பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி: இனவாத காய்நகர்த்தல்களை முன்னெடுப்பதற்கு முயற்சி

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் விசாரணை வேண்டும் என்கிறார் ஹக்கீம்

0 641

ஈஸ்டர் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட பயங்­க­ர­வா­தி­களை என்­னுடன் தொடர்­பு­ப­டுத்தி தேர்­தலில் இன­வாத அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுக்க சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர். என்­மீது சுமத்­தப்­ப­டு­கின்ற இந்த குற்­றச்­சாட்­டுக்கள் சம்­பந்­த­மாக மிக விரைவில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்குத் தேவை­யான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறும் விசா­ர­ணை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்பை கொடுப்­ப­தற்கும், வாக்­கு­மூ­லங்­களை வழங்­கவும் தயா­ராக உள்ளேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் சபையில் தெரி­வித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் பெயர்­தாங்­கி­களால் நிகழ்த்­தப்­பட்­டி­ருந்­தாலும் அவர்­களை உண்­மை­யான இஸ்­லா­மிய மார்க்­கத்தை பின்­பற்­று­ப­வர்­க­ளாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது வர­லாற்றில் அழிக்க முடி­யாத கரும்­புள்ளி என்­பதில் சந்­தே­கமே இல்லை எனவும் அவர் சுட்­டிக்­ காட்­டினார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை சிறப்­பு­ரிமை மீறல் பிரச்­சி­னையை முன்­வைத்து உரை­யாற்­று­கையில் அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த ஜன­வரி 8ஆம் திகதி லங்­கா­தீப, டெய்­லி­மிரர், வீர­கே­சரி ஆகிய பத்­தி­ரி­கை­களில் முக்­கிய செய்­தி­யாக என்னை கைது செய்­யு­மாறு மேஜர் அஜித் பிர­சன்ன என்­பவர் கொழும்பு பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பா­டொன்று செய்­தி­ருந்­தாக செய்தி வெளி­யாகி இருந்­தது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரி­யான சஹ்ரான் ஹாசிமின் சகோ­த­ர­னான ரிழ்வான் எனும் பயங்­க­ர­வா­தியை 2017இல் நலம் விசா­ரிப்­ப­தற்­காக கொழும்பு வைத்­தி­ய­சா­லை­யொன்­றுக்கு சென்­றி­ருந்­த­தா­கவும், அது­பற்றி 2019 ஒக்­டோபர் 2ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திக­தி­களில் தனியார் தொலைக்­காட்சி ஊடகச் செய்­தி­களில் காண்­பிக்­கப்­பட்­ட­தா­கவும், அது தொடர்பில் என்னை கைது செய்து விசா­ரணை செய்­யு­மாறும் அவர் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக அந்த செய்­தி­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தன.

இது முற்­றிலும் உண்­மைக்குப் புறம்­பா­னதும், வேண்­டு­மென்றே திரி­பு­ப­டுத்தி எனக்குக் களங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சோடிக்­கப்­பட்ட ஒரு செய்­தி­யாகும். இந்த செயற்­பா­டுகள் எதிர்­வரும் தேர்­தலை குறி­வைத்து எதிர்த்­த­ரப்பு அர­சி­யல்­வா­தி­களால் புனை­யப்­பட்ட தீய நோக்­கங்­க­ளு­ட­னா­ன­வை­யாகும்.

ஸஹ்ரான் ஹாசிம், ரிழ்வான் உட்­பட மற்றும் தற்­கொலை பயங்­க­ர­வா­திகள் சம்­பந்­த­மாக உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் இது­வரை குற்ற விசா­ரணைப் பிரிவும், குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளமும் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவும் பல்­வேறு கோணங்­களில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளன .

அதற்கு மேல­தி­க­மாக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்றும் இது சம்­பந்­த­மாக கவனம் செலுத்­தி­யுள்­ளன. இது­வரை வெளி­யான தக­வல்­களின் அடிப்­ப­டையில் என் மீதோ, எனது கட்­சியை சார்ந்­த­வர்கள் மீதோ எவ்­வி­த­மான குற்­றச்­சாட்­டுக்­களும் சுமத்­தப்­ப­ட­வில்­லை­யென நான் நம்­பு­கின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பந்­த­மாக கடந்த நவம்பர் மாதத்தில் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது, வெவ்­வேறு நபர்­களை பாவித்து என்­மீதும் என் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீதும் சந்­தேகம் ஏற்­படும் விதத்தில் இவ்­வா­றான ஒரு கபட நாடகம் அரங்­கேற்­றப்­பட்­டது.

