பகிடிவதையால் பாதிக்கப்படுவது மாண­வர்கள் மட்டுமல்ல: சமூகமுமே!

0 1,016

பொது­வாக கல்வி நிலை­யங்­களில் சிரேஷ்ட மாண­வர்­களால் புது­முக மாண­வர்­க­ளுக்கு உடல் ரீதி­யாக அல்­லது உள ரீதி­யாக அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் நடந்து கொள்­வதே பகி­டி­வ­தை­யாகும்.

மேற்­கத்­தேய நாடு­களில் ஆரம்­ப­மான பகி­டி­வ­தையே இந்­தி­யாவின் ஊடாக  இலங்­கைக்கு வந்­தது. இது பிரித்­தா­னிய அரசு இரா­ணு­வத்­துடன் இணைந்து கொள்ளும் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட Royal Admission Gang என்ற வாச­கத்தின் முதல் எழுத்­துக்­க­ளான “RAG ” (ராக்) தான் காலப்­போக்கில் பகி­டி­வ­தை­யாக மாறி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் பகி­டி­வ­தைக்கு எதி­ராக சட்­டங்கள் இருந்த போதும் அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் மிக மோச­மான முறையில் உடல், உள,பாலியல் ரீதி­யா­கவும் இவை தொடர்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. அரச சார்­பற்ற அமைப்­பான கியுறின் நிறு­வு­னர்­களில் ஒரு­வ­ரான ‘அருசு அகர்வாள் ‘ பகி­டி­வ­தையால் மிக மோச­மான தாக்­கத்­திற்கு உள்­ளா­கிய நாடாக இலங்­கையை குறிப்­பி­டு­கின்றார்.

கல்வி நிறு­வ­னங்­களில் இடம் பெறும் பகி­டி­வ­தை­களை ஒழிப்­ப­தெற்­கென்றே இலங்­கையில் 1998ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, கல்வி நிறு­வ­னங்­களில் பகி­டி­வ­தை­யையும் வேறு வகை­யான வன்­செ­யல்­க­ளையும் தடை செய்தல் சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 946 ஆம் இலக்க சுற்­ற­றிக்­கையின் சரத்­தின்­படி பகி­டி­வ­தையில் ஈடு­படும் மாண­வர்­க­ளுக்­கான தண்­ட­னைகள் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

பகி­டி­வ­தையில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களின் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைக் கூட ரத்துச் செய்ய முடியும். இவ்­வாறு அனு­மதி ரத்துச் செய்­யப்­ப­டுவோர் அவர்­களின் வாழ் நாளில் எந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் படிப்பைத் தொடர முடி­யாது.

1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, கல்வி நிறு­வ­னங்­களில் பகி­டி­வ­தை­யையும் வேறு வகை­யான வன் செயல்­க­ளையும் தடை செய்தல் சட்­டத்­தின்­படி பகி­டி­வ­தையில் ஈடு­ப­டு­வோ­ருக்கு 10 ஆண்­டுகள் வரையில் சிறைத் தண்­டனை விதிக்க முடியும். மேலும் பகி­டி­வ­தை­யினால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு இழப்­பீடு பெற்றுக் கொடுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களும் இந்தச் சட்­டத்தில் உள்­ளன.

இலஞ்சம் இன்றி, ஊழல் இன்றி க.பொ.த.உயர்­தர பரீட்­சையின் பெறு­பே­றுக்கு ஏற்ப வெட்­டுப்­புள்­ளியின் அடிப்­ப­டையில் மாண­வர்­களை உள்­ளீர்க்கும் ஓர் அரச உயர் கல்வி நிறு­வனம் தான் இலங்கை பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளாகும்.
பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உள்­வாங்­கப்­படும் மாண­வர்கள் ஏழை,-­ப­ணக்­காரன், படித்­த­வன்,-­ பா­மரன், நகர்­பு­றம்-­,கி­ராமப் புறம், செல்­வாக்­குள்­ள­வன்-­,செல்­வாக்­கற்­றவன் என்ற எந்த பாகு­பாடும் இன்­றியே அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்கள்.

எனவே சகல மாண­வர்­களும் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் சமத்­து­வத்­து­டனும் பழக வேண்டும், எவரும் தனித்து ஒதுங்கி இருக்கக் கூடாது என்­ப­தற்­கா­கவும், மாண­வர்கள் நாட்டின் எண் திசை­யி­லி­ருந்தும் பல்­வே­று­பட்ட மத, சமூக, கலா­சார வாழ்­வியல் நிலை­க­ளி­லி­ருந்தும் வரு­வ­தனால் இவர்கள் தம்மை ஒரு­வ­ருக்­கொ­ருவர் அறி­முகம் செய்து கொள்ள ஒரு நிகழ்­வா­கவும், ஆரம்ப காலங்­களில் பகி­டி­வதை அமைந்­தி­ருந்­தது.

