சாய்ந்தமருது விவகாரம் சுமுகமான தீர்வு வேண்டும்

0 583

சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யான நகர சபை விவ­காரம் சாய்ந்­த­ம­ருது மக்கள் மத்­தியில் மாத்­தி­ர­மல்ல முழு நாட்­டிலும் சர்ச்­சை­களைத் தோற்­று­வித்­துள்­ளது. கடந்த 14 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் சாய்ந்­த­ம­ருது மக்­க­ளுக்கு அர­சாங்கம் வழங்­கிய நகர சபையை ஐந்து நாட்­களின் பின்பு கடந்த 19 ஆம் திகதி பறித்துக் கொண்­டது.

சாய்ந்­த­ம­ரு­துக்­கான நகர சபை வர்த்­த­மானி அறி­வித்­தலை உள்­நாட்­ட­லு­வல்கள், பொது நிர்­வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் ஜனக பண்­டார தென்­னகோன் வெளி­யிட்­டி­ருந்தார். வர்த்­த­மானி அறி­வித்­தலில் சாய்ந்­த­ம­ருது நகர சபையின் பத­விக்­காலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஆரம்­ப­மாக உள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட 1 – 17 வரை­யான கிராம அலு­வலர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய நிலப்­பி­ர­தே­சத்தை உள்­ள­டக்கி வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. கல்­முனை மாந­கர சபையை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி கலைத்து விடு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான நகர சபை வழங்­க­பட்­டமை தொடர்பில் கடந்த 14 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு அதி­வி­சேட வர்த்­த­மானி வெளி­யா­ன­தை­ய­டுத்து அப்­ப­குதி மக்கள் மகிழ்ச்­சியில் பூரித்துப் போனார்கள். கொண்­டாட்­டங்­களில் ஈடு­பட்­டார்கள். சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வாசல் முன்னால் ஒன்­று­கூடி பட்­டாசு கொளுத்­தி­னார்கள். பாற்­சோறு வழங்­கி­னார்கள். இனிப்­பு­களைப் பகிர்ந்து கொண்­டார்கள். தங்­க­ளது பல தசாப்த கால போராட்­டங்­க­ளுக்கு விடிவு கிட்டி விட்­ட­தாக அல்­லாஹ்வைப் புகழ்ந்­தார்கள்.

ஆனால் ஐந்து தினங்­களின் பின்பு அதிர்ச்­சித்­த­கவல் தங்­களை நிலை­கு­லைய வைக்கும் என அவர்கள் கன­விலும் எதிர்­பார்க்­க­வில்லை. 19 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் குறிப்­பிட்ட விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலை இரத்துச் செய்­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை தொடர்பில் இடம்­பெற்ற வாத­பி­ர­தி­வா­தங்­களின் பின்பே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அமைச்­ச­ரவை அனு­மதி கிடைக்­காத கார­ணத்­தினால் சாய்ந்­த­ம­ருது நகர சபையை உரு­வாக்­கு­வ­தற்­காக வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மா­னியை இரத்துச் செய்ய அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­தது. சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தை விசேட நகர சபை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது தொடர்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதற்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் அப்­போ­தைய அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது. அதற்கு அமை­வா­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் பந்­துல குண­வர்­த­னவின் நியா­யப்­ப­டுத்­தலை சாய்ந்­த­ம­ருது மக்கள் ஏற்றுக் கொள்­ளப்­போ­வ­தில்லை. இன­வாத அர­சி­யல்­வா­திகள் சாய்ந்­த­ம­ருது மக்கள் மீது பூசிய இன­வாத சாயத்­தி­னை­ய­டுத்தே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யாக நக­ர­சபை வழங்­கப்­ப­டு­வது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­னிகா பிரே­ம­சந்­திர, ஆஷு­மார சிங்க, அமைச்சர் விமல் வீர­வன்ச தெரி­வித்த கருத்­துக்கள் இதனை உறுதி செய்­கின்­றன.

ஒரு பிர­தே­சத்­துக்கு மாத்­திரம் உள்­ளூ­ராட்சி சபையை இவ்­வாறு வழங்­காமல் நாட்டில் இவ்­வா­றாக அவ­சியம் ஏற்­பட்­டுள்ள ஏனைய பிர­தே­சங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மூலம் ஒரே தட­வையில் அதற்­கான அங்­கீ­கா­ரத்­தையும் அறி­விப்­பையும் வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ள­தாக அமைச்­ச­ரவை பேச்­சாளர் பந்­தல குண­வர்­தன சாய்ந்­த­ம­ருது மக்­களை சமா­தா­னப்­ப­டுத்த முயற்­சிப்­பது வருந்­தத்­தக்­க­தாகும்.

இவ்­வா­றான நிலையில் சாய்ந்­த­ம­ருது மக்­களை இன்று துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட்டு பின்பு அதனை சில தினங்­களில் இரத்துச் செய்த அமைச்சர் ஜனக பண்­டார தென்­னகோன் பகி­ரங்க மன்­னிப்­புக்­கோர வேண்டும்.

வர்த்­த­மானி அறி­வித்­த­லொன்­றினை வெளி­யி­டு­வ­தென்­பது மிகவும் பொறுப்பு மிக்க செய­லாகும். அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரின் கருத்­துப்­படி அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ர­மில்­லாது அவர் அந்த அறி­வித்­தலை வெளி­யிட்­டுள்ளார்.

சாய்ந்தமருதுவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களது பயிற்சிகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இக்காரணிகளினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளை பாதுகாப்பு பிரிவினருக்கு இனங்காட்டியவர்கள் சாய்ந்தமருது மக்களே என்பதை அவர் அறிந்து கொள்ளாமை வேடிக்கையாக உள்ளது.

சாய்ந்தமருது மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படவேண்டும். இனவாதம் இவ்விவகாரத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.