பயங்கரவாதி சஹ்ரானின் பிரதான சகாக்கள் இருவரை டுபாயில் கைது செய்த சி.ஐ.டி. குழு

நாட்டுக்கு அழைத்து வந்து தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கும் பணிகள் ஆரம்பம்

0 965

4/21 உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடாத்­திய பிர­தான பயங்­க­ர­வா­தி­யான ஸஹ்ரான் ஹாஷிமின் பிர­தான இரு சகாக்­களை ஐக்­கிய அரபு அமீ­ரகம் சென்று கைது­செய்­துள்ள சி.ஐ.டி. சிறப்புக் குழு, அவர்­களை இலங்­கைக்கு அழைத்­து­வந்து சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. குறித்த தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்­டி­லி­ருந்து தப்­பி­யோ­டி­ய­தாகக் கூறப்­படும் இரு­வரே இவ்­வாறு அழைத்து வரப்பட்­டுள்­ள­தா­கவும், அவர்­களை 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின்கீழ் சி.ஐ.டி. தலை­மை­ய­க­மான நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசா­ரிப்­ப­தற்­கான அனு­ம­தியை நேற்று பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் சி.ஐ.டி.யின் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இற்­றைக்கு நான்கு நாட்­க­ளுக்கு முன்னர், சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்­தி­யட்­சகர் காவிந்த பிய­சேன தலை­மையில் பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார மற்றும் சார்ஜன் நந்­தலால் உள்­ளிட்ட குழு­வினர் இவர்­களைக் கைது­செய்ய ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­துக்கு சென்­றுள்­ளனர். இந்­நி­லை­யி­லேயே அந்­நாட்டு பாது­காப்புப் பிரிவின் ஒத்­து­ழைப்­புடன் குறித்த இரு­வ­ரையும் கைது செய்­துள்ள அவர்கள், சந்­தேக நபர்­களை டுபா­யி­லி­ருந்து நாட்­டுக்கு அழைத்­து­வந்­தனர்.

நாவ­ல­பிட்டி, – ஹப்­பு­கஸ்­த­லாவை பகு­தியைச் சேர்ந்த 30 வய­தான மொஹமட் சலீம் அப்துல் சலாம், அம்­பாந்­தோட்டை பகு­தியைச் சேர்ந்த 37 வய­தான மொஹமட் ஸஹான் மொஹமட் றியாஸ் அகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு டுபா­யி­லி­ருந்து அழைத்­து­ வ­ரப்­பட்டு தடுப்புக் காவலில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக நான்காம் மாடியின் குறித்த உய­ர­தி­காரி கூறினார்.

நேற்­றைய தினம் அவ்­வி­ரு­வரும் சட்­ட­வைத்­திய அதி­காரி ஒருவர் முன்­னி­லை­யிலும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு அறிக்­கையும் பெறப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்த பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் 6 பேர் நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­டுள்ள நிலையில் இவர்கள் இரு­வ­ருடன் சேர்த்து அந்த எண்­ணிக்கை தற்­போது எட்­டாக உயர்ந்­துள்­ளது. இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக சுமார் 65 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் உயிர்த்­த­ஞா­யிறு விவ­கா­ரத்தில் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­டமை, உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வு­களின் கீழ் தடுத்­து­வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

ஏற்­க­னவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து, கடந்த ஜூன் 14 ஆம் திகதி 5 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களை சவூதி அரே­பி­யாவின் ஜித்தா நக­ரி­லி­ருந்து சி.ஐ.டி. நாட்­டுக்கு அழைத்­து­வந்­தது.

