முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குக

பொதுக் கட்டளைச் சட்டத்திலும் திருத்தம் வேண்டும்; தனிநபர் பிரேரணையை சபையில் சமர்பித்தார் ரதன தேரர்

0 713

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் சட்­ட­மூ­ல­மொன்றை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தார். 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மா­கவே இது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் 1907 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விவாக (பொது) கட்­டளைச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்­றையும் அவர் தனி­நபர் சட்­ட­மூ­ல­மாக நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தார். இதற்­க­மைய 1907ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விவாக (பொது) கட்­டளைச் சட்­டத்தில் மாற்றம் ஏற்­ப­ட­வி­ருப்­ப­துடன் முக­வு­ரையில் காணப்­படும் முஸ்­லிம்­களின் திரு­மணம் தவிர்ந்த என்ற வசனம் நீக்­கப்­பட வேண்டும் என அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக 2009ஆம் ஆண்டு குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் தலை­வ­ராக முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப்  நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். இந்தக் குழு 9 வரு­டங்கள் இது தொடர்பில் பல­த­ரப்­பட்ட கருத்­துக்­களை சேக­ரித்­தி­ருந்­த­துடன் 2018ஆம் ஆண்டு தமது பரிந்­து­ரை­களை உள்­ள­டக்­கிய இறுதி அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தது. இதன் பின்னர் 2019 ஜுலையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் அறிக்­கை­யி­லுள்ள 14 பரிந்­து­ரைகள் தொடர்பில் இணக்கம் தெரி­வித்­தி­ருந்­த­போதும் பின்னர் அது இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

முஸ்லிம் பெண்­களின் ஆகக்­கு­றைந்த திரு­மண வயது சரி­யாகக் குறிப்­பி­டப்­ப­டா­மையே தற்­போது நடை­மு­றையில் உள்ள முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் விவா­தப்­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. இச்­சட்­டத்தின் 23 ஆவது சரத்தில் 12 வய­து­டைய முஸ்லிம் பெண் பிள்­ளைகள் காதி நீதி­மன்­றத்தின் அனு­ம­தி­யி­ருந்தால் ஆண் ஒரு­வரைத் திரு­மணம் முடிக்க முடியும் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சட்­ட­மூ­லங்­களை முன்­வைத்த அத்­து­ர­லியே ரதன தேரர் கூறு­கையில், முஸ்­லிம்­களின் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் தொடர்பில் காதி நீதி­மன்­றங்­க­ளினால் இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பிலும் அடிப்படைவாதிகளினால் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளினால் எனது சமூக வலைத்­த­ளங்கள் முடக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் இச்சபையின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன் என்றார்.-Vidivelli

  • ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

Leave A Reply

Your email address will not be published.