முதலிடம் பெற்ற மாணவி முஸாதிகாவுக்கு புதிய வீடு நிர்மாணிக்க அடிக்கல் நடப்பட்டது

இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூர்ய பங்கேற்பு

0 2,201

க.பொ.த உயர்­தரப் பரீட்­சையில் உயி­ரியல் விஞ்­ஞானப் பிரிவில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 01 ஆம் இடம்­பெற்று மருத்­து­வத்­து­றைக்கு தெரி­வான மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்­திமா முஸா­தி­கா­வுக்கு புதிய வீடொன்றை நிர்­மா­ணித்துக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

குடி­சையில் வாழ்ந்து வரும் குறித்த மாணவி மற்றும் அவ­ரது குடும்­பத்தின் நிலை­மையைக் கருத்­திற்­கொண்டு சமுர்த்தி சமூக பாது­காப்பு நிதி­யத்தின் உத­வி­யுடன் இவ்­வீடு நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதற்­க­மைய புதிய வீட்­டுக்­கான அடிக்கல் நடும் நிகழ்வு சமூக பாது­காப்பு இரா­ஜங்க அமைச்சர் தாரக்க பால­சூ­ரிய தலை­மையில் சனிக்­கி­ழமை மாலை மூதூரில் இடம்­பெற்­றது.

இந்­நி­கழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மூதூர் பிர­தேச செய­லாளர் எம்.முபாரக் உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.

இங்கு இரா­ஜாங்க அமைச்சர் தாரக்க பால­சூ­ரிய உரை­யாற்­றும்­போது, வறுமை கல்­விக்கு தடை­யல்ல என்­பதை சாதித்துக் காட்­டிய மாணவி முஸா­திகா பற்றி ஊட­கங்கள் மூலம் அறியக் கிடைத்து சந்­தோ­ச­ம­டைந்தேன். அத­ன­டிப்­ப­டை­யில்தான் இங்கு வந்தேன். உண்­மையில் இம்­மா­ணவி ஏனைய மாண­வர்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­டாக உள்ளார். இவ­ரது கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமைச்சின் மூல­மா­கவும், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மூலமாகவும் எங்களாலான பூரண ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகவுள்ளோம் என்றார்.-Vidivelli

  • எம்.என்.எம்.புஹாரி

Leave A Reply

Your email address will not be published.