குத்பா உரைகளில் கவனிக்கப்படாத நேர முகாமைத்துவம்

0 824

வாரந்­தோறும் நிகழ்த்­தப்­படும் குத்­பாக்கள் சமூ­கத்­திற்கு தக­வல்­களை கடத்­தக்­கூ­டிய ஒரு சமூக ஊட­க­மாகத் திகழ்­கின்­றன.

புரட்­சி­க­ர­மான சமூக மாற்­றத்தை உண்­டு­பண்ணும் கேந்­திர நிலை­யங்­க­ளா­கவே மிம்பர் மேடைகள் அன்று தொடக்கம் இன்று வரை காணப்­ப­டு­கின்­றன.
எனவே, அவற்றில் ஆற்­றப்­படும் உரைகள் வினைத்­திறன் மிக்­க­தா­கவும் ஆக்­க­பூர்­வ­மா­ன­தா­கவும் நெறிப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்று பல கட்­டுரைத் தலைப்­புக்­களில் அலசி ஆரா­யப்­பட்­டுள்­ளன.

என்­றாலும், இவ்­வ­னைத்­திலும் மிக முக்­கிய புள்­ளி­யாகத் திகழ்­வது நேர முகா­மைத்­து­வ­மாகும். ஒரு பேச்­சா­ளரின் சாணக்­கி­யத்­தையும் அவரின் ஆளு­மை­யையும் வெளிக்­காட்­டு­வதே அவர் கையாளும் நேர முகா­மைத்­துவம் என்றால் அது மிகை­யா­காது.

இன்று சமூ­கத்­தி­லுள்ள அனைத்து தரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­ப­டக்­கூ­டிய, குத்பா உரைகள் பற்­றிய விமர்­ச­னங்­களில் நேர முகா­மைத்­துவம் பேணப்­ப­டாமை இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

ஒரு பேச்­சாளர் மிகத் திற­மை­யா­கவும் ஆக்­க­பூர்­வ­மா­கவும் தனது உரையை முன்­வைத்து, குறித்த நேரத்தை விடவும் அவ­ரது உரை நீண்டால் அவ­ரது அனைத்து முயற்­சி­களும் ஆற்றில் கரைத்த புளிபோல் மாறி­விடும் என்­பதில் எள்­ள­ளவும் சந்­தே­க­மில்லை.

நேர முகா­மைத்­துவம் பற்­றிய இஸ்­லா­மியக் கண்­ணோட்டம்
நேரம் உண்­மையில் பெறு­ம­தி­மிக்­கது, விலை­ம­திக்க முடி­யா­தது. பத்­தரை பசும் பொன்­கூட மனி­தனின் ஆயுளில் ஒரு வினா­டிக்கு ஈடா­காது. காலம், நேரம் அவ்­வ­ளவு பெறு­ம­தி­வாய்ந்­தவை, உச்ச பய­ன­டையும் வகையில் நன்கு திட்­ட­மி­டப்­பட்டு பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யவை, வீண­டிக்­கத்­த­கா­தவை என்­ப­தை­யெல்லாம் உணர்த்தும் பொருட்டு காலம், இரவு, பகல் விடி­யற்­காலை, காலை, முற்­பகல் என்­ப­வற்றின் மீது அல்லாஹுத் தஆலா சத்­தி­ய­மி­டு­கிறான்.
“காலத்தின் மீது சத்­தி­ய­மாக” (103:01)
“இரவின் மீது சத்­தி­ய­மாக அது மூடிக்­கொள்ளும் போது. பகலின் மீது சத்­தி­ய­மாக அது வெளி­யா­கிய போது”. (92: 01– 02),
“விடி­யற்­கா­லையின் மீது சத்­தி­ய­மாக” (89: 01),
“காலையின் மீது சத்­தி­ய­மாக அது தெளி­வா­கிய போது” (81:18), “முற்­பகல் மீது சத்­தி­ய­மாக” (93:01) என புனித அல்­குர்­ஆனில் ஆங்­காங்கே காணலாம்.
காலத்தை சரி­வர முகா­மைத்­துவம் செய்­வது தனி­ம­னிதப் பொறுப்­பாகும். அது­பற்றி மறு­மையில் விசா­ரணை உண்டு. இது இல­குவில் பதில் சொல்லித் தப்­பிக்க முடி­யு­மான விட­ய­மன்று. ஆயுட்­கா­லத்தை கழித்த முறை­பற்றி அல்­லாஹ்­விடம் சரி­யாகக் கணக்குக் காட்ட வேண்டும். பின்­வரும் நாயக வாக்­கியம் இதனைத் தெளி­வு­ப­டுத்­து­கின்­றது.

