ஏப்ரல் 21 இன் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சம்பிரதாய வாழ்வியலை மீள்பரிசீலிக்க வேண்டியுள்ளது

முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

0 794

நாட்டில் குறு­கிய மனப்­பாங்கு இன்னும் மாற­வில்லை. அடுத்­த­கட்ட அர­சி­யலை எவ்­வாறு எதிர்­கொள்ளப் போகிறோம் என்­பதை மூடிய அறைக்குள் இருந்­து­கொண்டு தீர்­மா­னிக்க முடி­யாது. இந்த விட­யங்­களில் தூர­நோக்­கு­டைய சாணக்­கி­ய­மான அணு­கு­மு­றை­களை கையாள வேண்டும். அதற்­காக எங்­க­ளிடம் நிறைய படிப்­பி­னைகள் இருக்­கின்­றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

எஸ்.எச்.எம். ஆதம்­பாவா மௌலவி எழு­திய ‘பனூ உமையா’ நூல் வெளி­யிட்டு விழா கடந்த வியா­ழக்­கி­ழமை தபால் தலை­மை­யக கேட்­போர்­கூ­டத்தில் நடை­பெற்­ற­போது, அதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர், கட்­சி­யி­லி­ருந்து பிரிந்­து­சென்று ஆளும்­த­ரப்பில் சேர்ந்­து­கொண்டு அமைச்சு பத­வி­களை பெற்­றுக்­கொண்ட சந்­தர்ப்­பத்தில், நான் அஷ்ஷெய்க் அகார் முஹம்­மதின் மாவ­னல்லை வீட்­டுக்கு சென்­றி­ருந்தேன். நான் அப்­போது அமைச்­ச­ராக இல்­லா­விட்­டாலும் அமைச்சர் என்­றுதான் என்னை வர­வேற்றார்.

அப்­போது அவர் என்­னிடம் கூறிய ஒரு விடயம் மிகவும் வேத­னை­யாக இருந்­தது. கட்­சியில் இருப்­ப­தாக பைஅத் எனும் உறு­தி­மொழி செய்­த­வர்கள், பத­வி­மோ­கத்தில் அதை மறந்­து­விட்டு செல்­கின்­றனர். பைஅத்தின் மகிமை தெரிந்­த­வர்கள் அவ்­வாறு செய்­ய­மாட்­டார்கள். அதன் மகிமை குறித்து உங்­க­ளது கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கு சொல்­லிக்­கொ­டுங்கள் என்று என்­னிடம் சொன்னார். பைஅத் குறித்து அவர் கூறிய விட­யங்­களை மிகவும் ஆவர்த்­துடன் கேட்­டிக்­கொண்­டி­ருந்தேன்.

அகார் முஹம்மத் என்­னிடம் ஓர் உதா­ர­ணத்தை சொன்னார். முஆ­வியா (ரழி) அவர்­களின் மர­ணத்தின் பின்னர் யசீதின் கைக­ளுக்கு ஆட்சி கைமாறும் சந்­தர்ப்­பத்தில், அந்த ஆட்சி மதீ­னா­வி­லி­ருந்து டமஸ்­க­ஸுக்குப் போய்­விட்­டது என்று எல்­லோ­ருக்கும் தெரியும். மதீ­னா­வி­லி­ருந்த ஸஹா­பாக்­க­ளிடம் பைஅத் வாங்­க­வேண்டும் என்­பது முஆ­வியா (ரழி) அவர்­களின் விருப்­ப­மாகும். முதிர்ச்­சி­ய­டைந்த ஸஹா­பாக்கள் பைஅத் செய்­தனர். ஆனால், ஒரு­சில ஸஹா­பாக்கள் பைஅத் செய்­வ­தற்கு மறுத்­து­விட்­டனர்.

காலப்­போக்கில் யசீதின் ஆட்சி கொடுங்கோல் ஆட்­சி­யாக மாறிக்­கொண்­டி­ருந்­தது. அப்­போது, பைஅத் செய்­யாத ஸஹா­பாக்கள், பைஅத் செய்த ஸஹா­பாக்­களைப் பார்த்து நையாண்டி செய்­தனர். எனினும், நாங்கள் பைஅத் செய்து கலீ­பா­வாக ஏற்­றுக்­கொண்டு விட்டோம். எனவே, கொடுத்த வாக்­கு­று­தி­யி­லி­ருந்து மாற­மு­டி­யாது என்­பதில் பைஅத் செய்­த­வர்கள் பிடி­வா­த­மாக இருந்­தனர் எனக் கூறி­விட்டு, என்னைப் பார்த்து கொடுங்கோல் யசீதை விடவா நீங்கள் கடு­மை­யா­னவர் என்று நகைச்­சு­வை­யாகக் கேட்டார்.

