தேசிய கீதமும் விவசாய மீள்கட்டமைப்பும்

0 795

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ மீது சிங்­கள மக்கள் வைத்­தி­ருக்­கின்ற எதிர்­பார்ப்­பா­னது தற்­போ­தைய நிலை­யிலும் உயர்ந்த மட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றது. எனினும், ஜனா­தி­பதி பொறுப்­பெ­டுத்­துக்­கொண்ட நாடு நல்ல நிலை­யி­லி­ருக்கும் நாடொன்­றல்­லாது உச்ச அளவில் பிரச்­சி­னைக்­குள்­ளா­கி­யுள்ள நாடா­கவே காணப்­ப­டுக்­கின்­றது. தற்­போ­தைய நிலையில் கடன் பிரச்­சி­னை­யா­னது மற்­றைய அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் இன்னும் சிக்­க­லா­ன­வை­க­ளாக மாற்­றிக்­கொண்­டி­ருப்­ப­துடன், பிரச்­சி­னை­களின் மூல­கா­ர­ணி­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற சாதி, இன, மத ரீதி­யி­லான வேறு­பா­டுகள் இன்­னமும் அதே நிலை­யி­லேயே காணப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

சிங்­கள பெளத்­தர்­களின் வாக்­கு­க­ளினால் மாத்­திரம் ஜனா­தி­பதி தெரி­வா­கி­யி­ருப்­பதன் கார­ண­மாக அர­சாங்­கத்­தி­னது சிங்­கள பௌத்த தன்­மையில் மாற்­ற­மேதும் ஏற்­ப­டாத அடிப்­ப­டையில் தமது பணி­களை முன்­னெ­டுக்­க­வேண்­டிய நிலை ஜனா­தி­ப­திக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மாக நாட்டின் பிரச்­சி­னை­களை நடு­நி­லை­யாக நின்று கையா­ளாமல் சிங்­கள பௌத்­தர்கள் பக்கம் நின்று அணு­க­வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அடுத்த பொதுத் தேர்­தலில் சிங்­கள பௌத்த வாக்­கு­களின் மூல­மாக மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையைப் பெற்­றுக்­கொள்ளும் கன­வொன்று ஜனா­தி­ப­திக்கு இருப்­பதால் சிங்­கள பௌத்த எழுச்­சி­யா­னது குறைந்து செல்­லா­ம­லி­ருப்­பதை உறுதி செய்­து­கொள்­வ­தற்­காக அவ்­வப்­போது அதற்கு சாத­க­மான அடிப்­ப­டை­யி­லான சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

வடக்கில் மாவீ­ரர்­தின நினை­வேந்தல் நிகழ்­வுகள் தொடர்­பான பிரச்­சி­னை­யின்­போது அதனை பிணக்­கொன்­றாக உரு­வெ­டுக்­க­வி­டாமல் நிகழ்­வு­களை நடாத்­து­வ­தற்­காக இட­ம­ளிக்கும் அடிப்­ப­டை­யி­லான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும் சிங்­கள பௌத்தம் என்ற கொள்­கை­யா­னது எந்த வித­மான மாற்­றத்­திற்கும் உட்­ப­டுத்­தப்­ப­டா­ம­லி­ருக்­கின்­றது என்­பது சிங்­கள மொழியில் மாத்­திரம் தேசிய கீதத்­தினை பாட­வேண்டும் என்ற நிலைப்­பாடு உரு­வாக்­கப்­பட்­டதன் ஊடாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

தேசிய கீதம் சிங்­க­ளத்தில் மாத்­திரம் பாடு­வ­தா­னது தமிழ் பேசும் மக்­க­ளுக்கு மகிழ்ச்­சி­க­ர­மான ஒரு விட­ய­மாக இருக்­கப்­போ­வ­தில்லை என்ற பேதிலும், பண்­டா­ர­நா­யக்­கவின் சிங்­களம் மட்டும் என்ற கொள்­கையின் அள­வுக்கு இந்த தேசி­ய­கீதப் பிரச்­சினை அவர்­களை அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கு­வ­தாக அமை­யாது. எனினும், இந்தக் கொள்­கை­யா­னது ஜனா­தி­ப­தியின் நிலையை பலப்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக அமையும் என்­ப­தா­கவும் கூற­மு­டி­யாது.

