மு.கா., அ.இ.ம.கா. அவசரப்பட்டு விட்டனவா?

0 809

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று கடந்த பெப்­ர­வரி 25ஆம் திக­தி­யுடன் 100 நாட்கள் நிறை­வ­டைந்­தன. இந்த நிலையில் 19ஆவது திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு கடந்த மார்ச் 1ஆம் திகதி கிடைக்கப் பெற்­றது.

இந்த அதி­கா­ரத்­தை­ய­டுத்து 15ஆவது பாரா­ளு­மன்­றத்தைக் கடந்த மார்ச் 2ஆம் திகதி நள்­ளி­ரவு கலைத்தார். இதன் மூலம் ஐந்து வரு­டத்தைப் பூர்த்தி செய்­யாத சுமார் 60 பாரா­ளு­மன்ற உறப்­பி­னர்கள் தமது ஓய்­வூ­தி­யத்தை இழந்­தனர்.

இதே­வேளை, எதிர்­வரும் ஏப்ரல் 26ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள 16ஆவது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­களை மார்ச் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை தாக்கல் செய்ய முடியும். புதிய பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது அமர்வு மே 14ஆம் திக­தி இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்தப் பாரா­ளு­மன்ற கலைப்­பை­ய­டுத்து அனைத்துக் கட்­சி­களும் தேர்­த­லுக்­கான ஆயத்­தங்­களை முன்­னெ­டுத்­துள்­ளன. பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன இந்த தேர்­தலில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை எப்­ப­டி­யா­வது பெற வேண்­டு­மென்ற அடிப்­ப­டையில் கள­மி­றங்­கி­யுள்­ளது.

இதற்­காக கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் பெற முடி­யா­து­போன முஸ்லிம் வாக்­கு­களை கவரும் நட­வ­டிக்­கை­களில் பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ள­துடன், நாட­ளா­விய ரீதியில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் மாவட்­டங்­களில் முஸ்லிம் வேட்­பா­ளர்­க­ளையும் கள­மி­றக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பாரிய பிள­வொன்று ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­பொன்று தோன்­றி­யுள்­ளது.

இந்தப் பிள­வினால் அதிகம் பாதிக்­கப்­படக் கூடி­ய­வர்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்­தி­னரே காணப்­ப­டு­கின்­றனர். அதா­வது, கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் சஜித் பிரே­ம­தா­சவையே ஆத­ரித்­தனர்.

அதே­போன்று பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யையே ஆத­ரிப்­ப­வர்கள் என்ற தோற்­றப்­பா­டொன்றும் உள்­ளது. இதன் கார­ண­மாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய இரண்டு கட்­சி­களும் இன்று வரை ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் தொங்கி நிற்­கின்­றன.

கடந்த பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த 21 பேர் பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தினர். இதில் 17 பேர் ஐக்­கிய தேசிய முன்­ன­னியை சேர்ந்­த­வர்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. இத­னா­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிள­வொன்று ஏற்­ப­டு­மாயின் முஸ்லிம் சமூ­கமே அதிகம் பாதிக்­கப்­ப­டு­மெனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்கு இன்னும் ஏழு நாட்கள் மாத்­தி­ரமே உள்ள நிலையில் ஐக்­கிய தேசியக் கட்சி எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தென இது­வரை தீர்­மானம் மேற்­கொள்­ள­வில்லை.

இந்­நி­லையில் அக்­கட்சி தற்­போது ரணில் அணி மற்றும் சஜித் அணி­யென இரண்­டாகப் பிள­வு­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெரும்­பான்மை ஆத­ரவைக் கொண்ட அக்­கட்­சியின் செயற்­குழு யானைச் சின்­னத்­தி­லேயே கள­மி­றங்க வேண்­டு­மெனத் தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ளது.

அதே­வேளை, ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவின் பெரும்­பான்மை ஆத­ர­வினைக் கொண்ட அக்­கட்­சியின் பாரா­ளு­மன்­றக்­குழு சமகி ஜன பல­வே­கய எனும் கூட்­ட­ணியின் கீழ் கள­மி­றங்க வேண்டும் என தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும், ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­கு­ழுவே அதி­கா­ர­மிக்­க­தாகும். இவ்­வா­றான நிலையில் அக்­கட்­சியின் செயற்­கு­ழுவின் அங்­கீ­கா­ர­மின்றி சமகி ஜன பல­வே­கய கூட்­ட­ணியின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு கடந்த மார்ச் 1ஆம் திகதி கொழும்பு – 07 இலுள்ள தாமரை தடா­கத்தில் மிகப் பிர­மாண்­ட­மான முறையில் இடம்­பெற்­றது.