அலி (ரழி) அவர்­களின் பின்னர் ஹஸரத் முஆ­வியா (ரழி) அவர்­க­ளி­டத்தில்  ஆட்சி போகின்ற விவ­காரம், அதனைத் தொடர்ந்து ஏற்­பட்ட பிரச்­சி­னைகள் என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. முஆ­வியா (ரழி) அவர்கள் ஒரு மிகுந்த ஆளு­மை­யுள்ள கலீபா என்றால் அது மிகை­யா­காது.

உமர் (ரழி) அவர்­களின் காலத்­தி­லி­ருந்தே, முஆ­வியா (ரழி) ஷாம் தேசத்தின் ஆளு­ந­ராக 20 வரு­டங்கள் நிய­மனம் பெற்­றி­ருந்தார். சிரி­யா­வி­லி­ருந்து டமாஸ்கஸ் பிர­தே­சத்தை ஆண்ட ஒரு­வ­ராக அவர் இருந்தார். பல யுத்­தங்­க­ளுக்குத் தலைமை தாங்கி சிரி­யா­வுக்கும் அதற்கு வெளி­யிலும் இஸ்­லா­மிய சாம்­ராச்­சி­யத்தை வியா­பிக்கச் செய்த புக­ழுக்­கு­ரிய கலீபா என்ற அடிப்­ப­டை­யிலும் அவரின் மகிமை வித்­தி­யா­ச­மா­னது.

அதே­நேரம், இந்தக் கோத்­தி­ரங்­க­ளுக்­கி­டையில் பனூ ஹாஷிம்கள், உமை­யாக்­க­ளுக்­கி­டையில் இந்த ஆட்சிப் பொறுப்பு மாறு­கின்­றது. அது மாத்­தி­ர­மல்ல, உமை­யாக்­க­ளு­டைய காலம் என்­பது வாரி­சு­ரிமை அர­சியல் ஆரம்­பித்த காலம்.

தந்­தைக்­குப்பின் தனயன், தன­ய­னுக்­குப்பின் அவ­ரு­டைய தனயன் என்று ராஜ பரம்­ப­ரை­யாக கிலாபத் உரு­மா­றிய காலமும் அதுதான். அந்தக் காலத்தில் நடந்த பித்­னாக்கள், பஸா­துகள் என்று நிறைய விட­யங்கள் இருக்­கின்­றன.

வர­லா­றுகள் என்­றாலே ஆளுக்காள் கொலை செய்­வது, ஆட்­சி­யா­ளர்­களை கொலை செய்­வது, அதற்­குப்பின் படை­யெடுப்­பது, நாடு­களை கைப்­பற்­று­வது என்­ப­தா­கத்தான் இருக்­கி­றது. இந்த நாட்­டிலும் அப்­ப­டித்தான் வர­லாறு எழு­தப்­பட்­டி­ருக்­கி­றது. மகா­வம்சம் நூலில் இருப்­ப­தெல்லாம் இப்­ப­டி­யான வர­லா­று­கள்தான். எந்த நாடாக இருந்­தாலும் இவற்றை வைத்­துத்தான் நாட்டின் வர­லாற்றை பேசு­கின்­றனர்.

பித்­னாக்­களின் காலம் என்றால் பெரிதும் உமை­யாக்­களின் காலம்தான். முஹம்மத் நபி (ஸல்) அவர்­களும் குல­பாஉர் ராஷி­தீன்­க­ளு­டைய காலமும் ஏறத்­தாழ ஐம்­பது ஆண்­டு­க­ளென நினைக்­கின்றேன். அந்த ஆண்டு காலத்­துக்குள், ஆட்­சியின் அடிப்­படை எப்­ப­டி­யி­ருக்க வேண்டும் என்­பது பற்றி அனைத்து விட­யங்­க­ளையும் முழு உல­குக்கும் அறி­யத்­தந்த மார்க்கம் இஸ்­லா­மாகும்.

அதன்­பின்னர் உமை­யாக்­களின் 90 ஆண்­டு­களில் இஸ்­லா­மிய சாம்­ராஜ்­ஜியம் ஐரோப்­பாவின் ஸ்பெயி­னையும் தாண்­டிய வர­லாறு இருக்­கின்­றது. இப்­ப­டி­யாக இஸ்­லா­மிய சாம்­ராஜ்­ஜியம் வியா­பித்­த­போதும் ஜமல் யுத்தம், ஸிப்பீன் யுத்தம் போன்­ற­வைகள்தான் கூடு­த­லாக பேசப்­ப­டு­கி­ன்றன. எங்­கெல்லாம் பித்னா நடந்­ததோ அதைப் பற்­றித்தான் பேசுவோம். ஆயிஷா (ரழி) அவர்­கள்­கூட யுத்­தத்­துக்கு சென்­ற­வி­டயம், நடந்த விடயம் என்­றெல்லாம் பேசி­யி­ருக்­கிறோம்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்னர், இதற்கு முன்­பி­ருந்த காலங்­களை விடவும் மிகவும் வித்­தி­யா­ச­மான காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். அதற்கு சாட்­சி­யாக நாங்கள் எல்­லோரும் இருந்து கொண்­டி­ருக்­கிறோம். இந்தக் கட்­டத்தில் எல்­லோரும் உணர்ந்­து­கொள்ள வேண்­டிய விடயம், எங்­க­ளது சம்­பி­ர­தாய வாழ்­வி­யலை 2019 ஏப்ரல் 21ஆம் திக­திக்கு பின்னர் மீள்­வா­சிப்­புக்கு உட்­ப­டுத்­த­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ளது.