அப்­போது நான் போதிய ஆதா­ரங்­க­ளுடன், தனிப்­பட்ட ரீதியில் என் மீது சேறு­பூசும் நட­வ­டிக்­கையே இது­வாகும் என்­பதை இந்தப் பாரா­ளு­மன்ற சபா பீடத்­திலும் , பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற ஓர் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிலும் உரிய சாட்­சி­க­ளுடன் நிரூ­பித்­தி­ருக்­கின்றேன் . இப்­போது அதே நாடகம் மீண்டும் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றது .

தமது இய­லா­மையை மறைத்துக் கொள்­வ­தற்­காக பழைய சேற்­றையே மீண்டும் வாரி­யி­றைத்து எதிர்­வரும் பொதுத் தேர்­தலை வெற்றி கொள்­வ­தற்­காக மக்­களின் காதில் பூச்­சுற்­று­கின்ற வேலையே இது என்­பதை என்னால் புரிந்து கொள்ள முடி­கின்­றது. 2015 ஆகஸ்ட் 20, 21 ஆகிய திக­தி­களில் கைகுண்­டுகள், கத்தி, வாள் என்­ப­வற்றைக் கொண்டு வன்­மு­றையில் ஈடு­பட்­டனர். காத்­தான்­குடி பிர­தே­சத்தில் உரு­வா­கி­யி­ருந்த இந்த தேர்தல் வன்­மு­றை­களை பார்­வை­யி­டு­வ­தற்­கா­கவும் பாதிக்­கப்­பட்ட மற்றும் தாக்­கு­த­லுக்கு ஆளா­ன­வர்­களை சந்­திப்­ப­தற்­கா­கவும் நான் 2015 ஆகஸ்ட் 22ஆம் திகதி அந்தப் பிர­தே­சத்­துக்கு சென்­றி­ருந்தேன். தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யி­ருந்த ஒரு பள்­ளி­வா­சலை பார்­வை­யி­டு­வ­தற்­காக சென்­றி­ருந்த போதும், அங்கு நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் ஒன்றில் ஹிஸ்­புல்­லா­வுக்கு தேசிய பட்­டியல் வழங்­கி­யது நியா­ய­மற்­ற­தென அங்கு கூடி­யி­ருந்தோர் தங்கள் ஆட்­சே­ப­னையை தெரி­வித்­தனர். அங்­கி­ருந்­தோ­ருக்கு மத்­தியில் பயங்­க­ர­வாதி ஸஹ்­ரானும் இருந்­துள்ளான் என்­பதை பின்னர் வெளி­வந்த செய்­தி­களின் மூல­மா­கத்தான் நானும் அறி­கின்றேன்.

மேற்­படி 2015 ஆகஸ்ட் 22 தேர்தல் வன்­மு­றை­களில் காய­ம­டைந்து சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களை சந்­தித்­த­போது பயங்­க­ர­வாதி ரிழ்­வானும் அங்கு இருந்­தி­ருக்­கின்றான். இவை எதுவும் மறை­மு­க­மா­கவோ, இர­க­சி­ய­மா­கவோ நடை­பெற்­ற­வை­யல்ல. செய்­தி­களில் ஒலி­ப­ரப்­பா­கி­யி­ருந்­தன என்­பதை நான் உறு­தி­படத் தெரி­விக்­கிறேன்.

துர­தி­ரஷ்­ட­வ­ச­மாக அவர்­களில் எவரும் பயங்­க­ர­வா­தி­க­ளென நம்மில் எவரும் அறிந்­தி­ருக்­க­வில்லை. அது சம்­பந்­த­மாக என்­னு­டைய மனச்­சாட்­சிக்கு மாற்­ற­மில்­லாமல் இதய சுத்­தி­யுடன் உறு­தி­படத் தெரி­விக்­கின்றேன். 2015 ஆகஸ்ட் 22 அன்று காத்­தான்­குடி பிர­தே­சத்­துக்கு நான் சென்­றி­ருந்­த­போது, பயங்­க­ர­வா­தி­யாக அப்­போது அடை­யாளம் காணப்­ப­டாது இருந்து தற்­செ­ய­லாக நான் சந்­திக்க நேர்ந்­த­வர்கள் பற்­றிய இச்­செய்­தியை ஒருவர் மாறி ஒருவர் வெவ்­வேறு தினங்­களில் வெவ்­வேறு வியாக்­கி­யா­னங்­க­ளுடன் விப­ரிப்­பதை ஊட­கங்கள் காட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றன. செய்­யாத, செய்­யவே நினைக்­காத செயல் ஒன்­றுக்­காக என்­மீது இவ்­வாறு அர்த்­த­மற்ற விதத்தில் குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது என்­பதை தெரி­வித்து கொள்­கின்றேன்.

