அடிப்­ப­டை­வா­த­மா­கக் ­காட்­டப்­படும் இஸ்­லா­மிய ஆடை ­க­லா­சாரம்

0 1,252

பல்­லின சமூகம் பரந்து வாழ்­கின்ற நமது நாட்­டில் ­முஸ்­லிம்கள் சுமார் பத்து சத­வீ­தமேயாகும். மிகச்­சி­று­பான்மை என்­பதால் கடந்த காலங்­க­ளில்­ அவ்­வப்­போது முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக விரும்­பத்­த­காத சில அசம்­பா­வி­தங்­கள் ­மேற்­கொள்­ளப்­பட்­டாலும் இந்த நாட்­டில்­முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட கெள­ரவம் அதை­விட அதிகம். மிகக்­கு­றைந்த விகி­தத்தில் வாழும்­முஸ்லிம் சமூகம் சுதந்­தி­ரத்­துக்குப் பிந்­திய காலந்­தொட்டு அண்­மைக்­கா­லம்­வரை பிற மதத்­த­வர்­க­ளால் ­ம­திக்­கப்­ப­டு­கின்ற ஒரு சமூ­க­மாக இருந்­துள்­ளது.

செனட்­ட­ராக, பல­மிக்க அமைச்­சர்­க­ளாக, சபா­நா­ய­கர்­க­ளாக, வெளி­நாட்­டுத்­தூ­து­வர்­க­ளாக, உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளாக என முஸ்­லிம்கள் பல உயர் பத­வி­களில் இருந்­துள்­ளனர்.

எனினும், அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் சமூகம் பிற சமூ­கங்­களால் எள்ளி நகை­யா­டப்­ப­டு­கின்ற ஒரு சமூ­க­மாக மாறி­யுள்­ளமை அனைத்து முஸ்­லிம்­க­ளுக்­கும் ­வே­தனை தரும் விட­ய­மாக உள்­ளது. இலங்கை வர­லாற்றில் இப்­போது தான்­ முஸ்­லிம்கள் இல்­லாத ஒரு அமைச்­ச­ரவை அமைக்­கப்­பட்­டுள்­ளது. தவி­ர­வும்­ முஸ்­லிம் ­ச­மூ­கத்­துக்­கெ­தி­ராக அர­சியல் தலை­வர்கள் பகி­ரங்­க­மாகக் கருத்து தெரி­விக்­கின்ற நிலை­யும்­தொ­டர்ச்­சி­யாகக் காணப்­ப­டு­கி­றது. இது பிற மத சாதா­ரண பொதுமக்­கள் ­மத்­தியில் முஸ்­லிம்கள் மீது வெறுப்பும் குரோ­தமும் ஏற்­பட ஏது­வா­கவும் உள்­ளன. இந்­நிலை தொட­ரு­மானால் முஸ்­லிம்­களின் எதிர்­காலம் மிக மோச­மான நிலைக்குத் தள்­ளப்­படும் என்­பது திண்ணம்.

இவ்­வா­றா­ன­தொரு நிலைக்கு இஸ்­லா­மிய சமூகம் தள்­ளப்­பட ஏப்ரல் 21 குண்­டுத் ­தாக்­கு­தல்தான் வழி­வ­குத்­தது என்ற குற்­றச்­சாட்டை நிரா­க­ரிக்க முடி­யாது. இருப்­பினும். அதற்கு முன்பே முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான விஷ­மப்­பி­ர­சா­ரங்கள் மும்­மு­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­ட­தோடு வன்­மு­றை­களும் நடத்­தப்­பட்டு பெரு­ம­ளவு சொத்­துக்­கள்­சூ­றை­யா­டப்­பட்டும் தீயிட்­டுக் ­கொ­ளுத்­தப்­பட்டும் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டன.

தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் வளர விடப்­ப­டக்­கூ­டாது என்ற தோர­ணையில் பகி­ரங்­க­மா­கப்­பேசி வரு­வது அனை­வ­ரும்­அ­றிந்த உண்மை. இவர்கள் இந்த வார்த்தைப் பிர­யோ­கத்தின் மூலம் எதை முன்­வைக்க விழை­கி­றார்கள் என்­பதைக் கவ­னிப்போம்.

