சம்பிக்கவின் கைதும் பின்னணியும்

0 766

அர­சி­யலில் நிரந்­தர நண்­ப­னு­மில்லை, பகை­வ­னு­மில்லை. இதற்­கேற்ப திடீர் திருப்பு முனைகள் அர­சி­யலில் ஏற்­ப­டு­வது வழ­மை­யாகும். அந்த அடிப்­ப­டையில் நேற்று முன்­தினம் இரவு ஏற்­பட்ட திடீர் திருப்பு முனையே முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜாதிக ஹெல உரு­ம­யவின் செய­லா­ள­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவின் கைதாகும்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் ஊடாக மஹிந்த ராஜ­ப­க் ஷவின் 10 வருட ஆட்சி முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் குறித்த ஆட்­சியில் முக்­கிய புள்­ளி­க­ளாக காணப்­பட்ட பசில் ராஜ­ப­க் ஷ, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ, நாமல் ராஜ­ப­க் ஷ யோசித ராஜ­ப­க் ஷ உள்­ளிட்ட பலர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

இது­போ­லவே கடந்த நவம்பர் 16ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் வெற்­றி­யினை அடுத்து மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் பலர் கைது செய்­யப்­ப­டு­வார்கள் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. முன்னாள் அமைச்­சர்­க­ளான றிசாத் பதி­யுதீன், ரவி கரு­ணா­நா­யக்க, ராஜித சேனா­ரத்ன, மலிக் சம­ர­விக்­ரம, மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் உள்­ளிட்ட பலரின் பெயர்கள் பர­வ­லாக பேசப்­பட்­டன. இந்த நிலையில் எவரும் எதிர்­பா­ராத வகையில், ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க கைது செய்­யப்­பட்­டுள்­ளமை அர­சியல் அரங்கில் மிகுந்த பதற்­றத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

யார் இந்த சம்­பிக்க?

1965 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி களுத்­துறை மாவட்­டத்தின் புளத்­சிங்கள பிர­தே­சத்தில் பிறந்த இவர், ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­யினை அடுத்து ஹொரண தக்­சிலா கல்­லூ­ரியில் அனு­மதி பெற்று உயர் தரம் வரை அங்கு கல்வி கற்றார்.

கல்வி பொதுத் தரா­தர உயர் தரப் பரீட்­சையில் களுத்­துறை மாவட்­டத்தில் முதலாம் இடத்­தினைப் பெற்று மொறட்­டுவ பல்­க­லைக்­க­ழகத்தின் பொறி­யியல் துறைக்குள் நுழைந்த சம்­பிக்க ரண­வக்க, அங்­கி­ருந்து மின் பொறி­யி­ய­லா­ள­ராக வெளி­யே­றினார்.

பல்­க­லைக்­க­ழக காலத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முக்­கிய செயற்­பாட்­டா­ள­ராக செயற்­பட்ட இவர், பல தட­வைகள் சிறை சென்­றுள்ளார்.
1993ஆம் ஆண்டு காலப் பகு­தியில் அது­ர­லிய ரதன தேர­ருடன் இணைந்து ஜனதா மிதுரு எனும் அமைப்­பொன்­றினை உரு­வாக்கி நேரடி அர­சி­யலில் நுழைந்தார்.

1998 ஆம் ஆண்டு காலப் பகு­தியில் சிஹல உறு­மய கட்­சியில் இணைந்து அதன் முக்­கிய செயற்­பாட்­டா­ள­ராக இயங்­கினார். பின்னர் அக்­கட்­சி­யினை பௌத்த தேரர்­களின் கட்­சி­யாக மாற்றும் நட­வ­டிக்­கை­யினை இவரே தலை­மை­யேற்று செயற்­பட்டு அதில் வெற்­றி­யு­ம­டைந்தார். இதனால் அக்­கட்­சியின் பெயர் ஜாதிக ஹெல உறு­மய என மாற்­றப்­பட்­டதை தொடர்ந்து அக்­கட்­சியின் ஸ்தாப­கர்கள் பலர் ஓர­மாக்­கப்­பட்­டனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் பௌத்த தேரர்­களை கள­மி­றக்கி ஒன்­பது ஆச­னங்­களை இக்­கட்சி கைப்­பற்­றி­யது. பௌத்த தேரர்­களை நேரடி அர­சி­ய­லுக்குள் உட்­ப­டுத்­திய கட்சி என்ற பெருமை ஜாதிக ஹெல உறு­ம­ய­வையே சாரும். இதில் பாட்­டாலி சம்­பிக்க ரண­வக்­கவே பிர­தான பங்­காற்­றினார்.

