புதிய ஹஜ் ஏற்பாடுகளை அரசு தெளிவுபடுத்த வேண்டும்

1 824

முஸ்­லிம்­களின் இறுதிக் கட­மை­யான ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டு­களில் திடீ­ரென பாரிய மாற்றமொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த மாற்­றத்­துக்­கான தீர்மானம் கடந்த சனிக்­கி­ழமை மேற்கொள்ளப்­பட்­டது. இது­வரை காலம் வரு­டாந்தம் ஹஜ் ஏற்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், அரச ஹஜ் குழு மற்றும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்ட ஹஜ் முகவர் நிலை­யங்கள் என்­பன மூலமே மேற்­கொள்­ளப்­பட்­டன.

இவ்­வ­ருடம் ஹஜ் முக­வர்கள் முற்­றாக நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இது­வரை காலம் ஹஜ் ஏற்­பா­டுளில் ஹஜ் முக­வர்­களே ஆதிக்கம் செலுத்தி வந்­துள்­ளார்கள் என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ வெற்­றி­பெற்­றதன் பின்பு அமையப் பெற்ற அர­சாங்­கத்தில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரேனும் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. இதனால் கடந்த அர­சாங்­கத்தின் பதவிக் காலத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒரு­வரின் பொறுப்பில் இருந்த முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு கை நழு­விப்­போ­னது. முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான அமைச்சர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

முஸ்லிம் சமய விவ­கா­ரமும் கலா­சார அமைச்­சுக்குப் பொறுப்­பான பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் விட­ய­தா­னங்­க­ளுக்குள் உட்­பட்­டது. முஸ்லிம் விவ­கா­ரங்­களை பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ பொறுப்­பேற்றுக் கொண்­டதும் மர்ஜான் பளீலின் தலை­மையில் ஐவர் கொண்ட ஹஜ் குழு­வொன்­றினை நிய­மித்தார்.

ஹஜ் உடன்­ப­டிக்­கையில் இலங்­கையின் சார்பில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு அக்­கு­ழு­வையே அனுப்பி வைத்தார். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பா­ளரைக் கூட அவர் அக்­கு­ழுவில் இணைக்­க­வில்லை.

2020 ஆம் ஆண்­டுக்கு சவூதி ஹஜ் அமைச்சு இலங்­கைக்கு 3500 கோட்டா வழங்­கி­யுள்­ளது. இந்­நி­லையில் தான் இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டு­களை இலங்கை அர­சாங்­கமே மேற்­கொள்ள வேண்டும் எனவும் அதற்­கான ஏற்­பா­டு­களை ஹஜ் குழு உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்­டு­மெ­னவும் பிர­தமர் உத்­த­ர­விட்­டுள்ளார்.

கடந்த காலங்­களில் ஹஜ் முக­வர்­களில் பலர் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தையும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து கூடு­த­லான பணத்தை அற­வி­டு­வ­தையும் கருத்திற் கொண்டு ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­க­ருதி இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரி­வித்­துள்ளார்.

இது­வரை காலம் ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வந்த முக­வர்­களில் பலர் இந்தப் புனித சேவையை ஒரு வர்த்­த­க­மா­கவே கருதிச் செயற்­பட்டு வந்­தனர். ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன் அன்றி இலா­ப­மீட்­டு­வதே அவர்­க­ளது இலக்­காக இருந்­தது. உரிய கட்­ட­ணங்­களைச் செலுத்­தியும் இறுதி நேரத்தில் முக­வர்­களின் ஊழல் கார­ண­மாக ஹஜ் கைவி­டப்­பட்ட சம்­ப­வங்­களும் வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ளன.

இவ்­வா­றான நிலை­யி­லேயே அர­சாங்­கத்தின் புதிய அறி­விப்பு வெளி­யா­கி­யி­ருக்­கி­றது, அறி­விப்பில் பல கவர்ச்­சி­யான இனிப்­பான தக­வல்கள் கூறப்­பட்­டுள்­ளன. கடந்த வருடம் ஆக குறைந்த ஹஜ் கட்­ட­ண­மாக 7 இலட்சம் ரூபாய் அற­வி­டப்­பட்­டது. ஒரு மில்­லியன் ரூபாவும் வி.ஐ.பி. பெகேஜ் எனக் கூறி அற­வி­டப்­பட்­டது.