இந்­நி­கழ்வை ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, நவீன் திசா­நா­யக்க மற்றும் அகில விராஜ் கரி­ய­வசம் ஆகியோர் பகிஷ்­க­ரித்­தி­ருந்­தனர்.

இந்த சமகி ஜன பல­வே­கய கூட்­ட­ணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல உறு­மய, ஜன­நா­யக மக்கள் முன்­னணி, மலை­யக மக்கள் முன்­னணி மற்றும் தொழி­லாளர் தேசிய சங்கம் ஆகிய கட்­சி­களின் தமிழ் முற்­போக்கு முன்­னணி உள்­ளிட்ட ஐந்து அர­சியல் கட்­சி­களும் 20 சிவில் அமைப்­புக்­களும் 18 தொழிற்­சங்­கங்­களும் அங்கம் வகிக்­கின்­றன.

ஏற்­க­னவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய இரண்டு கட்­சி­களும் இணைந்து முஸ்லிம் கூட்­ட­மைப்­பாக பாரா­ளு­மன்ற தேர்­தலில் கள­மி­றங்க வேண்டும் என்ற கோரிக்­கை­யொன்று முஸ்லிம் சமூ­கத்தில் வலுப்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் அனு­ம­தி­யின்றி அமைக்­கப்­பட்­டுள்ள சமகி ஜன பல­வே­கய கூட்­ட­ணியில் மேற்­கு­றிப்­பிட்ட இரண்டு முஸ்லிம் கட்­சி­களும் அவ­ச­ரப்­பட்டு இணைந்­துள்­ளன.

இந்த இணைவின் கார­ண­மாக முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்­தி­லேயே பாதிப்­பேற்­பட வாய்ப்­புள்­ளது. குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் ரணில் அணி தனி­யா­கவும், சஜித் அணி தனி­யா­கவும் கள­மி­றங்கும் பட்­சத்தில் அது முஸ்லிம் சமூ­கத்­திற்கே அதிக பாதிப்­பாகும். அதே­வேளை, இந்த செயற்­பாடு ஆளும் அர­சாங்­க­மான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவை மேலும் பலப்­ப­டுத்தும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஐக்­கிய தேசியக் கட்சி இரண்டு அணி­க­ளாக தேர்­தலில் போட்­டி­யிட்டால் இரண்டு அணி­யி­னரும் முஸ்லிம் வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­குவர். இதனால் முஸ்லிம் வாக்­குகள் பிள­பு­ப­டுமே தவிர பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரைப் பெறு­வ­தற்கு வழி­வ­குக்­காது.

இதன் கார­ண­மாக ஐக்­கிய தேசிய கட்சி இரண்டு அணி­க­ளாக கள­மி­றங்கும் என்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து கூட்­ட­மைப்­பாக கள­மி­றங்க வேண்டும். இதுவே குறித்த இரு கட்­சி­களும் சமூ­கத்­திற்கு செய்யும் பாரிய நன்­மை­யாகும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அல்­லது சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான கூட்­ட­ணியில் இந்த இரண்டு கட்­சி­களும் அங்கம் வகிக்க முடியும் என்றால் ஏன் இந்த இரண்டு கட்­சி­களும் ஒன்­று­மை­யாக தேர்­தலில் கள­மி­றங்க முடி­யாது.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் மத்­தியில் ஆயிரம் பிள­வுகள் காணப்­பட்­டாலும் தேர்தல் என்று ஒன்று வரும் போது கூட்­ட­மைப்­பி­லுள்ள அனைத்து கட்­சி­களும் இலங்கை தமி­ர­ழரசுக் கட்­சியின் வீட்டு சின்­னத்­தி­லேயே கள­மி­றங்­கு­கின்­றன. காரணம், இலங்கை தமி­­ழரசுக் கட்சி தாய்க் கட்சி என்­ப­தாகும்.

