காந்­தக்­கு­ரலின் சொந்­தக்­காரர் ரஷீத் எம் ஹபீல்

0 542

மூத்த ஒலி, ஒளி­ப­ரப்­பா­ளரும் இலங்கை ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­பன முஸ்லிம் பிரிவின் முன்னாள் உதவிப் பணிப்­பா­ள­ரு­மான ரஷீத் எம் ஹபீல் தனது 75ஆவது வயதில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை கால­மானார். நீண்ட நாட்­க­ளாக சுக­வீ­ன­முற்று சிகிச்சை பெற்று வந்த நிலை­யி­லேயே அவர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் கால­மானார்.

அன்­னாரின் ஜனாஸா அன்­றைய தினம் பிற்­பகல் 3 மணிக்கு மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. நல்­ல­டக்­கத்தில் அர­சியல் தலை­வர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், பிர­மு­கர்கள் என பெருந்­தி­ர­ளானோர் கலந்து கொண்­டனர். கொவிட் 19 அச்­சத்­திற்கு மத்­தி­யிலும் ஏரா­ள­மானோர் ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் பங்­கேற்­றமை மர்ஹூம் ஹபீல் அவர்கள் தனது வாழ்­நாளில் எந்­த­ளவு தூரம் மனி­தர்­க­ளோடு நெருக்­க­மாகப் பழ­கி­யி­ருந்தார் என்­பதை நிரூ­பிப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது.

1946 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி மாளி­கா­வத்­தையில் பிறந்த ரஷீத் எம். ஹபீல், கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியில் கல்வி கற்றார். இவ­ருக்கு இரு ஆண்கள், ஒரு பெண் என மூன்று பிள்­ளைகள்.

ஹபீல் அவர்­க­ளது மறைவு குறித்து பலரும் தமது அனு­தா­பங்­களை வெளி­யிட்­டுள்­ள­துடன் அவ­ரு­ட­னான கடந்த கால உற­வு­க­ளையும் நினை­வு­ப­டுத்­தி­யுள்­ளனர். இது­கு­றித்து இலங்கை ரூபா­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தின் செய்தி மற்றும் நடப்பு விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரதிப் பணிப்­பாளர் உமர் லெப்பை யாக்கூப் குறிப்­பி­டு­கையில், “ஹபீல் அவர்கள் ஒலி­ப­ரப்­புத்­து­றையின் மூத்த புதல்­வர்­களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டில் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் பகுதி நேர அறி­விப்­பா­ள­ராக இணைந்து கொண்ட அவர் பின்னர் தயா­ரிப்­பா­ள­ராக முஸ்லிம் சேவையில் கட­மை­யாற்­றினார். வீ அப்துல் கபூர், பி.எச்.அப்துல் ஹமீத், கே. எஸ். ராஜா, நட­ராஜ சிவம், பீ. விக்­னேஸ்­வரன், ஜோர்ஜ் சந்­தி­ர­சே­கரன் போன்ற மூத்த ஒலி­ப­ரப்­பா­ளர்­க­ளுடன் தமிழ் சேவையில் அறி­விப்­பா­ள­ரா­கவும் பணி­யாற்­றினார்.

1983 ஆம் ஆண்டில் இலங்கை ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தில் செய்தி வாசிக்கும் வாய்ப்பு இவ­ருக்கு கிட்­டி­யது. அப்­போது முஸ்லிம் நிகழ்ச்­சி­களை தயா­ரித்­துக்­கொண்­டி­ருந்த மொஹிதீன் என்­ப­வ­ருடன் இணைந்து இவரும் தயா­ரிப்­பா­ள­ரானார். அதனைத் தொடர்ந்து ரூப­வா­ஹினி முஸ்லிம் பிரிவின் தலை­மைப்­ப­தவி இவ­ருக்கு கிடைத்­தது. நோன்பு துறக்கும் போது ஓதும் இவ­ரது துஆ நாட்டில் மக்கள் மத்­தியில் மிகப் பிர­பல்யம் பெற்ற ஒன்­றாகும்.