நமது அர­சி­ய­லாக இருக்­கட்டும், ஆன்­மி­க­மாக இருக்­கட்டும், சமூகத் தொடர்­பா­ட­லாக இருக்­கட்டும் எது­வாக இருந்­தாலும் அனைத்­தையும் முழு­மை­யாக மீள்­வா­சிப்­புக்கு உட்­ப­டுத்தி வேண்­டி­யுள்­ளது. பல்­லி­னத்­தன்மை கொண்ட ஒரு நாட்டில் எங்­க­ளுக்­கான இடத்தை கௌர­வ­மாக வகுத்­துக்­கொள்­வது என்­பது சாதா­ர­ண­தொரு போராட்­ட­மாக இருக்கப் போவ­தில்லை.

இந்­தி­யாவில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக அநி­யாயம் நடக்­கின்­ற­போது, நியா­யத்­துக்­காக அனைத்து சமூ­கங்­களும் வீதியில் இறங்கி ஒன்­றாகப் போரா­டு­கின்­றனர். ஆனால், நாங்கள் இங்கு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளோம். இதனை தனி­யாகப் போராடி வெற்­றி­கொள்­வது சாதா­ரண விட­ய­மல்ல. எனவே, எங்­க­ளு­டைய உற­வுப்­பா­லங்­களை இன்னும் தாரா­ள­மாக மனம்­தி­றந்து உரு­வாக்­கிக்­கொள்ள வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

நாட்டில் இன்னும் குறு­கிய மனப்­பாங்கு மாற­வில்லை. இப்­போது சுவர்­களில் சித்­திரம் வரைந்தால் தங்­க­ளு­டைய சமயம், கலா­சாரம் என்­பன பற்றி பெரு­மைப்­பட்டுக் கொள்­ளலாம் என்று நினைக்­கின்­றனர். இப்­போது எல்லா சுவர்­க­ளிலும் சித்­தி­ரங்கள் வரை­யப்­ப­டு­கின்­றன. இதனால் நாங்­களும் ஏதா­வது படம் வரை­ய­வேண்­டிய தடு­மாற்ற நிலைக்கு ஆளா­கிறோம். இந்த தடு­மாற்றம் எங்கள் மத்­தியில் தொடர்ந்து நீடிக்­க­மு­டி­யாது.

அடுத்­த­கட்ட அர­சி­யலை எப்­படி எதிர்­கொள்­வ­தென்று வர்த்­தகப் பிர­மு­கர்கள் உட்­பட அநேகர் இன்று அடிக்­கடி கூடிக் கதைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். நாங்கள் மூடிய சுவர்­க­ளுக்குள் இருந்­து­கொண்டு இதற்கு முடி­வெ­டுக்க முடி­யாது. இந்த விட­யங்­களில் தூர­நோக்­கு­டைய, தெளி­வான, சாணக்­கி­ய­மான அணு­கு­மு­றை­களை நாங்கள் கையாள வேண்டும். அதற்­காக நாங்கள் நிறைய படிப்­பி­னை­களை கற்றுக் கொண்­டி­ருக்­கிறோம்.

நடந்த சம்­பவம் குறித்த மீள்­வா­சிப்பு என்­பது, பல அதிர்ச்­சி­யான விட­யங்­களை எங்­க­ளுக்கு காட்­டித்­தரும். நாங்­களே பார்க்­காத எத்­த­னையோ பக்­கங்கள் இருக்­கின்­றன. ராஜன் ஹூல் என்ற பேரா­சி­ரியர் இந்த சம்­பவம் தொடர்பில் ஓர் ஆய்வை மேற்­கொண்­டி­ருக்­கிறார். நாங்கள் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் நடத்­திய விசா­ர­ணை­களை அடிப்­ப­டை­யாக வைத்து, அவர் அதற்­குமேல் ஒரு விசா­ரணை செய்­கின்றார். அதி­லி­ருந்து பல அதிர்ச்­சி­யாக விட­யங்­களை தொட்டுப் பேசு­கிறார்.

