இருளும் ஒளியும்

0 743

நார­ஹேன்­பிட்ட அப­யா­ராம விஹா­ரையின் தலைமைப் பொறுப்பில் இருக்­கின்ற முறுத்­தொட்­டுவே வத்த ஆனந்த தேரர் அண்­மையில் விநோ­த­மா­ன­தொரு கோரிக்­கையை பொது­மக்­க­ளிடம் முன்­வைத்­தி­ருந்தார். அன்­றாட செல­வு­க­ளைக்­கூட ஈட்­டிக்­கொள்ள முடி­யாத நிலையில் அர­சாங்கம் இருந்து வரு­கின்­றது. முடிந்­த­ளவில் டொலர்­களால் உதவி செய்­யு­மாறு வெளி­நாட்டில் வசிப்­ப­வர்­க­ளிடம் அவர் கேட்­டுக்­கொண்டார். அத்­துடன் அவர் தாய்­லாந்தை உதா­ரணம் காட்டி, நாட்டில் இப்­ப­டி­யா­ன­தொரு நிலை ஏற்­பட்­ட­போது அந்த நாட்டின் அரசர் விடுத்த வேண்­டு­கோ­ளை­யேற்று அந்­நாட்டின் விகா­ரைகள் அவை­க­ளுக்கு சொந்­த­மான சொத்­துக்­களை அர­சுக்கு வழங்­கி­ய­தா­கவும், இந்த இக்­கட்­டான நிலையில் இலங்­கை­யி­லுள்ள பிக்­கு­களும் தமது விகா­ரை­க­ளுக்கு சொந்­த­மா­ன­வை­களை அர­சாங்­கத்­துக்கு வழங்­கு­வது பொருத்­த­மான செயற்­பா­ட­கவும் இது தெரிவு செய்­து­கொண்ட தலை­வ­ருக்­காக வழங்­கு­கின்ற ஒத்­து­ழைப்­பா­கவும் அமையும் என்­ப­தாகக் குறிப்­பிட்டார்.

இந்தக் கூற்­றா­னது நாட்டின் ஜனா­தி­பதி அல்­லது பிர­த­ம­ரூ­டாகத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்ற போதிலும், நாடு தற்­போது வங்­கு­ரோத்து நிலையை அடைந்­தி­ருக்­கின்­றது என்­ப­தாக தேரரின் கருத்­தி­னூ­டாகப் புரிந்­து­கொள்­ளலாம். எனது கடந்த கட்­டு­ரையில் கூட இந்த விடயம் தொடர்­பாக வேறு ஒரு கோணத்தில் குறிப்­பிட்­டி­ருந்தேன். ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்கள் குறித்து நான் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தேன். “அனைத்து ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களும் தம்­மிடம் பொறுப்­ப­ளிக்­கு­மாறு கோரி­யது சாதா­ரண அள­வி­லேனும் ஆரோக்­கி­ய­மான நிலையில் இருக்­கின்ற நாட்­டை­யல்ல. மாறாக, அனைத்து துறை­க­ளிலும் வீழ்ச்­சி­கண்ட நிலை­யி­லுள்ள நாட்­டையே அவர்கள் தங்­க­ளிடம் பொறுப்­ப­ளிக்­கு­மாறு கோரி­யி­ருந்­தனர்.” அதற்கு முந்­தைய வாரம் (டிசம்பர் 06 ஆம் திகதி) கட்­டு­ரையில், “கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கிடைக்­கப்­பெற்­றி­ருப்­பது சிறந்த நிலை­யி­லி­ருக்­கின்ற நாடொன்றல் மாறாக தோல்­வி­ய­டைந்த நிலை­யி­லி­ருக்­கின்ற நாடொன்­றாகும்” என்­ப­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தேன். கட்­ட­மைப்பு ரீதி­யி­லான மாற்­ற­மொன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டா­விடின் இலங்கை வேக­மாக வங்­கு­ரோத்து நிலைக்குத் தள்­ளப்­படும் என்­ப­தாக கடந்த மூன்று வரு­டங்­க­ளாக கூறி­வந்­தி­ருக்­கின்றேன் என்­ப­தனை எனது கட்­டு­ரை­களை தொட­ராக வாசித்­து­வ­ரு­கின்­ற­வர்கள் அறி­வார்கள் என நினைக்­கின்றேன். இந்த எனது நிலைப்­பாடு அண்­மைக்­கா­லத்தில் உரு­வான ஒன்­றல்ல, யுத்தம் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட 2009 ஆண்டின் பின்­ன­ரான 2010 ஆம் ஆண்­டிலே உரு­வா­ன­தாகும்.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி

