தமிழ் பிரதேச சபை உட்பட மேலும் மூன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்படும்.

தமிழ் மக்களுக்கு அநியாயம் இழைக்கப்படாது என்கிறார் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்.

0 504

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்கு எல்லை இடு­வ­தற்­கான பிரச்­சினை இல்­லா­ம­லி­ருந்­ததால் முதலில் சாய்ந்­த­ம­ரு­திற்­கான உள்­ளூ­ராட்சி சபை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்கு அடுத்­த­தாக கல்­முனைப் பிர­தே­சத்தில் உள்ள பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். அதனைத் தீர்ப்­பது எமது தலை­யாக கட­மை­யா­கவும் உள்­ளது. கல்­முனைப் பிர­தே­சத்தில் மேலும் மூன்று உள்­ளூ­ராட்சி சபைகள் உரு­வாக்­கப்­பட்டு அதற்­கான பிர­தேச செய­ல­கங்­களும் அமைக்­கப்­பட வேண்டும்.

கல்­மு­னையில் தமி­ழர்­க­ளுக்­கென்று உள்­ளூ­ராட்சி சபை உரு­வாக்­கப்­ப­டு­கின்­ற­போது அப்­பி­ர­தே­சத்தில் தமிழ்த் தலை­மை­யொன்று உரு­வாக்கம் பெறும் என முன்னாள் அமைச்­சரும் தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ரு­மான ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் போன்ற கட்­சி­களில் அங்கம் வகித்து வந்த ஆரம்ப கால உறுப்­பி­னர்­களில் பெருந் தொகை­யானோர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் கட்­சியில் நேற்று இணைந்து கொண்­டனர். இது தொடர்பில், ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஊடக சந்­திப்பு அட்­டா­ளைச்­சேனை கலா­சார மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது கலந்து கொண்டு கருத்துத் தெரி­விக்­கும்­போதே முன்னாள் அமைச்சர் இக்­க­ருத்­தினை தெரி­வித்தார்.
இந்­நி­கழ்­வின்­போது அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தில் உள்ள மாற்றுக் கட்­சி­யினைச் சேர்ந்த உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள், மாற்றுக் கட்­சி­களின் உயர் பீட உறுப்­பி­னர்கள், மாற்றுக் கட்சி ஆத­ர­வா­ளர்கள் என பெருந் தொகை­யானோர் தேசிய காங்­கிரஸ் கட்­சியில் இணைந்து கொண்­டனர்.

இதன்­போது முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், கல்­முனைப் பிர­தே­சத்தில் நாம் இன்னும் மூன்று உள்­ளூ­ராட்சி சபை­களை உரு­வாக்­கு­கின்­ற­போது அவர்­க­ளுக்­காக அப்­பி­ர­தே­சத்தில் சாய்ந்­த­ம­ரு­துடன் நான்கு பிர­தேச செயலப் பிரி­வுகள் கிடைத்து விடும்.
கல்­முனை தமிழ் மக்­க­ளுக்­கென்று ஓர் உள்­ளூராட்சி சபை வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன். அதில் மாற்றுக் கருத்­திற்கு இட­மில்லை. தேசிய காங்­கிரஸ் கட்சி பல்­வே­றான விட­யங்­களை இந்­நாட்டில் வாழும் சிறு­பான்மை மக்­க­ளுக்குச் செய்­தி­ருக்­கின்­றது. அதன் அடிப்­ப­டையில் முறை­யான காய் நகர்த்­தல்­களை நாம் மேற்­கொள்­ள­வுள்ளோம். அவர்­க­ளுக்­காக உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­ரிய கட்­ட­டங்கள், அதற்­கான வசதி வாய்ப்­புக்கள் போன்­ற­வற்றைச் செய்து கொடுப்­ப­தற்­கான இதய சுத்­தி­யு­ட­னான சிந்­த­னை­யுடன் நாம் செயற்­பட்டு வரு­கின்றோம்.

சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி சபைக்­கான தேர்தல் தனி­யாக நடை­பெ­று­வ­தற்கு இன்னும் இரண்டு ஆண்­டுகள் இருக்­கின்­றன. இவ்­வி­ரண்டு ஆண்­டுக்குள் கல்­மு­னையில் உள்ள மீத­மாக காணப்­படும் மூன்று உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான செயற்­பா­டு­களை முடுக்கி விட்­டி­ருக்­கின்றோம். இதற்­கென ஓர் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அதற்­கான முன்­னா­யத்தம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது.

கல்­முனைப் பிர­தே­சத்தில் இவ்­வாறு நான்கு சபை­களும் நான்கு பிர­தேச செயலகப் பிரி­வுகள் உரு­வாக்கம் பெறு­கின்­ற­போது அப்­பி­ராந்­திய மக்­க­ளுக்கு பல்­வே­றான நன்­மைகள் கிட்­ட­வுள்­ளன. வளப் பங்­கீடு முதல் அப்­பி­ர­தே­சங்­க­ளுக்­கான தலை­மை­களும் உரு­வாக்கம் பெறும். இது­போன்று பல்­வே­றான நன்­மைகள் அப்­பி­ராந்­திய மக்­க­ளுக்கு கிடைப்­பது ஒரு பேறென்றே கூற வேண்டும்.