30 வய­தான புதிய காத்­தான்­குடி – 2 எனும் முக­வ­ரியைச் சேர்ந்த தேசிய தெளஹீத் ஜமா­அத்தின் ஆயு­தப்­பி­ரிவுத் தலை­வ­னாகக் கரு­தப்­படும் ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் அல்­லது மொஹமட் மில்ஹான், 34 வய­தான மரு­த­முனை – 3 ஐச் சேர்ந்த மொஹமட் மர்சூக் மொஹமட் ரிழா, வெல்­லம்­பிட்­டியைச் சேர்ந்த 47 வய­தான மொஹமட் முஹிதீன் மொஹமட் சன்வார் சப்றி, 29 வய­தான காத்­தான்­குடி – 1 ஐச் சேர்ந்த மொஹமட் இஸ்­மாயில் மொஹமட் இல்ஹாம், அனு­ரா­த­புரம் கெப்­பித்­தி­கொல்­லா­வையைச் சேர்ந்த 37 வய­தான அபு­சாலி அபூ­பக்கர் ஆகிய ஐந்து பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களே சவூ­தி­யி­லி­ருந்து இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு நட­டுக்கு அழைத்து வரப்­பட்­ட­வர்­க­ளாவர்.

அதன் பின்னர் கடந்த ஜுலை 16 ஆம் திகதி நாடு கடத்­தப்­பட்ட மாவ­னெல்­லையைச் சேர்ந்த சமத் எம் றியாஸ் எனும் சந்­தேக நபர் சி.ஐ.டி.யால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களைப் பேணிய இலங்­கை­யர்­களின் வலை­ய­மைப்பின் பிர­தான நப­ராகக் கரு­தப்­படும் ஒரு­வரை, 4/21 உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கட்டார் பொலிஸார் கைது­செய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசா­ரித்து வரு­கின்­றனர். மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் எனும் குறித்த சந்­தேக நபரே இவ்­வாறு கட்டார் பொலிஸ் நிலை­ய­மொன்றால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தற்­போது சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்­கிய உறுப்­பினர் பஸ்ஹுல் ஸஹ்­ரானும் குறித்த சந்­தேக நபரும் கட்­டா­ரி­லி­ருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி பேணி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்ள நிலையில், கட்­டாரில் தடுப்­பி­லுள்ள சந்­தேக நபரை இலங்­கைக்கு அழைத்­து­வந்து விசா­ரிக்கும் பணி­களை முன்­னெ­டுக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே கட்­டாரில் தற்­போதும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மொஹமட் அன்வர் மொஹமட் இன்­சா­புடன் தங்­கி­யி­ருந்­த­தாகக் கூறப்­படும் மாவ­னெல்­லையைச் சேர்ந்த சமத் மொஹமட் றியாஸ் என்­பவர் கட்டார் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு இரண்­டரை மாதம் தடுப்­புக்­காவல் விசா­ர­ணை­களின் பின்னர் இலங்­கைக்கு நாடு­க­டத்­தப்­பட்ட பின்னர் கடந்த ஜுலை 16 ஆம் திகதி விமான நிலை­யத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் கைது செய்து தற்­போது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின்கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரித்து வரு­கின்­றனர்.

முன்­ன­தாக கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்கள் பதி­வா­கின. கரை­யோர பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கட்­டு­வாப்­பிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­யன தாக்­கு­த­லுக்­கி­லக்­கான கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளாகும்.

இத­னை­விட கொழும்பு காலி­முகத் திட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய மூன்று, ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

இந்­நி­லையில் அன்று பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்­சி­சா­லைக்கு முன்­பா­க­வுள்ள ‘நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதா­ரண தங்­கு­வி­டுதி கொண்ட ஹோட்­டலில் குண்­டு­வெ­டிப்பு சம்­பவம் பதி­வா­னது. அதனைத் தொடர்ந்து பிற்­பகல் 2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாகக் கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களை இலக்­கு­வைத்து தெமட்­ட­கொட, மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்­கொலை குண்­டு­தா­ரி­யினால் தாக்­குதல் நடாத்­தப்ப்ட்­டது.

இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் சி.ஐ.டி.யின் 15 சிறப்பு குழுக்­களும் சி.ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவும் முன்­னெ­டுக்கும் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டன.

