நாட்டின் எதிர்காலத்திற்கான இலக்கை எய்துவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்போம் : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு கடிதம்.

0 815

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இலங்­கையின் 72 ஆவது சுதந்­திர தின நிகழ்வில் ஆற்­றிய உரைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பாராட்­டு­களைத் தெரி­வித்­துள்­ளது.

எமது நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் இன, மத வேறு­பா­டின்றி ஜன­நா­யக உரிமைகள் வழங்கப்படும் என்ற உங்­க­ளது உரை வர­லாற்று புகழ்­மிக்­க­தாகும். நாங்கள் ஜம்­இய்­யத்துல் உலமா உங்கள் உரைக்கு வாழ்த்­து­க­ளையும் நன்­றி­க­ளையும் தெரி­விக்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜக் ஷவுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி மற்றும் அதன் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஆகியோர் கையொப்­ப­மிட்டு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;
தொலை­நோக்கு ஆற்றல் மிக்க உங்­களை எங்­க­ளது தலை­வ­ரா­கப்­பெற்­றமை குறித்து பெரு­மைப்­ப­டு­கிறோம். நீங்கள் எமது தாய்­நாட்டின் அனைத்து மக்­க­ளி­னது ஜன­நா­ய­கத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளீர்கள். இலங்­கை­யர்கள் அவர்கள் எந்த மதம், இனத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­றாலும் அவர்கள் தங்­க­ளது விரும்­பிய மதத்தை அனுஷ்­டிப்­ப­தற்கு சுதந்­திரம் இருப்­ப­தாக உங்கள் உரையில் தெரி­வித்­தி­ருக்­கி­றீர்கள்.

உரிமை இருப்­ப­தாகக் கூறி­யி­ருக்­கி­றீர்கள். நாங்கள் முஸ்லிம் சமூகம். இந்­நாட்டில் 1000 வரு­டங்­க­ளுக்கும் மேலாக சமா­தா­னத்­து­டனும் ஒரு­மைப்­பாட்­டு­டனும் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் வாழ்ந்து வரு­கிறோம்.

நீங்கள் நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் எதிர்­காலம் குறித்து நீங்கள் கொண்­டுள்ள தொலை­நோக்­கினை எய்­து­வற்கு நாங்கள் எங்­க­ளது முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­குவோம். இலங்கை மக்கள் அனை­வ­ரதும் சுதந்­தி­ரத்­துக்கு நீங்கள் உத்­த­ர­வா­த­ம­ளிப்­பீர்கள் என்­பதில் எமக்கு நம்­பிக்­கை­யுண்டு.
முஸ்­லிம்கள் எப்­போதும் உங்­க­ளுக்கும் உங்கள் சேவை­க­ளுக்கும் இத­ய­பூர்­வ­மான வாழ்த்­து­களைத் தெரிவிப்பதுடன் ஒத்துழைப்பும் நல்குவார்கள்.
தாய்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் சேவை செய்வதற்காக உங்களது நலத்துக்கும் நீடிய ஆளுக்கும் வாழ்த்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.