பல வண்ணக் கன­வு­க­ளு­டனும் கற்­ப­னை­க­ளு­டனும் எதிர்­பார்ப்­போடும் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு காலடி எடுத்து வைக்கும் மாண­வர்­களின் இன்­றைய நிலையோ மிகவும் பரி­தா­ப­மா­கவும் பயங்­க­ர­மா­க­வு­மே­யுள்­ளன. மாண­வர்கள் தமதும், தமது பெற்­றோ­ரி­னதும் இலட்­சியக் கன­வு­களை எப்­ப­டி­யா­வது நிறை­வேற்­றவும் பல்­க­லையும் கற்று பட்டம் ஒன்றை பெற வேண்டும் எனும் ஆவ­லிலும் தான் பெரும்­பா­லா­ன­வர்கள் உள் நுழை­கி­றார்கள். இதிலும் பெரும்­பா­லா­ன­வர்கள் ஏழை­க­ளா­கவும் கிராமப் புறத்தைச் சேர்ந்­த­வர்­க­ளா­க­வுமே இருப்­பார்கள். எந்தப் பெற்­றோரும் தம் பிள்­ளை­களை பட்­ட­தா­ரி­க­ளா­கவும் நற் பிர­ஜை­க­ளா­கவும் உரு­வாக்க ஆசைப்­ப­டு­வது நியா­யமே.

பெற்றோர் தம் பிள்­ளை­களை 5 வயதில் பாட­சா­லையில் சேர்த்­தது முதல் க.பொ.த. உயர் தரம் படிக்கும் வரை உட­லாலும் பொரு­ளாலும் எவ்­வ­ளவோ தியாகம் செய்­கி­றார்கள். அதிலும் இன்று நாடு இருக்கும் நிலை­மையில் முஸ்லிம் பெற்றோர் தம் பிள்­ளை­களை பாட­சா­லைக்கோ அல்­லது தனியார் வகுப்­பிற்கோ அனுப்­பி­விட்டு பிள்­ளைகள் வீடு வந்து சேரும் வரை வழிமேல் விழி வைத்துக் காத்­தி­ருப்­பார்கள். உள­வியல் ரீதி­யாக மன உளைச்­ச­லுக்கும் ஆளா­கு­கி­றார்கள்.

இதில் கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வெனில், முன்­மா­தி­ரி­யாக இருக்க வேண்­டிய எமது இஸ்­லா­மிய மாண­வர்­களும் அல்­லவா பகி­டி­வ­தையில் முன்­ன­ணியில் இருக்­கி­றார்கள். இவர்கள் தாமும் பகி­டி­வ­தையை பெற்றோம் பட்டோம் என்­ப­தற்­காக தமது புது­முக மாண­வர்­க­ளையும் பழி வாங்­கு­வது முற்­றிலும் பிழை­யாகும்.

கோ­த­ரத்­து­வமும் மனி­தா­பி­மா­னமும் மிக்க எவரும் அடுத்­த­வனின் கல்­விக்கு தடை­யாக இருப்­ப­தில்லை. முஸ்­லிம்­களில் பல்­க­லை­க­ழ­கத்­துக்கு தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கையோ மிக சொற்பம். அதிலும் பகி­டி­வ­தைக்குப் பயந்து உயர் கல்­வியை இடை நடுவில் விட்டுப் போகி­ற­வர்­களின் எண்­ணிக்­கையோ அதிகம். 

முஸ்லிம் ஒரு­வ­ருக்கு மற்­றொ­ரு­வரின் இரத்தம், பொருள், தன்­மானம் ஆகிய மூன்று விட­யங்­களும் ஹரா­மாகும். முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமது வாழ்­வியல் ஒழுக்­கங்­களால் அடுத்த சமூ­கங்­களுக்கு முன்­மா­தி­ரி­யாக திகழ வேண்டும் என்­பது இஸ்­லாத்தின் எதிர் பார்ப்­பாகும். தனி நபர், குடும்பம், சமூக மற்றும் தேசிய வாழ்வில் கல்வி, கலை, கலா­சாரம், அர­சியல், பொரு­ளா­தாரம் என சகல துறை­க­ளிலும் முன்­மா­தி­ரி­யாகத் திகழ வேண்டும் என்­பது முஸ்­லிம்­களின் கட­மை­யாகும்.