சுதந்­திரம் கிடைக்க முன்னர் அல்­லது அதற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் சாதி, இன, மத பேதங்­க­ளுக்கு இட­ம­ளிக்­காத அடிப்­ப­டையில் நவீன சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இலங்கை தவ­றி­யதன் விளை­வா­கவே சிங்­கள, தமிழ் இளை­ஞர்கள் ஊடாக வன்­மு­றைகள் இடம்­பெற்­றன. கடந்த காலங்­களில் ஏற்­பட்ட சிங்­கள, தமிழ் கல­வ­ரங்­களில் சாதி, இனம், மதம் என்­பன செல்­வாக்கு செலுத்தும் பிர­தான கார­ணி­க­ளாகக் காணப்­பட்­டன. முப்­பது ஆண்­டுகள் அளவு நீண்ட கால­மாகத் தொட­ராக நடை­பெற்ற வன்­மு­றைகள் பாரி­ய­ள­வி­லான உயிர்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் இழப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்­தது. இந்த வன்­முறைச் சம்­ப­வங்­களின் விளை­வாக ஏற்­பட்ட சமூக, அர­சியல், பொரு­ளா­தார முறை­களில் உண்­டான விகாரத் தன்­மை­யா­னது கட்­ட­மைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக மேற்­கொள்­ளப்­ப­டு­வது அவ­சியம் என்­ப­துடன் அவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­டா­த­போது இலங்கை பாத­க­மான நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வது தடுக்க முடி­யாத ஒன்­றாக அமையும் என்­பது எனது கருத்­தாகும். இந்தக் கருத்தை மக்கள் மயப்­ப­டுத்தும் நோக்கில் “இலங்­கையை மீட்­டெ­டுத்தல்” என்ற தலைப்பில் 2011 ஆம் ஆண்டு புத்­த­க­மொன்­றையும் வெளி­யிட்­டி­ருந்தேன்.
ராவய பத்­தி­ரி­கையின் 25 வருடப் பூர்த்­தி­வி­ழாவின் கருப்­பொ­ரு­ளாக இந்தப் பிரச்­சி­னையே எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. குறித்த நிகழ்வில் அனைத்து சிங்­கள, தமிழ், முஸ்லிம் தலை­வர்­க­ளையும் அழைத்து கட்­ட­மைப்பு மாற்­ற­மொன்­றுக்­கான அவ­சி­யப்­பாட்டை விளக்க முயன்­ற­போ­திலும் அந்த முயற்சி பல­ன­ளிக்­க­வில்லை. அதன் பின்னர் கட்­ட­மைப்பு மாற்­ற­மொன்றின் தேவை­கு­றித்து ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்குத் தெளி­வு­ப­டுத்த முயற்­சித்த போதிலும் அதுவும் பலனளி­க்­காமல் போனது.

கட்­ட­மைப்பு மாற்­ற­மொன்­றுக்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளா­தி­ருப்­ப­தா­னது நாட்டை பாரி­ய­தொரு பிரச்­சி­னைக்கு தள்­ளு­வ­தற்கு கார­ண­மாக அமைந்து ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்­வி­ய­டையும் நிலை ஏற்­ப­டவும் இது கார­ண­மாக அமையும் என்­ப­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தேன். அது அவ்­வாறே இடம்­பெற்­றது.

நல்­லாட்­சியின் விகா­ர­மான நிலை

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை தோல்வி­ய­டையச் செய்­வ­தற்­காக வெளி­யி­லி­ருந்து பொது அபேட்­சகர் ஒரு­வரை பயன்­ப­டுத்­து­வ­தா­னது நாட்டின் அர­சியல் சார்ந்த பய­ணத்தில் பாரிய சிக்­கலை உரு­வாக்­கு­வ­தாக அமையும் என்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தேன். பொது அபேட்­சகர் என்ற எண்­ணக்­கரு மாது­லுவாவே சோபித தேரர் மூல­மாக உரு­வாக்­கப்­பட்­ட­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ரணில் எதிர்ப்­பா­ளர்­க­ளாக இருந்த சில­ரினால் மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்­டது. ரணி­லுக்கு அதி­காரம் கிடைப்­பதைத் தடுப்­ப­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு இருக்­கின்ற பலத்தைப் பயன்­ப­டுத்தி மஹிந்­தவைத் தோல்­வி­ய­டையச் செய்­வது குறித்த செயற்­றிட்­டத்தின் மறைந்­தி­ருந்த நோக்­க­மாக காணப்­பட்­டது. ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தீர்­மா­னிக்­கின்ற உரிமை பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி வசமே காணப்­பட்­டது. குறித்த கட்­சிக்கு வெளி­யி­லி­ருந்து பொது அபேட்­சகர் ஒருவர் போட்­டிக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு அத்­தேர்­தலில் அவர் வெற்­றி­பெ­று­வா­ரானால் அது ஒரு பாரிய பிரச்­சினை உரு­வாக்­கு­வ­தாக அமையும் என்­ப­தாக நான் கரு­தினேன்.

