சி.ஐ.டி முன்னாள் பணிப்பாளர் ஷானி பணியிலிருந்து இடைநிறுத்தம்

0 545

சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பா­ளரும், தற்­போ­தைய காலி பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் பிரத்­தி­யேக உத­வி­யா­ள­ரு­மான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர உடன் அமு­லுக்கு வரும் வகையில் நேற்று முதல் பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்­குழு, அவரை நேற்று உட­ன­டி­யாக பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு இட­மாற்றி இவ்­வாறு பணி இடை­நி­றுத்தம் செய்­துள்­ளது. ஊட­கங்­களில் பர­வி­வரும், முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­க­வுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக இருந்­த­போது முன்­னெ­டுத்­த­தாகக் கூறப்­படும் தொலை­பேசி உரை­யா­ட­லொன்றின் ஒலிப்­ப­தி­வினால், இலங்கை பொலிஸ் சேவையின் நற்­பெ­ய­ருக்கு களங்­க­மேற்­ப­டுத்­தினார் என்ற கார­ணத்­துக்­காக அவர் இவ்­வாறு பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தேசிய பொலிஸ் ஆணைக்­குழு தெரி­வித்­தது.

இந்­நி­லையில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர தொடர்­பி­லான குறித்த சம்­பவம் தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து எதிர்­வரும் இரு வாரங்­க­ளுக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்­ன­வுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்­குழு உத்­த­ர­விட்­டுள்­ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவின் குறித்த தொலை­பேசி உரை­யாடல் தொடர்பில் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்குப் பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்­தன.

எவ்­வா­றா­யினும், இந்த தொலை­பேசி உரை­யாடல் அடங்­கிய ஒலிப்­ப­தி­வுகள் கிடைத்­த­தாகக் கூறப்­படும், முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க கைது செய்­யப்­பட்ட சம்­பவம், அவ­ரது வீட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்ட ஆவ­ணங்கள், பொருட்கள் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு மேல் மாகாண தெற்கு குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­ன­ரி­ட­மி­ருந்து சி.சி.டி. எனப்­படும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

முன்­ன­தாக இலங்­கையின் மிக அனு­ப­வ­மிக்க, முன்­னணி குற்­றங்கள் தொடர்­பி­லான மர்­மங்­களை துலக்­கிய குற்றப் புல­னாய்­வா­ள­ரான சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவை அந்தப் பத­வி­யி­லி­ருந்து நீக்கி காலி பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் தனிப்­பட்ட உத­வி­யா­ள­ராக கடந்த 2019 நவம்பர் 21 ஆம் திகதி முதல் இட­மாற்றம் வழங்கி தேசிய பொலிஸ் ஆணைக்­குழு உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவை சி.ஐ.டி. பணிப்­பாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு, அந்தப் பத­விக்கு பொலிஸ் சூழல் பாது­காப்பு பிரிவின் பணிப்­ப­ாள­ரா­க­வி­ருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் டப்­ளியூ. தில­க­ரத்ன தற்­போது நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இந்­நி­லையில் கடந்த 2019 டிசம்பர் 20 ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர அந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் நஷ்­ட­ஈடு கோரி அடிப்­படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே ரஞ்சன் ராமநாயக்க எம்.பி.யின் வீடு சோதனைக்குட்பட்ட போது சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் சிக்கியதாக கூறப்படுகின்றது. அந்தக் குரல் பதிவுகளில் தீர்ப்பளிக்கப்பட்ட பாரத லக் ஷ்மன் கொலை விவகாரம் தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் தொடர்பிலேயே சர்ச்சை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.