வேறு பகுதிகளில் ஜனாஸாக்களை அடக்கும் தேவை இதுவரை இல்லை

ஓட்டமாவடியில் தாராளமாக இடமுண்டு என்கிறார் டாக்டர் ஹம்தானி

0 1,128

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் ஜனா­ஸாக்­கள் ஓட்­ட­மா­வடிப் பிர­தே­சத்தில் சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்கள் மற்றும் நிபந்­த­னை­க­ளுக்கு அமைய எது­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. இப்­பி­ர­தே­சத்தில் ஜனாஸா நல்­ல­டக்­கத்­துக்­காக 5 ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

மக்கள் சுகா­தார வழி­மு­றை­களைப் பேணி கொவிட் 19 தொற்று பர­வா­தி­ருக்க ஒத்­து­ழைப்பு வழங்­கினால் இங்கு ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான தேவை­யேற்­ப­டாது என சுகா­தார அமைச்சின் வைத்­திய தொழி­நுட்ப பணிப்­பா­ளரும் கொவிட் 19 நட­வ­டிக்­கை­க­ளுக்­கான இணைப்­பா­ள­ரு­மான டாக்டர் அன்வர் ஹம்­தானி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வ­டியில், கொவிட் 19 தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘இங்கு இன்­று­வரை (செவ்­வாய்க்­கி­ழமை) 46 ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. வைத்­தி­ய­சா­லை­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஜனா­ஸாக்­களும் இதில் உள்­ள­டங்­கு­கின்­றன. தற்­போது அடக்கம் செய்­வ­தற்­காக வைத்­தி­ய­சா­லை­களில் கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளான ஜனா­ஸாக்கள் இல்லை.

ஓட்­ட­மா­வ­டியில் இதற்­கென 5 ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கா­ணியில் சுமார் 300 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய முடியும். மக்கள் சுகா­தார வழி­மு­றை­களைப் பேணி வாழப் பழகிக் கொண்டால், கொவிட் 19 பர­வா­தி­ருக்க ஒத்­து­ழைப்பு வழங்­கினால் இங்கும் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான தேவை ஏற்­ப­டாது.
கொவிட் 19 தொற்­றினால் இறப்­ப­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கான கோரிக்­கைகள் வேறு மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இது­வரை எமக்கு கிடைக்­க­வில்லை. அவ்­வாறு கிடைத்தால் அது தொடர்பில் நாம் ஆராய்வோம். ஆனால் தற்­போ­தைக்கு அவ்­வா­றான தேவை இல்லை என்றே நான் நினைக்­கிறேன்.

தற்­போது ஓட்­ட­மா­வ­டியில் ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­படும் பிர­தேசம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வரு­கி­றது. கூடா­ரங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இப்­ப­குதி மக்கள் இந்தப் பணி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கி­றார்கள். இங்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை கத்­தோ­லிக்க பெண்­ம­ணி­யொ­ரு­வரின் உடலும் அடக்கம் சம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வருகிறது. கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இப்பகுதி மக்கள் இந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கத்தோலிக்க பெண்மணியொருவரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது’ என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.