதி­லாக இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் பிர­தி­யீடு செய்­த­துடன் பல பில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான உல­க­ளா­விய முஸ்­லிம்கள் மீதான வியா­பா­ர­மான இஸ்­லா­மோ­போ­பி­யாவின் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட பிரச்­சா­ரங்­களை கட்­ட­விழ்த்தும் விட்­டது.

இதைத் தொடர்ந்து பாரிய அழிவு தரும் ஆயு­தங்­களை சதாம் ஹுஸைன் உற்­பத்தி செய்­வ­தாக வேண்­டு­மென்று குற்­றம்­சாட்டி ஈராக் மீதான அமெ­ரிக்க ஆக்­கி­ர­மிப்பு இடம்­பெ­று­கி­றது. சமா­தா­னத்­தையும் அமை­தி­யையும் அனு­ப­வித்து வந்த மக்­களின் வாழ்­வி­யலை குலைத்து அபி­வி­ருத்­தி­ய­டைந்­தி­ருந்த ஒரு நாட்டில் பெரும் நாசங்­களை விளை­வித்­தது இவ்­வாக்­கி­ர­மிப்பு. இலட்­சக்­க­ணக்­கான ஈராக்­கி­யர்கள் முகாம்­க­ளுக்குள் அக­தி­க­ளாக தள்­ளப்­பட்­டனர். இன்னும் அவர்­க­ளது வாழ்வு அங்­கேயே கழி­கி­றது.
கிடைக்கும் தக­வல்­களின் பிர­காரம் 65 பில்­லியன் பெறு­ம­தி­யான தங்கம் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.

அறபு வசந்­தத்தின் போது முஹம்மத் முர்ஸி தலை­மை­யி­லான இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ இயக்கம் ஆட்­சி­ய­மைக்க எகிப்­தி­யர்கள் வாக்­க­ளித்­தனர். 60 ஆண்­டு­களின் பின்னர் நடை­பெற்ற நீதி­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான ஒரு தேர்­த­லாக அது அமைந்­தது. சவூதி, இஸ்ரேல், அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய ஒத்­து­ழைப்­புடன் இவ்­வாட்சி கவிழ்க்­கப்­பட்டு அப்துல் பத்தாஹ் அல் சீசியின் கொடுங்கோல் ஆட்சி கொண்­டு­வ­ரப்­பட்­டது. சவூதி அரே­பி­யாவும் ஐக்­கிய அரபு இராச்­சி­யமும் குவைத்தும் இணைந்து 11 பில்­லியன் டொலர்­களை செலவு செய்து போலி­யான உணவு, எரி­பொருள் தட்­டுப்­பாட்டை இவ்­வெ­ழுச்­சியில் உண்­டு­பண்­ணி­ய­துடன் இதனை காரணம் காட்டி மக்கள் எழுச்­சியை ஏற்­ப­டுத்தி முஹம்மத் முர்­சியை பதவி கவிழ்க்­கவும் செய்­தன.

இத­னி­டையே அமெ­ரிக்கா – ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்­பன இணைந்து சிரி­யா­வையும், லிபி­யா­வையும் – இரண்டும் நன்கு அபி­வி­ருத்தி அடைந்த நாடுகள்- கொலைக்­க­ளங்­க­ளாக மாற்­றி­யது மட்­டு­மல்­லாது அவற்றின் எண்ணெய் வளத்­தி­னை­யும் பணம் மற்றும் தங்­கத்­தினை கொள்­ளை­யிட்­டன.

டொனால்ட் ட்ரம்ப் ஜெரூ­ஸ­லத்­தினை இஸ்­ரே­லிடம் தாரை­வார்த்துக் கொடுத்ததன் பின்­ன­ணியில் மறை­க­ர­மாக தொழிற்­பட்­டது சவூதி அரே­பி­யா­வாகும். அமெ­ரிக்க -– ஐரோப்­பிய, இஸ்­ரே­லிய நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­வாக சவூதி அரே­பி­யாவும் அபூ­தா­பியும் இணைந்து யெமன் நாட்டின் மீது குண்­டு­களை வீசி 100,000 யெம­னி­யர்­களை கொன்று குவித்­தன. அறபு உல­கி­லேயே வறிய நாடாக இருந்த யெமன் நாட்டை உல­கி­லேயே மிக மோச­மான மனி­தா­பி­மான நெருக்­க­டிகள் மிக்க இட­மாக மாற்­றி­னார்கள்.

அதே நேரம், அமெ­ரிக்க – ஐரோப்­பிய, இஸ்­ரே­லிய யுத்த வெறி­யர்கள் இஸ்­லா­மோ­போ­பி­யாவை வளர்ப்பதற்கு நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட பல பில்லியன் டொலர்கள் செலவு செய்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீய சக்திகளாக காண்பித்து அவர்கள் மேற்கொண்ட இந்த யுத்தங்களை நியாயப்படுத்தும் பிரசாரங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த பிர­சா­ரத்தில் சுவி­சேஷ கிறிஸ்­த­வர்கள், சியோ­னிச யூதர்கள் மற்றும் இந்­தி­யாவின் ஆர்.எஸ்.எஸ். போன்­றன அமெ­ரிக்­க-­இஸ்­ரே­லிய, சவூதி மற்றும் இந்­தி­யா­வுடன் ஒன்­றாக இணைந்து உல­க­ளவில் முஸ்­லிம்­களை துன்­பு­றுத்தத் தொடங்­கினர்.

பிராந்­தி­யத்தின் பலத்தைத் தக்­க­வைத்துக் கொள்ள நடந்­து­வரும் போராட்­டத்தின் மூலோ­பாய முக்­கி­யத்­துவம் கருதி 2009 இல் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட ஒரு சூழலில் இந்த பிர­சா­ரங்கள் இலங்­கைக்குள் நுழைய ஆரம்­பித்­தன.

இலங்­கையில் இந்த சக்­தி­களின் வரு­கை­யுடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான விரோதப் போக்­குகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தாக பலர் சந்­தே­கிக்­கின்­றனர். இது ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக அமை­தி­யு­டனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்த சிங்கள மக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தது.

உள்ளூர் ஊடகங்கள் இந்த உண்­மை­களை எப்­போ­தா­வது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனவா? பக­ர­மாக, அவை இஸ்­லா­மிய விரோத சக்­தி­களின் கரு­வி­க­ளாக மாறின. இஸ்­லாத்தை தீய சக்­தி­க­ளாக காட்­டவும் முஸ்­லிம்­களை வன்­மு­றை­யுடன் இணைக்­கவும் கிடைத்த எந்த வாய்ப்­பையும் அவை தவ­ற­வி­ட­வில்லை.
இவற்றின் விளை­வு­க­ளையே இன்று நாம் நாட்டில் கண்­டு­கொண்­டி­ருக்­கின்றோம்.

இந்தப் பின்­ன­ணி­யில்தான் இஸ்லாம், முஸ்­லிம்கள் பற்­றிய ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஒருவர் நோக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.