அன்னம் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு : நாளை தீர்மானம் என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

0 615

ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான பொதுக்­கூட்­டணி அன்னம் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வற்­கான வாய்ப்­புக்­களே அதிகம் காணப்­ப­டு­கின்­றது. பங்­காளி கட்­சிகள் அனைத்­தையும் இணைத்துக் கொண்டு எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யி­லான பல­மான அர­சாங்­கத்தை நிச்­சயம் தோற்­று­விப்போம் என தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான்,
இன்று கூட­வி­ருந்த ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழு தவிர்க்க முடி­யாத கார­ணி­க­ளினால் நாளை கூடு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மிகு­தி­யா­க­வுள்ள அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் நாளை சுமு­க­மான தீர்வு எடுக்­கப்­படும் எனவும் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான பொதுக்­கூட்­டணி இடம்பெற­வுள்ள பொதுத்­தேர்­தலில் அன்னம் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு அதிக வாய்ப்பு காணப்­ப­டு­கின்­றன. கூட்­ட­ணியின் தலை­மைத்­துவம் மற்றும் பொதுச்­செ­ய­லாளர் உள்­ளிட்ட பத­வி­க­ளுக்கு செயற்­கு­ழுவின் ஊடாக தீர்வு எடுக்க முடிந்­தி­ருந்­தன. இருப்­பினும் கூட்­ட­ணியின் சின்னம் மாத்­தி­ரமே தொடர்ந்து இழு­பறி நிலையில் காணப்­பட்­டது.

சின்னம் குறித்து இரு தரப்­பி­னரும் முன்­வைத்த கோரிக்­கைகள் மற்றும் தனிப்­பட்ட யோச­னைகள் குறித்து பல்­வேறு மட்­டங்­களில் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஐக்­கிய தேசிய கட்சி ஜன­நா­ய­கத்­திற்கும். தனிப்­பட்­ட­வர்­க­ளின் கருத்­திற்கும் முன்­னு­ரிமை வழங்கும் என்­பதால் கட்­சியின் தலைவர் முன்னாள். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அனைத்து தரப்­பி­ன­ரது கோரிக்­கை­களும் பரி­சீ­லனை செய்­யற்­பட வேண்டும். என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.
எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தலை­மையில் பல­மான கூட்­டணி தோற்றம் பெறும். அனைத்து பங்­காளி கட்­சி­க­ளையும் இணைத்துக் கொண்டு பொதுத்­தேர்­தலில் வெற்றி பெற்று பல­மான அர­சாங்­கத்தை எம்மால் ஸ்தாபிக்க முடியும். போலி­யான வாக்­கு­று­தி­களை வழங்கி ஆட்­சிக்கு வந்த அர­சாங்கம் பய­னற்­றது என்ற உண்மை மூன்று மாத நிர்­வா­கத்தில் வெளிப்­பட்டு விட்­டது.

இன்று கூட­வி­ருந்த ஐக்­கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை கூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டணியை தொடர்புபடுத்தி கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுப்பாடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றிற்கு நாளை நிரந்தர தீர்வு எட்டப்படும் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.