அவர் எப்­போதும் சுறு­சு­றுப்பு மிக்க துடிப்­பான இளை­ஞ­ரா­கவே இருந்தார். 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முத­லாக செய்தி வாசிக்கும் அரிய வாய்ப்­பொன்றை அவரே எனக்கு ஏற்­ப­டுத்தி தந்தார். அத்­துடன் பல முஸ்லிம் நிகழ்ச்­சி­களை தயா­ரிக்கும் பணி­யையும் அவர் எனக்கு வழங்­கி­யதை நினைத்துப் பார்க்­கிறேன். அவ­ரிடம் இருந்த ஒரு சிறந்த குணம் என்­ன­வென்றால், எவ்­வ­ளவு கடு­மை­யான கருத்து மோதல்கள் வந்த போதும் அடுத்த கணமே ஓடி வந்து கரங்­களைப் பற்­றிக்­கொண்டு ஸலாம் கூறும் இனிய பண்பு கொண்­டவர். அதிகம் வேடிக்­கை­யாகப் பேசும் அவ­ரது பண்பு அனை­வ­ரையும் பெரிதும் கவர்ந்­தது. என்­னோடு தமிழ் நிகழ்ச்­சிப்­பி­ரிவில் ஒன்­றாக பணி­யாற்­றிய பீ. விக்­னேஸ்­வரன், எஸ்.விஸ்­வ­நாதன், கமலா தம்­பி­ராஜா, பால­சிங்கம் பிர­பா­கரன் போன்ற ஒளி­ப­ரப்­பா­ளர்­க­ளுடன் மிகுந்த நட்­பு­ற­வுடன் பழ­கி­யவர். முஸ்லிம் பிரிவில் எம்.கே.எம். யூனுஸ், மபாஹிர் மௌலானா ஆகி­யோ­ருடன் நெருக்­க­மாக பணி­யாற்­றி­யவர். அங்­குள்ள பெரும்­பான்மை சகோ­த­ரர்­களின் பெரும் அன்­பையும் பெற்­றவர்’’ எனத் தெரி­வித்­துள்ளார்.

ஹபீல் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடாக ஆற்­றிய பணிகள் குறித்து அமைப்பின் தலை­வரும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான என்.எம். அமீன் நினைவு கூர்ந்தார். ” ஊடகத் துறையில் பழுத்த அனு­பவம் மிக்க ரஷீத் எம். ஹபீல், ரூப­வா­ஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் தலை­வ­ராக கட­மை­யாற்றி இலங்கை முஸ்லிம் ஊட­க­வியல் பரப்பில் முன்­னோ­டி­களுள் ஒரு­வ­ரா­கவும் திகழ்ந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது முதல் போரத்தின் உதவிப் பொரு­ளாளர், பயிற்சிக் குழு பொறுப்­பாளர், உப தலைவர் முத­லான பொறுப்­புக்­களை வகித்து வந்­த­துடன் அந்­திம காலத்தில் போரத்தின் ஆலோ­ச­க­ரா­கவும் செய­லாற்றி வந்தார்.

பலர் ஊடகத் துறையில் கால் பதிப்­ப­தற்கும் மற்றும் பல ஊட­க­வி­ய­லா­ளர்­களின் வளர்ச்­சிக்கும் உறு­து­ணை­யாக இருந்த அவர், இளம் ஊட­க­வி­ய­லா­ளர்­களை ஊக்­கு­வித்து உற்­சா­கப்­ப­டுத்­து­வதில் கூடுதல் கரி­சனை செலுத்தி வந்தார். இளம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது காரி­யா­ல­யத்­திற்கு, வீடு­க­ளுக்கு தேடிச் சென்று அவர்­களை ஊக்­கு­வித்து உற்­சா­கப்­ப­டுத்தி வாழ்த்­துக்கள் தெரி­விப்பார்.

தனது காந்தக் குரலால் நேயர்கள், பார்­வை­யா­ளர்கள் மனங்­களில் நீங்­காத இடம் பிடித்த, நான்கு தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணி புரிந்த மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் அவர்­க­ளது இழப்பு இத்­து­றையில் ஒரு வெற்­றி­டத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது

அவ­ரது ஊடகத் துறைப் பங்­க­ளிப்­புக்­காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 2011ஆம் ஆண்டு சிறப்பு விருது வழங்கி கெள­ர­வித்­தது. இவர் ஊட­கத்­து­றைக்கு ஆற்­றிய பணி­க­ளுக்­காக பல்­வேறு சமூக நிறு­வ­னங்­க­ளாலும் விரு­துகள் வழங்கி கெள­ர­விக்­கப்­பட்­டுள்ளார். கலா­சார அலு­வல்கள் அமைச்­சினால் வழங்­கப்­பட்ட கலாபூஷணம் விருது இவற்றுள் முதன்மையானதாகும்.

கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல், மாளி­கா­வத்தை பெரிய ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை அங்­கத்­த­வ­ரா­கவும் இலங்கை கல்வி மாநாட்டின் உறுப்­பி­ன­ரா­கவும் இருந்து சமூகப் பணி­க­ளிலும் பங்­கெ­டுத்தார்.

இன, மத வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால், பெரியோர்- சிறியோர் வேறு­பா­டின்றி எல்­லோ­ரு­டனும் அன்­பா­கவும் இனி­மை­யா­கவும் தோழ­மை­யு­டனும் பழ­கக்­கூ­டிய மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் அவர்­க­ளு­டைய மறை­வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவ­லை­யையும் அனு­தா­பத்­தையும் தெரி­விக்­கி­றது’’ என்றார்.

