முகத்தை மூடுவதை சட்டத்தினால் தடை செய்வது ஆரோக்கியமான விடயமல்ல

கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த சமூகம் விரும்பவில்லை என்கிறது உலமா சபை

0 562

முகத்தை மூடி ஆடை­களை அணியக் கூடாது எனும் தீர்­மா­னத்தை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­களும் எதிர்க்­கா­விட்­டாலும் கூட, சட்­டத்தின் ஊடாக தடை செய்­வ­தா­னது மனித உரி­மை­களை மீறும் செய­லாகும் என உலமா சபையின் உதவிப் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்­துள்ளார்.

பொது இடங்­களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணி­வதைத் தடை செய்யும் வகை­யி­லான அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­ய­மைச்சர் அலி சப்ரி அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார். இது தொடர்பில் ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு கருத்து வெளி­யிட்ட போதே அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

சட்­டத்தின் ஊடாக தடை கொண்­டு­வ­ரு­வ­தா­னது மனித உரிமை கண்­ணோட்­டத்தில் ஒரு சமூ­கத்­திற்கு நல்­ல­தல்ல. இந்த விடயம் தொடர்பில் எதிர்­வரும் 6 ஆம் திகதி (நாளை) உலமா சபை கூடி ஆரா­ய­வுள்­ளது. எனினும் முஸ்லிம் சமூகம் இந்த தடைக்கு எதி­ராக கடு­மை­யான எதிர்ப்­பு­களை வெளிப்­ப­டுத்த விரும்­ப­வில்லை.
தற்­போது முகக்­க­வசம் அணி­வது அனை­வ­ருக்கும் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள நிலையில் இத்­தடை முஸ்லிம் சமூ­கத்­தினால் அவ்­வ­ளவு உண­ரப்­ப­ட­வில்லை. முகத்தை முழு­மை­யாக மறைக்க வேண்டாம் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சமூ­கத்தை அறி­வூட்டி வரு­கி­றது. இதுவே முஸ்­லிம்­களின் பெரும்­பான்­மை­யா­னோரின் நிலைப்­பா­டு­மாகும் என்றார்.

இதே­வேளை முகத்தை மறைப்­ப­தற்­கான தடை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறு­கையில், ஒரு சமூ­கத்தின் கலா­சார விட­யங்­களை சட்­டத்தின் ஊடாக தடை செய்ய முனையக் கூடாது. இந்த வழக்­கத்தை மாற்றிக் கொள்­வ­தற்­கான அழுத்தம் சமூ­கத்தின் உள்­ளி­ருந்தே வெளிப்­பட வேண்டும். தத்­த­மது மத மற்றும் கலாசார வழக்காறுகளை கடைப்பிடிப்பது அவரவரது உரிமையாகும். முகத்தை மூடுவது இஸ்லாமிய மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்றல்ல என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.