சுலைமானி படுகொலைக்கு இலங்கை கவலை தெரிவிப்பு

0 1,235

ஈரானின் குத்ஸ் படை­ய­ணியின் தள­பதி ஜெனரல் காசிம் சுலை­மானி அமெ­ரிக்­காவின் ஆளில்லா விமானத் தாக்­கு­தலில் படு­கொலை செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து மத்­திய கிழக்கில் அதி­க­ரித்து வரும் பதற்ற நிலை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்­டுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அத்­தோடு மத்­திய கிழக்கில் அதி­க­ரித்­துள்ள பதற்ற நிலை குறித்து அதிக கரி­சணை கொண்­டுள்­ள­தாக இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது. ஆக்­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் பிராந்­தி­யத்தில் நிதா­னத்­தையும், அமை­தி­யையும் நிலை­நாட்ட அனைத்து தரப்­பி­னரும் முன்­வர வேண்­டு­மெ­னவும் இலங்கை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

மேலும் பிராந்­தி­யத்தில் உரு­வா­கி­யுள்ள பதற்ற நிலை­மையைத் தவிர்ப்­ப­தற்­கா­கவும் சமா­தானம் மற்றும் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்­கா­கவும் அனைத்து தரப்­பி­னரும் ஆக்­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுக்க வேண்­டு­மெ­னவும் இலங்கை அரசு கோரி­யுள்­ளது.

ஈராக் தலை­நகர் பக்­தாதில் ஈரான் இரா­ணுவத் தள­பதி காசிம் சுலை­மானி அமெ­ரிக்க ஆளில்லா விமான தாக்­கு­தலில் படு­கொலை செய்­யப்­பட்­ட­மைக்கு பதி­லடி கொடுப்­ப­தாக ஈரான் அறி­வித்­துள்­ளது. இதே­வேளை அமெ­ரிக்கா ஈரானின் 52 கலா­சார மையங்­களைத் தாக்­கு­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

ஈராக்கில் நிலை கொண்­டுள்ள அமெ­ரிக்க படைகள் உட்­பட வெளிநாட்டுப் படைகள் அந்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டுமென ஈராக் பாராளுமன்றம் பிரேரணையொன்றினை நிறைவேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.