கலை, இலக்கியத்தை வளர்த்தெடுத்தலும் கல்விசார் சமூகம் நோக்கி நகர்தலும்

0 549

‘வழி சொல், வழி விடு’ எனும் கரு­பொருள் தாங்கி அக்குறணை அபாபீல் இளை­ஞர்­களால் நடாத்­தப்­பட்ட ­க­லை­ வி­ழாவில் அஷ்ஷெய்க் ரிஷாட் நஜிமுதீன் ஆற்றிய உரையின் தொகுப்பு:

முதி­ய­வர்கள், இளை­ஞர்கள் இரு­சா­ராரும் சமூக சீர்­தி­ருத்த வேலைத்­திட்­டத்தில் முக்­கி­ய­மா­ன­வர்கள் என்ற கருத்து ஏற்­க­னவே இந்­நி­கழ்வில் வலி­யு­றுத்­தப்­பட்­டது. எனது உரை அவ்­விரு சாராரும் சமூக சீர்­தி­ருத்தப் பணியில் ஈடு­படும் போது, அக்­கு­றணை போன்­ற­தொரு சமூக ஒழுங்கில், முன்­னு­ரி­மைப்­ப­டுத்த வேண்­டிய இரு விட­யங்­களை சுட்டிக் காட்­டு­வ­தா­கவே உள்­ளது.
01. கலை, இலக்­கியம், பொழு­து­போக்கு சார்ந்த நிகழ்ச்­சி­களை இஸ்லாம் கூறிய பண்­பாட்டு வரை­ய­றை­க­ளுக்­குள்ளால் நின்று வளர்த்­தெ­டுத்தல்.
‘நல்ல மனித ஆளுமை’ உரு­வாக்கம் உடல், அறிவு, ஆன்மா ஆகிய மூன்­றி­னூ­டா­க­வுமே சாத்­தி­யப்­ப­டு­கி­றது என எமக்கு கற்றுத் தந்­தி­ருக்­கி­றார்கள். அம்­மூன்­றுடன் சேர்த்து இன்­னொன்­றையும் இணைக்க வேண்டும் எனலாம். மனித உணர்­வுக்கு முக்­கிய இடம் கொடுக்­கப்­பட வேண்டும். அல்­குர்ஆன் மனித உணர்­வுடன் பேச முனை­கி­றது. இயற்கை காட்­சி­களை மனக்கண் முன் கொண்­டு­வந்து நிறுத்­து­கி­றது. ழுஹா நேரத்தின் மீது அல்­குர்ஆன் சத்­தியம் செய்­கி­றது. பனித்­து­ளிகள் இலை­களின் ஓரங்­க­ளி­லி­ருந்து வடிந்­து­கொண்­டி­ருக்கும் நேரம். சிட்டுக் குரு­விகள் அன்­றைய நாளை எதிர்­பார்ப்­பு­டனும் மகிழ்­வு­டனும் இரை தேடிச் செல்லும் நேரம். அது அமை­தியின் நேரம். மகிழ்வின் நேரம். புத்­து­ணர்ச்­சியின் நேரம். களைப்­பில்­லாத நேரம். டென்ஷன் இல்­லாத நேரம். மனித உணர்­வுடன் இறு­கிய தொடர்­பு­கொண்­டி­ருக்கும் ழுஹா நேரத்தில் சத்­தியம் செய்­வதில் அறி­வு­டை­யோ­ருக்கு படிப்­பினை உண்டு. கால்­ந­டை­களை காலையில் மேய்ச்சல் நிலம் நோக்கி ஓட்டிச் செல்­வ­திலும் மாலையில் திரும்ப ஓட்டி வரு­வ­திலும் அழகு இருக்­கி­ற­தென அல்­குர்ஆன் கூறு­கி­றது. எமக்குப் புலப்­படும் வானம் விளக்­கு­களால் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது எனவும், வானத்தில் நட்­சத்­திரக் கூட்­டங்கள் ஆக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவை பார்ப்­ப­வர்­க­ளுக்கு அழ­கா­ன­தாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அல்­குர்ஆன் வர்­ணிக்­கி­றது.