இதே­வேளை அர­சியல் தலை­வர்கள் பலரும் ரஷீத் எம். ஹபீலின் மறைவு குறித்து தமது அனு­தா­பங்­களை வெளியிட்டுள்­ளனர். ‘‘கம்­பீ­ர­மான குரல் வளம் வாய்க்கப் பெற்ற பன்­முக ஆளு­மை­யான ரஷீத் எம் ஹபீல், வானொலி மற்றும் காணொளி நேயர்­க­ளி­னதும், அவ­ருடன் நெருங்கிப் பழ­கி­ய­வர்­க­ளி­னதும் உள்ளம் கவர்ந்­தவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்­டுள்ளார்.

‘‘எனது மறைந்த தாயார் அவ­ரது குரலை விரும்பிக் கேட்­பது வழக்­க­மாக இருந்­தது. கடல் கடந்தும் தமிழ் பேசும் நெஞ்­சங்­களில் நிறைந்­தி­ருக்கும் ரஷீத் எம் ஹபீலின் நினை­வுகள் கண்முன் நிழ­லா­டு­கின்­றன. புன்­னகை பூத்த முகமும், ஒளிவு மறை­வற்ற பேச்சும், அசைக்க முடி­யாத இறை நம்­பிக்­கையும் நண்பர் ஹபீ­லிடம் காணப்­பட்ட சிறப்­பம்­சங்­களில் சில­வாகும்’’ என ஹக்கீம் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாட் பதி­யுதீன் விடுத்­துள்ள அனு­தாபச் செய்­தியில், ‘‘இப்தார் பிரார்த்­தனை புகழ், ரஷீத் எம் ஹபீல் இறை­யடி சேர்ந்த செய்தி பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அறி­விப்புத் துறையில் தனி ஆளுமைத் தடம் பதித்த மர்ஹும் ரஷீட் எம் ஹபீல், வாஞ்­சை­யுடன் பழகும் ஒரு மானிட நேயன்.

புனித நோன்பு காலங்­களில் அவ­ரது குரலால் கவ­ரப்­பட்ட பல முஸ்­லிம்கள், அன்­னா­ரது இழப்பால் கவ­லை­ய­டை­கின்­றனர். தன்­னி­ட­மி­ருந்த திற­மை­களை பிற­ருக்கும் பயிற்­று­வித்து, பழக்கி பல ஊட­க­வி­ய­லா­ளர்­களை அவர் வளர்த்­தி­ருக்­கிறார். இலங்கை ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தின் முஸ்லிம் பிரிவுப் பொறுப்­பா­ள­ராகப் பணி­யாற்றி அவர் செய்த சேவை­க­ளுக்கு, முஸ்லிம் சமூகம் நன்றிக் கடன்­பட்­டுள்­ளது’’ எனத் தெரி­வித்­துள்ளார்.

ரஷீத் எம். ஹபீல் அவர்கள் விடி­வெள்ளி பத்­தி­ரி­கை­யு­டனும் மிக நெருக்­க­மான உறவைக் கொண்­டி­ருந்தார். வாராந்தம் தவ­றாது விடி­வெள்­ளியை வாங்கிப் படிக்கும் அவர், அதி­லுள்ள ஆக்­கங்கள் தொடர்­பான தனது கருத்­துக்­களை உட­னுக்­குடன் எம்­முடன் பகிர்ந்து கொள்வார். சில பிர­ப­லங்கள் தொடர்­பான நினைவு தினங்கள் வரும் போது அது பற்­றிய ஆக்­கங்­களைத் தந்து பிர­சு­ரிக்­கு­மாறு வேண்­டுவார். இறு­தி­யாக 2020 ஆம் ஆண்டு கொரோனா முடக்­கத்­திற்கு முன்­பாக ஏக்­க­லை­யி­லுள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு தேடி வந்த அவர், நீண்ட நேரம் எம்­முடன் அள­வ­ளா­வினார். நாகூர் ஈ.எம். ஹனீ­பாவின் பாடல்­களால் மிகவும் கவ­ரப்­பட்ட அவர், அவ­ருடன் நெருக்­க­மான உற­வையும் கொண்­டி­ருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ஹனீபா அவர்களைப் பற்றி இந்திய சஞ்சிகை ஒன்றில் வெளிவந்த நீண்ட ஆக்கம் ஒன்றைக் கொண்டு வந்து, அதனை விடிவெள்ளியில் தொடராகப் பிரசுரிக்குமாறு ஆவன செய்தார். அதற்கமைய சில வாரங்கள் தொடராக பிரசுரிக்கப்பட்ட அந்த ஆக்கம் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இவ்வாறு ஊடகங் களுடனும் ஊடகவி லாளர் களுடன் மிக நெருக்க மான உறவைக் கொண்டி ருந்த அவர், இலங்கை வானொலி மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சி மூலமாக தமிழ் பேசும் நெஞ்சங்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருந்தார். அன்னாரின் இழப்பு இலங்கையின் ஒலி, ஒளிபரப்புத் துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை தோற்று வித்துள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளஸை அருள்வானாக. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.