நான் அது­கு­றித்து சோபித தேர­ரிடம் கதைத்­தி­ருக்­கின்றேன். அது குறித்து கவ­ன­மாக செவி­ம­டுத்த சோபித தேரர், திரும்ப முடி­யா­த­ள­வுக்கு குறித்த வேலைத்­திட்டம் முன்­னோக்கி சென்­றி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்டார். நான் இது­கு­றித்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ருடன் கதைத்­தி­ருக்­கின்றேன். ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யிடம் தாம் போட்­டி­யி­டு­வ­தாகக் கூறி ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறும், ஆரம்­பத்தில் குழப்­ப­மான நிலை­யாக அது உரு­வெ­டுத்­தலும் வேட்­பு­மனு கொடுக்கும் சந்­தர்ப்பம் வரும்­போது குழப்­பங்கள் அனைத்தும் தீர்ந்து ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றி­கொள்ள முடியும் என்­ப­தா­கவும் நான் குறிப்­பிட்டேன். விடயம் குறித்து அவரால் புரிந்­து­கொள்ள முடிந்த போதிலும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­ம­ளவு தன்­னம்­பிக்கை அவ­ரிடம் இருக்­க­வில்லை.

மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது அபேட்­ச­க­ரா­வ­தற்கு சம்­மதம் தெரி­வித்­ததன் பின்னர் அவ­ரது பின்­ன­ணியின் அடிப்­ப­டையில் அவரை ஒரு கைப்­பொம்­மை­யாக பயன்­ப­டுத்­தலாம் என்­ப­தாக ரணில் நினைத்­தி­ருந்­த­தாகத் தோன்­று­கின்­றது. எனினும் ஜனா­தி­பதித் தேர்­தலை வெற்றி கொண்டு ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­னதன் பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கைப்­பொம்­மை­யாக செயற்­ப­டு­வ­தற்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­ப­வில்லை. புரிந்­து­ணர்­வுடன் ஒரு­வ­ருக்­கொ­ருவர் விட்­டுக்­கொ­டுத்து செயற்­படும் மன­நிலை இந்த இரு­வ­ரி­டமும் காணப்­ப­ட­வில்லை. இறு­தியில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்கள் இரு­வ­ருமே மக்­களின் நகைப்­புக்­குள்­ளாகும் நிலையை அடைந்­தார்கள்.

கட்­டுக்­கோப்­பில்­லாத பயணம்

ஜனா­தி­பதி தேர்தல் வெற்­றி­கொண்­ட­தனைத் தொடர்ந்து தாம­திக்­காமல் பாரா­ளு­மன்ற தேர்தல் ஒன்­றிற்­காக சென்­றி­ருப்பின் பாரா­ளு­மன்­றத்தில் பாரிய பலத்­தினைப் பெற்­றுக்­கொள்­­வ­தற்­கான வாய்ப்பு ஐ.தே.கவுக்கு இருந்­தது. அவ்­வாறு செயற்­ப­டாமல் மஹிந்த ராஜபக் ஷவுக்கு அதிக ஆத­ர­வி­ருந்த பாரா­ளு­மன்­றத்­துடன் 100 நாள் வேலைத்­திட்­டத்தை மேற்­கொள்­வ­தற்­காக எத்­த­னித்து, அதன் நோக்­கங்­க­ளைக்­கூட நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யாமல் போனது மாத்­தி­ர­மன்றி, பாரா­ளு­மன்ற பலத்தைப் பெறு­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளையும் இழந்­து­கொண்­டனர்.