இந்த தேர்­தலில் தமிழ் மக்­க­ளையும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளையும் கடு­மை­யாக விமர்­சனம் செய்தே சிங்­கள மக்­களின் ஆத­ர­வினை இந்த கட்சி பெற்­றது. அது மாத்­தி­ர­மல்­லாமல் சுய­லாப அர­சியல் நல­னினை கருத்திற் கொண்டு தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு போராட்­டங்­களை பௌத்த தேரர்கள் தலை­மையில் இந்த கட்சி நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுத்­தி­ருந்­தது.
கடந்த 2005ஆம் மற்றும் 2010ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு ஆத­ரவு வழங்கி அவரை இக்­கட்சி வெற்றி பெறச் செய்­தது.

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியில் ஜாதிக ஹெல உறு­ம­ய­விற்கு அமைச்சர் பத­வி­யொன்றும் வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது. குறித்த பத­வி­யினை சம்­பிக்க ரண­வக்­க­விற்கு வழங்­கு­வ­தற்­காக அக்­காலப் பகு­தியில் இந்த கட்­சியின் தலை­வ­ராக செயற்­பட்ட ஓமல்பே சோபித தேரர் தனது தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யினை இவ­ருக்­காக இரா­ஜி­னாமாச் செய்து விட்­டுக்­கொ­டுத்தார்.

இத­னை­ய­டுத்து 2007ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் சுற்­றாடல் மற்றும் இயற்கை வள அமைச்­ச­ராக சம்­பிக்க நிய­மிக்­கப்­பட்டார். கடந்த 2010ஆம் மற்றும் 2015ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய இவர், பல்­வேறு அமைச்சு பத­வி­களில் பணி­யாற்­றி­யுள்ளார்.

2015 ஜனா­தி­பதித் தேர்­தலின் போது பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஜாதிக ஹெல உறு­மய ஆத­ர­வ­ளித்­தது. இத­னை­ய­டுத்து மைத்­தி­ரியின் வெற்­றிக்குப் பின்னர் இவர் தொடர்ச்­சி­யாக அமைச்சுப் பத­வி­களை வகித்து வந்தார்.

சம்­பிக்­க­விற்கு எதி­ரான குற்­றச்­சாட்டு

கடந்த 2016 பெப்­ர­வரி 28ஆம் திகதி ஸ்ரீ ஜய­வர்த்­த­ன­புர கோட்­டே­யி­லுள்ள பாரா­ளு­மன்ற வீதியில் ஜீப் வாக­ன­மொன்றும் 1,000 சீ.சீ. மோட்டர் சைக்­கி­ளொன்றும் மோதி­யுள்­ளன. குறித்த ஜீப்­பினை அக்­காலப் பகு­தியில் பெரு நக­ரங்கள் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக செயற்­பட்ட பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவே செலுத்திச் சென்­றுள்ளார். எனினும், பெரு நக­ரங்கள் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சின் சார­தி­யொ­ரு­வரே குறித்த வாக­னத்­தினை செலுத்­தி­ய­தாக முன்­வந்து குற்­றத்­தினை பொலிஸில் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

இருந்­த­போ­திலும் பெரு நக­ரங்கள் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்­சிற்கு சொந்­த­மான குறித்த வானத்­தினை பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவே செலுத்­தி­ய­தாக நேரில் கண்ட இரு சாட்­சிகள் தனித் தனி­யாக இரு சத்­தியக் கட­தா­சி­களை பொலிஸ் தலை­மை­ய­கத்­திற்கு அக்­காலப் பகு­தியில் வழங்­கி­யி­ருந்­தனர்.

எவ்­வா­றா­யினும் குறித்த விபத்து தன்னால் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என சம்­பிக்க ரண­வக்க நிரா­க­ரித்­த­துடன் இந்த விபத்து தொடர்­பான பொலிஸ் விசா­ர­ணை­களின் போது எந்­த­வித அழுத்­தமும் பிர­யோ­கிக்­க­வில்லை என்றார்.
அக்­கா­லப்­ப­கு­தியில் இந்த விபத்து பாரிய சர்ச்­சை­யொன்­றினை தோற்­று­வித்­தி­ருந்­த­துடன் சமூக ஊட­கங்­களில் கடு­மை­யான விமர்­ச­னத்­திற்கும் உட்­பட்­டி­ருந்­தது.