கல்­முனைப் பிர­தே­சத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் சமூ­கங்­களை நல்ல முறையில் வழி­ந­டத்­து­வ­தற்கும், மரு­த­முனை பிர­தே­சத்தல் உள்ள முஸ்லிம் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தக் கூடிய ஒரு தலைமை தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் இல்­லாமை பெருங்­கு­றை­பா­டாகக் காணப்­ப­டு­கின்­றது. இக்­கு­றை­பாட்­டினை தீர்க்கும் வகையில் அப்­பி­ர­தே­சங்­களில் தனி­யான உள்­ளூ­ராட்சி சபைகள் உரு­வாக்கம் பெறும் போது நல்ல தலை­மை­களும் அங்கு உரு­வா­கு­வது தற்­கால சந்­த­தி­யி­ன­ருக்கும் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கும் ஒரு வரப்­பி­ர­சாதம் என்றே கூற­வேண்டும்.

கடந்த 1987ஆம் ஆண்­டுக்கு முன்னர் அப்­ப­கு­தியில் நான்கு உள்­ளூ­ராட்சி சபைகள் இருந்­தி­ருக்­கின்­றன. முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாச அச்­ச­பை­களை ஒன்­றாக இணைத்தார். இதன் பின்னர் சாய்ந்­த­ம­ருது மக்கள் அதனைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்­கை­யினை மிக நீண்ட கால­மாக முன்­வைத்து பல்­வேறு போராட்­டங்­களை மேற்­கொண்டு வந்­தனர்.

சாய்ந்­த­ம­ருது பிர­தேசத்­திற்கு உள்­ளூ­ராட்சி சபை­யொன்­றினை உரு­வாக்கிக் கொடுத்து விட்டு நாம் அதில் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை. அப்­பி­ர­தேச மக்­களின் தேவை மிக நீண்ட நாளாக தொடர்ந்து வந்து பலரால் அம்­மக்கள் ஏமாற்­றப்­பட்­ட­போது நாம் அம்­மக்கள் மீது பற்று வைத்து பல்­வேறு செயற்­றிட்­டங்­களை மேற்­கொண்டு வந்த வேளையில் எமது முயற்­சிகள் இடை­ந­டுவில் சில காலம் தடைப்­பட்­டி­ருந்த போதிலும் தற்­போது எமது முயற்­சி­க­ளுக்­காக முடிவு கிடைத்­தி­ருக்­கின்­றது.

கல்­முனைப் பிர­தே­சத்தில் இப்­போ­தி­ருக்­கின்ற எமக்­கான பணி மேலும் மூன்று சபை­களை உரு­வாக்கி அங்­குள்ள மக்­களை நிம்­ம­தி­யாக வாழ வைக்க வேண்டும் என்­பதே. இச்­ச­பை­க­ளுக்­கான எல்­லை­களை நிர்­ண­யிப்­ப­துதான் இப்­போது எம்­மத்­தியில் காணப்­படும் பிரச்­சி­னை­யாக உள்­ளது.

எல்­லைகள் என்­பது தமி­ழர்­க­ளு­டைய முஸ்­லிம்­க­ளு­டைய பிரி­வி­னை­யினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தயார்­ப­டுத்தும் எல்­லை­யாக அது அமைந்­து­விடக் கூடாது. நாம் யுத்­தங்­களை புரி­வ­தற்­காக எல்­லைகள் பிரிப்­ப­துபோல் சிலர் கருத்­துக்­களை பரப்பிக் கொண்டு வரு­கின்­றனர். உண்­மையில் எல்­லைகள் என்­பது எம்மை முரண்­படச் செய்­வ­தற்­காக அல்ல. எம்மை வாழ வைப்­ப­தற்­கா­கவும் எதிர்­கால சந்­த­தி­யி­னரை நிம்­ம­தி­ய­டையச் செய்­வ­தற்­கா­கவும் இவ்வாறான எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் எந்தவொரு அரசியல்வாதிகளும் சுயநலத்திற்காக பிழையாக கருத்துக்களையும் மக்களுக்கான உணர்ச்சிவசப் படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டாம் என நான் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் இப்பிரதேச மக்களை வைத்துக் கொண்டு பல்வேறான வாக்குறுதிகளையெல்லாம் அள்ளி வீசிய அரசியல்வாதிகள் இம்மக்களின் உள்ளூராட்சி கோரிக்கை தொடர்பில் மக்களைக் குழப்பி குளிர்காயும் அரசியலினை செய்து வந்தார்கள். நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருகின்றோம் என்று சொன்னதில்லை என்றார். -Vidivelli

  • எம்.ஏ.றமீஸ், பாறுக் ஷிஹான்

Leave A Reply

Your email address will not be published.