“நான்கு விட­யங்கள் பற்றி அவன் விசா­ரிக்­கப்­படும் வரை ஓர் அடி­யானின் பாதங்கள் மறுமை நாளில் அசை­ய­மாட்டா. அவனின் வாழ்நாள் பற்றி அதனை அவன் எதில் கழித்தான், அவனின் வாலிபம் பற்றி அதனை அவன் எதில் கழித்தான், அவனின் செல்வம் பற்றி அதனை அவன் எங்­கி­ருந்து சம்­பா­தித்தான், மேலும் அதனை அவன் எதில் செல­வ­ழித்தான், அவனின் அறிவு பற்றி அதிலே அவன் என்ன செய்தான்.” (அறி­விப்­பவர்: முஆத் இப்னு ஜபல் (ரழி), நூல்: அல்- முஃஜம் அல்-­கபீர்)

மனித ஆயுள் மிக மிகக் குறை­வா­னது. இக்­கு­று­கிய வாழ்­நா­ளுக்­குள்தான் மனிதன் மறு­மைக்­காக சம்­பா­திக்க வேண்டும், சேமிக்க வேண்டும். இவை அனைத்­துக்கும் இடையில் இவ்­வு­லகத் தேவை­க­ளையும் நிறை­வேற்றிக் கொள்ள வேண்டும். தான் மட்­டுமா? பெற்றார், மனைவி, மக்கள், உற்­றத்தார், சுற்­றத்தார் எனப் பலரும் உளர். இவர்­க­ளையும் தன்­னுடன் சேர்த்துக் கவ­னித்­தாக வேண்டும். தனிப்­பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில், பொரு­ளா­தார வாழ்வில், தொழில் வாழ்வில் பலதும் பத்தும்.

என­வேதான், நேரத்தை நாம் சரி­யாகத் திட்­ட­மிட்டு நம்மை நாம் இயக்க வேண்­டி­யுள்­ளது. காலமும் நேரமும் எம்­ம­னி­த­ருக்­கா­கவும் காத்­தி­ருப்­ப­தில்லை என்­பது ஆங்­கில முது­மொ­ழி­யொன்றின் பொரு­ளாகும். நாம் நேரத்தைப் பயன்­ப­டுத்­தி­னோமோ, இல்­லையோ கழி­கின்ற ஒவ்­வொரு நொடிப் பொழுதும் நிச்­ச­ய­மாக திரும்­பி­வரப் போவ­தில்லை, அதனை எவ்­விலை கொடுத்தும் பிர­தி­யீடு செய்து கொள்ள முடி­யாது. ஓர் அரே­பிய கவி­தையின் தமி­ழாக்கம் இது:
“உமது ஆயுள் எண்­ணப்­ப­டக்­கூ­டிய சில மூச்­சுகள். உம்­மி­லி­ருந்து ஒரு மூச்சு சென்ற போதெல்லாம் ஆயுளில் ஒரு பகுதி உமக்கு குறைந்து விட்­டது.”
விடி­யற்­கா­லையில் எழுந்­தது முதல் இரவு படுக்­கைக்கு செல்­லும்­வரை நமது வேலை­களை திட்­ட­மிட்டுக் கொண்டு தொழிற்­பட வேண்டும். நேரத்­துக்கு ஒரு வேலை, வேலைக்கு ஒரு நேரம் என்ற வகையில் நம்மை நாம் பயிற்­று­விக்க வேண்டும். நாளையை இன்றே திட்­ட­மிட்டுக் கொள்ள வேண்டும்.
அவ­சி­ய­மா­னது எது, அதி அவ­சி­ய­மா­னது எது, அவ­ச­ர­மா­னது எது, அதி அவ­ச­ர­மா­னது எது, முக்­கி­ய­மா­னது எது, அதி முக்­கி­ய­மா­னது எது, குடும்பம் சார்ந்­தது எது, தொழில் சார்ந்­தது எது, சமூகம் சார்ந்­தது எது என்­றெல்லாம் வகைப்­ப­டுத்தி அவை­க­ளுக்குத் தேவை­யா­ன­ளவு நேரத்தைத் திட்­ட­மிட்டு ஒதுக்க வேண்டும்.

பின்னர் அதற்­கேற்ப காரி­ய­மாற்ற வேண்டும். இதுவே உண்­மை­யான நேர முகா­மைத்­துவம்.