இந்த விபத்தில் சிக்­குண்ட கொட­கம பிர­தே­சத்­தினைச் சேர்ந்த சந்தீப் சம்பத் தற்­போது நிரந்­த­ர­மாக ஊன­முற்­றுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்­பான விசா­ர­ணை­களை சுமார் மூன்­றரை வரு­டங்கள் கழிந்த நிலையில் கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் மீண்டும் ஆரம்­பித்­துள்­ள­துடன் விசேட அறிக்­கை­யொன்­றி­னையும் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் சமர்ப்­பித்­தனர்.

இதனால் முன்னாள் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க வெளி­நாடு செல்­வ­தற்கு கடந்த 13ஆம் திகதி நீதி­மன்றம் தடை உத்­த­ரவு பிறப்­பித்­தது.
இதற்கு எதி­ராக தனது சட்­டத்­த­ர­ணிகள் ஊடாக நீதி­மன்றில் விசேட மனு­வொன்­றினை அவர் கடந்த 16 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை தாக்கல் செய்­தி­ருந்தார்.

இந்த வழக்கின் சந்­தேக நபர்­க­ளாக முன்னாள் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவோ அல்­லது அவரின் சார­தியோ குறிப்­பி­டப்­ப­டாத நிலையில் சார­தியின் தாய், மனைவி மற்றும் ஒன்­றரை வயது குழந்தை ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக சம்­பிக்க ரண­வக்­கவின் சட்­டத்­த­ர­ணிகள் மன்றில் குற்­றம்­சாட்­டினர். எனினும் இதனை கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் நிரா­க­ரித்­தி­ருந்­தனர்.

தண்­டனைச் சட்டக் கோவையில் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் ஊடாக இந்த மனு தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு எதிர்­வரும் பெப்­ர­வரி 14ஆம் திகதி மன்­றுக்கு சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் காஞ்­சனா நிரஞ்­சலா டி சில்வா உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

மகா­நா­யக்க தேரர்கள் சந்­திப்பு

இந்த நிலையில் தான் கைது செய்­யப்­ப­டலாம் என்ற தோற்­றப்­பாட்டில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை கண்­டிக்கு விஜயம் செய்து மல்­வத்த மகா­நா­யக்க தேரர் உள்­ளிட்ட மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து வாகன விபத்து தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தினார். அர­சி­ய­லி­லி­ருந்து தன்னை ஓரங்­கட்டும் முயற்­சி­யா­கவே இந்த போலிக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் இந்த சந்­திப்­புக்­களின் போது குறிப்­பிட்டார்.

கைது

இந்த நிலையில் குறித்த வாகன விபத்து தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்­க­வினை கைது செய்து நீதின்றில் சமர்ப்­பிக்­கு­மாறு சட்­டமா அதிபர் கொழும்­புக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதி­ப­ருக்கு 18 ஆம் திகதி அறி­வு­றுத்­தி­யி­ருந்தார். இதனால் குறித்த தின­மான புதன்­கி­ழமை பி.ப 7.05 மணி­ய­ளவில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க அவ­ரது இல்­லத்தில் வைத்து கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து அவர் தெமட்­ட­கொ­ட­யி­லுள்ள கொழும்பு குற்றப் புல­னாய்வுப் பிரி­விற்கு அழைத்து வரப்­பட்டு வாக்­கு­மூலம் பெறப்­பட்ட பின்னர் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது, நேற்று வியா­ழக்­கி­ழமை காலை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.
மீண்டும் நேற்று வியா­ழக்­கி­ழமை மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது அவரின் பிணை மனு நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தோடு எதிர்­வரும் 24ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை வரை விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­டது.

கைதுக்கு எதிர்ப்பு

இவரின் கைதினை அடுத்து சஜித் பிரே­ம­தாச உள்­ளிட்ட ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு மற்றும் நீதி­மன்றம் ஆகி­ய­வற்­றுக்கு விஜயம் செய்து சம்­பிக்க ரண­வக்­கவின் கைதுக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ரான ரணில் விக்கி­ர­ம­சிங்க சம்­பிக்க ரண­வக்­கவின் இல்­லத்­திற்கு சென்று அவரின் ஆத­ர­வா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் அடுத்த கட்ட சட்ட நட­வ­டிக்கை தொடர்பில் ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கினார்.