சாட்­சி­களின் பிர­காரம் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வ­லுக்கு அமை­யவும் டி.என்.ஏ. சோத­னைகள் பிர­கா­ரமும் கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவ­ல­யத்தில் தற்­கொலை தாக்­குதல் நடாத்­தி­யவர் இலக்கம் 121/3, சென்ட்ரல் வீதி, மட்­டக்­குளி எனும் முக­வ­ரியைக் கொண்ட அலா­வுதீன் மொஹம்மட் முவாத் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். அவ­ரது பெற்­றோரின் டி.என்.ஏ. மூலக்­கூ­று­களைப் பெற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட பகுப்­பாய்­வு­களில் அது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த தற்­கொ­லை­தா­ரிக்கு உத­விய குற்­றச்­சாட்டில் அவ­ரது சகோ­த­ரர்கள், சகோ­தரி சி.ஐ.டி.யால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை, நீர்­கொ­ழும்பு, கட்­டான – கட்­டு­வா­பிட்­டிய தேவா­ல­யத்தில் தற்­கொலை தாக்­குதல் நடாத்­தி­யவர் வாழைச்­சேனை, ஏ.எப்.சி. வீதியைச் சேர்ந்த அச்சு முஹம்­மது மொஹம்மட் ஹஸ்தூன் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். ஹஸ்­தூனின் பெற்­றோரின் டி.என்.ஏ. மூலக்­கூ­றுகள் நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் பெறப்­பட்டு அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ரினால் பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டதில் இது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இவ­ருக்கு உத­வி­ய­வர்கள் மற்றும் அவ­ரது குடும்ப பின்­னணி குறித்தும் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இவ­ரது மனை­வியே சி.ஐ.டியால் தேடப்­பட்­டு­வந்த நிலையில், சாய்ந்­த­ம­ருது, வொலி­வோ­ரியன் வீட்­டுத்­திட்­டத்­தி­லுள்ள வீட்டில் தற்­கொலை செய்­து­கொண்­டோரில் அடங்கும் புலஸ்தி ராஜேந்ரன் அல்­லது சாரா எனும் பெண் என்று பொலிஸார் தெரி­வித்­தனர். .

அத்­துடன் மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­ல­யத்தில் தற்­கொலை தாக்­குதல் நடாத்­தி­யவர் கனத்தை வீதி, புதிய காத்­தான்­குடி எனும் முக­வ­ரியைச் சேர்ந்த மொஹமட் நசார் மொஹமட் அசாத் என உறுதி செய்­யப்­பட்­டுள்ளார். இவ­ரது தாயாரின் டி.என்.ஏ. மூலக்­கூ­று­களைப் பெற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட பகுப்­பாய்வில் இது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கொழும்பு – கிங்ஸ்­பரி நட்­சத்­திர ஹோட்­டலில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடாத்­தி­யவர், புதிய யோர்க் வீதி, கொழும்பு 12, பண்­டா­ர­நா­யக்க மாவத்தை, கொழும்பு 12 ஆகிய முக­வ­ரி­களைக் கொண்ட மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என பொலி­ஸாரால் அடை­யாளம் கண்ட நிலையில், அவ­ரது மனைவி மற்றும் பிள்­ளை­களின் டி.என்.ஏ. மூலக்­கூ­று­க­ளுடன் ஒப்­பீடு செய்த பகுப்­பாய்வில் அவ­ரது அடை­யாளம் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இவ­ரது மனை­வியை சி.ஐ.டி. கைது செய்­துள்ள நிலையில் அவர் கண­வ­ருக்கு தற்­கொலை தக­கு­தல்கள் தொடர்பில் உதவி ஒத்­தாசை வழங்­கி­னாரா என்­பது தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஷங்­ரில்லா ஹோட்­டலில் இரு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் பதி­வா­கின. அதி­லேயே இந்த தற்­கொலை தாக்­கு­தல்­களை வழி­ந­டாத்­தி­ய­தாக நம்­பப்­படும் ஸஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்­க­ர­வாதி உயி­ரிந்­துள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இரு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில் ஒரு குண்­டு­தாரி மொஹமட் காசிம் மொஹமட் ஸஹ்­ரா­னாவார்.