நேர முகா­மைத்­து­வத்தில் இஸ்லாம் வெகு கண்­டிப்­பாக உள்­ளது. நேர முகா­மைத்­து­வத்தில் நபி (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்­களை விட வேறொ­ருவர் எமக்கு முன்­மா­தி­ரி­யாகத் தேவை­யில்லை எனத் துணிந்து கூறு­ம­ள­வுக்கு அவர்கள் சொல்­லாலும் செய­லாலும் நேர முகா­மைத்­துவம் செய்து காட்­டி­யுள்­ளார்கள்.

அன்­னாரின் இரவு, பகல் இரண்­டுமே திட்­ட­மி­டப்­பட்ட வகையில் கழிந்­தன.
வெட்டி வேலைகள், விட­யங்­க­ளுக்கு காலத்தை, நேரத்தை ஒதுக்­க­லா­காது. இவ்­வகை விட­யங்கள், வேலைகள், ஒன்­று­கூ­டல்கள், கருத்­த­ரங்­குகள், பயிற்சிப் பட்­ட­றைகள், மாநா­டுகள் சம­கா­லத்தில் ஏரா­ள­மாக, தாரா­ள­மாக உள்­ளன. தெரிந்­த­வர்கள், நண்­பர்கள், சக­பா­டிகள், உற­வி­னர்கள் அழைக்­கின்­றனர் என நியாயம் சொல்லிக் கொண்டு வீணர்­க­ளுடன் சேர்ந்து தானும் தனது பொன்­னான நேரத்தை மண்­ணாக்­க­லா­காது.

செய்ய வேண்­டி­யவை, ஆற்ற வேண்­டி­யவை நிறைய இருக்­கத்­தக்க அவற்­றை­யெல்லாம் ஒரு­பக்கம் வைத்து விட்டு ஏதேதோ உருப்­ப­டி­யற்ற காரி­யங்­களில் ஈடு­பட்டு நேரத்தை வீண­டித்­தபின் இதற்கு நேர­மில்லை, இதற்கு நேர­மில்லை என முனங்­கி­ய­வண்ணம், கூக்­கு­ர­லிட்ட வண்ணம் கட்­டாயம் செய்ய வேண்­டிய பணி­களைத் தள்­ளிப்­போ­டுதல், செய்­யாது விடல், அரை­ம­ன­துடன் செய்தல், செய்­நேர்த்தி இல்­லாமல் செய்தல் அறி­வு­பூர்­வ­மா­ன­தல்ல.
நேரம் அல்லாஹ் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் அளித்­துள்ள ஓர் அமா­னிதம். அதனைச் சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்­வது அவ­ரவர் கையி­லுள்­ளது. இதன் மூலமே நேர அமா­னிதம் பேணப்­ப­டு­கின்­றது. நேர முகா­மைத்­துவம் செய்­யா­தவர் மொத்­தத்தில் தன்னைத் தானே ஒழுங்­கு­ப­டுத்­தா­தவர். எனவே, குத்பா உரை­க­ளிலும் கதீப்கள் நேர முகா­மைத்­துவம் பேண வேண்டும்.

குத்பா உரை­களில் நேர முகா­மைத்­துவம்
குத்பா உரைகள் சுருக்­க­மாக அமைதல் அவ­சி­ய­மாகும். மாநா­டுகள் நடத்­தும்­போது உரை­களைக் கேட்­ப­தற்­கென மக்கள் நேரம் ஒதுக்கி வரு­கின்­றார்கள். ஆனால், ஜும்­ஆ­வுக்கு கடமை என்­ப­தற்­காக மக்கள் வரு­கின்­றனர். அது நீண்ட உரை­களைக் கேட்கும் நேர­மல்ல.

அரசு ஊழி­யர்கள் தமக்குக் கிடைக்கும் பக­லு­ணவு நேரத்தில் தொழுகை முடிந்து, உண்­டு­விட்டு கட­மைக்குச் செல்லும் நிர்ப்­பந்­தத்தில் இருப்பர். பய­ணிகள் தமது பயணத்தை­ இடை நிறுத்­தி­விட்டு வந்­தி­ருப்பர். உண­வ­கங்­களை (ஹோட்­டல்­களை) மூடி­விட்டு வந்­த­வர்கள் தொழுகை முடிந்து கடையைத் திறந்து பக­லு­ணவு வியா­பா­ரத்தில் ஈடு­பட வேண்டும் என்ற எண்­ணத்தில் இருப்பர். குத்­பா­வுக்கு நேரத்­துடன் வந்த வயோ­தி­பர்கள், நோயா­ளிகள் இயற்கைத் தேவை­களை அடக்கிக் கொண்டு ‘எப்­படா குத்பா முடியும்’ என்ற ஏக்­கத்தில் இருப்பர்.