சம்­பிக்க ரண­வக்க கைது செய்­யப்­படும் போது இரத்­தி­ன­புரி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான அவ­ருடன் வீட்டில் இருந்­த­துடன் கைதுக்கு எதிர்ப்­பினை வெளி­யிட்டார். அது போன்று, இந்த கைது தொடர்பில் சபா­நா­ய­க­ருக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இதனால் சம்­பிக்க ரண­வக்­க­வினை கைது செய்ய முடி­யாது என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்ச டி சில்வா தெரி­வித்து எதிர்ப்பு வெளி­யிட்டார். எவ்­வா­றா­யினும் சம்­பிக்க ரண­வக்க கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

கைது சொல்­ல­வரும் செய்தி என்ன?

கடந்த அரசில் ஊழல் புரிந்த பலர் இருக்­கையில் சம்­பிக்க ரண­வக்க கைது செய்­யப்­பட்­ட­மைக்­கான காரணம் என்ன என்ற கேள்வி தற்­போது நாட்டு மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது.

சஜித் பிரே­­ம­தாச, ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏற்­பட்ட தோல்­வி­யி­லி­ருந்து இன்னும் மீண்டு வர­வில்லை. ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளினால் சுமார் 280 கோடி கடன் நெருக்­க­டிக்குள் அவர் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரி­வித்­தி­ருந்தார். பாரா­ளு­மன்ற தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தென்றால் கட்­சியின் தலைமை பதவி வழங்­கப்­பட வேண்டும் என சஜித் பிரே­ம­தாச அறி­வித்­துள்ளார். இதனால், ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் இன்று பாரிய நெருக்­கடி தோன்­றி­யுள்­ளது. அக்­கட்சி பல்­வேறு சவால்­களை எதிர்­கா­லத்தில் முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பல தொடர் தோல்­வி­களை சந்­தித்து வரு­கின்ற ஐக்­கிய தேசிய கட்­சிக்கு புதிய இளம் தலை­மைத்­து­வ­மொன்று தேவைப்­ப­டு­கின்­றது. அதற்­கா­கவே சஜித் பிரே­ம­தாச, பல்­வேறு சர்ச்­சை­க­ளுக்கு மத்­தி­யிலும் ஐக்­கிய தேசிய கட்யின் தலை­வ­ரான ரணில் விக்கி­ர­ம­சிங்­கவின் பூரண ஆத­ர­வின்­றியும் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றக்­கப்­பட்டார். எனினும் குறித்த தேர்­தலில் அவர் தோல்­வி­ய­டைந்­ததை அடுத்து சிங்­கள பௌத்த மக்­களின் ஆத­ர­வினை பெற்ற ஒரு­வரை ஐக்­கிய தேசிய கட்சி தேடு­கி­றது. அதற்கு பொருத்­த­மான ஒருவர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவே என்­ப­தனை அக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பலர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு அறி­வித்­துள்ளார்.
இதனால் முன்னாள் அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க் ஷவின் வெளி­யேற்­றத்­தினை அடுத்து வெற்­றி­ட­மா­க­வுள்ள சிங்­கள பௌத்த வாக்­குகளைக் கொண்ட மக­ர­கம தேர்தல் தொகு­தியின் ஐக்­கிய தேசிய கட்சி அமைப்­பா­ள­ராக சம்­பிக்க ரண­வக்க நிய­மிக்­கப்­பட தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இந்த நிய­ம­னத்­தினால் சிங்­கள பௌத்த வாக்­கு­களின் மூலம் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்ட கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவுக்கு எதி­ராக போராட முடியும் என்ற நிலைப்­பாட்டில் ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் உள்­ளனர்.

ஜனா­தி­பதி கனவு

இலங்­கையில் 2020ஆம் ஆண்டில் சிங்­கள பௌத்த வாக்­கு­க­ளுடன் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக தான் வர வேண்டும் என்ற கன­வி­லேயே சம்­பிக்க ரண­வக்க தனது அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வந்தார்.

இதற்­காக அவர் கையில் எடுத்த ஆயு­தமே இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­த­மாகும். இதனை முன்­வைத்து கடந்த பல வரு­டங்­க­ளுக்கு முன்­னரே இலங்கை முஸ்­லிம்­களை கடு­மை­யாக விமர்­சிக்கத் தொடங்­கினார். அது மாத்­தி­ர­மல்­லாமல் சிங்­கள மக்கள் மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான துவேச பிர­சா­ரத்­தினை முதலில் முன்­னெ­டுத்­தவர் இவரே.