தேசிய கீதம்

பேரா­சி­ரியர் கே.எம். டீ. சில்­வாவின் ஜே.ஆர் ஜய­வர்­தன குறித்த நூலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்ற விப­ரங்­களின் அடிப்­ப­டையில் 1949 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடாத்­தப்­பட்ட சுதந்­திர நிகழ்வின் போது அது­வ­ரை­கா­லமும் இலங்­கையில் பாடப்­பட்­டு­வந்த “God save the King/Queen” எனும் “கடவுள் அர­சனை / அர­சியை காப்­பா­னாக” என்ற பிரித்­தா­னிய தேசிய கீதத்தை இனி­மேலும் பாட முடி­யா­தென்ற நிலையில் அது குறித்த அவ­சரத் தீர்­மா­ன­மொன்றை மேற்­கொள்­ள­வேண்­டிய அவ­சியம் 1948 ஆம் ஆண்டு ஆட்­சிக்­கு­வந்த டீ. எஸ். சேன­நா­யக்க அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டது. 1934 ஆம் ஆண்டு இலங்கை தேசிய நிகழ்­வின்­போது ஆனந்த சம­ரகோன் மற்றும் அவ­ரது இசைக்­கு­ழு­வி­ன­ரினால் பாடப்­பட்ட “நமோ நமோ மாதா” எனும் பாடல் குறித்து ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் நினைவில் இருந்­த­துடன் பொருத்­த­மான தேசி­ய­கீதம் குறித்த அவ­ரது முன்­மொ­ழிவு அன்­றைய பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் ஈ.ஏ.பீ. விஜே­ரத்­னவின் தலை­மையில் அமைச்­ச­ர­வை­யினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. ஜே.ஆர்.ஜய­வர்­தன இந்தக் குழுவில் அங்கம் வகித்­த­துடன், ஜீ.ஜீ.பொன்­னம்­பலம் மற்றும் சீ. சிதம்­பரம் ஆகி­யோரும் இந்தக் குழுவில் அங்கம் வகித்­தி­ருந்­தனர்.

குறித்த குழு ஆனந்த சம­ரக்கோன் முன்­னி­லையில் கூட்­டப்­பட்­டது. குறித்த கீதம் பிரித்­தா­னிய ஆட்சிக் காலத்தில் இயற்­றப்­பட்­டி­ருந்­த­தாலும் நாடு தற்­போது பாரிய மாற்­றங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­தாலும் கீதத்தின் “நவ­ஜீ­வன தெமினே” என்ற அடிப்­ப­டையில் வரு­கின்ற 10 ஆவது அடியை மாற்­றி­ய­மைப்­பது பொருத்­த­மாக அமையும் என்­ப­தாக ஆனந்த சம­ரகோன் கருத்துத் தெரி­வித்தார். அடி­களை மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக விரும்­பிய ஆனந்த சம­ரகோன் “நவ ஜீவன தெமினே நிதின அப புபுது கரன் மாதா” என்­ப­தாக அதனை மாற்­றி­ய­மைத்தார். கீதத்தின் தமிழ் பிர­தி­யொன்றும் இருக்­க­வேண்டும் என்­ப­தாக குழு தீர்­மா­னித்­த­துடன் தமிழ் பிர­தியை உரு­வாக்­கு­வ­தற்­காக தமிழ்ப் புலவர் மு. நல்­ல­தம்பி என்­பவர் தெரி­வு­செய்­யப்­பட்டார்.

