உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புதிய அரசின் விசாரணைகளில் நம்பிக்கையில்லை

பொறுப்புக் கூறவேண்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கூட்டணியின் தவிசாளராக நியமித்தமை தவறு என்கிறார் பாலித்த ரங்கே பண்டார

0 662

நாட்­டு­மக்கள் அனை­வ­ருமே உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு சம்­பந்­தப்­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்றே எதிர்­பார்த்­தி­ருந்­தனர். இதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி தேர்­தலின் போது மக்கள் கோத்­தா­ப­யவை வெற்­றி­ய­டையச் செய்­தி­ருந்­தனர்.

தாம் ஆட்­சிக்கு வந்த உடனே தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க ஆணைக்­கு­ழு­வொன்றை அவர் நிய­மித்­தி­ருந்­தாலும், அந்தக் குழு­வினால் மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணைகள் தொடர்பில் மக்கள் தற்­போது நம்­பிக்­கை­யி­ழந்­துள்­ளனர் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாலித்த ரங்கே பண்­டார தெரி­வித்­துள்ளார். அத்­துடன் உயிர்த்த ஞாயி­று­தின தாக்­கு­தல்­க­ளுக்கு பொறுப்புக் கூற­வேண்­டிய பிர­தான நப­ரான முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஸ்ரீலங்கா பொது­ஜன சுதந்­திர முன்­னணி தவி­சா­ள­ராக நிய­மித்­துள்­ள­மை­யா­னது நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்பை சிதைத்­துள்­ளது என்றும் அவர் குற்­றம்­சாட்­டினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிட்­ட­போதே அவர் இவ்­வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,
உயிர்த்த ஞாயி­று­தின தாக்­குதல் தொடர்பில் பொறுப்புக் கூற­வேண்­டிய பிர­தான நப­ரான முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஸ்ரீலங்கா பொது­ஜன சுதந்­திர முன்­ன­ணியின் தவி­சா­ள­ராக நிய­மித்­துள்­ள­மையை ஏற்றுக் கொள்ள முடி­யாது. இந்த தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மித்த போது நான் அதற்கு நன்றி தெரி­வித்­தி­ருந்தேன். ஆனால் அதனை தற்­போது மீளப் பெற்றுக் கொள்ள விரும்­பு­கிறேன்.

இவர்­க­ளது கூட்­ட­ணியின் தவி­சா­ள­ராக மைத்­தி­ரியை அறி­வித்­ததை அடுத்து இந்த விவ­காரம் தொடர்பில் இருந்த குறைந்­த­பட்ச நம்­பிக்­கையும் இல்­லாமல் போயுள்­ளது. பொது­வா­கவே ஏதா­வது ஒரு விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­படும் ஆணைக்­கு­ழுக்கள் முழு­மை­யான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தற்கு சாட்­சிகள் இல்லை. அதேபோல் தான் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்­குதால் தொடர்பில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆணைக்­கு­ழுவும், முழு­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­குமா என்­பது தொடர்பில் உறு­தி­யில்லை.

இதே­வேளை, மிக் 27 போர் விமா­னங்கள் நான்கை கொள்­வ­னவு செய்யும் போதும் அதே ரக விமா­னங்கள் நான்கை மீளத் திருத்தும் போதும் இடம்­பெற்ற பண­மோ­ச­டிகள் குறித்த விவ­கா­ரத்தின் பிர­தான சந்­தேக நப­ரான ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர் உத­யங்க வீர­துங்­கவை அர­சாங்கம் பிணையில் விடு­விப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் தோன்­று­கின்­றது.

இந்த விவ­காரம் தொடர்பில் இது­வ­ரையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்த பொலிஸ் பரி­சோ­தகர் நிஹால் பிரான்­சி­ஸையும் , அவரது குழுவினரையும் விசாரணை பொறுப்புகளிலிருந்து மாற்றியுள்ளதுடன், இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மன்றில் முன்னிலையாகி வந்த அரச சட்டத்தரணியையும் மாற்றியுள்ளனர். குற்றவாளியை காப்பாற்றுவதற்கான அவசியம் பொலிஸாருக்கு இல்லை. அப்படியென்றால் அரசாங்கமே அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.