இம்தியாஸை இணைப்பதில் ஆட்சேபனை ஏதும் இல்லை

அஜித்தை ஏற்கேன் என்றும் ரணில் தெரிவிப்பு

0 721

முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் உள்­ளிட்ட மேலும் இரு­வரை மீண்டும் ஐ.தே.க.வின் செயற்­கு­ழுவில் இணைத்­துக்­கொள்­வதில் ஆட்­சே­பனை இல்லை என ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், களுத்­து­றை­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் பீ. பெரே­ராவை மீண்டும் செயற்­கு­ழுவில் இணைக்க முடி­யாது எனவும் அவர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழு­வி­லி­ருந்து கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­ன­தாக முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார், கொழும்பு மாந­கர மேயர் ரோஸி சேனா­நா­யக்க, முன்னாள் அமைச்­சர்­க­ளான பீல் ட்­மாஷல் சரத்­பொன்­சேகா மற்றும் அஜித் பீ. பெரேரா ஆகியோர் நீக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற ஐ.தே.க.வின் செயற்­குழு கூட்­டத்தின் போது, நீக்­கப்­பட்­டோரை மீண்டும் செயற்­கு­ழுவில் இணைத்­துக்­கொள்­ளு­மாறு கட்சித் தலைவர் ரணி­லி­டம் கட்­சியின் பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தாஸ கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதி­ல­ளித்த ரணில், “இம்­தி­யாஸை மீண்டும் கட்­சியில் இணைத்­துக்­கொள்­வதில் ஆட்­சே­பனை இல்லை. அது­போல, ரோஸி சேனா­நா­யக்­க­வையும் பீல் ட்­மார்சல் சரத்­பொன்­சே­கா­வையும் மீள செயற்­கு­ழுவில் இணைத்­துக்­கொள்ள முடியும். எனினும், கட்­சியின் தலை­மைத்­து­வத்­திற்கு அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் செயற்பட்ட அஜித் பீ. பெரேராவை மீள செயற்குழுவில் இணைத்துக்கொள்ள முடியாது” என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.