இறை­தூ­த­ரது வாழ்வில் மனித உணர்வு சார்ந்த உரை­யா­டல்கள் எண்­ணி­ல­டங்­கா­தவை. இங்கு சில உதா­ர­ணங்­களை மாத்­திரம் தரு­கிறோம். நபி­ய­வர்கள் வீட்டில் தனது மனை­வி­மா­ருடன் எவ்­வாறு நடந்து கொள்­கிறார் என்­பதை ஸஹீஹுல் புஹா­ரியில் வரும் பின்­வரும் அறி­விப்பு விளக்­கு­கி­றது: ‘நபி­ய­வர்கள் தனது வீட்டில் தன் மனை­வி­மா­ருடன் நகைச்­சு­வை­யாகக் கதைத்துக் கொண்­டி­ருப்­ப­தையும், அவர்­க­ளுடன் செல்­ல­மாக இருப்­ப­தையும், அவர்கள் கூறும் கதை­க­ளுக்கு செவி­தாழ்த்திக் கேட்டுக் கொண்­டி­ருப்­ப­தையும் நாம் கண்­டி­ருக்­கிறோம்’. நபி­ய­வர்கள் ஆயிஷா நாய­கி­யுடன் ஓட்­டப்­போட்­டியில் ஈடு­பட்­டதை நாம் அறி­கிறோம். ஒரு கிழவி நபி­ய­வர்­க­ளிடம் வந்து தான் சுவர்க்கம் நுழைய துஆ செய்­யும்­படி வேண்­டு­கிறார். அதற்கு நபி­ய­வர்கள் முதி­ய­வர்கள் சுவர்க்கம் புக­மு­டி­யாது எனக்­கூற அவர் அழு­து­விட்டார். உடனே நபி­ய­வர்கள் யாரும் முதுமை நிலையில் சுவர்க்கம் நுழைய முடி­யாது. இளமை நிலைக்கு மாற்­றப்­பட்­டதன் பின்னே நுழைவர் எனக் கூறினார். ஹப­ஷி­க­ளு­டைய விளை­யாட்டுப் போட்­டியை கண்­டு­க­ளிக்க ஆயிஷா நாய­கியை அழைத்துச் சென்­றமை, அவர் சலிப்­ப­டையும் வரை நபி­ய­வர்கள் தொடர்ந்தும் அங்­கி­ருந்­தமை, நிகழ்வை சரி­யாகக் கண்­டு­ம­கிழ நபி­ய­வர்கள் ஆயிஷா (ரழி) அவர்­க­ளுக்கு உத­வி­யமை என்­ப­தெல்லாம் மனித உணர்­வுக்கு நபி­ய­வர்கள் எவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் கொடுத்­தி­ருக்­கிறார் என்­ப­தையே காட்­டு­கி­றது. அன்­சா­ரி­க­ளது விருந்­தொன்றில் கலந்­து­கொள்ளச் சென்ற நபி­ய­வர்கள், அங்கு அமைதி நில­வி­யதை அவ­தா­னித்தார். அங்­கி­ருந்­த­வர்­க­ளிடம் பொழு­து­போக்கு நிகழ்­வுகள் ஏது­மில்­லையா? அன்­சா­ரிகள் பொழு­து­போக்கை விரும்­பக்­கூ­டி­ய­வர்­க­ளல்­லவா! எனக் கேட்டார்.

இவை இஸ்லாம் மனித உணர்­வுக்கு எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் கொடுத்­துள்­ளது என்­ப­தற்­கான சில உதா­ர­ணங்கள் மாத்­தி­ரமே. இம்­ம­னித உணர்வை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்­கவே கலை, இலக்­கி­யங்கள் முனை­கின்­றன. நாடகம், இசை, ஓவியம், நாவல், சிறு­கதை, குறுந்­தி­ரைப்­படம், வீதி நாடகம், திரைப்­படம், பாட்டு, வில்­லுப்­பாட்டு, சுவர் ஓவியம், போட்­டோ­கி­ராபி, கொமடி, ஸ்டேண்ட் அப் கொமெடி, கார்ட்டூன் என கலை, இலக்­கிய வடி­வங்கள் வியா­பித்துச் செல்­கின்­றன. நாளுக்கு நாள் வளர்ச்­சி­ய­டை­கின்­றன. புதிய புதிய போக்­குகள், புத்­தாக்­கங்கள் உரு­வா­கின்­றன. சமூகப் பிரச்­சி­னை­களை அவை பேசு­கின்­றன. சமூகம் எதிர்­நோக்கும் சிக்­கல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் மனித உணர்­வு­க­ளுடன் அவை பிணைத்து விடு­கின்­றன.