குடைக்­கரன் ஒழுங்கை, மொஹிடீன் பள்­ளி­வாசல் வீதி, காத்­தான்­குடி 3 எனும் முக­வ­ரியைக் கொன்ட ஸஹ்­ரானின் மனை­வி­யான அப்துல் காதர் பாத்­திமா ஹாதியா மற்றும் அவர்­க­ளது 4 வயது மகள் ஆகியோர் சாய்ந்­த­ ம­ருது வீட்டில் நடாத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலில் காய­ம­டைந்து அம்­பாறை வைத்­தி­ய­சா­லையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்­போது சி.ஐ.டி.யின் பிடியில் உள்­ளனர். அவர்­க­ளது டி.என்.ஏ. மூலக்­கூ­று­க­ளையும் ஸஹ்­ரானின் சகோ­த­ரியின் டி.என்.ஏ. மூலக்கூறு­க­ளையும் பெற்று ஸஹ்­ரானின் தலைப்­ப­கு­தியில் இருந்து பெறப்­பட்ட டி.என்.ஏ. மாதி­ரி­க­ளுடன் ஒப்­பீ­டு­செய்த பகுப்­பாய்வில் குறித்த தற்­கொ­லை­தா­ரி­ஸஹ்­ரானே என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஷங்­ரில்லா நட்­சத்­திர ஹோட்­டலில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடாத்­திய மற்­றை­யவர் தெமட்­ட­ கொடை, பேஸ்லைன் வீதி, மஹ­வில கார்டின் எனும் முக­வ­ரியைக் கொண்ட மொஹமட் இப்­ராஹீம் இல்ஹாம் அஹமட் என்­ப­வ­ராவார். இவ­ரது சகோ­த­ர­ரான மொஹமட் இப்­ராஹீம் இன்ஷாப் அஹமட் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலை நடாத்­தி­யி­ருந்தார்.

இது தொடர்பில் சி.ஐ.டி.யினர் இவர்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கிய குற்­றச்­சாட்டில் இந்த சகோ­த­ரர்­களின் தந்­தை­யான மொஹம்மட் யூசுப் மொஹமட் இப்­ராஹீம் மற்றும் அவர்­க­ளது இரு சகோ­த­ரி­களைக் கைது­செய்து விசா­ரித்து வரு­கின்­றனர்.

அத்­துடன் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய இன்­ஷாபின் மனை­வி­யையும் சி.ஐ.டி. கைது செய்­துள்­ளது. இந்­நி­லையில் இவ்­விரு தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளி­னதும் அடை­யாளம் அவர்­க­ளது தந்­தை­யான மொஹமட் யூசுப் இப்­ரா­ஹீமின் டி.என்.ஏ. மாதி­ரி­க­ளுடன் ஒத்துப் போயுள்­ளன. அதன்­படி அவ்­வி­ரு­வரின் அடை­யா­ளங்­களும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் தெமட்­ட­கொடை, பேஸ்லைன் வீதி, மஹ­வில கார்­டினில் இடம்­பெற்ற மூன்று பொலி­சாரின் உயிர்­களைப் பறித்த தற்­கொலை தாக்­கு­தலை ஷங்­ரில்லா ஹோட்டல் தற்­கொ­லை­தா­ரி­களில் ஒரு­வ­ரான இல்ஹாம் அஹ­மடின் மனைவியான பாத்திமா ஜிப்ரியா நடாத்தியுள்ளதாக பொலிசார் அடையாளம் கண்டனர். இதன்போது அவரது மூன்று பிள்ளைகளும் அங்கு உயிரிழந்துள்ளன. இவை அனைத்தும் டி.என்.ஏ. பகுப்பாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தெஹிவளை ட்ரொபிகல் இன் எனும் தங்கு விடுதியில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலை வெலம்படை – கம்பளை மற்றும் லன்சியாஹேன வெல்லம்பிட்டி ஆகிய இரு முகவரிகளைக் கொண்ட அப்துல் லத்தீப் ஜெமீல் மொஹமட் நடாத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் தற்கொலைதாரியின் மனைவி மற்றும் இரு சகோதரர்களை இவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதன்படி குறித்த தற்கொலைதாரியின் மனைவி, பிள்ளைகளின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைப் பெற்று செய்த பகுப்பாய்வில் அவரது அடையாளமும் உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் நடாத்திய தாக்குதல்கள் காரணமாக சுமார் 250 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 500 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பல கோடி ரூபா பெறுமதியான சொத்து சேதமும் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.