Sri Lanka’s Easter Sunday: When the deep state gets out of its depth என்ற அவ­ரது நூலை எல்­லோரும் வாசிக்க வேண்டும். தாக்­கு­தலின் பின்­னா­லுள்ள சதி­கு­றித்து மிகவும் திட்­ட­வட்­ட­மாகப் பேசு­கிறார். கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய பல விட­யங்­களை நூலா­சி­ரியர் ஆதா­ர­பூர்­வ­மாக கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். அதி­லுள்ள விட­யங்­களை நான் பேசினால், என்னைப் பிடித்­துக்­கொண்டு போய்­வி­டு­வார்கள். ஏனென்றால், நாம் அப்­ப­டி­யான கால­கட்­டத்­தில்தான் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கிறோம்.

நாங்கள் பாரா­ளு­மன்­றத்தில் நடத்­திய தெரி­வுக்­குழு விசா­ர­ணை­களை அடிப்­ப­டை­யாக வைத்து, அதி­லுள்ள தக­வல்­களை திரட்டி, கடந்த காலங்­களில் நடந்­ததைத் தொகுத்துப் பார்க்­கின்­ற­போது இப்­ப­டித்தான் இந்த விட­யங்கள் அரங்­கே­றி­யி­ருக்­கின்­றன என்­பது புல­னாகும். ஈஸ்டர் தாக்­குதல் திட்­ட­மிட்ட சதி என்­பது குறித்து, நூலா­சி­ரியர் பல சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருக்­கிறார். அது ஒரு­வ­ரு­டைய பார்­வை­யாக இருந்­தாலும், இப்­படி பல கோணங்­களில் இருந்தும் விட­யங்கள் அணு­கப்­பட வேண்டும்.

தாக்­கு­தலின் உண்­மைத்­தன்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும் என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, யதார்த்­த­பூர்­வ­மாக இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு எப்­படி முகம்­கொ­டுப்­பது என்­பதில் இன்னும் கூர்­மை­யான சிந்­த­னை­க­ளோடு, பக்­கு­வப்­பட்ட அணு­கு­மு­றை­க­ளுடன் இந்த விட­யங்­களை கையா­ள­வேண்டும்.

ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க உரையில் அவர் தெரி­வித்த எங்­க­ளுக்கு உடன்­பா­டில்­லாத விட­யங்­களை பாரா­ளு­மன்­றத்தில் பேசி­யி­ருந்தேன். எடுத்­த­தற்­கெல்லாம் சிறு­பான்மை கட்­சி­களைச் சேர்ந்­த­வர்­களை தீவி­ர­வா­திகள் என்­கிறார். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­புகள் இனித் தேவை­யில்லை என்­கிறார். பெரும்­பான்மை சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­களால் மாத்­திரம் வெல்ல முடி­யாது என்ற சிந்­த­னையை நாங்கள் மாற்­றி­யி­ருக்­கிறோம் என்ற வெற்­றிக்­க­ளிப்பில் அவர் பேசி­யி­ருந்தார்.

அது­கு­றித்து நான் பாரா­ளு­மன்­றத்தில் பேசும்­போது அதில் எந்தப் பிழையும் ஆச்­ச­ரி­யமும் இல்­லை­யென்று சொன்னேன். நாட்­டி­லுள்ள ஒரு சமூகத்தவர்கள் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிகபட்சமாக வாக்களித்தார்கள் என்பது ஜனநாயகத்தில் ஆச்சரியமானதோ அல்லது பிழையான விடயமோ அல்ல. அதில் எந்த தவறும் இருக்க முடியாது. அதுதான் ஜனநாயகத்தின் ஒரு முக்கியமான அம்சம். ஜனாதிபதி இதை சொல்லிக் காட்டியதன் மூலம் அவர் என்ன சொல்லவருகிறார், அதில் தொக்கிநிற்கும் விடயம் என்பனதான் எங்களுக்கு சங்கடமானவை. தன்னுடன் இல்லாதவர்கள் தனது விரோதிகள் என்ற அவரின் நிலைப்பாடு, தனக்கு வாக்களிக்காத அனைவரும் தனது விரோதிகள் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்துவிடக்கூடாது. இதனால் சில விடயங்களை பக்குவமாக சிங்கள மொழியில் தெளிவாக சொல்லியிருந்தேன்.

நான் கூறிய விடயங்களை ஜனாதிபதி புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கு போதுமான சிங்கள பௌத்த மக்கள் வாக்களிக்கவில்லை என்றால், அதற்காக மக்களை குறைகூற முடியாது. ஏன் அந்த வாக்குகள் கிடைக்கவில்லை என்று ஐ.தே.க. சுயவிமர்சனம் செய்யவேண்டும். அதேபோல, ஜனாதிபதிக்கு போதுமான சிறுபான்மையினர் வாக்களிக்கவில்லை என்பதையும் அவர் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.