நல்­லாட்­சியை நியா­யப்­ப­டுத்­தி­ய­வர்கள் ஊழல் என்­ப­தற்­காக வழங்­கிய எண்­ணக்­கரு நியா­ய­மா­ன­தல்ல. பாரி­ய­ளவில் இடம்­பெறும் ஊழல்­களை நாட்­டுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது மஹிந்த ராஜபக் ஷ மூல­மா­க­வல்ல. அது 1977 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னாலே ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. அதன்பின் வந்த அர­சாங்­கங்கள் பொதுச் சொத்­துக்­களை கொள்­ளை­யிடும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­வந்­தன. அதன் அடிப்­ப­டையில் மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இந்த நடை­மு­றையின் அளவில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டதே தவிர அது மஹிந்த ராஜபக் ஷ வின் ஆட்­சிக்­கா­லத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஒன்­றல்ல.

எனினும், பாரிய அள­வி­லான ஊழல்கள் மஹிந்த ராஜபக் ஷ காலத்­தி­லேயே ஆரம்­ப­மான ஒன்­றாகக் கருதும் போக்கு நல்­லாட்சி ஆத­ர­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டது. இது மஹிந்த ஆட்­சிக்கு எதி­ரான எண்­ணப்­பாடு கொண்­ட­வர்­களின் மனதில் பாரிய தாக்கம் செலுத்­து­வ­தாக அமைந்­தன. ஊழல்கள் குறித்து பரி­சோனை மேற்­கொள்­வ­தை ராஜபக் ஷ காலத்­துடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தாமல் அதற்கு முந்­தைய காலங்கள் தொடர்­பிலும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கு­மானால் அந்த திட்­டத்­திற்கு கிடைக்கும் வர­வேற்­பா­னது சிறந்­த­தாக அமைந்­தி­ருக்கும். நான் முன்­னைய காலங்­களில் சுட்­டிக்­காட்­டிய விதத்தில் தத்­த­மது குடும்ப விவ­கா­ரங்­க­ளுக்­காகப் பொதுச் சொத்­துக்­களைப் பயன்­ப­டுத்­து­வது ஒரு சிறந்த செய­லாகக் கரு­த­மு­டி­யாது. எனினும், அவ்­வா­றான தவ­றுகள் ஜய­வர்­தன, பிரே­ம­தாச, சந்­தி­ரிக்கா போன்ற ஜனா­தி­ப­திகள் மூலமும் நிகழ்ந்­தி­ருந்த நிலையில் அவை குறித்து கவனம் செலுத்­தாது மஹிந்த ராஜபக் ஷவின் தவ­று­களில் மாத்­திரம் கவனம் செலுத்­து­வது நியா­யப்­ப­டுத்த முடி­யாத ஒரு விட­ய­மாகும். தவறு செய்­தி­ருக்கும் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­தாக அமையும் விதத்­தி­லான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டாமல் முறை­யற்ற விதத்தில் ராஜபக் ஷ விரோதப் போக்­கொன்றைக் கடைப்­பி­டித்­த­தா­னது ராஜபக் ஷ மீண்டும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான வாய்ப்­பாக ராஜபக் ஷ ஆத­ர­வா­ளர்­க­ளினால் சிறப்­பாகப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்­டது.

கோத்­தா­ப­யவின் வெற்றி

தேசியப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்குத் தேவை­யான கட்­ட­மைப்பு மாற்­றங்­க­ளுக்­கான முன்­னெ­டுப்­பு­களை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொள்­ளா­ம­லி­ருந்­தது மாத்­தி­ர­மன்றி இன, மத பேதங்கள் உரு­வா­கு­வ­தற்­கான நிகழ்­வுகள் தலை­தூக்­கும்­போது அவற்றை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளாமல் ஒதுங்­கி­யி­ருந்­த­தது. இது நாட்டில் மத பேதங்கள் அதி­க­ரிப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்­தது. இந்­நிலை அர­சாங்க ஆத­ர­வா­ளர்­களின் தொகை குறை­வ­டைந்து ராஜபக் ஷ ஆத­ர­வா­ளர்­களின் தொகை அதி­க­ரிக்க கார­ண­மாக அமைந்­தது.