கலை, இலக்­கிய ஆர்­வ­லர்­களும் ஆளு­மை­களும் எம்­மத்­தி­யிலும் உள்­ளனர். ஆதில் மவ்ஜூத், யாசிர் ஸுபைர் போன்­ற­வர்கள் வளர்ந்­து­வரும் இளை­ஞர்கள். சிங்­கள சகோ­த­ர­ரான அவந்த ஆட்­டி­க­ல­யு­டைய கார்ட்­டூன்­களை பாருங்கள். கருத்­தா­ழ­மிக்­கவை அவை. அர­சியல் கருத்­துக்­களை தனது கார்ட்­டூன்­க­ளி­னூ­டாக மக்கள் மனதில் பதி­ய­வைத்து விடு­கிறார். நாம் கலை, இலக்­கிய விட­யங்­களில் இன்னும் ஆழ­மாக வேரூன்ற வேண்­டி­யுள்­ளது. இறு­கிய சமூகக் கட்­ட­மைப்பைக் கொண்­டி­ருக்கும் நாம் கட்­டா­ய­மாக மேற்­கூ­றிய கலை, இலக்­கியப் பகு­தி­களில் கவனம் செலுத்­து­வ­துடன் அவற்றைக் கவ­ன­மாக வளர்த்­தெ­டுக்க வேண்­டியும் உள்­ளது. அதன் கருத்து மேற்­கத்­தைய கலை, இலக்­கி­யங்­களை அவ்­வாறே விழுங்­கி­விட வேண்டும் என்­ப­தல்ல. விமர்­சன ரீதி­யா­ன­தொரு பார்வை அவ­சி­யப்­ப­டு­கி­றது. இஸ்லாம் முன்­வைத்த பண்­பாட்டு வரை­ய­றைக்­குள்ளால் நின்று விமர்­சன நோக்­கொன்றை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யுள்­ளது. பிர­தி­யீ­டுகள் நோக்­கியும் நகர வேண்டும். ஹராம் பத்வா மாத்­திரம் போது­மா­ன­தாக இல்லை என்­பதே எமது அவ­தானம்.

02. கல்வி சார் சமூகம் எனும் நிலை நோக்கி நகர்தல்
அக்­கு­றணை சமூகம் ஓர் வியா­பார சமூகம் என்­றுதான் கூறு­வார்கள். அவ்­வாறு கூறு­வதில் நியா­யமும் இருக்­கி­றது என்­பதை சில இளை­ஞர்­க­ளுடன் உரை­யாடிப் பார்க்­கின்­ற­போது புரிந்­து­கொள்ள முடிந்­தது. 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாண­வ­னிடம் எதிர்­கால படிப்பு பற்றி உரை­யா­டினால், அவன் ஜப்பான் பற்றி எனக்குப் பாடம் எடுக்­கிறான். எமது ஊரில் ஒரு தர­மான வாசி­க­சாலை இன்னும் இல்லை. ஆனால் உண­வ­கங்கள் ஒவ்­வொரு நாளும் உரு­வாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஒவ்­வொரு நாளும் ஆயிரம் ரூபா கொடுத்து இறைச்சி வாங்கும் நாம் மாதத்­துக்­கொ­ரு­முறை முன்­னூறு ரூபா கொடுத்து புத்­தகம் வாங்கத் தயங்­கு­கிறோம். இதுதான் எமது நிலை. ஆசி­ரியர் தொழி­லுக்கு இங்­கி­ருக்கும் அந்­தஸ்தும் போட்­டியும் கவ­லைக்­கி­ட­மா­னது.
இஸ்லாம் வலி­யு­றுத்­திய கல்வி, அறிவை விட்டும் நாம் எந்­த­ளவு தூர­மா­கி­யி­ருக்­கிறோம் என்­பதை நினைத்துப் பார்க்க கஷ்­ட­மாக இருக்­கி­றது. கல்­விசார் சமூகம் எனும் நிலை நோக்­கிய நகர்வில் இரு எட்­டுக்களும் அவ­சி­ய­மா­கின்­றன. ஒன்று கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை உணர்தல். இன்­றைய உலகு சிந்­த­னையை மைய­மாக வைத்து இயங்­கு­கி­றது என்­ப­தற்கு அப்பால் இஸ்லாம் அதனை முக்­கி­ய­மா­ன­தொரு வணக்­க­மா­கக்­கூட ஆக்­கி­யி­ருக்­கி­றது. முதல் வஹி அல்­லாஹ்வை நம்­பிக்கை கொள்­ளும்­ப­டியோ, ஸுஜூத் செய்­யும்­ப­டியோ ஏவ­வில்லை. மாற்­ற­மாக ‘வாசிப்­பீ­ராக’ என்ற ஏவலே முஸ்லிம் சமூ­கத்­துக்­கான முதல் ஏவல். தொடர்ந்து வரும் வச­னத்தில் இறை­வனின் மிகப்­பெ­ரிய கொடை அவன் எழு­துகோல் கொண்டு கற்­பித்­தது என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. ஸூரா ரஹ்­மானின் ஆரம்பம் அவன் மிகப்­பெரும் கரு­ணை­யாளன் எனக் கூறி­விட்டு, தொடர்ந்து வரும் வசனம் அவ­னது மிகப்­பெரும் கருணை அல்­குர்­ஆனை கற்­பித்­த­தென அல்லாஹ் குறிப்­பி­டு­கிறான். கற்­பித்­தலும் கற்­றலும் மிகப்­பெரும் வணக்­கங்கள். ஆசி­ரியம் மிகப் பெரும் பாக்­கியம். தலை­முறை உரு­வாக்கும் மிகப்­பெ­ரி­ய­தொரு வேலைத் திட்டம். இதனை உணர்ந்து கொள்ளல் மிக அவ­சி­ய­மா­னது.