1952 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி சிங்­களம், தமிழ், ஆங்­கில பத்­தி­ரி­கை­களில் தேசிய கீதத்தின் சிங்­கள தமிழ், பிர­திகள் அறி­வித்தல் ஒன்­றாக அச்­சி­டப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டன. அதன்­பின்னர் வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் நடை­பெற்ற அரச நிகழ்­வு­களில் தேசிய கீதம் தமிழில் இசைக்­க­ப்­பட்டு வந்­தது. ரேடியோ சிலோன் நிறு­வனம் சிங்­களம், தமிழ் ஆகிய மொழி­க­ளி­லான தேசிய கீதம் இரண்­டையும் இசைத்­தட்­டு­க­ளாக வடி­வ­மைத்­தது. இங்கு தமிழ் தேசிய கீதத்­திற்­காக ஆனந்த சம­ரகோன் இசை­ய­மைத்த போதிலும் சங்­கரி மற்றும் வீணா ஆகிய தமிழ் பாட­கர்கள் தமிழ்த் தேசிய கீதத்தை பாடு­வ­தற்­காகத் தெரி­வு­செய்­யப்­பட்­டனர்.

1960 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாத­ம­ளவில் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க ஆட்­சிக்­கா­லத்­தின்­போது தேசிய கீதத்தின் ஆரம்ப வரி­களின் அமைவில் பொருத்­த­மின்மை இருப்­ப­தாக (அசு­ப­மான வி­தத்தில் ஆரம்பம் அமைந்­தி­ருப்­ப­தாக) குறிப்­பிட்டு ஆனந்த சம­ர­கோனின் எதிர்ப்­புக்கு மத்­தியில் “நமோ நமோ மாதா” என்­ப­தற்கு பதி­லாக “சிறீ­லங்கா மாதா” என்­ப­தாக மாற்­றி­ய­மை­யக்­கப்­பட்­டது.

ஆனந்த சம­ரகோன் தற்­கொலை செய்­து­கொண்­டதும் இந்த சந்­தர்ப்­பத்தில் ஏற்­பட்ட பிணக்­கு­களின் கார­ண­மா­க­வாகும். பிர­பா­கரன் வடக்கில் தேசிய கீதத்­திற்­குத் தடை­வி­திக்கும் காலம் வரையில் வடக்கு, கிழக்கு மக்கள் தமிழ் மொழி­யி­லேயே தேசிய கீதத்­தினை இசைத்­து­வந்­தனர்.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வது பொருத்­த­மா­னதா என்ற பிரச்­சி­னை­யா­னது யுத்­த­வெற்­றியின் பின்னர் முதன் முதலாக 2010 ஆம் ஆண்டில் தோன்­றி­யது. தேசிய கீத­மா­னது சிங்­கள மொழியில் மாத்­தி­ரமே பாடப்­ப­ட­வேண்டும் என்­ப­தா­கவே மஹிந்த ராஜபக் ஷவின் எண்­ண­மாக இருந்­தது. நல்­லாட்சி அர­சாங்கம் குறித்த தடையை நீக்­கிய போதிலும் இறு­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்­ததைத் தொடர்ந்து குறித்த தடை­யா­னது மீண்டும் புத்­துயிர் பெறு­கின்­றது.

1956 ஆம் ஆண்டு சிங்­கள மொழிச் சட்டம் என்­பது தற்­போது அமுலில் இல்லை என்­பதை தற்­போ­தைய அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்டும். 1978 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்பின் 18, 19 ஆம் அத்­தி­யா­யங்­களின் மூல­மாக சிங்­கள மொழிக்கு மாத்­தி­ர­மன்றி தமிழ் மொழிக்கும் தேசி­ய­மொழி என்ற நிலை வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. சட்ட உரு­வாக்கம் மாத்­தி­ர­மன்றி அரசின் அனைத்துக் கரு­மங்­க­ளுக்கும் இந்தக் கொள்கை ஏற்­பு­டை­ய­தா­கவும் இருந்­து­வ­ரு­கின்­றது.

தமிழ்­மொழி மூல­மாக தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­வ­தனால் சிங்­க­ளத்­துக்கோ அல்­லது பௌத்­தத்­திற்கோ எந்­த­வி­த­மான பாதிப்­புக்­களும் ஏற்­பட்­டு­வி­டப்­போ­வ­தில்லை. சிறு­பான்­மை­யினர் நடத்­தப்­ப­டு­கின்ற விதத்தின் ஊடாக பெரும்­பான்­மை­யி­னது தன்­மை­யினை மட்­டி­டலாம் என்ற மகாத்மா காந்­தியின் கூற்­றுக்கு அமைய இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் சிங்­கள இனத்தின் மதிப்­பினை பாதிப்­ப­தாக அமைக்­யகூடும்.