உயிர்த் ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் பெயர்­தாங்­கி­களால் நிகழ்த்­தப்­பட்­டி­ருந்­தாலும் அவர்­களை உண்­மை­யான இஸ்­லா­மிய மார்க்­கத்தை பின்­பற்­று­ப­வர்­க­ளாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது வர­லாற்றில் அழிக்க முடி­யாத கரும்­புள்ளி என்­பதில் சந்­தே­கமே இல்லை. இருந்­தாலும் இந்த அழியா துரோ­கத்தில் கடும் சாயத்தை என் மீது தெளிப்­பதன் மூலம் நான் மிகவும் சிர­மத்­துடன் ஈட்­டி­யுள்ள நற்­பெ­யரை நாசப்­ப­டுத்­து­வ­தற்கு சிலர் செயல்­ப­டு­வது மிகவும் மன வேத­னையை தரு­கின்­றது .

சபா­நா­ய­க­ரி­டமும் மற்றும் மேன்­மை­தங்­கிய சபையில் உள்­ள­வர்­க­ளி­டமும் நான் என்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள இந்த குற்­றச்­சாட்­டுக்கள் சம்­பந்­த­மாக மிக விரைவில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்குத் தேவை­யான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன். அது சம்­பந்­த­மான விசா­ர­ணை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்பை கொடுப்­ப­தற்கும் தேவைப்­படும் எச்­சந்­தர்ப்­பத்­திலும் என்­னு­டைய வாக்­கு­மூ­லங்­களை வழங்­கவும் அந்த விசா­ரணை சம்­பந்­த­மான எல்லா விட­யங்­க­ளிலும் ஒத்­து­ழைக்­கவும் தயார் நிலையில் இருப்­ப­தாக பொறுப்­புடன் தெரி­வித்து கொள்­கின்றேன். நான் என் வாழ்­நாளில் ஒரு­போதும் தேவை­யற்ற அபாண்­டங்­களை சுமத்­து­வ­தையோ சேறு­வாரி இறைப்­ப­தையோ செய்­யாத ஒருவன் என்­ப­துடன் எத்­த­வி­த­மான பயங்­க­ர­வாத செயல்­க­ளுக்கும் துணை­போ­கா­தவன் என்­ப­தையும் இந்த மேன்­மை­தாங்­கிய சபையில் தெரி­வித்து கொள்­கின்றேன் .

அதேபோல் இந்த சந்­தர்ப்­பத்தில் புத்­த­பெ­ருமான் அவர்கள் “அன்­குத்­தர நிகாயே காலான “சூத்­தி­ரத்தில் தெரி­வித்­துள்ள போத­னையை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். “அதனை தெரிந்து கொண்ட மாத்­தி­ரத்தில் விசு­வாசம் கொள்­ளா­தீர்கள். பரம்­பரை பரம்­ப­ரை­யாக பின்­பற்­றப்­படும் சம்­பி­ர­தாயம் என்­ப­தனால் அத­னையே செய்யாதீர்கள். அநேகமானவர்கள் சொல்கிறார்கள் என்பதனாலோ தகவலாக தெரிந்திருக்கிறது என்பதனாலோ எதுவொன்றையும் நம்பாதீர்கள். உங்கள் போதகர்களினதோ அல்லது மூத்தவர்களினதோ கூற்று என்பதற்காக மட்டும் எதனையும் விசுவாசம் கொள்ளாதீர்கள். இருப்பினும் தீர்க்கமான பூரணமான பகுத்தாய்வுக்கும், மீள்பரிசீலனைக்கும் உட்படுத்தப்பட்ட பிறகு சகல விதமான தர்க்க நியாயங்களும் பொருந்தி வருவதாக தெளிவாக தெரிகின்ற சந்தர்ப்பத்தில் அது அனைவரினதும் பொதுநலத்திற்கு துணை புரிவதாக தெரிந்தால் மாத்திரம் அதனை ஏற்றுக் கொண்டு அதன்படி செயற்படுங்கள்” ஒருவரின் நற்பெயரை அற்ப அரசியல் இலாபத்திற்காக சிதைப்பதற்கு முன்பு இந்தக் “காலான சூத்திரத்தை வாசித்து தெளிவு பெறுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். இந்த உலகத்தில் தெளிவாகத் தெரிவதும் தெரியாததுமான உண்மைகள் புதைந்துள்ளதாக புத்தபிரான் தெரிவித்துள்ளார். உங்கள் கண்களுக்கு புலப்படுகின்ற, நீங்கள் கண்கானிக்கின்ற விடயம் உண்மையானதாக இல்லாதிருந்திருக்கலாம் என்றார்.-Vidivelli

  • ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

Leave A Reply

Your email address will not be published.