18 நாடுகளுக்கு பரவியிருக்கும் கொரோனா வைரஸ்

சீனாவிலிருந்து வெளிநாட்டு பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதம்

0 819

கொரோனோ வைரஸ் தொற்­றினால் சீனாவில் நேற்று புதன்­கி­ழமை வரை இறந்­த­வர்­களின் எண்­ணிக்கை 132 ஆக அதி­க­ரித்­தி­ருப்­ப­துடன், அங்கு புதி­தாக 1500 பேருக்குத் தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக சீன அதி­கா­ரிகள் கூறி­யி­ருக்­கி­றார்கள். இது­வ­ரையில் உலகின் 18 நாடு­க­ளுக்கு அந்த வைரஸ் பர­வி­யி­ருக்­கி­றது. அந்த நாடு­களில் 67 பேருக்குத் தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும், சீனா­விற்கு அடுத்­த­தாக அதிக சனத்­தொ­கையைக் கொண்ட இந்­தி­யாவில் எவரும் இந்த வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­க­வில்லை என்று உலக சுகா­தார ஸ்தாபனம் அறி­வித்­தி­ருக்­கி­றது.

இதே­வேளை, கொரோனோ வைரஸ் தொற்றின் மைய­நி­லை­ய­மான சீனாவின் வூஹா­னி­லி­ருந்து தங்­க­ளது பிர­ஜை­களை தத்­த­மது நாட்­டிற்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு உல­க­நா­டுகள் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்கும் நிலையில் அமெ­ரிக்­காவும், ஜப்­பா­னுமே அவற்றின் நூற்­றுக்­க­ணக்­கான பிர­ஜை­களை விமானம் மூலம் ஏற்­றிச்­சென்­றி­ருக்­கின்­றன.

ஜப்­பா­னிய அர­சாங்­கத்­தினால் வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட விமா­ன­மொன்று 206 ஜப்­பா­னியப் பிர­ஜை­களை ஏற்­றிக்­கொண்டு வூஹா­னி­லி­ருந்து டோக்­கி­யோவை புதன்­கி­ழமை காலை சென்­ற­டைந்­தி­ருக்­கி­றது. அந்தப் பய­ணி­களில் இருமல் மற்றும் காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்ட ஒரு பெண்ணும், மூன்று ஆண்­களும் மேல­திக பரி­சோ­த­னைகள் மற்றும் சிகிச்­சை­க­ளுக்­காகத் தனித்­த­னி­யான அம்­பி­யூலன்ஸ் வண்­டி­களில் வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக ஜப்­பா­னிய அதி­கா­ரிகள் கூறினர். கொரோனோ வைரஸின் தொற்­றுக்கு இவர்கள் உள்­ளா­கி­யி­ருக்­கி­றார்­களா, இல்­லையா என்­பது நேற்று முன்தினம் இரவு வரை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று ஜப்­பா­னிய அரசின் உயர்­மட்டப் பேச்­சாளர் யொஷி­ஹிடே சுஹா கூறினார்.

வைரஸ் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­து­மாறு சீனா மீதான நெருக்­கு­தல்கள் அதி­க­ரித்த வண்­ண­மி­ருக்­கின்­றன. வைரஸின் விளை­வாக மர­ண­ம­டைந்­த­வர்­களின் மொத்த எண்­ணிக்கை செவ்­வா­யன்று 26 பேரினால் அதி­க­ரித்த அதே­வேளை, புதி­தாகத் தொற்­றுக்கு இலக்­கான சக­லரும் (மக்கள் பிர­வே­சிக்­கவும், வெளி­யே­றவும் தடை­செய்­யப்­பட்­டி­ருக்கும்) ஹுபே மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள்.