பிற மதத்­த­வர்கள் இஸ்­லா­மிய அடிப்­படை வாதம் என்று எதைக்­கூ­று­கி­றார்கள் என்று புரி­யாத முஸ்­லிம்கள் ஏராளம் பேர் இருக்­கி­றார்கள். அதையும் தாண்டி அடிப்­படைவாதம் என்ற சொற்­பி­ர­யோ­கம்­கு­றித்து நிற்கும் அர்த்­தத்தை அறி­யா­தோர்­ அதைவிட அதிகம். அவர்கள் முஸ்­லிம்­ ஆண், பெண் இரு­பா­லாரின் ஆடை­க­ளையே இவ்­வாறு சுட்­டிக்­காட்­டு­கி­றார்கள் என்­பது அவர்­களின் உரை­களை நோக்கும் போதும்­ பு­ரிந்துகொள்ள முடி­கி­றது.

குறிப்­பாக பெண்­களின் முகத்தை மறைக்கும் புர்­கா­வுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அளவே இல்லை. இந்த ஆடை கலா­சா­ரத்தால் முஸ்­லிம்கள் குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் பல சந்­தர்ப்­பங்­களில் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். அசெ­ள­க­ரி­யத்­தைப்­பற்றி அலட்­டிக்­கொள்­ளாத ஒரு மிகச்­சொற்­ப ­தொ­கை­யி­னர்­ இ­ருந்­தாலும் முகம் மூடி­யதால் சவால்­களை எதிர்­கொள்ள முடி­யாமல் அவ­தி­யும் ­அ­வ­மா­னமும் படு­கின்­ற­வர்கள் ஏராளம். இந்­நி­லையில் இந்த ஆடை விட­யத்­திலுள்ள சாதக – பாத­கங்­களை அலசி ஆராய்­வது இன்­றைய நிலையில் மிக அவ­சி­ய­மாகும்.

முஸ்­லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகா­ணத்­தில்­ ஆ­ரம்­ப­காலம் தொட்டு தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒன்­றோ­டொன்­றாகக் கலந்து வாழ்ந்­தனர். அத­னால்­ அக்­கா­லத்தில் முஸ்­லிம்­களின் மதம், கலா­சா­ரம் ­உட்­பட அனைத்து விட­யத்­திலும் தமிழ் ­மக்­களின் வாழ்­வியல் ஒழுங்கு தாக்கம் செலுத்­தி­யது. தமிழ் ­பெண்­க­ளைப்­போல முஸ்லிம் பெண்கள் சாரி அணிந்­தார்கள் என்­ப­தற்கு மேலாக திரு­ம­ணத்தில் தாலி உட்­பட பல சம்­பி­ர­தா­யங்கள் பின்­பற்­றப்­பட்­டன. பூப்­பெய்­வது விழா­வா­கக்­கொண்­டா­டப்­பட்­டது.

கால ஓட்­டத்தில் அல்குர்ஆனும் ஹதீஸ் கிரந்­தங்­களும் தமி­ழில்­வந்­த­தோடு இஸ்­லா­மிய இயக்­கங்­களின் வரு­கை­யும் ­ இலங்கை முஸ்­லிம்­களின் வாழ்­வி­யல் ­போக்­கில் ­மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தத் ­தொ­டங்­கின. இதனால் முஸ்­லிம்கள் கொள்கை ரீதி­யா­க­வும் ­ந­டை­முறை ரீதி­யா­கவும் கலா­சார ரீதி­யா­கவும் பல்­வேறு வகை­யான மாற்­றங்­களை மேற்­கொள்ள இந்த இயக்­கங்­கள்­மக்­களை சமூ­கத்தின் பெயரால் நிர்ப்­பந்­தித்­தன என்றே கூற வேண்டும். இவற்றில் அதி­க­மா­னவை இஸ்­லா­மிய சமூ­கத்­தின்­அ­வ­சி­யத்­தே­வை­யாக இருக்­கின்ற அதே­வேளை ஒரு­சில விட­யங்கள் சமூ­கத்தை பிற சமூ­கங்­க­ளி­ட­மி­ருந்து பிரித்து சங்­க­ட­மான ஒரு நிலைக்குத் தள்ளி விட்­டுள்­ளதை யாரும் மறுப்­ப­தற்­கில்லை. இதில்­அ­திக பங்கு புர்­கா­வுக்கும் ஹபா­யா­வுக்கும் உண்டு.