நாட்டில் ஒரு பாரிய நிதி நெருக்­கடி நில­வு­வதை அறிந்த நிலை­யிலும் தமது வாக்குப் பெட்­டி­களை நிரப்­பிக்­கொள்­வ­தற்­காக பல விநோ­த­மான செயற்­பா­டு­களில் நல்­லாட்சி அர­சாங்கம் ஈடு­பட்­டது. பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்­தினை பத்­தா­யிரம் ரூபாவால் அதி­க­ரித்­தது இதற்­கான சிறந்த உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம். சம்­­பளம் அதி­க­ரிப்­ப­தற்­கான இய­லு­மை­யில்­லாத நிலையில் அன்றைய சம்­பள அதி­க­ரிப்பின் கார­ண­மாக 160,000 மில்­லியன் ரூபா மேல­தி­க­மாக செல­விட வேண்­டிய நிலை அன்­றைய அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டது. 2016 ஆம் ஆண்டில் அதற்­காக ஏற்க வேண்­டி­யேற்­பட்ட மேல­திக நிதியின் அளவு 135,489 மில்­லியன் ரூபா­வாகும். 2017 ஆம் ஆண்டு 140,359 மில்­லியன் ரூபா­வாகும். நாடு வங்­கு­ரோத்து நிலையை நோக்கிச் செல்­கின்­றது என்­பதை தெரிந்த நிலை­யிலும் அள­வில்­லாமல் வெளி­நாட்டுக் கடன்­களைப் பெற்று தேவை­யற்ற விட­யங்­க­ளுக்­காக அர­சாங்கம் ஊதா­ரித்­த­ன­மாக செல­விட்­டது. உரு­வாக்கி முடிக்க முடி­யாமல் போன அர­சியல் யாப்­புக்­காக மேற்­கொண்ட செலவு ஜீ. எல். பீரிஸின் கூற்­றுக்­கி­ணங்க 13,000 மில்­லியன் ரூபா­வாகும். வங்­கு­ரோத்து நிலையை நோக்கி சென்­று­கொண்­டி­ருக்கும் நாடொன்று விநோ­த­மான அடிப்­ப­டையில் தேவை­யற்ற செல­வு­களை மேற்­கொண்டு வந்­தி­ருக்­கின்­றது. இது நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு மாத்­திரம் உரிய நடை­மு­றை­யல்ல. 1977 ஆம் ஆண்டு முதல் ஆட்­சிக்கு வந்த அனைத்து அர­சாங்­கங்­களும் இது­போன்ற அமைப்­பி­லேயே செயற்­பட்­டி­ரு­கின்­றன. கடன்­களை வினைத்­தி­ற­னாகப் பயன்­ப­டுத்­திக்­கொள்ளும் திட்­டங்கள் இருப்பின் கடன்கள் பெற்­றுக்­கொள்­வதில் தவ­றே­து­மில்லை. ஆனால், இலங்கை இது­வரை காலமும் வெளி­நாட்­டி­லி­ருந்து பெற்­றுக்­கொண்ட கடன்­களின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட எந்த திட்­டத்­தி­லி­ருந்தும் குறித்த திட்­டத்­திற்­காக பெறப்­பட்ட கடன் தவ­ணையைச் செலுத்­து­ம­ள­வுக்குக் கூட வரு­மா­னத்தைப் பெற்­ற­தில்லை. அதி­வேக பாதை­க­ளி­லி­ருந்து கிடைக்­கின்ற வரு­மா­னங்கள் அந்த வீதி­களைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக மாத்­தி­ரமே போது­மா­ன­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

நல்­லாட்சி அர­சா­னது இன, மத பேதங்­களை ஏற்­ப­டுத்­து­கின்ற அடிப்­ப­டையில் செயற்­ப­டாத போதிலும் அவ்­வப்­போது தோன்­று­கின்ற மதப் பிணக்­கு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற மதப் பிணக்­கு­க­ளுடன் தொடர்­பு­டைய உணர்­வு­களை தூண்டும் செயற்­பா­டு­களை உரிய முறையில் முகா­மைப்­ப­டுத்­து­வ­தற்கும் தவ­றி­ய­தா­னது இலங்­கையை மீண்டும் ஓர் இன­வாத யுத்­தத்­துக்கு இழுத்துச் செல்லும் நிலைக்குத் தள்­ளு­வ­தாக அமைந்­தது என்­ப­தாகக் குறிப்­பிட வேண்டும். இங்கு விநோதம் என்­ன­வென்றால், இருப்பு தொடர்­பான அச்சம் சிறு­பான்­மை­யி­ன­ரை­விட பெரும்­பான்­மை­யி­ன­ராக இருந்த சிங்­க­ள­வர்­க­ளி­டமே அதி­க­மாக காணப்­பட்­டது. அவர்­க­ளி­ட­மி­ருந்த இந்த மன­நி­லை­யா­னது இயல்­பா­கவே அவர்­க­ளுக்குள் உரு­வான ஒன்­றல்­லாமல் செயற்­கை­யாக உரு­வாக்­கப்­பட்டு அவர்­க­ளது மன­து­களில் பதிய வைக்­கப்­பட்­டவை என்­ப­தா­கவே குறிப்­பி­ட­வேண்டும். அவர்­க­ளி­ட­மி­ருந்த இந்த மன­நிலை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் இன்னும் ஆழ­மாகப் பதிந்­து­கொண்­டது. கோத்­தா­பய ராஜபக் ஷவின் பாரிய வெற்­றி­யா­னது மேலே குறிப்­பி­டப்­பட்ட சமூக, அர­சியல், பொரு­ளா­தார பின்­ன­ணி­யி­லேயே இடம்­பெற்­ற­தாகக் குறிப்­பி­ட­வேண்டும்.

