சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் சபைக்கு நாமலின் மாமா, ரோஹிதவின் மாமி நியமனம்

ஜனாதிபதியின் பதில் என்னவென்று முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி

0 762

சிவில் விமா­ன­சே­வைகள் பணிப்­பாளர் சபைக்கு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் குடும்ப உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆனால் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ குடும்ப உறுப்­பி­னர்­களை ஒரு­போதும் உயர்­ப­த­வி­க­ளுக்கு நிய­மிக்­க­மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இதன்­மூலம் அர­சாங்­கத்தின் உண்­மைத்­தன்மை வெளிப்­பட ஆரம்­பித்து விட்­ட­தென முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக்கட்­சியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது பல நிரூ­பிக்­கப்­ப­டாத குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தே பொது­ஜன பெர­முன தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தது. தேர்தல் காலத்தில் பல்­வேறு வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன. அரச ஊழி­யர்­க­ளுக்கு சாத­க­மான நிலமை தோற்றம் பெறு­மென்று குறிப்­பி­டப்­பட்­டன. ஆனால் இன்று அரச ஊழி­யர்­களே பாரிய நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளார்கள்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை கடந்த அர­சாங்கம் சீன நிறு­வ­னத்­திற்கு தாரை வார்த்­த­தாகத் தொடர்ந்து குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. ஆனால் அர­சாங்கம் ஆட்­சிக்­கு­வந்து 2மாத காலத்­திற்குள் எவ்­வித விலை­மனுக் கோர­லு­மின்றி கொழும்பு ஷங்­ரில்லா ஹோட்­ட­லுக்கு அரு­கா­மை­யி­லுள்ள 3 ஏக்கர் அரச காணி சிங்­கப்பூர் நிறு­வ­னத்­திற்கு 99வருட கால ஒப்­பந்­தத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் நாட்டு மக்­களின் கவ­னத்­தி­லி­ருந்து முழு­மை­யாக மறைக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்தல் காலத்தில் அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக மறைக்­கவும், மக்­களின் கவ­னத்தை திசை­தி­ருப்­பவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் தொலை­பேசி குரல் பதி­வுகள் பர­வ­லாக அர­சியல் களத்தில் பேசப்­ப­டு­கின்­றன. இவ்­வி­ட­யத்­திற்கு மாத்­திரம் முக்­கி­யத்­துவம் கொடுப்­பதை காட்­டிலும் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் தீர்வு வழங்க வேண்டும்.

அரச அதி­கா­ரத்தை பிர­யோ­கித்து குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு பத­விகள் வழங்­கப்­பட மாட்­டா­தென்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ குறிப்­பிட்டார்.

ஆனால் இர­க­சி­ய­மான முறையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷவின் மாமா, ரோஹித ராஜபக் ஷவின் மாமி ஆகியோர் சிவில் விமான சேவைகள் சபையின் பணிப்­பா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். 2015ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரான அர­சாங்­கத்தின் சுய­ரூபம் தற்­போது தோற்­றம்­பெற ஆரம்­பித்து விட்­டது.

தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இனி மேற்கொள்ளாது. கடந்த அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களும் இனி இல்லாதொழிக்கப்படும். இன நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனது அக்கிராசன உரையில் குறிப்பிடவில்லை என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.