முஸ்லிம்களை இலக்கு வைக்கும் தனிநபர் சட்டமூலங்கள்

0 727

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் சட்­ட­மூ­ல­மொன்றை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருக்­கிறார். 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மா­கவே இது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் 1907 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விவாக (பொது) கட்­டளைச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்­றையும் அவர் தனி­நபர் சட்­ட­மூ­ல­மாக நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருக்­கிறார். இதற்­க­மைய குறித்த கட்­டளைச் சட்­டத்தில் மாற்றம் மேற்­கொள்­ளப்­பட்டு முக­வு­ரையில் காணப்­படும் ‘முஸ்­லிம்­களின் திரு­மணம் தவிர்ந்த‘ என்ற வசனம் நீக்­கப்­பட வேண்டும் என ரதன தேரரின் பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில் அர­சி­ய­ல­மைப்பில் 21 ஆம் 22 ஆம் திருத்­தங்­களை முன்­வைத்து இரு வேறு தனி நபர் பிரே­ர­ணை­களை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜ­பக்ச கடந்த வாரம் வெளியிட்­டி­ருந்தார். இதில் ஒன்று பாரா­ளு­மன்ற தேர்தலில் சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்­கு­ரிய வெட்டுப் புள்­ளியை 5 வீதத்­தி­லி­ருந்து 12.5 வீத­மாக மீண்டும் அதி­க­ரிப்­ப­தற்­கான தனி நபர் பிரே­ரணை முக்­கி­ய­மா­ன­தாகும்.

மேற்­படி இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளதும் தனி­நபர் பிரே­ர­ணை­க­ளி­னதும் நோக்­க­மா­னது சிறு­பான்மை சமூ­கங்­களை குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தை இலக்­காகக் கொண்­டவை என்­பது வெள்ளிடை­ம­லை­யாகும்.

அது­ர­லியே ரதன தேரர் மிகப் பகி­ரங்­க­மா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதப் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து வரு­ப­வ­ராவார். ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்­னரும் ஜனா­தி­பதித் தேர்தல் காலத்­திலும் அவர் முன்­னெ­டுத்த பிர­சா­ரங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் இல­குவில் மறந்­து­விட முடி­யாது. இந் நிலை­யில்தான் இன்று சட்­டங்கள் மூல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான காய்­ந­கர்த்­தலை அவர் ஆரம்­பித்­துள்ளார்.

அதே­போன்­றுதான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜ­பக்­சவின் செயற்­பா­டு­களும் இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. சிறு­பான்மை கட்­சி­களும் சிறிய கட்­சி­களும் தற்­போ­தைய வெட்டுப் புள்ளி முறை­மைக்கு அமை­வா­கவே ஓர­ள­வேனும் தமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடி­கி­றது. இது இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தின் பன்­மைத்­து­வத்­திற்கு மிகவும் அவ­சி­ய­மா­ன­தொரு அம்­ச­மாகும். ஆனால் இவ­ரது பிரே­ர­ணைக்­க­மைய வெட்டுப் புள்ளி மீண்டும் 12.5 ஆக அதி­க­ரிக்­கப்­ப­டு­மாயின் அது சிறு­பான்மை சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் பெரும்­பான்மை சமூ­கத்­தி­லுள்ள மாற்று சக்­தி­களின் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் வெகு­வாக குறைத்­து­விடும் அபா­யத்தை தோற்­று­விக்கும்.

மேற்­படி இரு எம்.பி.க்களிதும் பிரே­ர­ணை­க­ளி­னதும் வெற்றி தோல்விகள் ஒரு­பு­ற­மி­ருக்க, இவர்­க­ளது இன­வாத நகர்­வுகள் கவலை தரு­வ­தா­க­வே­யுள்­ளன.

இந்தப் பிரே­ர­ணைகள் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் ஆசீர்­வா­தத்­து­டன்தான் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­னவா? இவற்­றுக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­னரா? என்­பது இது­வரை தெரி­ய­வில்லை. தற்­போ­தைய பாரா­ளு­மன்ற காலத்தில் இல்­லா­வி­டினும் அடுத்த பாரா­ளு­மன்ற பதவிக் காலத்தில் இவ்­வா­றான மேலும் பல சட்­ட திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்கள் சிறு­பான்மை சமூ­கத்­திற்­கெ­தி­ராக கொண்­டு­வ­ரப்­ப­டலாம் என்ற அச்சம் இப்­போதே எழத் தொடங்­கி­யுள்­ளது. இதற்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இட­ம­ளிக்கக் கூடாது என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

‘‘நான் சகல மக்களையும் அரவணைத்துச் செல்லுகின்ற ஜனாதிபதி‘‘ என தனது பதவியேற்பு நிகழ்விலும் பாராளுமன்ற அக்கிரசான உரையிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அளித்த வாக்குறுதியை அவர் இலகுவாக மறந்துவிட முடியாது. அந்த வகையில் இவ்வாறான இனவாத நகர்வுகள் தொடர்பில் அவர் விழிப்புடன் இருப்பதும் சிறுபான்மை சமூகத்திற்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-vidivelli

Leave A Reply

Your email address will not be published.