‘அல் – ஜிஹாத் அல் – கைதா‘ எனும் நூலை கடந்த 2003ஆம் ஆண்டு இவர் வெளி­யிட்டார். அது போன்று கிழக்கு மாகாண முஸ்­லிம்­க­ளினால் சிங்­கள பாரம்­ப­ரியம் அழிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்தும் நூலொன்­றினை இவர் வெளி­யிட்டார். தர்கா நகர் கல­வ­ரத்தின் பின்­ன­ணியில் இவரே செயற்­பட்­ட­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வினர் தொடர்ச்­சி­யாக குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர்.

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியில் பலம் பெருந்­திய அமைச்­ச­ராக செயற்­பட்ட இவர், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத கருத்­துக்­க­ளினை முன்­வைத்து பௌத்த – சிங்­கள மக்கள் மத்­தியில் நன்­ம­திப்­பினை பெற்றார். எனினும் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்கு இவர் ஆத­ர­வ­ளிக்க தொடங்­கி­யதை அடுத்து பௌத்த – சிங்­கள மக்கள் மத்­தியில் இவ­ருக்கு காணப்­பட்ட நன்­ம­திப்பு குறை­வ­டைந்­தது. எனினும் தற்­போது இவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து சிங்­கள மக்கள் மத்­தியில் இவரின் செல்­வாக்கு அதி­க­ரித்து வரு­கின்­ற­மை­யினை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

குறிப்­பாக நேற்று முன்­தினம் இரவு நீதி­மன்­றுக்கு அருகில் பெரும்­பா­லான பெளத்த பிக்­கு­களும் பொது மக்­க­ளுக்கும் ஒன்­று­தி­ரண்டு சம்­பிக்க ரண­வக்­கவின் கைதுக்கு எதி­ராக கோஷங்­களை எழுப்­பினர். சிங்­கள பெளத்த தலைவர் ஒரு­வ­ருக்கு எதி­ரான இந்த நட­வ­டிக்கை தம்மை ஆத்­தி­ர­மூட்­டி­யுள்­ள­தாக பிக்­குகள் சிலர் பகி­ரங்­க­மா­கவே கருத்து வெளியிட்­டனர். ”நாமே வாக்­க­ளித்து கோத்­தா­பய ராஜ­பக்­சவை ஜனா­தி­ப­தி­யாக்­கினோம். ஆனால் அவர் இன்று சிங்­கள பெளத்த தலைவர் ஒரு­வ­ரையே சிறைக்குள் தள்­ளி­யுள்ளார். இந் நிலை தொடர்ந்தால் நாம் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக வீதியில் இறங்க வேண்டிவரும்” என இதன்போது இளம் பெளத்த பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு ஆக்ரோஷமாக கருத்து வெளியிட்டார்.

இந்தக் கைது ஒரு வகையில் சம்பிக்க ரணவக்கவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடிக் கொடுத்துள்ளது என்பதையும் அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் கடந்த பல தசாப்த காலமாக ஐக்கிய தேசிய கட்சியினை ஆதரித்து வருகின்ற நிலையில் சிங்கள – பௌத்த கோட்பாட்டினை கொண்ட சம்பிக்க ரணவக்க அக்கட்சியின் தலைமைத்துவத்தினை பொறுப்பேற்றால் அல்லது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அக் கட்சியினால் சிறுபான்மையினரின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.

2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் சிங்கள பெளத்த பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தக் கூடிய தலைவர் ஒருவரே ஜனாதிபதியாக வரலாம் என்கின்ற அரசியல் சூத்திரம் நிறுவப்பட்டிருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதனை நோக்கியே தள்ளப்பட்டிருக்கின்றது. இந்த சவாலை எதிர்கொள்ள அக் கட்சிக்கு இப்போதுள்ள தெரிவு சம்பிக்க மாத்திரமே. அதனால்தான் சம்பிக்க ரணவக்கவை சிறையில் தள்ளி அவரை அடுத்த தேர்தலில் போட்டியிடச் செய்ய முடியாதவாறு சட்ட ரீதியாக தடைகளை ஏற்படுத்துவதற்கான காய்நகர்த்தலை பொது ஜன பெரமுன இப்போதே ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எதிர்வரும் காலங்களில் மேலும் பல உயர்மட்ட கைதுகள் நடக்கலாம். அடுத்த இலக்கு யார் என்பதை சமகால களநிலைவரங்களை உற்றுநோக்குபவர்களால் நிச்சயம் எதிர்வுகூற முடியுமாகவிருக்கும்.-Vidivelli

  • றிப்தி அலி

Leave A Reply

Your email address will not be published.