மஹர சிறைச்சாலை வளாக பள்ளியை மீள ஒப்படைக்குக

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதியமைச்சர் நிமல் சிறிபால உத்தரவு

0 920

மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல், சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்டு புத்தர் சிலை­யொன்றும் வைக்­கப்­பட்டு சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள நிலையில் குறிப்பிட்ட ஜும்ஆ பள்­ளி­வா­சலை தொழுகைக்காக கையளிக்கும் படி நீதி சட்ட மறு­சீ­ர­மைப்பு, மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகத்­திற்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல் 100 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட வரலாற்றினைக் கொண்டதாகும்.

இப்­பள்­ளி­வாசல் கட்­டடம் புன­ர­மைக்­கப்­பட்டு சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வு­அ­றை­யாக மாற்­றப்­பட்டு அங்கு புத்தர் சிலை­யொன்றும் வைக்­கப்­பட்டு கடந்த பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி திறந்து வைக்­கப்­பட்­டது. இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரு­மான எம்.யூ.எம். அலி சப்ரி, அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வா­வுடன் கலந்­து­ரை­யா­டிய போதே தான் குறிப்­பிட்ட உத்­த­ர­வினை சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாய­கத்­திற்கு வழங்­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

கடந்த 26 ஆம் திகதி பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­த­பாவின் தலை­மையில் நீதி அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வாவை நீதி­ய­மைச்சில் சந்­தித்து இவ்­வி­வ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர். தற்­போது முஸ்­லிம்­க­ளுக்குத் தடை­செய்­யப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சலை மீண்டும் வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யும்­ப­டியும் வேண்­டிக்­கொண்­டனர்.

இச்­சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் இவ்­வி­வ­காரம் தொடர்பில் அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யா­டு­வ­தா­கவும் சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி சுமுக தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டி­ருந்தார். அவ­ரது உறு­தி­மொ­ழிக்­க­மை­யவே பள்­ளி­வா­சலை மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்­காக திறந்து விடு­வ­தற்கு அமைச்­ச­ரினால் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஏப்ரல் 21 தற்­கொலைக் குண்டுத் தாக்­குல்­களின் பின்பு பள்­ளி­வாசல் முஸ்­லிம்­களின் பாவ­னைக்குத் தடை­வி­திக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் சமயக் கட­மை­க­ளுக்கும் தடை­யேற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. பள்­ளி­வாசல் உடை­மை­களைக் கூட உப­யோ­கப்­ப­டுத்­து­வ­தற்கு முஸ்­லிம்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. ஜனாஸா தொழு­கைகள் கூட மைய­வா­டி­யி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டன.

பள்­ளி­வாசல் விவகாரம் தொடர்பில் நேற்று வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியதுடன் ஆவணங்களைப் பரிசீலித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் சுமுகமான தீர்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உட்பட சிவில் சமூக அமைப்புகள் நன்றிகளைத் தெரிவித்துள்ளன.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.