விவ­சாய மீள்­கட்­ட­மைப்பு

“பாத­கங்­களை சாத­க­மாக மாற்­றி­ய­மைத்தல்” என்ற தலைப்பில் கடந்த வாரம் எழு­தி­ய­ிருந்த கட்­டுரை தொடர்பில் பல­ரி­ட­மி­ருந்தும் அபிப்­பி­ரா­யங்கள் கிடைக்­கப்­பெற்­றன. விவ­சாய ஆய்­வாளர் ஒரு­வரும் தனது அபிப்­பி­ரா­யத்தை தெரி­வித்­தி­ருந்­தமை மகிழ்­சிக்­கு­ரிய விட­ய­மாக இருந்­தது. பொது­வாக ஒரு விட­யத்தில் அத­னுடன் தொடர்­பில்­லா­த­வ­ர்­களின் கருத்­துக்­க­ளை­விட அந்த துறை­சார்ந்த விசேட நிபு­ணத்­து­வ­முள்­ள­வர்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்கும் கருத்­துக்கள் பெறு­மதி வாய்ந்­த­வை­யாகும்.

குறித்த கட்­டு­ரையில் விவ­சாயம் குறித்து குறிப்­பி­டப்­பட்ட விட­யங்கள் அனைத்­து­டனும் தான் உடன்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்டார். அத்­துடன் இலங்கை தற்­போது முகம்­கொ­டுக்­கின்ற விவ­சாயம் தொடர்­பான பிரச்­சி­னைகள் குறித்தும் மிக நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டினோம்.

வன­வி­லங்­குகள் ஊடாக கிர­ாமிய விவ­சா­யத்­துக்குப் பாரி­ய­ள­வி­லான பாதிப்­புக்கள் ஏற்­ப­டு­கின்­றன. தற்­போது வன­வி­லங்­கு­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற பாதிப்­புக்­களை விவ­சா­யி­களால் தாங்­கிக்­கொள்ள முடி­வ­தில்லை. குரங்­குகள், முள்­ளம்­பன்­றிகள், மயில்கள், மர அணில்கள் போன்ற விலங்­குகள் பல்கிப் பெரு­கு­வதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டாது அவை பெரு­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­மாயின் இன்னும் ஐந்து வரு­டங்கள் கழி­யும்­போது மிகச் சிக்­க­லான பிரச்­சி­னை­யொன்­றாக இது மாறி­வி­டலாம்.

இலங்­கையின் தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்டிய பிரச்­சி­னைகள் அனைத்­துமே உரிய நேரங்­களில் மாற்று நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டா­மை­யினால் பிரச்­சி­னைகள் வளர்ந்து பிர­மாண்­ட­மாக மாறி­யி­ரு­க்­கின்­றன என்­ப­தாகக் குறிப்­பி­ட­வேண்டும். இலங்கை தற்­போ­தி­ருக்­கின்ற பொரு­ளா­தார நெருக்­கடி நிலையை சீர்­செய்­ய­வேண்­டு­மெனில் கிரா­மிய விவ­சா­யத்­து­றையில் புத்­து­ணர்வு ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­ட­மொன்று அமைக்­கப்­பட்டால் மாத்­தி­ரமே அந்த நிலை­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுக்­க­மு­டியும். குறித்த துறையின் ஊடாக மீளெ­ழு­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாகக் கருதி இளை­ஞர்­களின் கவனம் திரும்­பு­கின்ற அடிப்­ப­டையில் கவர்ச்­சி­­க­ர­மான வரு­மா­னங்­களை ஈட்­டிக்­கொள்ளும் அடிப்­ப­டை­யி­லான நவீன விவ­சாய முறை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். இந்த நிலையை அடை­வ­தற்­காக வன­வி­லங்­குகள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வது இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகக் கரு­தலாம்.

