பன்மை சமூகத்தில் சிறுபான்மையினர்

0 825

*இறைவன் இருக்­கின்­றானா?
*இறைவன் ஏகனா? அநே­கனா?
*குர்ஆன் இறை­வாக்கா?
*ஏன் இறை­வ­ழி­காட்­டலை ஏற்க வேண்டும்?
*மறுமை சாத்­தி­யமா? மறுமை ஏன்?
*இஸ்­லா­மிய கட­மை­களின் நோக்கம் என்ன?

இது குறித்து குர்­ஆனும், நபி­மொ­ழி­களும் ஆழ­மாக விவா­தித்­தி­ருக்­கின்­றன. பெரு­மா­னா­ரிடம் தோழர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு இதற்­கான விடை­களைப் பெற்­றார்கள். சிந்­தனை, பகுத்­த­றிவு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் ஏற்­படும் உறுதி என்றும் நிலைத்து நிற்கும். கண்­மூ­டித்­த­ன­மான பின்­பற்­றுதல் தடு­மாற்­றத்­திற்கு உள்­ளாகும்.

“அறிவு என்­பது கரு­வூலம். கேள்­வி­களே அதன் திற­வுகோல்” (அபூ­தாவூத்)

“இவர்கள் குர்­ஆனைச் சிந்­தித்துப் பார்க்க வேண்­டாமா?” (திருக்­குர்ஆன் 47:24)

“ஷைத்­தான்­களைப் பொறுத்­த­வரை ஓர் அறிஞர் ஆயிரம் வணக்­க­சா­லி­களை விடக் கடி­ன­மா­ன­வ­ராக இருக்­கின்றார்” (அறி­ஞர்­களை ஷைத்­தானால் எளிதில் வழி­கெ­டுக்க முடி­யாது)– திர்­மிதி

“சிறிதுநேர சிந்­தனை பல ஆண்டு வணக்­கத்­தை­விடச் சிறந்­தது” (நபி­மொழி)
இதுவும் இது­போன்ற எண்­ணற்ற இறை­மொழி, நபி­மொழிக் குறிப்­பு­களும் சிந்­தனை செய்து ஈமான் கொள்­வதன் அவ­சி­யத்தை நமக்கு உணர்த்­து­கின்­றன.

இஸ்­லா­மிய போத­னைகள் இந்த வகையில் அமைய வேண்டும். குறிப்­பாக இளை­ஞர்­க­ளுக்கு, குழந்­தை­க­ளுக்கு இவ்­வ­கையில் இஸ்­லா­மிய கருத்­து­களை வழங்­கா­விடில் நாத்­திகம், கம்­யூ­னிசம், மேலை­நாட்டுப் பண்­பாடு, கட்­டுப்­பா­டற்ற வாழ்க்கை முறை ஆகி­ய­வற்றின் பக்கம் அவர்கள் செல்­லக்­கூடும்.

இஸ்­லாத்தின் வழி­பா­டுகள், சடங்­குகள் கொண்ட ஒரு மத­மாகக் கற்­பிக்­காமல், வாழ்வின் அனைத்து விஷ­யங்­க­ளுக்கும் வழி­காட்டும் மார்க்­க­மாக, வாழ்­வியல் தத்­து­வ­மாக போதிக்க வேண்டும். இல்­லையேல் வழி­பாட்டில் கவ­ன­மாக இருந்து விட்டு சமூக, பொரு­ளா­தார, அர­சியல் விவ­கா­ரங்­களில் இஸ்­லாத்­திற்கு மாற்­ற­மான வழி­களில் செல்­வார்கள்.

மஸா­யில்­க­ளுக்கு– மார்க்கச் சட்­டங்­க­ளுக்கு இஸ்­லாத்­திற்கு ஓர் இடம் உண்டு. ஆனால் நாம் மார்க்­கமே மஸாயில் என்று ஆக்­கி­விட்­டி­ருப்­பதால் பல மோச­மான விளை­வு­களைத் தந்­துள்­ளது. மஸா­யில்­களைப் பற்றி பேசு­வ­திலும், தர்­க்கிப்­ப­தி­லுமே அதிக நேரம் கழி­கின்­றது.