மேலைத்­தேய பல்­க­லைக்­க­ழக கலா­சா­ரங்­களை ஒரு முஸ்­லிமால் பின்­பற்ற முடி­யாது. விஷே­ட­மாக முஸ்­லிம்கள் உயர் கல்­வியில் பின்­ன­டை­வ­தற்­கான கார­ணங்­களில் இந்த பகி­டி­வ­தையும் ஒன்­றாகும். ஒரு மாண­வ­ருக்குக் கொடுக்கும் பகி­டி­வ­தையைத் தாங்க முடி­யாமல் அவர் கல்­வியை இடை நடுவில் விட்டுப் போவா­ரா­யி­ருந்தால், அதனால் ஒரு சமூ­கமே பின்­ன­டை­கின்­றது என்­பதை பகி­டி­வதை கொடுக்கும் சிரேஷ்ட மாண­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் பெரும்­பா­லான முஸ்லிம் பெற்­றோர்கள் தம் பெண் மக்­களை பல்­க­லைக்­கழம் செல்ல அனு­ம­திப்­ப­தில்லை என்­பதை மாண­வி­யரும் தமது பள்ளிப் பரு­வத்­தி­லேயே தெரிந்­தி­ருப்­ப­தனால் அவர்­களும் படிப்பில் ஏனோ தானோ என்­றுதான் இருப்­பார்கள். இதனால் அவர்கள், அர்­க­ளது சந்­த­தி­யி­ன­ருக்கு முன்­மா­தி­ரி­யான தாயாக, வழி­காட்­டி­யாக இருக்க வேண்­டிய சந்­தர்ப்­பங்­களை இழக்க வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­றார்கள். இதனால் எமது எதிர்­கால சமூகம் கல்­வியில் பின் தங்­கி­ய­வர்­க­ளா­கவே இருப்­பார்கள். தமது குடும்­பத்தில் ஒரு சிறு பிரச்­சினை வந்தால் கூட தனித்து நின்று முகம் கொடுக்­கவோ முடி­வெ­டுக்­கவோ முடி­யா­த­வர்­க­ளா­கி­றார்கள். ஒரு பெண் கற்­பது ஒரு சமூகம் கற்­ப­தற்கு சம­னாகும்.

இலங்­கையில் வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் க.பொ.த.உயர் தரம் பரீட்சை எழு­து­கி­றார்கள். அதில் ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் பல்­க­லைக்­க­ழகம் செல்­லக்­கூ­டிய அடிப்­படை தகு­தியைப் பெற்­றாலும் சுமார் 25% ஆன மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே அரசு அனு­மதி கிடைக்­கி­றது. ஏனைய 75% உம் அரசின் வளப் பற்­றாக்­குறை கார­ண­மா­கவே நிரா­க­ரிக்கப் படு­கி­றார்கள்.

இதிலும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அனு­மதி பெறும் மாண­வர்­களில் 20% ஆன­வர்கள் தமது படிப்பை இடை­ந­டுவில் கை விடு­வ­தா­கவும் , அவர்­களில் 10%-12%ஆன­வர்கள் பகி­டி­வ­தையை சகிக்க முடி­யாமல் வீடு­க­ளுக்குத் திரும்­பி­யுள்­ளனர் எனவும் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வருடம் நிகழ்­வொன்றில் ஆற்­றிய உரையில் கூறி­யி­ருந்தார்.

வசதி வாய்ப்­புள்ள பெற்றோர் தம் பிள்­ளை­களை வெளி நாடு­க­ளுக்கு அனுப்­பியோ அல்­லது அதே பட்­டத்தை தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலோ இலட்­சங்­களைக் கொட்டி, பெற்று தம் பிள்­ளை­களின் பெய­ருடன் சேர்த்துக் கொள்­வார்கள். வச­தி­யற்­ற­வர்கள் என்ன செய்­வார்கள்?

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பகி­டி­வ­தையை இல்­லா­தொ­ழிக்கும் நோக்­குடன் உயர் கல்வியமைச்சு கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவுள்ளது. இதனூடாக பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை எடுக்காத நிர்வாகிகளை உயர் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக வாழ்க்கை என்பது வெறும் கேளிக்கைகளுக்காகவும் வீண் விளையாட்டுக்களுக்காகவும் பருவகால கோளாறுகளுக்காகவும் அமைக்கப்பட்ட வளாகம் அல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே குறிப்பாக எமது முஸ்லிம் இளைஞர், யுவதிகள் தாம் பொது மக்களின் வரிப்பணத்தின் மூலமே உயர் கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து படித்து பட்டம் பெற்று அப்பாவி பெற்றோரின் நாமத்தைப் பாதுகாத்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் நற் பிரஜைகளாக மாறவேண்டும்.-Vidivelli

  • தர்ஹா நகர்
    றம்ஸியா அப்ஹாம்- கொலன்னாவை

Leave A Reply

Your email address will not be published.