வன­வி­லங்குப் பிரச்­சி­னை­களில் மத சிந்­தனை சார்ந்­துள்­ள­மையால் எந்த அர­சாங்­க­முமே அதற்குத் தீர்வு காண்­பதில் பின்­வாங்­கு­கின்­றன. ஆட்சி முறை­களில் தேவைக்­க­தி­க­மாக மத விட­யங்­களைச் சேர்த்­துக்­கொள்­ளும்­போது சிறந்­த­தொரு ஆட்­சிக்­கான வாய்ப்­புக்கள் இல்­லா­ம­லா­வ­துடன், ஆட்­சி­யாளர் நகைப்­புக்கு உட்­ப­டுத்­தப்­படும் நிலையும் ஏற்­ப­டலாம். இலங்­கையை பாலுற்­பத்­தியில் தன்­னி­றை­வ­டைந்த நாடாக மாற்­றி­ய­மைக்க முடி­யாமல் இருப்­ப­தற்கும், ஏற்­று­ம­தியை இலக்­காகக் கொண்ட அடிப்­ப­டையில் கிரா­மிய விவ­சா­யத்தை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு முடி­யா­ம­லி­ருப்­ப­தற்கும் மத ­நம்­பிக்­கைகள் சார்ந்த பிற்­போக்கு கொள்­கை­களே கார­ண­மா­கின்­றன.

நெற்­செய்கை

நெல்­லுற்­பத்தி தொடர்பில் நாட்டில் நில­வு­கின்ற தவ­றான நம்­பிக்­கைகள் விவ­சா­யத்­து­றை­யிலும் கிராமப் பகு­தி­களில் காணப்­ப­டு­கின்ற வறுமை நிலை­யிலும் செல்­வாக்குச் செலுத்­து­வ­தாகக் காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் மேற்­கொள்­ள­மு­டி­யு­மான அனைத்து பயிர்ச்­செய்­கை­க­ளிலும் ஆகக் குறைந்த வரு­மா­னத்தைப் பெற்றுத் தரு­கின்ற பயிர்ச்­செய்­கை­யாக நெற்­பயிர்ச் செய்­கையைக் குறிப்­பி­டலாம். நெற்­பயிர்ச் செய்­கைக்கும் அதற்­கான நீர்த்­தேவை குறித்தும் பராக்­கி­ர­ம­பாகு காலத்தில் சிந்­தித்­தது போன்றே இலங்கை இன்றும் சிந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. பயிர்ச்­செய்­கையில் ஈடு­ப­டு­கின்ற விவ­சா­யிக்கு அதிர்ஷ்டம் இருக்­கு­மாயின் வயல் நில­மொன்றின் ஊடாக ஒரு போகத்தில் ஒரு ஏக்­க­ருக்­காக ரூபா 40,000 இலா­ப­மாக பெற்­றுக்­கொள்­ளலாம் என்­ப­தாக விவ­சாயத் திணைக்­க­ளத்தின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஆண்­டொன்­றிற்கு மூன்று போகங்கள் பயி­ரி­ட­மு­டி­யு­மாயின் விவ­சா­யி­யினால் 120,000 ரூபா ஆண்­டு­வ­ரு­மா­ன­மாக ஈட்­டிக்­கொள்­ள­மு­டியும். அந்த அடிப்­ப­டையில் மாத­மொன்­றிற்­கான வரு­மானம் 10,000 ரூபா கிடைக்­கப்­பெறும். எனினும், ஒரு ஏக்கர் நிலத்தில் மிளகாய் பயி­ரி­டப்­ப­டு­மி­டத்து ஒரு போகத்தில் மூன்று இலட்சம் ரூபா இலா­பத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் அனு­ர­கு­மார திசா­நா­யக்க, சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் அர­சாங்­கத்தில் விவ­சாய அமைச்­ச­ராக பதவி பெற்­றுக்­கொண்­டதன் பின்னர் அவர் நெற்­ப­யிர்ச்­செய்கை தொடர்­பான வெளி­யிட்ட கூற்று ஒன்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு “வறு­மையைப் பயி­ரிடும் நெற்­செய்கை” என்ற தலைப்பில் கட்­டுரை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்தேன். நெற் செய்­கைக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து செயற்­ப­டு­வ­தா­னது இலங்­கையின் வறு­மையை ஒழிக்க கார­ண­மாக அமை­யாது என்­ப­துடன், அது மேலும் வறு­மையை அதி­க­ரிப்­ப­தா­கவே அமையும் என்­ப­தனை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தேன். நான் அத­னூ­டாகக் குறிப்­பிட முனை­வது, நெற்­செய்­கை­யா­னது முற்­று­மு­ழு­தாக கைவி­டப்­ப­ட­வேண்டும் என்­ப­தை­யல்ல. சோறு என்­பது எமது பிர­தான உண­வாக இருப்­பதன் கார­ண­மாக நெற் செய்­கையை முற்­று­மு­ழு­தாக நீக்­கி­விட முடி­யாது.

