ஜனாதிபதியின் சுதந்திர தின உரை செயலுருப் பெற வேண்டும்

0 636

இலங்­கையின் 72 ஆவது சுதந்­திர தின நிகழ்வு நேற்று முன்­தினம் சுதந்­திர சதுக்­கத்தில் நடை­பெற்ற சமயம், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ நிகழ்த்­திய உரை பல­ரதும் வர­வேற்பைப் பெற்­றுள்­ளது.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வையும் அவ­ரது கட்­சி­யி­ன­ரையும் கடு­மை­யாக விமர்­ச­னத்­துக்­குட்­ப­டுத்தும் எதி­ரணி அர­சி­யல்­வா­தி­யான முன்னாள் அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரு­மான மங்­கள சம­ர­வீர எம்.பி.யே, ஜனா­தி­ப­தியின் சுதந்­திர தின உரையை முதன் முத­லாக வர­வேற்று கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியின் உரை மிகவும் சிறப்­பா­ன­தாக இருந்­த­தாகக் குறிப்­பிட்­டி­ருந்த அவர், உரையில் குறிப்­பிட்ட விட­யங்­களை ஜனா­தி­பதி நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

‘‘ஜனா­தி­ப­தியின் உரை மிகவும் சிறப்­பா­ன­தாக இருந்­தது. தற்­போது அவர் கூறி­ய­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். மிகவும் கடி­ன­மான தீர்­மா­னங்­களை ஒரு ஜன­நா­யகக் கட்­ட­மைப்­பிற்குள் நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடி­ய­வரே சிறந்த வலு­வான தலை­வ­ராவார். 1948 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட பயணம் சிறந்த உரை­களை நிகழ்த்­திய நன்­நோக்கம் கொண்ட தலை­வர்­களைக் கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் இது செயற்­பட வேண்­டிய தரு­ண­மாகும்’ என்று அவர் தனது டுவிட்டர் மூல­மாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதே­போன்­றுதான் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம். ஸுஹைர் நேற்று விடுத்­துள்ள அறிக்­கை­யொன்­றிலும் ஜனா­தி­ப­தியின் உரை வர­வேற்­கத்­தக்­க­தாக அமைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தனது சுதந்­திர தின உரையில் மக்­களின் சுதந்­தி­ரத்தை வலுப்­ப­டுத்தல், சட்­டத்தின் ஆட்­சிக்கு மதிப்­ப­ளித்தல், ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்­துக்கு மட்­டு­மன்றி அனைத்து மக்­க­ளுக்கும் தான் தலை­வ­ரென்றும் மதத்தைப் பின்­பற்றும் சுதந்­தி­ரத்தை உறு­தி­ய­ளித்­ததும் சக­ல­ரதும் பாராட்­டுக்­களைப் பெற்­றுள்­ளது. இவ்­வு­ரையில் நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்த அவ­ரது கொள்­கை­களும் சக­ல­ரையும் ஈர்த்­தி­ருக்கும் என்­பது உறுதி‘‘ என சட்­டத்­த­ரணி ஸுஹைர் குறிப்­பிட்­டுள்ளார்.

உண்­மையில் அநு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெற்ற தனது பத­வி­யேற்பு நிகழ்­வின்­போது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆற்­றிய உரைக்கும் சுநத்­திர தினத்­தின்­போது அவர் ஆற்­றிய உரைக்­கு­மி­டையில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றங்கள் இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அநு­ரா­த­பு­ரத்தில் ஆற்­றிய உரையில் அவர் முழுக்க முழுக்க சிங்­கள பெளத்த மக்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தியே பேசி­யி­ருந்தார். எனினும் சுதந்­திர தின உரையின் கருப்­பொ­ருளை கருத்துச் சுதந்­திரம் மற்றும் மத சுதந்­தி­ரத்தை வலி­யு­றுத்­து­வ­தா­கவே அவர் அமைத்­தி­ருந்தார்.

மங்­கள சம­ர­வீர சுட்­டிக்­காட்­டி­யுள்­ளதைப் போன்று கடந்த காலங்­க­ளிலும் இவ்­வாறு பல தலை­வர்கள் சிறந்த பேச்­சா­ளர்­க­ளாக இருந்­தி­ருக்­கி­றார்கள். நல்ல பல சிந்­த­னை­களை முன்­வைத்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் அவற்றை வெற்­றி­க­ர­மாக செய­லு­ருப்­ப­டுத்­தி­யுள்­ளார்­களா என்­பதே இங்­குள்ள கேள்­வி­யாகும்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ தன்னை அதிகம் பேசு­ப­வ­ரா­க­வன்றி, அதிகம் செயற்­ப­டு­ப­வ­ரா­கவே இது­வரை காண்­பித்­தி­ருக்­கிறார். அந்த வகையில் அவர் சுதந்­திர தின உரையில் முன்­வைத்த கருத்­துக்­களை அடுத்­து­வரும் காலங்­களில் செய­லு­ருப்­ப­டுத்­து­வ­தற்­காக திட­சங்­கற்பம் பூண்டு உழைக்க வேண்டும் என்­பதே எமது விருப்­ப­மாகும்.

இலங்­கையில் வாழும் சகல இன மக்­க­ளதும் கருத்துச் சுதந்­தி­ரத்­தையும் மத சுதந்­தி­ரத்­தையும் பொரு­ளா­தார சுதந்­தி­ரத்­தையும் பாது­காக்க அவர் தன்­னா­லி­யன்ற அர்ப்­ப­ணிப்­பு­களை மேற்­கொள்ள வேண்டும். தனதுரையில் வலியுறுத்தியதைப் போன்று சகல மக்களினதும் நேசத்துக்குரிய தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஊழலும் மோசடியும் நிறைந்த அரசியல் கலாசாரத்துக்கு முற்றப் புள்ளி வைத்து சுபீட்சமானதொரு இலங்கையைக் கட்டியெழுப்ப அவர் பாடுபட வேண்டும். அதன் மூலமாகவே சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட விடயங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியுமாகவிருக்கும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.