இலங்கையிலுள்ள சீனர்கள் மீது கருணை காட்டுவோம்

0 640

இலங்­கையில் வசிக்கும் அனைத்து சீனப் பிர­ஜை­க­ளுக்கும் கருணை காட்­டுங்கள். அவர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் செய்­யுங்கள் என கருணை உள்ளம் கொண்ட இலங்கை மக்­களை வேண்­டிக்­கொள்­கிறேன்’’என அஸ்­கி­ரிய பீடத்தின் மகா­நா­யக்க தேரர் வர­கா­கொட ஞான­ர­தன தேரர் அண்­மையில் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டி­ருந்தார்.

முழு உல­கையும் இன்று பீதிக்­குள்­ளாக்­கி­யுள்ள கொரோனா வைரஸின் பரவல் தினமும் பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்­களின் உயிர்­கனைப் பலி­யெ­டுத்து வரு­கின்­றது. உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறிக்­கை­யின்­படி சனிக்­கி­ழமை வரை 812 பேர் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள்.
37 ஆயிரம் பேர் வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். 30 உலக நாடு­களில் கொரோனா வைரஸ் பர­வி­யுள்­ளது.

கொரோனா வைரஸ் பீடிக்­கப்­பட்ட சீனப்பெண் ஒருவர் இலங்­கை­யிலும் இனங்­கா­ணப்­பட்டார். இலங்­கையில் அவ­ருக்கு பூரண சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

தற்­போது அந்தப் பெண் பூர­ண­மாகக் குண­ம­டைந்து விட்­ட­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது. என்­றாலும் அவர் அங்­கொடை தேசிய தொற்று நோயியல் நிறு­வ­கத்தில் (ஐ.டி.எச்) தொடர்ந்தும் மருத்­துவ கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட்­டுள்ளார். அவரின் மர­பணு மாதிரி மேல­திக பரி­சோ­த­னைக்­காக ஹொங்­கொங்­கிற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா வைரஸ் பாதிப்­புக்­குட்­பட்டு இலங்­கையில் இனங்­கா­ணப்­பட்ட சீனப் பெண் குண­ம­டைந்­தி­ருப்­பது மகிழ்ச்­சி­யான செய்­தி­யாகும் என்­றாலும் கொரோனா வைரஸ் பரவும் பீதி எம்­மி­ட­மி­ருந்து இன்னும் அக­ல­வில்லை.
இந்­நி­லை­யி­லேயே இலங்­கையில் தொழில் புரியும் மற்றும் வதியும் சீனப் பிர­ஜைகள் குறித்து அஸ்­கி­ரிய பீடத்தின் மகா­நா­யக்க தேரர் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்ளார். சீனப் பிர­ஜைகள் மீது கருணை காட்­டு­மாறும் அவர்­க­ளுக்கு உதவி செய்­யு­மாறும் கோரி­யுள்ளார்.

சீனர்கள் என்றால் அனை­வரும் கொரோனா தொற்­றுக்­குள்­ளா­கி­ய­வர்கள், அவர்­க­ளுடன் நாம் உற­வாடக் கூடாது, அவர்­களை ஒதுக்கி வைக்க வேண்டும் என எம்மில் பலர் கருதுகிறார்கள் எமது நாட்டில் நாம் பல்­வேறு நோய் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கிறோம். மலே­ரியா, டெங்கு என்­ப­வற்றை இவற்றில் குறிப்­பிட்டுக் கூறலாம். இந்த நோய்கள் பர­வா­ம­லி­ருக்க என்ன செய்ய வேண்டும் என்­பது எமது மக்­க­ளுக்குத் தெரியும். கொரோனா வைரஸ் தொடர்பிலும் நாம் இது போன்றே செயற்­பட வேண்டும்.

கொரோனா வைரஸ் சீன நாட்­டி­லி­ருந்தே பர­வி­ய­தென்­ப­தற்­காக முழு சீன நாட்­ட­வர்கள் மீதும் எம்மால் பழி சுமத்த முடி­யாது. நோயொன்று பர­வி­ய­மைக்­காக ஒரு நாட்­ட­வரை நாம் புறக்­க­ணிப்­பது, குற்றம்சாட்டுவது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும்.

இவ்­வா­றான இக்­கட்­டான நிலையில் துய­ரத்தில் ஆழ்ந்­துள்ள இலங்­கையில் வாழும் சீனர்­க­ளுக்கு நாம் கருணை காட்ட வேண்டும். அவர்­க­ளுக்கு ஆறுதல் கூற­வேண்டும். உத­விகள் புரி­ய­வேண்டும். பிரார்த்திக்க வேண்டும். இஸ்லாம் இதையே போதிக்­கி­றது.

சீனர்­க­ளுக்கு சகோ­தர உணர்­வுடன் உதவி புரி­யு­மாறு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் கோரிக்கை விடுத்­துள்ளார். சுகா­தார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்­சியும் இதே கோரிக்­கையை முன்­வைத்­துள்ளார். அனை­வரும், சர்­வ­தே­சமும் ஒன்­றி­ணைந்து கொரோனா வைரஸை அழிப்­ப­தற்கு செயற்­ப­ட­ வேண்டும்.

சீனா­வுக்கு இலங்­கை­யையும் இலங்கை மக்­க­ளுக்கு சீன மக்­க­ளையும் ஒரு போதும் மறக்­க­மு­டி­யாது. எமது இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு பல நூற்­றாண்டு வர­லாறு கொண்­ட­தாகும். சமய உறவு மற்றும் பொரு­ளா­தார உற­வினை குறிப்­பிட்டுக் கூறலாம். சர்­வ­தேச ரீதி­யி­லான பிரச்­சி­னை­களின் போது சீனா எமக்குப் பக்­க­ப­ல­மாக இருந்­துள்­ளது.

எமது நாட்டின் நிர்­மாணத் துறையில் பெரும்­பா­லான சீனர்கள் பணி­யாற்­று­கி­றார்கள். பல்­வேறு பாரிய திட்­டங்­களை சீன அரசும், நிறு­வ­னங்­களும் பொறுப்­பேற்று செயற்­படுத்தி வரு­கின்­றன. கொரோனா வைரஸ் கார­ண­மாக எமது நாட்­டிலும் சீனர்கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தவிர்க்­கப்­பட வேண்டும். இங்­குள்ள சில உண­வ­கங்கள் சீனர்­க­ளுக்கு கதவடைத்துள்­ளமை கவலைக்குரியதாகும்.

அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இடமில்லை என உறுதி செய்துள்ள நிலையில் நாம் தொடர்ந்தும் அச்ச உணர்வோடு இலங்கையிலுள்ள சீனர்களை புறந்தள்ளுவதற்கு முயற்சிக்கக் கூடாது.

அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரரின் அறைகூவலுக்கு அமைய சீனப்பிரஜைகள் மீது கருணை காட்டுவோம். அவர்களை அரவணைப்போம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.