எனினும், எமக்கு சோறு உண்ணும் அளவைக் குறைத்­துக்­கொள்­ளலாம்.

மூன்று வேளை­களும் சோறு உண்­பது நாட்டு மக்கள் நோய் வாய்ப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமை­கின்­றது. இரண்­டா­வது உல­க­மகா யுத்­தத்தின் பின்னர் உலக நாடு­களில் மக்கள் சோறு உண்ணும் அளவைக் குறைத்­துக்­கொண்டு இறைச்சி வகை, மரக்­க­றி­வகை, பழ­வ­கைகள் என்­ப­வற்றை உணவில் சேர்த்­துக்­கொள்ளப் பழ­கினர். ஜப்பான் நாட்­ட­வர்கள் சிறிய கோப்பை ஒன்றின் அளவே தற்­போது சோறு உண்­கின்­றனர். ஜப்பான் அபி­வி­ருத்தி அடை­வ­தற்கு இதுவும் ஒரு முக்­கி­ய­மான கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

இலங்­கைக்கு சோறு உண்ணும் அள­வினை 50 வீதத்­தினால் குறைத்­துக்­கொள்­ளலாம். இறைச்சி, மரக்­கறி, பழ­வ­கை­களை உட்­கொள்­வதன் ஊடாக அந்த இடை­வெ­ளி­யினைப் பூர­ணப்­ப­டுத்­தலாம். இவ்­வா­றான ஒரு கொள்கை உரு­வாக்­கப்­ப­டு­மாயின் இலங்­கைக்குத் தேவை­யான அரிசி உற்­பத்­திக்­காக உலர்­வ­லய நிலங்­களை மாத்­திரம் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளலாம். பொரு­ளா­தார ரீதியில் நலன்­களைத் தராத அமைப்பில் இருக்­கின்ற ஈர­வ­லய நிலங்­களில் பொரு­ளா­தார ரீதியில் அதிக பயன்­களைத் தரு­கின்ற பயிர்­களை பயி­ரி­டலாம்.

குறைந்­த­ளவில் சோறு உட்­கொள்­வ­தா­னது சிறந்த ஆரோக்­கி­யத்­திற்கு கார­ண­மாக அமை­வ­துடன், நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் கிரா­மிய விவ­சா­யத்தின் அபி­வி­ருத்­திக்கும் கார­ண­மாக அமையும்.

ஈர­வ­லய வயல் நிலங்கள்

தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பொரு­ளா­தாரப் பயிர்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற நிலங்­க­ளிலும் பார்க்க கூடி­ய­ள­வி­லான நிலப்­ப­குதி நெற்­செய்­கைக்­காக ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக விவ­சாயத் திணைக்­க­ளத்தின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. நெற்­செய்­கைக்­காக 9,22,151 ஹெக்­டயர் அளவு நிலம் ஒதுக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் தேயிலைச் செய்­கைக்­காக 2,27,262 ஹெக்­டெ­யர்­களும், தென்னை செய்­கைக்­காக 2,45,552 ஹெக்­ட­யர்­களும் இறப்பர் செய்­கைக்­காக 2,07,628 ஹெக்­ட­யர்­களும் ஏனைய பொரு­ளா­தார பயிர்­செய்­கை­க­ளுக்­காக 1,46,181 ஹெக்­ட­யர்­களும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. ஈர­வ­ல­யத்தில் அதி­க­ள­வி­லான வயல் நிலங்­களில் நெற்­செய்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

