றிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு

வெளிநாடு செல்ல தடை

0 568

கெப்­பிடல் சிட்டி எனும் நிறு­வ­னத்­துக்கு மன்னார் பகு­தியில் 78 ஏக்கர் காணியை போலிக் காணி உறு­தி­க­ளூ­டாக 492 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­த­தாக சி.ஐ.டிக்கு கிடைத்­தி­ருந்த முறைப்­பாட்­டுக்­க­மை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்­க­மைய கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் சகோ­தரர் ரிப்கான் பதி­யுதீன் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். சந்­தே­க­ந­ப­ரான அவரை 25,000 ரூபா ரொக்­கப்­பி­ணை­யிலும் 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் செல்ல, கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன இவ்­வாறு அனு­ம­தி­ய­ளித்தார்.

பிணை­யாளர் ஒருவர் நெருங்­கிய உற­வி­ன­ராக இருத்தல் வேண்­டு­மென உத்­த­ர­விட்ட பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன, சந்­தே­க­ந­ப­ருக்கு வெளி­நாடு செல்­வ­தற்குத் தடை விதித்தார். வாராந்தம் இறுதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் ஆஜ­ராக வேண்டும் எனவும் சந்­தே­க­ந­ப­ருக்கு நீதவான் மேல­திக பிணை நிபந்­தனை விதித்­த­துடன், பிணையில் விடு­த­லை­யா­னதும் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­திற்கு சென்று வாக்­கு­மூலம் வழங்க வேண்­டு­மெ­னவும் அறி­வு­றுத்­தினார்.

கடந்த 2015 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி 78 ஏக்கர் காணியை போலிக் காணி உறு­தி­க­ளூ­டாக 492 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­த­தாக சி.ஐ.டிக்கு கிடைத்­தி­ருந்த முறைப்­பாட்­டுக்­க­மை­வாக, கடந்த 2016 ஆம் ஆண்டு சி.ஐ.டி. கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் அறிக்கை சமர்ப்­பித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், மன்னார் – தலை­மன்னார் பகு­தியில் 240 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 40 ஏக்கர் காணியை போலிக் காணி உறு­தி­களை தயார் செய்து கைய­கப்­ப­டுத்திக் கொண்­ட­தாகக் கூற­ப்படும் சம்­பவம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில், வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்­க­மைய ரிப்கான் பதி­யு­தீனை சி.ஐ.டி. சந்­தேக நப­ராக கடந்த 2019இல் நீதி­மன்று பெய­ரிட்ட நிலையில் அவரைக் கைது செய்ய நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. இந்­நி­லையில் அவரைத் தேடி­வ­ரு­வ­தாக சி.ஐ.டியினர் மன்றில் தெரி­வித்­தி­ருந்­தனர். அதன்­படி அவ­ரது வீட்­டுக்கு சென்று அவர் தொடர்பில் விசா­ரித்­த­தா­கவும் அவர் வர்த்­தக நட­வ­டிக்­கைக்­காக கொழும்­புக்கு வந்­துள்­ள­தாக அவ­ரது தயார் கூறி­ய­போதும், ரிப்­கானின் தொலை­பே­சியும் செய­லி­ழந்­துள்­ள­தாக சி.ஐ.டியினர் மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தனர். இவ்­வா­றான பின்­ன­ணியில் கடந்த ஜன­வரி 22 ஆம் திகதி மாலை சி.ஐ.டிக்கு சென்று சர­ண­டைந்­துள்ள ரிப்கான் பதி­யு­தீனை சி.ஐ.டியினர் கைது செய்து ஜன­வரி 23 மன்றில் ஆஜர் செய்­தனர். அது முதல் அவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டிருந்தார்.

முன்­ன­தாக கடந்த 2015 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி, அப்துல் காசிம் மொஹம்மட் சலாஹி என்­பவர் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் வணிக விசா­ரணைப் பிரிவில் விஷேட முறைப்­பா­டொன்றை செய்­தி­ருந்தார். அந்த முறைப்­பாட்­டுக்­க­மை­யவே சி.ஐ.டி. இந்த நில மோசடி விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது. குறித்த முறைப்­பாட்டில், தாம் 40 ஏக்கர் கொண்ட காணித் துண்­டுகள் இரண்டை 240 இலட்சம் ரூபா­வுக்கு கொள்­வ­னவு செய்­த­தா­கவும், அந்தக் காணியை எல்­லை­யிட்டு வேறு வேறாகப் பிரித்­த­தா­கவும் முறைப்­பாட்­டாளர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அவ்­வாறு காணியை கொள்­வ­னவு செய்து சில மாதங்­களில் ரிப்கான் பதி­யுதீன் என்­பவர், தான் கொள்­வ­னவு செய்த காணி­க­ளுக்கு உரிமை கோரிக்­கொண்டு , தனக்கு தனது காணிக்குள் உள்­நு­ழையத் தடை­யேற்­ப­டுத்­தி­ய­தா­கவும், தனது சொத்­துக்கு போலி உறு­தி­களை தயா­ரித்து அவற்றை கைய­கப்­ப­டுத்தி சொத்து மற்றும் பண இழப்பை ஏற்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரித்து வரும் சி.ஐ.டி., தண்டனை சட்டக் கோவையின் 400,403,454, 457, 459, 102, 113(அ) பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்று இடம்பெற்றுள்ளதாகக் கருதியே மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.