அதே­போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் ஒரு தாய்க் கட்சி என்­பதால் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அக்­கட்­சியில் இணை­வ­தற்கு என்ன பிரச்­சினை. இன்­றுள்ள அனைத்து முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஊடாக முக­வரி பெற்­ற­வர்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை, சமகி ஜன பல­வே­கய கூட்­ட­ணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் அங்கம் வகிக்­கின்ற நிலையில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யிட வேண்டும் என அக்­கட்­சியின் அம்­பாறை மாவட்ட முக்­கி­யஸ்­தர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர்.

இந்தக் கருத்து சமூ­கத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு தெரி­விக்கும் கருத்­தொன்­றல்ல. மாறாக சில தனி­ந­பர்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தெரி­விக்கும் விட­ய­மாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், சஜித் அணி மற்றும் ரணில் அணி என அனை­வரும் இணைந்து போட்­டி­யிடும் பட்­சத்தில் அம்­பாறை மாவட்­டத்தில் நான்கு முஸ்லிம் ஆச­னங்­களை கைப்­பற்ற முடியும்.

அவ்­வா­றில்­லாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பிரிந்து கேட்கும் பட்­சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு பிர­தி­நி­தியை இழந்து இரண்டு ஆச­னங்­களை மட்­டுமே கைப்­பற்றும். இது­த­விர, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பிர­தி­நி­தித்­து­வத்தை இம்­மு­றையும் பெற முடி­யாத துர்ப்­பாக்­கியம் ஏற்­படும். அம்­பாறை மாவட்­டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­உல்­லாவின் செல்­வாக்கு நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­ற­மை­யினால், அதனை ஈடு­செய்ய இரு கட்­சி­களும் ஒரு அணியில் போட்­டி­யி­டு­வது பொருத்­த­மா­ன­தாக அமையும்.

இதே­வேளை, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அம்­பா­றையில் தனித்துப் போட்­டி­யிடும் பட்­சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வன்னி மாவட்­டத்தில் தனித்து கள­மி­றங்கும். அவ்­வாறு இறங்கும் பட்­சத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரான ரிஷாத் பதி­யு­தீனின் வெற்றி கேள்­விக்­கு­ரி­ய­தாக மாறும்.

ஏனெ­னில, கடந்த பாரா­ளுன்ற தேர்­தலில் ரிஷாத் பதி­யு­தீ­னுடன் இணைந்து போட்­டி­யிட்ட எஹியான் பாய் உள்­ளிட்ட பலர் இன்று அவ­ரு­ட­னில்லை. இவர்கள் அனை­வரும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன சார்பில் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராகக் கள­மி­றங்கத் தயா­ராகி வரு­கின்­றனர். அத்­துடன், ஏப்ரல் தாக்­கு­த­லுக்கு முன்னர் வன்னி தேர்தல் மாவட்­டத்­தி­லுள்ள தமிழ், சிங்­கள வாக்­குகள் குறிப்­பிட்­ட­ளவு ரிஷா­துக்கு கிடைத்­தன. இம்­முறை அது சாத்­தி­ய­மற்­ற­தொரு நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் தனித்துக் கள­மி­றங்­கினால் நிலைமை மோச­மாக அமையும்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் இரண்டு அணி­க­ளி­னதும் ஒற்­றுமை இன்று வரை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், சஜித் தலைமையிலான கூட்டணில் கைச்சாத்திட்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி முஸ்லிம் கூட்டமைப்பாக களமிறங்க வேண்டும்.

இதற்கு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஆதரவு வழங்குவர். இந்த இணைவு முஸ்லிம்களுக்கு பாரிய உந்து சக்தியினை வழங்கி, ஆசன எண்ணிக்கையிலும் அதிகரிப்பை ஏற்படுத்தும்.

சிலவேளை, ரணில் அணி தனித்துப் போட்டியிட்டு கைப்பற்றும் பாராளுமன்ற ஆசனங்கள் அனைத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக்கொடுக்க வழிசமைக்கும்.

அச்சமயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்கால அரசாங்கம் எதிர்பார்க்காது. இந்நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பென களமிறங்கும்போது பெறப்படும் அனைத்து ஆசனங்களும் எதிர்கால அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தீர்மானிக்கும் சக்தியாக நிச்சயம் மாறவும் வாய்ப்புள்ளது.-Vidivelli

  • றிப்தி அலி

Leave A Reply

Your email address will not be published.