இது 40 சத­வீதம் அள­வி­லா­ன­தாக இருக்­கலாம். விவ­சா­யத்­தி­ணைக்­களம் 10 வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை கணக்­கெ­டுப்­புக்­களை மேற்­கொண்டு தக­வல்­களை வெளி­யிட்டு வந்­த­போ­திலும் 1981 ஆம் ஆண்டின் பின்னர் கணக்­கெ­டுப்­புக்கள் மேற்­கொள்­வதை நிறுத்­திக்­கொண்ட கார­ணத்­தினால் பயி­ரி­டப்­ப­டாத நிலத்தின் அளவை சரி­யாகக் குறிப்­பிட முடி­யா­ம­லுள்­ளது. நான் அறிந்­த­மட்டில் களுத்­துறை மாவட்­ட­மா­னது 1948 ஆம் ஆண்டு முதலே நெற்­செய்கை ஊடாக அதிக நட்­டத்தை பெறு­கின்ற மாவட்­ட­மாக இருந்­து­வ­ரு­கின்­றது. களுத்­துறை மாவட்­டத்தில் நெற்செய்கையூடாக ஆகக்குறைந்த அளவிலான வருமானமே ஈட்டப்படுகின்றதாயின் அந்த மாவட்ட மக்களை நெற்செய்கையில் ஈடுபடுவதற்காக ஊக்குவிப்பதில் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.

ஈரவலயங்களில் நெற்செய்கை கைவிடப்பட்டிருக்கின்ற வயல் நிலங்களில் எந்தவிதமான மாற்றுப் பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.

வயல் நிலங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்ற இறுக்கமான சட்டங்கள் காரணமாக மாற்றுப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றன. அவ்வாறு பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கைவிடப்பட்ட ஈரவலய நிலங்களின் அளவு இலட்சக்கணக்கான ஏக்கர்களாக இருக்கலாம். நெற்செய்கை மேற்கொள்ளுமிடத்து போதிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனாலேயே இவைகள் பொருளாதார ரீதியில் எந்தப் பயன்களும் பெற்றுக்கொள்ளப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன.

நிலப் பயன்பாடு

நிலம் என்பது ஒரு நாட்டின் அருமையானதும் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையானதுமான ஒரு வளமாகும். இருக்கின்ற நிலங்களை பொருளாதார ரீதியில் பயன்களைப் பெற்றுத்தரும் அடிப்படையில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளாத நாடு வறுமைக்குள்ளாவது ஆச்சரியமான விடயமொன்றல்ல. ஈரவலய நிலங்களை பொருளாதார பயன் பெற்றுத்தரும் அடிப்படையில் பயன்படுத்தாது அதனை பொருளாதார ரீதியில் பயன் பெற்றுத்தரும் அடிப்படையில் சிறிய, நடுத்தர, பாரிய அளவுகளிலான பண்ணைகளை அமைக்கலாம். அதற்கேற்றவகையில் வயல் நிலங்கள் குறித்த சட்டங்கள் மாற்றப்படவேண்டியதுடன் அரசின் திட்டங்களும் செயற்படுத்தப்படவேண்டும்.

அதனூடாகத் தற்போது கைவிடப்பட்டிருக்கின்ற வயல் நில உரிமையாளர்களுக்கு தமது நிலங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக வருமானம் ஈட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் அமையலாம். அந்த நிலங்கள் நன்னீர் இறால்கள், மீன்கள் என்பன வளர்க்கின்ற பண்ணைகளாக மாற்றியமைக்கலாம். இந்திய எருமை மாடுகள் அல்லது ஏற்றுமதிக்கான வாத்துக்கள் வளர்க்கின்ற பண்ணைகளாகவும் மாற்றியமைக்கலாம்.-Vidivelli

  • விக்டர் ஐவன்
    தமிழில்: ராஃபி சரிப்தீன்

Leave A Reply

Your email address will not be published.