ஹஜ் யாத்திரை 2019: பதிவு செய்த முதல் 2000 பேரும் பதிவுக் கட்டணம் செலுத்துக

 முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

0 751

புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்­துள்ள விண்­ணப்­ப­தா­ரி­களில் முதல் 2000 பேரின் பய­ணத்தை மீள கைய­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய 25ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­ட­ணத்தைச் செலுத்தி உறுதி செய்து கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கடி­தங்­களை அனுப்­பி­வைக்­க­வுள்­ளது. ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக இது­வரை 13 ஆயிரம் பேர் விண்­ணப்­பித்­தி­ருக்­கி­றார்கள். இவர்­களில் 2800 பேர் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை பூர்த்தி செய்­துள்­ளார்கள். எஞ்­சிய விண்­ணப்­பங்­களில் முதல் 2000 பேருக்கே தங்­க­ளது பய­ணத்தை உறு­தி­செய்­யு­மாறு கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்­த­வர்­களில் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­ட­ணத்தைச் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்ள 760 விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ் கட­மைக்­காக காத்­தி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென தற்­போது அமைச்­ச­ரொ­ருவர் இல்­லாத கார­ணத்­தினால் அரச ஹஜ் குழு இயங்­காது ஸ்தம்­பித்­துள்­ளது. இந்­நி­லையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமே ஹஜ் ஏற்பாடுகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.