பிரதமர் மஹிந்தவால் வக்பு சபை நியமனம்

0 1,109

பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவினால் வக்பு சபைக்கு புதிய அங்­கத்­த­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­ய­மனம் கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து வழங்­கப்­பட்­டுள்­ளது. வக்பு சபையின் தலை­வ­ராக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக ரபீக் இஸ்­மாயில், மெள­லவி பஸ்ருல் ரஹ்மான், டாக்டர் உதுமான் லெப்பை, மெள­லவி அர்கம் நூர்­ஆமித், ஷகி அஹமட், சிராஜ் அப்துல் வாஹிட் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

வக்பு சபையின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் 2010 – 2013 காலப்­ப­கு­தி­யிலும் வக்பு சபையின் தலை­வ­ராகக் கட­மை­யாற்­றி­ய­வ­ராவார். இதே­போன்று மெள­லவி பஸ்ருல் ரஹ்­மானும் ஏற்­க­னவே வக்பு சபையின் உறுப்­பி­ன­ராகப் பதவி வகித்­த­வ­ராவார்.

வக்பு சபையின் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ரபீக் இஸ்­மாயில் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவில் காதி நீதி­வான்கள் தொடர்­பான விவ­கா­ரங்­க­ளுக்கு செய­லா­ள­ரா­கவும், காதிகள் சபையின் செய­லா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றி­யவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. வக்பு சபை தனது அமர்­வினை எதிர்­வரும் மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.-Vidvielli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.