மட்டு. தேவாலயத்துக்குள் நுழைந்த நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர்

0 768

மட்­டக்­க­ளப்பு தேவா­ல­யத்­துக்குள் உட்­பு­குந்­த­தாக தெரி­வித்து கைது செய்­யப்­பட்ட 2 பெண்கள் உள்­ளிட்ட நான்கு முஸ்­லிம்­களும் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பொலிசார் தெரி­வித்­தனர்.

மட்­டக்­க­ளப்பு புனித செபஸ்­ரியான் தேவா­ல­யத்தில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை ஆரா­தனை இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த போது ஒரு குடும்­பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்­பட நான்கு முஸ்­லிம்கள் தேவா­ல­யத்­துக்குள் நுழைந்­துள்­ளனர். இதன்­போது அங்­கி­ருந்தோர் கல­வ­ர­ம­டைந்து குறித்த 4 பேரையும் பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து இவர்­களை விசா­ரணை செய்த மட்­டக்­க­ளப்பு தலை­மை­யக பொலிசார் விசா­ர­ணையின் பின்னர் அன்று மாலையே விடு­தலை செய்­தனர்.
இவ்­வாறு சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் அம்­பாறை இறக்­காமம் பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 56 வய­து­டைய பெண் மற்றும் அவ­ரது 39 வய­து­டைய வாய் பேச­மு­டி­யாத மகள், 23 வய­து­டைய மகன் , 33 வய­து­டைய மரு­மகன் ஆகி­யோ­ரே­யாவர்.

வாய்­பேச முடி­யாத தமது மகளின் நோயை குணப்­ப­டுத்­து­வ­தற்­காக இரு மோட்டார் சைக்­கிளில் இவர்கள் சீயோன் தேவா­ல­யத்­துக்கு வந்­த­தா­கவும் அங்கு ஆலயம் மூடப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து அதன் ஆரா­தனை வேறு இடத்தில் நடப்­ப­தாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் நுழைந்ததாகவும் பொலிசாரிடம் வாக்குமூலமளித்துள்ளனர். இதனையடுத்தே இவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எஸ்.எம்.நூர்தீன்

Leave A Reply

Your email address will not be published.