எம்.பி.பதவி, கட்சி உறுப்புரிமை பறிப்பு

ஏ.எச்.எம்.பௌஸி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்: மார்ச் 23 இல் விசாரணை

0 834

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எச்.எம்.பெளசி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும், கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் மனுத்­தாக்கல் செய்­துள்ளார்.

தன்னை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கி­யமை மற்றும் தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­ய­மையை வலி­தற்­ற­தாக உத்­த­ர­வி­டும்படி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பெளசி உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­துள்ள மனு­வினை எதிர்­வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி விசா­ர­ணைக்­குழு எடுத்­துக்­கொள்ள உயர்­நீ­தி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பெள­சி­யினால் தாக்கல் செய்­யப்­பட்ட மனு நேற்று முன்­தினம் உயர்­நீ­தி­மன்றின் நீதி­ய­ர­சர்கள் எஸ்.துரை­ராஜா, விஜித் மலல்­கொட மற்றும் காமினி அம­ர­சே­கர ஆகியோர் முன்­னி­லையில் ஆரா­யப்­பட்­ட­துடன் மனு­வினை விசா­ரிக்க தீர்­மா­னிக்­கப்­பட்டு இவ்­வாறு திகதி நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

மனு தொடர்­பாக ஏதும் எதிர்ப்­புகள் இருந்தால் அவற்றை நான்கு வாரங்­க­ளுக்குள் சமர்ப்­பிக்கும்படி மனுவின் பிர­தி­வா­தி­க­ளுக்கு நீதி­ய­ர­சர்கள் குழாம் உத்­த­ர­விட்­டது.

குறிப்­பிட்ட மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, செய­லாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர, அக்­கட்­சியின் ஒழுக்­காற்­றுக்­குழு, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர, தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய, பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் தம்­மிக தச­நா­யக்க உட்­பட 14 பேர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

மனு­தா­ர­ரான ஏ.எச்.எம்.பெளசி ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ராவார். அவர் பல்­வேறு அமைச்சுப் பத­வி­களை வகித்­தவர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்­னணி செயற்­பாட்­டா­ள­ராக விளங்­கி­யவர். இந்­நி­லையில் அவர் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்­துள்­ள­தாக ஊட­கங்கள் மூலம் அறிந்து கொண்­ட­தாகத் தெரி­வித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர மனு­தா­ர­ருக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

இது தொடர்பில் கட்­சிக்கு விளக்­க­ம­ளிக்­கு­மாறு கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.
இந்தக் கடி­தத்­துக்கு மனு­தா­ர­ரான பெளசி பதிலும் அனுப்பி வைத்­துள்ளார். பின்பு இது தொடர்பில் கட்­சியின் ஒழுக்­காற்று குழு ஆராய்ந்து பெள­சியை கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கி­யுள்­ள­தாக அவ­ருக்கு அறியக் கிடைத்­துள்­ளது. என்­றாலும் அவ­ருக்கு உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

மேலும், அவரை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கி­யுள்­ளதால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் நீக்கும்படி கட்­சியின் பொதுச் செய­லாளர், பாரா­ளு­மன்ற பொதுச்­செ­ய­லா­ள­ருக்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்ளார் என்­பது மனு­தா­ர­ருக்கு அறியக் கிடைத்­துள்­ளது.

அதனால் தன்னை கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கி­யமை, தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இல்­லாமற் செய்­துள்­ளமை ஆகிய தீர்­மா­னங்­களை வலி­தற்­ற­தாக உத்­த­ர­வி­டும்­படி ஏ.எச்.எம்.பெளசி தனது மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் ஏ.எச்.எம்.பெளசி விடி­வெள்­ளிக்குக் கருத்து தெரி­விக்­கையில் ‘நான் கடந்த 45 வருட கால­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அங்­கத்­த­வ­ராக இருக்­கிறேன். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பாது­காப்­ப­தற்­கா­கவே ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் தொடர்பு கொண்­டி­ருந்தேன். கட்சித் தலை­வரின் சுய­நலம் கரு­தியே என்னை கட்­சி­யி­லி­ருந்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் நீக்­கி­யுள்­ளார்கள்.

நான் கட்­சியின் உறுப்­பு­ரி­மைக்­கான சந்­தாப்­பணம் தொடர்ந்தும் இது­வரை செலுத்தி வரு­கிறேன். நான் கட்­சிக்கு எந்தத் துரோ­கமும் செய்­ய­வில்லை. கட்­சிக்குத் துரோகம் செய்­த­வர்கள் இன்று அமைச்சுப் பத­வி­க­ளைக்­கூட வகிக்­கி­றார்கள். எனது உரி­மை­க­ளுக்­காக நான் தொடர்ந்தும் போரா­டுவேன் என்றார்.

இதே­வேளை, கடந்த காலங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தீர்­மா­னங்­களை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சிக்கும் ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு எதிர்வரும் 1 ஆம் 8 ஆம் திகதிகளில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.