இஸ்லாம் மட்­டு­மல்ல, இஸ்­லாத்­திற்கு மாற்­ற­மான ஜாஹி­லியத் கொள்­கை­களின் பல­வீ­னங்­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் விளக்க வேண்டும். ஜாஹி­லி­யத்தை விளங்­காமல் இஸ்­லாத்தை முழு­மை­யாகப் புரிய முடி­யாது.

சூழ்­நி­லை­களில் கவனம்

மனி­தனை உரு­வாக்­கு­வதில் சூழ்­நி­லை­க­ளுக்கு மிகப்­பெ­ரிய பங்கு உண்டு. வீட்டுச் சூழ்­நிலை, கல்வி வளாகச் சூழ்­நிலை, அலு­வ­லக சூழ்­நிலை, நண்­பர்கள் ஆகி­யவை ஒரு மனி­தனைப் பெரிதும் பாதிக்­கின்­றது.

“ஒருவன் தன் நண்­பனின் மார்க்­கத்தில் (வழியில்) உள்ளான். எனவே யாரை நண்­ப­னாகத் தேர்ந்­தெ­டுப்­பது என்­பதைப் பற்றி சிந்­தி­யுங்கள்” (திர்­மிதி)

“தீய­வர்­க­ளுடன் இருப்­பதைவிட தனி­மையில் இருப்­பது நல்­லது. தனி­மையில் இருப்­பதை விட நல்­ல­வர்­க­ளுடன் இருப்­பது சிறந்­தது” (பைஹகி)

வீட்டில் இஸ்­லா­மியச் சூழல் நிலவ வேண்டும். தொழுகை, குர்ஆன் ஓதுதல், பயான்கள், ஆரோக்­கி­ய­மான உரை­யா­டல்கள் ஆகி­ய­வற்றால் வீடு சூழப்­பட்­டி­ருக்க வேண்டும். திரைப்­படம், தீய­வற்றைப் போதிக்கும் தொலைக்­காட்சித் தொடர்கள் ஆகி­ய­வற்றைப் பார்க்கும் குடும்­பங்­களில் உரு­வாகும் குழந்­தைகள் எவ்­வாறு இஸ்­லா­மிய வார்ப்பில் உரு­வாகும்?

பெற்­றோர்­களே குழந்­தை­க­ளுக்கு முதல் முன்­மா­திரி ஆவார்கள். பெற்­றோர்கள் தமது செயற்­பா­டு­களில் குறை உள்­ள­வர்­க­ளாக இருந்து கொண்டு, உப­தே­சங்­களின் மூல­மா­கவோ அல்­லது ஒரு ஹஸ்­ரத்தை நிய­மித்து குழந்­தை­களை சரி­செய்து விடலாம் என்று எண்ணிச் செயற்­பட்டால் ஏமாற்­றத்­திற்கே ஆளா­வார்கள்.

கல்வி வளாகச் சூழ்­நி­லைகள்

இஸ்­லா­மியச் சூழ்­நிலை, இஸ்­லா­மியப் பாடத்­திட்­டங்­க­ளுடன் கூடிய ஆண்கள், பெண்­க­ளுக்­கான தர­மான தனித்­தனிக் கல்வி நிலை­யங்­களே இன்­றைய தேவை. ஆனால் இவற்றைச் செயற்­ப­டுத்­து­வதில் பல சிர­மங்கள் உள்­ளன என்­ப­தையும் எல்­லோரும் அறிவர்.

இஸ்­லா­மியச் சூழல் இல்­லாத கல்வி நிலை­யங்­களில் பயிலும் மாண­வர்­க­ளுக்கு வாரத்தின் இறு­தியில் (Week end days) தனி­வ­குப்­பு­களை பள்­ளி­வா­சல்­க­ளிலும் பள்­ளிக்­கூ­டங்­க­ளிலும் இஸ்­லா­மிய மையங்­க­ளிலும் ஏற்­பாடு செய்ய வேண்டும்.