இந்த நிர்க்­கதி நிலையில் சில கதீப்கள் நேரம் அறி­யாமல் ஒரு மணித்­தி­யாலம், ஒன்­னேகால் மணித்­தி­யாலம் என்று குத்­பாவை நீட்­டிக்­கொண்டு செல்வர். அதுவும் குத்­பாவில் விஷ­யமும் இருக்­காது. அந்தக் குத்­பா­வுக்கு தலைப்பும் இட­மு­டி­யாது. நிறை­யவே ஒத்த கருத்துச் சொற்­களை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்­டி­ருப்பர். நேரம் போதாது என்ற நிலை இருந்­தாலும் குர்ஆன் வச­னங்­களின் தமிழ் மொழி­பெ­யர்ப்­புக்­க­ளையும் கூட இரா­க­மிட்டு நீட்டி நிதா­னித்து ஓதிக் கொண்­டி­ருப்­பார்கள்.

இது­போன்ற செயற்­பா­டு­களால் மக்கள் குத்பா மீது வெறுப்புக் கொள்­கின்­றனர். சிலர் கடைசி நேரத்தில் கலந்து கொள்வோம் என்ற தோர­ணையில் செயற்­ப­டு­கின்­றனர். இது மக்­களை சலிப்­ப­டையச் செய்­துள்­ளது. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

“அம்மார் (ரழி) எமக்கு குத்பா உரை நிகழ்த்­தினார். அது சுருக்­க­மா­கவும் அழ­கா­கவும் அமைந்­தது. அவர் குத்பா முடிந்து இறங்­கி­யபின் இன்னும் கொஞ்சம் நீட்­டி­யி­ருக்­க­லாமே என்று கேட்ட போது, ‘தொழுகை நீள­மா­கவும் குத்பா சுருக்­க­மா­கவும் இருப்­பது ஒரு மனி­தனின் மார்க்க விளக்­கத்தின் அடை­யாளம்’ என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். எனவே, தொழு­கையை நீட்­டுங்கள், குத்­பாவை சுருக்­குங்கள். ஏனெனில், பேச்சில் சூனியம் உண்டு” என அம்மார்(ரழி)கூறினார்.

அறி­விப்­பவர்: வாஸிர் இப்னு ஹையான் (ரழி), நூல்: முஸ்லிம்: 869-47, தாரமீ: 1597, அஹ்மத்:18317
எனவே, குத்பா சுருக்­க­மாக இருக்க வேண்டும். சுருக்கம் என்றால் எந்­த­ள­வென்று சரி­யாக மட்­டிட முடி­யாது.

“நபி (ஸல்) அவர்கள் வெள்­ளிக்­கி­ழமை உரையை நீட்­ட­மாட்டார்கள். அது சுருக்­க­மான சில வார்த்­தை­க­ளா­கவே அமைந்­தி­ருக்கும்” என ஜாபிர் இப்னு ஸமூரா (ரழி) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள். (நூல்: அபூ­தாவூத் 1107, அஹ்மத்: 20846)
இந்த அறி­விப்பு ஸஹீ­ஹா­னது என அல்­பானி (ரஹ்) அவர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் வாய் வழி­யா­கவே நான் சூறா கஃபை மன­ன­மிட்டேன். ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மையும் அதன் மூலம் அவர்கள் குத்பா நிகழ்த்­து­வார்கள்” என பின்த் ஹாரிதா (ரழி) கூறு­கின்றார். (நூல்: முஸ்லிம்: 873-51, அபூ­தாவூத்: 1100)

சூறா கஃப் அல்­குர்­ஆனின் 50ஆவது அத்­தி­யா­ய­மாகும். இது 60 வச­னங்­களைக் கொண்­டது. இந்த சூறாவை திருத்­த­மாக ஓது­வ­தென்றால் சுமார் 15 நிமி­டங்கள் எடுக்­கலாம். அதே வேளை குத்­பதுல் ஹாஜா ஓது­வ­தற்கு 5 நிமிடம் எடுக்­கலாம். இந்த அறி­விப்பில் சூறா கஃபை ஓது­வார்கள் என்று கூறாமல் கஃப் மூலம் குத்பா நிகழ்த்­து­வார்கள் என்று கூறப்­ப­டு­வதன் மூலம் அதை வைத்து வேறு தக­வல்­களும் கூறி­யி­ருக்­கலாம்.