வைரஸ் தொற்­றுக்கு இலக்­கா­ன­வர்­களின் மொத்த எண்­ணிக்கை 5, 974 ஆக உயர்ந்­தி­ருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சீனப்­பெ­ரு­நி­லப்­ப­ரப்பில் சார்ஸ் நோய் தீவி­ர­மாகப் பர­விய கால­கட்­டத்தில் பாதிப்­பிற்­குள்­ளா­ன­வர்­களின் எண்­ணிக்­கை­யையும் விட (5, 327) இது கூடு­த­லா­ன­தாகும். சார்ஸ் நோய் சீனப்­பெ­ரு­நி­லப்­ப­ரப்பில் 349 பேர் உள்­ள­டங்­க­லாக உல­க­ளாவிய ரீதியில் 770 இற்கும் அதி­க­மா­ன­வர்­களைப் பலி­யெ­டுத்­தது.

இத­னி­டையே வூஹா­னி­லுள்ள அமெ­ரிக்கத் துணைத் தூத­ர­கத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் உட்­பட சுமார் 200 அமெ­ரிக்கப் பிர­ஜை­களை ஏற்­றிக்­கொண்டு வாடகை விமா­ன­மொன்று புதன்­கி­ழமை காலை வூஹா­னி­லி­ருந்து கிளம்­பி­ய­தாக அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கூறினர். இந்தப் பய­ணி­க­ளி­னதும் ஏனைய அமெ­ரிக்­கர்­க­ளி­னதும் சுகா­தா­ரத்தைப் பாது­காப்­ப­தற்­காக அவர்கள் மிகவும் கவ­ன­மாகப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டுக் கண்­கா­ணிக்­கப்­ப­டுவர் என்று அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பேச்­சாளர் மோர்கன் ஓர்­டாகஸ் கூறினார்.

சீனா­விற்கு நேரடி விமா­ன­சே­வை­களை நிறுத்­திய பிரிட்டிஷ் எயார்வேஸ்

சீனப்­பெ­ரு­நி­லப்­ப­ரப்­பி­லி­ருந்து பிரிட்­ட­னுக்கும், பிரிட்­ட­னி­லி­ருந்து சீனா­விற்­கு­மான சகல நேரடி விமான சேவை­க­ளையும் இடை­நி­றுத்­தி­யி­ருப்­ப­தாக பிரிட்டிஷ் எயார்வேஸ் புதன்­கி­ழமை அறி­வித்­தது. அவ­சியத் தேவையைத் தவிர வேறு எந்தக் கார­ணங்­க­ளுக்­கா­கவும் சீனா­விற்கு பிரிட்டிஷ் பிர­ஜைகள் பய­ணிக்­கக்­கூ­டாது என்று பிரிட்டிஷ் அர­சாங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­த­தை­ய­டுத்தே பிரிட்டிஷ் எயார்வேஸ் இவ்­வாறு அறி­வித்­தி­ருக்­கி­றது. ஜன­வ­ரி­யி­லி­ருந்து பெப்­ர­வரி வரை சீனா­விற்கு நேரடி விமான சேவைகள் கிடை­யாது என்­பதை பிரிட்டிஷ் எயார்வேஸ் இணை­யத்­தளம் காண்­பிக்­கி­றது. ‘வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­காக நாம் மன்­னிப்புக் கோரு­கின்றோம். ஆனால் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­னதும், விமா­ன­சேவை ஊழி­யர்­க­ளி­னதும் பாது­காப்பே எமது முன்­னு­ரி­மைக்­கு­ரி­யவை’ என்று அந்த விமான சேவையின் அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்­து­வைப்பு

பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய அல்­லது தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய தனது பிர­ஜைகள் வூஹான் அமைந்­தி­ருக்கும் ஹுபே மாகா­ணத்­தி­லி­ருந்து வெளி­யேற உத­விகள் செய்­யப்­படும் என்று அவுஸ்­தி­ரே­லியா புதன்­கி­ழமை அறி­வித்­தது. அவ்­வாறு வெளி­யே­று­கின்­ற­வர்கள் இந்து சமுத்­தி­ரத்­தி­லுள்ள அவுஸ்­தி­ரே­லியப் பிராந்­தி­ய­மான கிறிஸ்மஸ் தீவில் தடுத்­து­வைக்­கப்­ப­டுவர் என்றும் அவுஸ்­தி­ரே­லியா அறி­வித்­துள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யாவில் தஞ்சம் கோரு­வோ­ருக்­கான சர்ச்­சைக்­கு­ரிய தடுப்­பு­நி­லையம் அந்த கிறிஸ்மஸ் தீவி­லேயே அமைந்­தி­ருக்­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வூஹா­னி­லி­ருந்தும், அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லி­ருந்தும் தனது பிர­ஜை­களைத் திருப்­பி­ய­ழைப்­ப­தற்­கான திட்­டங்­களை பிரிட்டன் பூர்த்­தி­செய்து கொண்­டி­ருக்­கி­றது. ஐரோப்­பிய ஒன்­றியம் அதன் பிர­ஜை­களை இரு பிரெஞ்சு விமா­னங்­களில் இவ்­வாரம் ஏற்­றிக்­கொண்டு செல்­ல­வி­ருக்­கி­றது. கொரி­யாவும் அவ்­வாறே செய்­ய­வி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­வேளை ஏனைய பல நாடுகள் தங்­க­ளுக்கு இருக்கும் தெரி­வு­களை ஆராய்ந்த வண்­ண­மி­ருக்­கின்­றன.

‘வூஹா­னி­லி­ருந்து விமானம் கிளம்­பு­வ­தற்கு முன்­ன­தாக சகல பய­ணி­க­ளி­னதும் உடல் வெப்­ப­நிலை பரி­சோ­திக்­கப்­பட்­டது. பிறகு மீண்டும் விமானம் பறந்­து­கொண்­டி­ருந்த போது மருத்­து­வர்கள் உடல் வெப்­ப­நி­லையைப் பரி­சோ­தித்­தனர். வூஹான் நக­ரி­லுள்ள சக­லரும் முக­மூடி அணி­யத்­தொ­டங்­கி­னார்கள்.

ஜன­வரி 23 ஆம் திகதி வூஹா­னுக்­கான போக்­கு­வ­ரத்து தடை­செய்­யப்­பட்­டதும் நாம் பெரும் அச்­ச­ம­டைந்தோம். இன்­னமும் 400 இற்கும் அதி­க­மான ஜப்­பா­னி­யர்கள் வூஹான் நகரில் இருக்­கி­றார்கள். அவர்கள் சக­லரும் நாடு திரும்­பவே விரும்­பு­கின்­றார்கள்’ என்று டோக்­கியோ வந்­தி­றங்­கிய தகா­யுகி காடோ என்ற பயணி த கார்­டி­ய­னிடம் தெரி­வித்தார்.

சகல பய­ணி­களும் மேலும் சுகா­தார பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுவர் என்றும், வைரஸ் தொற்­றுக்­கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சிய பயணிகள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என்று பிரகடனம் செய்யக்கூடியதாக இருக்கும்வரை அவர்களது வீடுகளில் சுயதடுப்புக்காவலில் இருக்கவேண்டும். ஜப்பான் மேலதிக விமானங்களையனுப்பி, வூஹானிலுள்ள சுமார் 650 ஜப்பானியர்களையும் அழைத்து வருவதற்கான அடுத்த ஏற்பாடுகளில் புதன்கிழமை ஈடுபட்டது.

வூஹான் நகருக்கு முதலில் வந்த ஜப்பானிய விமானம் 15 ஆயிரம் முகமூடிகள், 50 ஆயிரம் சோடி கையுறைகள், 8 ஆயிரம் பாதுகாப்புக் கண்ணாடிகள் உட்பட அவசரகால விநியோகங்களை ஏற்றிவந்தது என்று வெளியுறவு அமைச்சு கூறியது. வூஹானிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாதவாறு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.-Vidivelli

  • த கார்டியன், ராய்ட்டர்ஸ்

Leave A Reply

Your email address will not be published.