காதிகள் சபைக்கு செயலாளர் நியமிக்கப்படாமையால் அசௌகரியம்

0 654

காதிகள் சபைக்கு (Board of Quazis) கடந்த ஒன்­றரை வருட கால­மாக செய­லாளர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டா­மையால் காதிகள் சபையின் சேவையைப் பெற்­றுக்­கொள்ளச் செல்லும் முஸ்­லிம்கள் பல அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொள்­வ­தா­கவும், சேவைகள் தாம­தத்­துக்கு உட்­ப­டு­வ­தா­கவும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் புகார் தெரி­வித்­துள்­ளன.

இதே­வேளை காதிகள் சபைக்கு பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­தவர் ஒருவர் பதி­வாளர் திணைக்­க­ளத்­தினால் நிய­மிக்­கப்­பட்டும் அவரும் இது­வரை தனது கட­மையைப் பொறுப்­பேற்­க­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பதி­வாளர் திணைக்­களம் கடந்த அக்­டோபர் மாதம் இந்­நி­ய­மனக் கடி­தத்தை வழங்­கி­யுள்­ளது.

ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கும் மேலாக காதிகள் சபைக்கு செய­லாளர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டாது அப்­ப­தவி வெற்­றி­ட­மாக இருப்­பது தொடர்பில் காதி நீதி­வான்கள் மன்றம் முன்னாள் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தி­ருந்­தது.

காதி நீதி­மன்­றங்கள், காதி நீதி­ப­திகள் தொடர்­பான பணி­களை முன்­னெ­டுக்கும் காதிகள் சபைக்கு உட­ன­டி­யாக முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் என காதி நீதி­வான்கள் மன்­றமும், முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களும் கோரிக்கை விடுத்­துள்­ளன.

அத்­தோடு காதிகள் சபை காரி­யா­லயம் கொழும்பு ஹல்ஸ்­டோர்ப்பில் சிறி­யதோர் அறையில் இயங்கி வரு­வதால் இடப்­பற்­றாக்­குறை நில­வு­வதும் சுட்டிக் காட்டப் பட்­டுள்­ளது. நாடெங்கும் சேவை­யி­லுள்ள 60 க்கும் மேற்­பட்ட காதி நீதி­ப­திகள் மாதாந்தம் அனுப்பி வைக்கும் தீர்ப்பு வழங்­கப்­பட்ட வழக்கு கோவை­களை களஞ்­சி­யப்­ப­டுத்­து­வ­தற்கு ஆவ­ணக்­காப்­பகம் ஒன்று இல்­லா­மையால் காதிகள் சபைக் காரி­யா­லயம் வழக்கு கோவை­களால் நிரப்­பி­யுள்­ளது. நிலை­மை­யினை சமாளிக்க முடியாமையால் தீர்ப்பு வழங்கப்பட்ட காதி நீதிவான்களின் வழக்கு கோவைகளைப் பெற்றுக்கொள்வதை காதிகள் சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.