இன்­றைய நடை­மு­றைக்கு அமை­வாக சாதா­ர­ண­மாக 25–30 நிமி­டங்­க­ளுக்குள் குத்பா அமை­வது நல்­ல­தாகும்.

குத்பா உரைகள் தொடர்பில் பின்­வரும் அவ­தா­னங்­களும் உள்­ளன.
· இல­கு­வாகப் புரிந்து கொள்­ளக்­கூ­டிய மொழியில் குத்­பாக்கள் இடம்­பெ­றாமை. கதீப்­களின் மொழிப் பிரச்­சினை இதற்கு முக்­கிய கார­ண­மாகும். வாசிப்புப் பழக்­கத்­தி­லுள்ள பல­வீனம், நவீன மொழி பற்­றிய குறைந்த பரிச்­சயம் இதற்கு சில கார­ணங்­க­ளாக இருக்­கலாம்.

· கால, மாற்­றங்­க­ளுக்­கேற்ப தலைப்­புக்கள் இல்­லாமை. நாட்டு நிலை­மைகள், உலகில் நடக்கும் மாற்­றங்கள், இதற்குப் பின்னால் காணப்­படும் சர்­வ­தே­சிய சக்­திகள் பற்­றிய போதிய தெளி­வின்மை இதற்கு கார­ணங்­க­ளாக இருக்­கலாம். இதனால் எடுத்த அனைத்­திற்கும் இது யூத, நஸா­ராக்­களின் திட்டம் என்று சொல்­லக்­கூ­டிய வார்த்­தை­களை அதிகம் செவி­ம­டுக்­கின்றோம்.
· ஒரு தலைப்பில் குத்­பாவை நிகழ்த்­தாமல் சித­றிய அமைப்பில் குத்­பாக்கள் உள்­ளமை. முடி­வாக கதீப் சொல்ல வரும் கருத்தை கிர­கிக்க முடி­யா­துள்­ளமை.
· அச்­ச­மூட்டி எச்­ச­ரிக்கை செய்­வதில் காட்டும் ஆர்வம், சுப­சோ­பனம் கூறு­வதில் இல்­லாமை. எச்­ச­ரிக்கை செய்­வது, தண்­ட­னைகள் பற்றி விரி­வாகப் பேசு­வது சில கதீப்­களின் பண்­பாக மாறி­யுள்­ளது.

· இஸ்­லாத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சிர­ம­மா­னது என்ற மனப்­ப­திவை கொடுக்கும் வார்த்தைகளே அதிகம் பிரயோகிக்கப்படுகின்றன.
அதன் இலகுத்தன்மையுடன் சேர்த்து இஸ்லாத்தை முன்வைப்பது அரிதாகிவிட்டது. இதனால்தான் மிகத் தெளிவாக ஹராமில்லாத பல விடயங்களையும் ஹராம் என்று கூறும் கதீப்களை மிம்பர்களில் காண்கின்றோம்.

· அதிகமான குத்பாக்கள் கேட்க முடியாதளவு உரத்த குரலில் நிகழ்த்தப்படுகின்றன. இது எமது மரபாகவும் மாறியுள்ளது. ஆக்ரோஷமில்லாமல், அமைதியான உள்ளத்துடன் உறவாடும் குத்பாக்களை கேட்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

· சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள், முதன்மை கொடுக்கப் பட வேண்டிய அம்சங்கள், அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய அம்சங்களை மையப்படுத்திய குத்பாக்கள் மிகவும் குறைவு. கருத்து வேறுபாடுள்ள, கிளை அம்சங் களில் தான் அதிகமான குத்பாக்கள் இடம்பெறுகின்றன.

இதனால் குத்பாக்களின் உயிரோட்டம், பயன் குறைவடைந்து செல்கின்றது. சமூகத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய குத்பாக்கள், சிலபோது சமூகத்துக்கு மத்தியில் பிளவையும், பிடிவாதத்தையும் அதிகரிக்கச்செய்துள்ளது.
எனவே, மேற்கூறப்பட்டவற்றையும் கருத்திற்கொண்டு குத்பா உரைகளை நேர முகாமைத்துவத்துடனும், ஆக்கபூர்வமானதாகவும் முன்வைக்கும் போது ஊக்கம் தரவேண்டிய குத்பாக்கள் தூக்கம் தரமாட்டாது.-Vidivelli

  • அரபாத் ஸைபுல்லாஹ் (ஹக்கானி), திஹாரிய.

Leave A Reply

Your email address will not be published.