ஹஜ் விவகாரத்தில் யாத்திரிகர்களின் நலனையே முன்னுரிமைப் படுத்த வேண்டும்.

0 688

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தனது இறுதித் தீர்­மா­னத்தை இன்றைய தினம் அறி­விக்­க­வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை வழமைபோன்று முகவர்களிடம் ஒப்படைக்காது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள ஹஜ் குழுவே முன்னெடுக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இது பற்றி இறுதித் தீர்மானம் இன்றைய தினம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும் இது நடைமுறைச்சாத்தியமற்ற விடயம் என்றும் முகவர்களின் ஒத்துழைப்பின்றி ஹஜ் குழுவினால் இதனைத் தனித்து முன்னெடுக்க முடியாது என்றும் முகவர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆகக் குறைந்த தொகையான 5 இலட்சம் ரூபா எனும் ஹஜ் கட்டணமும் சாத்தியமற்றது என முகவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தமது ஆலோசனைகள் அடங்கிய ஆவணத்தை இரு பிரதான முகவர் சங்கங்கள் இணைந்து திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளன.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ வெற்­றி­பெற்­றதன் பின்பு அமையப் பெற்ற அர­சாங்­கத்தில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரேனும் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. இதனால் கடந்த அர­சாங்­கத்தின் பதவிக் காலத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒரு­வரின் பொறுப்பில் இருந்த முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு கை நழு­விப்­போ­னது. முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான அமைச்சர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

முஸ்லிம் சமய விவ­கா­ரமும் கலா­சார அமைச்­சுக்குப் பொறுப்­பான பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் விட­ய­தா­னங்­க­ளுக்குள் உட்­பட்­டது. முஸ்லிம் விவ­கா­ரங்­களை பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ பொறுப்­பேற்றுக் கொண்­டதும் மர்ஜான் பளீலின் தலை­மையில் ஐவர் கொண்ட ஹஜ் குழு­வொன்­றினை நிய­மித்தார். ஹஜ் உடன்­ப­டிக்­கையில் இலங்­கையின் சார்பில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு அக்­கு­ழு­வையே அனுப்பி வைத்தார்.

2020 ஆம் ஆண்­டுக்கு சவூதி ஹஜ் அமைச்சு இலங்­கைக்கு 3500 கோட்டா வழங்­கி­யுள்­ளது. இந்­நி­லையில் தான் இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டு­களை இலங்கை அர­சாங்­கமே மேற்­கொள்ள வேண்டும் எனவும் அதற்­கான ஏற்­பா­டு­களை ஹஜ் குழு உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்­டு­மெ­னவும் பிர­தமர் உத்­த­ர­விட்­டுள்ளார்.
கடந்த காலங்­களில் ஹஜ் முக­வர்­களில் பலர் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தையும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து கூடு­த­லான பணத்தை அற­வி­டு­வ­தையும் கருத்திற் கொண்டு ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­க­ருதி இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என ஹஜ் குழுவின் தலைவர் தெரி­வித்­துள்ளார்.

இருந்த போதிலும் எல்லா முகவர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர்களல்லர் ; ஒரு சில முகவர்களின் தவறுகளுக்காக எல்லா முகவர் அமைப்புகளையும் ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல என முகவர்கள் தமது ஆட்சேபனையை முன்வைத்துள்ளனர். அத்துடன் அரசாங்கத்தினால் முதல் தடவையிலேயே 3500 யாத்திரிகர்ளையும் அழைத்துச் சென்று நிர்வகிப்பது சாத்தியமற்றது என்றும் பலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இந் நிலையில் இவ்விவகாரத்தில் அரசியல் மற்றும் முகவர்களின் நலன்களுக்கப்பால் யாத்திரிகர்களின் நலன்களை முன்னிறுத்தியே தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதமர் இறுதித் தீர்மானம் எடுக்கின்ற போதிலும் ஹஜ் யாத்திரை குறித்தோ, யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தோ அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் இவ்வருட ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முன்னெடுப்பதாயின் அதற்காக கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதன்போதே சிறந்ததொரு தீர்மானத்தை அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.