பொழு­து­போக்கு அம்­சங்­க­ளிலும் கவனம் செலுத்த வேண்டும். கார்ட்­டூன்கள், கம்பி­யூட்டர் விளை­யாட்­டுக்கள், பாடல்கள், கல்­விக்­கூ­டங்­களில் நடை­பெறும் கலை நிகழ்ச்­சிகள் குழந்­தை­களின் கவ­னத்தைப் பெரிதும் ஈர்க்­கின்­றன. எனவே இத்­து­றையில் கவனம் செலுத்தி இஸ்­லா­மிய வரம்­பு­களை மீறாத வகையில் மாற்று ஏற்­பா­டு­களைச் (alternate ways) செய்ய வேண்டும்.

ஜமா­அத்­தாக வாழ்தல்

முஸ்­லிம்கள் ஆற்ற வேண்­டிய பல்­வேறு பொறுப்­புக்­களைப் பற்றி விவா­தித்தோம். இத்­தனை பணி­க­ளையும் தனி­ம­னி­தர்­க­ளாகச் செய்ய முடி­யாது. முஸ்­லிம்கள் ஒரு குழு­வாக– ஜமா­அத்­தாக ஒற்­று­மை­யுடன் செயற்­ப­டு­வதன் மூலமே இவை சாத்­தி­ய­மாகும். ஜமா­அத்­தாக வாழ்­வதன் அவ­சி­யத்தை நபி­களார் வலி­யு­றுத்­தி­ய­தோடு மட்­டு­மின்றி ஒரு ஜமா­அத்தை நிறுவி முன்­மா­தி­ரி­யாக வாழ்ந்து உள்­ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்­றார்கள். “ஒரு காட்டில் வாழ்­கின்ற மூன்று மனி­தர்­க­ளா­யி­ருப்­பினும் சரி, அவர்­களும் தமக்குள் ஒரு­வரை அவ­சியம் தங்கள் அமீ­ராக (தலை­வ­ராக)க் கொள்ள வேண்டும்” (அல் முன்­தகா)
அறி­விப்­பாளர்: முஆத்பின் ஜபல் (ரலி)

‘ஆடு­க­ளுக்கு ஓநாய் எப்­படிப் பகை­வ­னாக உள்­ளதோ, தம் மந்­தையை விட்டு விலகித் தனி­யாக நிற்கும் ஆடு­களை எப்­படி இல­கு­வாக ஓநாய் வேட்­டை­யாடி இரை­யாக்கிக் கொள்­கின்­றதோ, அதே போன்று ஷைத்தான் மனி­த­னுக்கு ஓநா­யாக இருக்­கின்றான். மக்கள் ஒரு கூட்­ட­மைப்­பாக வாழா­விட்டால் அவன் அவர்­களைத் தனித்­த­னி­யாக மிகவும் இல­கு­வாக வேட்­டை­யாடி விடு­கின்றான்.எனவே, மக்­களே! குறு­க­லான பாதையில் நடக்­கா­தீர்கள்! மாறாக நீங்கள் ஜமாஅத் அமைப்­பு­டனும் முஸ்லிம் பொது­மக்­க­ளு­டனும் இணைந்து வாழுங்கள்!” (முஸ்னத் அஹ்மத், மிஸ்காத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்­றார்கள். “சுவ­னத்தின் நடுவில் தன் வீட்டைக் கட்­டிட எவன் விரும்­பு­கின்­றானோ அவன் ஜமா­அத்­துடன் இணைந்தே இருக்க வேண்டும். ஏனெனில் தனித்த ஒரு மனி­த­னுடன் தான் ஷைத்தான் இருப்பான். இரண்டு மனி­தர்­க­ளாகி விடும்­போது அவன் தூர விலகி விடு­கிறான்”

இந்த நபி­மொ­ழிகள் அனைத்தும் ஜமா­அத்­துடன் வாழ்­வதன் அவ­சி­யத்தை உணர்த்­து­கின்­றன.

1.வணக்­கங்­களைச் செய்ய ஜமாஅத் தேவை. தொழுகை, நோன்பு, ஸகாத் என கட்­டாயக் கட­மைகள் அனைத்தும் ஜமா­அத்­தாக நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யவை.