பொரு­ளா­தா­ரத்­தின்­மீது அள­வுக்­க­தி­க­மாக மோகம் ­கொள்­வதை இஸ்லாம் வன்­மை­யாக வெறுக்­கி­றது. ஆயினும் முஸ்­லிம்­களில் குறிப்­பிட்ட சத விகி­தத்­தி­னர்­ அ­ள­வுக்­க­தி­க­மாக பொரு­ளா­தா­ரத்­தின்­மீது மோகம் ­கொண்­ட­வர்­க­ளா­க­வும் ­சொத்து சுகங்­களைச் சேக­ரிப்­பதில் அதிக ஆர்­வ­மு­டை­ய­வர்­க­ளாக இருப்­ப­தையும் இன்னும் சிலர் அதற்­காக கேவ­ல­மான போதை­வஸ்து கடத்தல், கொலை, கொள்ளை போன்ற படு­பா­த­கச்­ செயல்­களில் ஈடு­பட்டு ஒட்­டு­மொத்த இஸ்­லா­மிய சமூ­கத்­தையும் தலை­கு­னி­வுக்கு உள்­ளாக்­கு­வ­தையும் கண்­கூ­டாகக் காண்­கிறோம். அதே­போல முஸ்­லிம்கள் இஸ்லாம் விரும்­பாத நபியின் உணவு வழி­காட்­ட­லுக்கு மாறாக ஆடம்­ப­ர­மான உண­வுப் ­ப­ழக்­கத்­தைக் ­கொண்­ட­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர். இவை­களும் இன்­றைய இஸ்­லா­மிய சமூகம் எதிர்­கொள்ளும் சங்­க­டங்­க­ளுக்­கான கார­ணி­க­ளாக உள்­ளதை மறுப்­ப­தற்­கில்லை.

எனவே, இவற்­றிற்­கெ­தி­ராகப் பேச­வேண்­டிய தேவை இருக்­கின்ற நிலை­யில்­ அதுபற்றி எதுவும் பேசாது கருத்து வேறு­பாட்­டுக்கு இட­மு­டைய புர்கா, கறுப்பு நிற ஹபாயா என்­ப­வற்­றுக்குக் கொடுக்­கின்ற முக்­கி­யத்­து­வ­மும்­ அ­தற்­கான போராட்­டமும் எந்­த­ள­வுக்கு நியா­ய­மா­னது என சிந்­திக்­கத்­ தூண்­டு­கி­றது.

நபி­யு­டைய மனை­வி­ய­ரிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்க நேரிட்டால், திரைக்கு அப்பால் இருந்து கொண்டே அவர்­க­ளி­டம்­கே­ளுங்கள். (அல்­குர்ஆன்: 33:53)

அந்­நிய ஆண்­க­ளி­ட­மி­ருந்து தங்­களை மறைத்­துக்­கொள்­ளு­மாறு நபி (ஸல்). அவர்­களின் மனை­வி­ய­ருக்கு கட்­டளை இட்ட அல்லாஹ் ஏனைய பெண்­க­ளிடம் இவ்­வாறு கூறு­கிறான்.

(நபியே!) நம்­பிக்­கை­யுள்ள பெண்­க­ளுக்கு நீங்­கள்­ கூறுங்கள்: அவர்­களும் தங்­கள்­பார்­வையைக் கீழ்­நோக்கி வைத்துத் தங்கள் கற்­பையும் பாது­காத்­துக்­கொள்­ளவும் அன்றி தங்கள் தேகத்தில் (தாமாக வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர) தங்கள் அழகை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். (அல்குர்ஆன்: 24:31)

மேற்படி வசனத்தில் அல்லாஹ்வின் கட்டளைகள் வருமாறு–

· பார்வையை கீழ்நோக்கி வைக்க வேண்டும்

· கற்பைப்பாதுகாக்க வேண்டும்

· (தாமாக வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர) அழகை வெளிக்காட்டக்கூடாது

· முந்தானையால் மார்பை மறைக்க வேண்டும்.

பார்வையை கீழ்நோக்கி வைக்குமாறு என்பதிலிருந்தும் தாமாக வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர என்பதிலிருந்தும் முகத்தை மறைப்பது குர்ஆனின் வழிகாட்டலுக்கு முரணானது என்பது புரிகிறது.

மேலும் எல்லா தர்ஜுமாக்களிலும் இதில்வரும் முந்தானை என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. எனினும் நமது ஹபாயா முந்தானையைக் கொண்டதல்ல. இதிலிருந்தே ஹபாயாதான் முஸ்லிம்களின் கலாசார ஆடை என்ற வாதம் வலுவற்றதாகி விடுகிறது.-Vidivelli

  • எம்.ஏ.எம்.மர்சூக்,
    மருதமுனை.

Leave A Reply

Your email address will not be published.