கல்­வியின் இலக்கு மீளொ­ழுங்கு செய்­யப்­பட வேண்டும் என்­பதும் எமது அவ­தா­ன­மாகும். ஏன் கற்­கிறேன்? ஏன் மேற்­ப­டிப்பு படிக்­கிறேன்? ஏன் இத்­து­றையை தெரி­வு­செய்­கிறேன்? போன்ற அடிப்­படைக் கேள்­வி­க­ளுக்கு மிகத் தெளி­வான விடை இருக்க வேண்டும். அவ்­வி­டையை அடைந்­து­கொள்ள மூத்­த­வர்கள் உதவ வேண்டும். சில இளை­ஞர்­க­ளிடம் மேற்­கூ­றிய வினாக்­களை தொடுத்­தி­ருக்­கிறேன். பெரும்­பா­லா­ன­வர்­க­ளது விடை திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை. தனிப்­பட்ட பொரு­ளா­தார மேம்­பாட்டை மாத்­திரம் இலக்­காகக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்­பதை அவர்­க­ளது பதில்கள் மிகத் தெளி­வாக சுட்டிக் காட்­டு­கின்­றன. பொரு­ளா­தார அடைவை இலக்­காகக் கொள்­வதில் பிரச்­சி­னை­யில்லை. ஆனால் அதனை மட்டும் இலக்­காகக் கொள்­வ­துதான் சிக்­க­லா­னது. இறை­தூ­த­ரது மிகப் பெரும் சுன்னா எது­வெனக் கேட்டால் அவ­ரது தனிப்­பட்ட வாழ்வை ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்­ட­தோடு அவ­ரது மிக முக்­கிய கரி­ச­னை­யாக சமூக மேம்­பாடு, சமூக சீர்­தி­ருத்தம், சமூ­க­நலன் போன்­ற­னவும் முக்­கிய இடம் வகித்­தன எனக் கூறுவேன். கல்வி இவ்­விரு நோக்­கங்­க­ளையும் அடையும் பய­ணத்தில் இருக்க வேண்டும். சமூகநலன் பற்றிய மனோநிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது பாரிய முயற்சியை வேண்டி நிற்கிறது.

துறைசார்ந்த மாணவர்களை உருவாக்குவதும் அவசியமானது. அனைவரும் டொக்டராக வேண்டும் எனும் மனோநிலை மாற வேண்டும். மாணவரது ஆர்வத்துக்கும் ஆசைக்கும் இடம் வழங்க வேன்டும். சமூகம் அனைத்து துறைகளையும் மதிக்க வேண்டும். நாம் ஏற்கனவே பட்டியலிட்ட கலை, இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் அத்துறைகளில் வழிகாட்டப்பட வேண்டும். அரசியல், பொருளாதாரம், கட்டடக் கலை, புவியியல், மருத்துவம், உளவியல் போன்ற துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் அத்துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். இதுவே பங்களிப்பு செய்யும் சமூகமொன்றை உருவாக்க வழிவகுக்கும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் உரிமைகளை பேசும் சமூகமாகவே இருக்கப் போகிறோம். கடமைகளை சரிவர செய்யும் சமூகமாக மாறுவதும் அதனூடாக பங்களிப்பு செய்யும் சமூகமாக பரிணாம வளர்ச்சியடைவதும்தான் இலங்கை முஸ்லிம் சமூகம் மீதுள்ள பாரிய பொறுப்பு எனலாம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.