மார்ச் ஒன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைப்பு : அரசாங்க பேச்சாளர் கெஹலிய

0 756

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி நள்ளிரவு கலைக்­கப்­பட வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி நள்­ளி­ர­வுடன் கலைக்­கப்­படும் என இரா­ஜாங்க அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் ஏற்­க­னவே ஜனா­தி­ப­திக்குக் கிடைத்­துள்­ள­தா­கவும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கையொப்­ப­மி­டு­வது மாத்­தி­ரமே எஞ்­சி­யுள்­ளது எனவும் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

இதற்­கி­ணங்க பொதுத்­தேர்­தலை எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்த முடியும் என தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மு­டியும் என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. பொதுத் தேர்­தலின் பின்பு புதிய பாரா­ளு­மன்ற அமர்வு மே மாதம் 12 ஆம் திகதி இடம்­பெ­ற­மு­டியும் எனவும் தெரி­விக்கப் பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் மார்ச் 1 நள்ளிரவு கலைக்­கப்­பட்டால் பொதுத் தேர்­தலை நடத்­தக்­கூ­டிய திகதி மற்றும் வேட்­பு­மனு தாக்கல் செய்யும் கால­எல்லை என்னும் விப­ரங்­களைக் கோரி ஜனா­தி­ப­தியின் செய­லாளர் கலா­நிதி பி.பீ.ஜய­சுந்­தர தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். ஜனா­தி­பதி குறிப்­பிட்ட காலத்­துக்கு முன்பு பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்தால் வேட்­பு­மனு கோரும் கால­எல்லை, தேர்தல் நடாத்தும் திகதி புதிய பாரா­ளு­மன்றம் ஆரம்­பிக்கும் திகதி எனும் விப­ரங்கள் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­பது தொடர்­பாக வெளி­யி­டப்­படும் வர்த்­த­மானி அறி­வித்­தலில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தாலே ஜனா­தி­ப­தியின் செய­லாளர் அந்த விப­ரங்­களை தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் கோரி­யுள்ளார்.

தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தற்­போது நாட்­டுக்கு வெளியில் இருப்­பதால் அவர் நாடு திரும்­பி­யதும் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரது கடி­தத்­துக்கு பதில் அனுப்­புவார் என தேர்தல் ஆணைக்­குழு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை, பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­பது தொடர்­பான சட்­ட­நி­லைமை தொடர்பில் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரினால் சட்­டமா அதி­ப­ரிடம் அண்­மையில் ஆலோ­சனை கோரப்­பட்­டது. இதற்கு சட்­டமா அதிபர் பதில் வழங்­கி­யுள்ளார். 19 ஆவது அரசியலமைப்பின் திருத்தத்திற்கு அமைய எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதிக்குப் பிறகு ஜனாதிபதியினால் எந்தச் சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என அவர் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.