2. முஸ்­லிம்கள் பல சேவை­களை நிறை­வேற்ற ஜமாஅத் அமைப்பு தேவை. பைத்­துல்மால், வட்­டி­யில்லா கட­னு­தவி, சமூக சேவை, கல்வி, பொரு­ளா­தார உதவித் தொகை, ஷரீஆ, பஞ்­சா­யத்து ஆகி­ய­வற்றைச் செய்ய ஜமாஅத் தேவை.

3. நன்­மையை ஏவி, தீமையை விலக்கும் பணியை முறை­யாக, நிலை­யாக, திற­மை­யாகச் செய்ய ஜமாஅத் தேவை.

4. அர­சி­யலில் நமது உரி­மையைப் பெற, சமூ­கத்தின் வலி­மையைக் காட்ட ஜமாஅத் தேவை.

ஜமாஅத் வலு­வுள்­ள­தாக இருக்க வேண்டும் எனில் முஸ்­லிம்­க­ளி­டையே ஒற்­றுமை தேவை.

“நீங்கள் எல்­லாரும் ஒன்று சேர்ந்து அல்­லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்­ளுங்கள்; பிரிந்து விடா­தீர்கள்” (திருக்­குர்ஆன் 3:103)

எவர்கள் தம்­மிடம் தெளி­வான அறி­வு­ரைகள் வந்த பின்னர் தங்­க­ளுக்குள் கருத்து வேறு­பாடு கொண்டு பற்­பல பிரி­வி­னராய்ச் சித­றுண்டு விட்­டார்­களோ அவர்­களைப் போல் நீங்­களும் ஆகி­வி­டா­தீர்கள்” (திருக்­குர்ஆன் 3:105)

“இறை­நம்­பிக்கை கொண்­ட­வர்­களே! அல்­லாஹ்­வுக்கும் அவ­னு­டைய தூத­ருக்கும் கீழ்ப்­ப­டி­யுங்கள். ஒரு­வ­ருக்­கொ­ருவர் பிணங்கிக் கொள்­ளா­தீர்கள்! அவ்­வாறு செய்தால் உங்­க­ளி­டையே பல­வீனம் தோன்­றி­விடும். மேலும் உங்கள் மதிப்பும் வலி­மையும் அழிந்து போய்­விடும். ஆகவே பொறு­மையை மேற்­கொள்­ளுங்கள்” (8:46)

மேலே மேற்கோள் காட்­டப்­பட்ட இறை­வ­ச­னங்கள் ஒற்­று­மையின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­கின்­றன.

கருத்து வேறு­பா­டு­க­ளுக்கு மத்­தியில் ஒற்­று­மை­யுடன் இணைந்­தி­ருக்க வேண்டும். முஸ்­லிம்­க­ளிடம் பெரும்பாலான விசயங்களில் கருத்து ஒற்றுமையே நிலவுகின்றது. ஓர் இனம், ஒரு மறை, ஒரு தூதர், ஒரு கிப்லா, ஒரு ஷரீஆ என்பதன் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றோம். சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது இயற்கையே. அவற்றைப் பெரிதுபடுத்தாமல், அவற்றின் அடிப்படையில் பிணங்கிக் கொள்ளாமல், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வாழ்வது ஒன்றும் சிரமமானது அல்ல.

இயக்கவெறி, மொழிவெறி, கட்சிவெறி ஆகியன இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பலவீனப்படுத்தும் அறியாமைக்கால (ஜாஹிலியா) கோட்பாடுகள் ஆகும்.

தூய்மையான எண்ணமும் (இக்லாஸ்) தாராள மனப்பான்மையும், நேசிக்கும் மனப்பான்மையும் இஸ்லாம், முஸ்லிம் சமுதாயம் பற்றிய அக்கறையும் இருப்பவர்களிடம் பிளவுச் சிந்தனைகள் தோன்றாது.-Vidivelli

  • சமரசம்

Leave A Reply

Your email address will not be published.