இன்று ஹஜ் கட்­டணம் 5 இலட்சம் ரூபா என்று நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இது இனிப்­பான செய்­தியே. 4200 பேர் தங்­க­ளது ஹஜ் பய­ணத்தை உறு­தி­செய்­துள்ள நிலையில் இந்த அறி­விப்பு வெளி­யா­ன­தை­ய­டுத்து மேலும் பலர் பய­ணத்­துக்கு தயா­ரா­கி­றார்கள் என்­பதை அறிய முடி­கி­றது. இதனால் மேலும் 1500 கோட்­டா­வுக்கு கோரிக்கை விடுத்­துள்­ள­தாக ஹஜ் குழுவின் தலைவர் தெரி­வித்­துள்ளார்.

மக்­கா­விலும் மதீ­னா­விலும் 5 நட்­சத்­திர ஹோட்­டல்கள், இலங்கை உணவு, மினாவில் ‘B’ தர கூடாரம் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அரசு இவ்­வ­கை­யான கவர்ச்­சி­யான உறு­தி­களை வழங்­கு­வ­துடன் மாத்­தி­ர­மல்­லாது அவ்­வாறே ஹஜ் ஏற்­பா­டு­களை நிறை­வேற்றிக் காட்ட வேண்டும். ஹஜ் யத்­தி­ரி­கர்­களை புனித கட­மை­யின்­போது அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது.

குறிப்­பிட்ட கட்­ட­ணத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட சேவை­களை வழங்க முடி­யாத நிலை உரு­வானால் மேல­திக செல­வு­களை அர­சாங்­கமே பொறுப்­பேற்க வேண்டும்.

ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் ஹஜ் கனவுகளுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஆசைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண வேண்டும். அத்தோடு அரசாங்கம் மேற்கொள்ளும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் ஹஜ் யாத்திரிகர்கள் தாமதமின்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும்.-Vidivelli

1 Comment
  1. Mubarak says

    கடந்த வருடத்திலிருந்து முகவர்கள் ஒப்புக்கொள்ளாத
    நடப்பிலிருக்கும் சேவையை 5லட்சம் ரூபாய்க்கு செய்ய முடியும் என்று சிலரால் முன்வைக்கப்படும் கருத்து அப்பட்டமான ஏமாற்று வேலை என்பதை இந்த அரசாங்கத்திற்கு விளங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு ஹஜ் முகவர்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த விலை குறைப்பால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்துக்கு நற்பெயர் கிடைக்குமென்ற மாயையும் அவர்கள் அரசியல்வாதிகள் இடத்தில் ஏற்படுத்தி இருக்கின்றார்கள் இது உண்மைக்கு புறம்பான தகவல்களை பொறுப்பு கூறவேண்டியவர்களிடத்தில் திணித்து விட்டுள்ளனர்.

    இதனால் பாதிக்கப்படப்போவது அரசாங்கம் மாத்திரமல்ல மக்களும்தான் என்பதை சமூக ஆர்வலர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

    பொதுவாக ஒரு வியாபாரத்தில் தம்மை நிலைநிறுத்த வேண்டும் என்றால் பிறரை வீழ்த்த வேண்டும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட சிலரால் பொய்களும் வதந்திகளும் அவிழ்த்து விடப்பட்டன அதுவே சகல குழுமங்களிலும் இன்று முன்னெடுக்கப்படுகின்றன.

    இருப்பினும், மக்கள் தங்களது வசதிக்கு ஏற்றாற்போல் முகவர்களை தெரிவுசெய்யும் ஏற்பாடு இந்த ஜனநாயக நாட்டில் அமைந்திருக்கின்றது என்பதை பலரும் மறந்து விட்டார்கள் போலும்.

    ஏதோ ஒரு முகவர் கொள்ளை லாபம் எடுக்கின்றார் என்று உண்மை கதையையோ அல்லது வதந்தியையோ பரப்புவதன் மூலம் இந்த முகவர் தொழிலை ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்யும் கைங்கரியத்தை செயற்படுத்துதில் பலரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.