தியத்தலாவையில் உள்ள: 33 மாணவர்களில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை

பிரகேடியர் சந்தன விக்கிரமசிங்க

0 597

சீனா­வி­லி­ருந்து அழைத்­து­வ­ரப்­பட்ட மாண­வர்கள் 33 பேரும் தியத்­த­லாவை இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு வைத்­திய பரி­சோ­த­னை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். இவர்­களில் எவ­ருக்கும் வைரஸ் தொற்­றி­யுள்­ள­தாக இது­வ­ரையில் கண்­ட­றி­யப்­ப­ட­வில்­லை­யென இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் சந்­தன விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

பாது­காப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது ,

சுதந்­தி­ர­தி­னத்தை முன்­னிட்டு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் பொது மன்­னிப்­பு­காலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது எதிர்­வரும் புதன்­கி­ழமை வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது கடந்த வருடம் செப்­டெம்பர் 30ஆம் திக­திக்கு முன்னர் இரா­ணு­வத்­தி­லி­ருந்து இடை­வி­ல­கி­யி­ருக்கும் இரா­ணு­வத்­தினர் அவர்­க­ளது ஓய்வு காலத்தை உறுதி செய்­து­கொள்­ளவும், மீண்டும் பணியில் இணைந்து கொள்ள விரும்­பு­ப­வர்கள் இணைந்து கொள்­ளவும் ஏற்ற வகையில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய இவ்­வாறு இணைந்­து­கொள்ள விரும்பும் இடை­வி­ல­கி­யுள்ள இரா­ணு­வத்­தினர் அவர்கள் இறு­தி­யாகக் கட­மை­யாற்­றிய இரா­ணுவ முகாம்­க­ளிலோ அல்­லது அரு­கி­லி­ருக்கும் இரா­ணுவ முகா­முக்கோ சென்று இவர்­க­ளது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­தி­யதன் பின்னர் இணைந்­து­கொள்ள முடி­வ­துடன் , ஓய்­வு­பெற விரும்­பு­வர்­களும் இவ்­வாறு சென்று தமது ஓய்வைப் பதிவு செய்­து­கொள்ள முடியும்.

இதே­வேளை, அனு­ம­தி­யற்ற துப்­பாக்­கி­களை வைத்­தி­ருப்­ப­வர்­களும் இந்தக் காலத்­திற்குள் அரு­கி­லி­ருக்கும் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு சென்று தம்­மி­ட­முள்ள துப்­பாக்­கி­களை கைய­ளிக்க முடியும். இதன்­போது அவர்­க­ளுக்கு எதி­ராக எந்த சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது. இந்தக் காலத்­திற்குள் ஒப்­ப­டைக்கத் தவ­று­ப­வர்கள் மற்றும் சேவையில் இணைந்­து­கொள்­ளாத இரா­ணு­வத்­தினர் மீது சட்­ட­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

தற்­போது உல­க­ளா­விய ரீதியில் பெரிதும் அவ­தானம் பெற்­றி­ருக்கும் கொரோனா வைரஸின் கார­ண­மாக சீனா­வி­லி­ருந்து அழைத்­து­வ­ரப்­பட்ட இந்­நாட்டு மாண­வர்கள் 33 பேரும் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக் குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் எவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளதாக இதுவரையில் கண்டறியப்படவில்லை. அதேவேளை, அனைவரும் தனித்தனியான அறைகளில் பாதுகாப்பான முறையில் இருக்கின்றனர்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.