பாதுகாப்பு குழு அறிக்கை: முஸ்லிம் சமூகத்தின் மீது சந்தேகங்களை ஏற்படுத்தும்

தெளிவுபடுத்துமாறு முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள்

0 782

பத்­தி­ரி­கை­களில் வெளி­யி­டப்­பட்­டுள்ள தேசிய பாது­காப்பு பற்­றிய பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வைக் குழுவின் அறிக்கை பற்­றிய செய்­திகள் நாட்டு மக்கள் மத்­தியில் அமை­தி­யற்ற நிலையை உரு­வாக்­கலாம். அத்­தோடு முஸ்லிம் மக்கள் மீது ஏனைய இன மக்கள் பீதி மற்றும் சந்­தே­கங்­கம் கொள்ளும் நிலையை ஏற்­ப­டுத்­தலாம்.

எனவே அச் செய்­தி­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான அத்­தாட்­சிகள் உங்­க­ளிடம் இல்­லா­விட்டால் அது தொடர்பில் ஊட­கங்­களைத் தெளி­வு­ப­டுத்­தும்­ப­டியும் அத்­தோடு குழுவின் அறிக்கை மற்றும் பத்­தி­ரி­கை­களில் பிர­சு­ரிக்­கப்­பட்ட செய்­திகள் தவ­றா­னவை என்­பதை திருத்தம் செய்து நிரூ­பிக்கும் படியும் வேண்டிக் கொள்­கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்­லிம கவுன்ஸில் தேசிய பாது­காப்பு பற்­றிய பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வைக் குழுவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மலிக் ஜய­தி­ல­க­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் கையொப்­ப­மிட்டு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
கடந்த 19 ஆம் திகதி தேசிய பாது­காப்பு பற்றி பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வைக் குழு பாரா­ளு­மன்­றத்­துக்குச் சமர்ப்­பித்த அறிக்கை தொடர்பில் வெளி­வந்த செய்­திகள் பல எமது கவ­னத்தை ஈர்த்­துள்­ளன. அந்தச் செய்­திகள் கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்பு வெளி­நாட்டு அடிப்­ப­டை­வாத பிர­சா­ரங்­களை மேற்­கொள்ளும் இரு முஸ்லிம் பிர­சா­ர­கர்கள் இலங்­கைக்கு வந்து அடிப்­ப­டை­வாத பிர­சா­ரங்­களை மேற்­கொண்­ட­தாகத் தெரி­வித்து அதற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்­துள்­ளன.

உங்­க­ளது தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள தேசிய பாது­கப்பு பற்­றிய துறைசார் மேற்­பார்­வைக்­குழு தயா­ரித்­துள்ள அறிக்­கையில் அடிப்­ப­டை­வாத சிந்­த­னை­களைப் போதிக்கும் முஸ்லிம் பிர­சா­ர­கர்­க­ளான இந்­தி­யர்கள் சாகீர் நாயக். பி. ஜெயினுல் ஆப்தீன் ஆகிய இரு­வரும் இலங்கை வந்து பிர­சா­ரங்கள் மேற்­கொண்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது. எமது நாட்டில் முஸ்லிம் மக்கள் அறி­யாது முஸ்லிம் சமய பிர­சா­ர­கர்கள் இலங்­கைக்கு எவ்­வி­தத்­திலும் வர­மு­டி­யாது. அதற்­கான வாய்ப்பே இல்லை.

எவ்­வா­றா­யினும் ஏதோ ஒரு முறையில் அவ்­வா­றான பிர­சா­ர­கர்கள் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இலங்­கைக்கு வந்­தி­ருந்தால் அவர்கள் இந்­நாட்­டுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு விசா வழங்­கு­வ­தற்­கான அதி­காரம் மத்­திய அர­சாங்­கத்­துக்கு மாத்­தி­ரமே உள்­ளது. தேசிய பாது­காப்­பினை ஆபத்­தி­லி­ருந்தும் தவிர்க்கும் பொறுப்பு மத்­திய அர­சாங்­கத்­தி­டமே இருக்­கி­றது என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அந்த பிர­சா­ர­கர்கள் இலங்­கைக்கு வருகை தந்த கால ­எல்லை, அவர்கள் பிர­சா­ரங்­களை மேற்­கொண்ட இடம், அவர்­க­ளது பிர­சா­ரங்­களில் உள்­ள­டங்­கி­யி­ருந்த சாராம்சம் தொடர்­பி­லான விப­ரங்­க­ளையும் வெளி­யிட்டால் அது மிகவும் பய­னுள்­ள­தாக இருக்­கு­மெனக் கரு­து­கிறோம்.

ஊட­கங்­களில் வெளி­யான குறிப்­பிட்ட செய்­திகள் மக்கள் மத்­தியில் சல­ச­லப்­பினை ஏற்­ப­டுத்­தலாம். அத்­தோடு முஸ்லிம் மக்கள் பற்றி ஏனைய இன மக்கள் மத்­தியில் பீதி மற்றும் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தலாம்.

எனவே, இஸ்லாமிய பிரசாரகர்கள் தொடர்பான உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் உங்களிடம் இல்லாதுவிட்டால் அது தொடர்பில ஊடகங்களைத் தெளிவுபடுத்துங்கள். அத்தோடு குறிப்பிட்ட அறிக்கை மற்றும் பத்திரிகைச் செய்திகள் தவறானவை என திருத்தம் செய்யுங்கள் என அன்புடன் வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.