கோத்­தா­பய எதிர்­கொள்­ள­வேண்­டிய சவால்கள்

கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றி­யுடன் ஐ.தே.க. உட்­பட எதிர்க்­கட்­சிகள் அனைத்தும் உறைந்­து­போன நிலைக்­குள்­ளா­கி­யுள்­ளன. ஆட்சி மாற்­ற­மேற்­பட்டு ஒரு மாதம் கழிந்­து­விட்ட போதிலும் அவர்கள் இன்னும் சுய நினை­வுக்குத் திரும்­பி­ய­தாகத் தெரி­ய­வில்லை. கோத்­தா­ப­யவின் அடுத்­த­கட்ட நகர்­வுகள் எதிர்க்­கட்­சி­களின் சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய நிலை­யேற்­ப­ட­லா­மென எண்ண முடி­யாது. எனினும், அவ­ருக்­கான வெளி­யி­லி­ருந்து வரக்­கூ­டிய வித­மாக எந்த சவாலும் இல்­லா­த­போ­திலும் உள்­ளி­ருந்தே சவால்கள் விடுக்­கப்­ப­டலாம். ஜனா­தி­ப­தியின் வெற்­றிக்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­த­வர்கள் என்ற அடிப்­ப­டையில் பிக்­கு­களை அவர் மகிழ்ச்­சிப்­ப­டுத்த வேண்டும். பிக்­கு­க­ளினால் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்ற விட­யங்­களை மாத்­தி­ரமே அவரால் செயற்­ப­டுத்த முடி­யு­மாக இருக்கும். அத்­துடன் பிர­த­ம­ரான சகோ­த­ர­ரையும் மகிழ்ச்­சிப்­ப­டுத்த வேண்டும். நல்­லாட்சி காலத்தைப் போன்றே மீண்டும் நாட்­டுக்கு இரண்டு தலை­வர்கள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றனர். அவர்­களில் முதன்­மை­யா­னவர் யார் என்­பது தெளி­வில்­லாது காணப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் போன்­றல்­லாது இவர்கள் இரு­வரும் ஒரே குடும்­பத்­தி­லி­ருந்து வந்­த­வர்கள் என்ற போதிலும் இவர்­க­ளது அபி­லா­ஷை­களில் வேறு­பா­டுகள் இருக்­க­மு­டியும்.

புதிய ஜனா­தி­பதி ஆட்­சிக்கு வரும்­போது நல்ல நிலையில் அல்­லாது தோல்­வி­கண்ட நிலையில் இருக்கும் நாடு தொடர்­பான பிரச்­சினை புதிய ஜனா­தி­பதி முகம்­கொ­டுக்­க­வி­ருக்கும் மிகப்­பா­ரிய சவா­லாக குறிப்­பி­டலாம். இது இன, மத ரீதி­யான உச்ச அளவில் பிள­வு­பட்­டி­ருக்­கின்ற நாடாகும். ஊழல்­களால் அழு­கிப்­போன நாடாகும். உற்­பத்தி, வியா­பாரம் என்­பன வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கின்ற நாடாகும். கடன்­ப­டு­நிலை அதி­க­ரித்து வங்­கு­ரோத்து நிலையை அண்­மித்­தி­ருக்­கின்ற நாடாகும். பெற்­றுக்­கொண்ட கடன்­க­ளுக்­காக கடன் தவ­ணையும் வட்டிக் கொடுப்­ப­ன­வு­மாக வருடம் ஒன்­றுக்கு 4000 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செலுத்த வேண்­டி­யி­ருக்­கின்­றது. இது வரு­டாந்த வரு­மா­னத்தில் 115 சத­வீ­த­மாகும்.

பண்­டா­ர­நா­யக்­க­விடம்  கற்­றுக்­கொள்ளல்

இந்­நி­லை­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுப்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. ஒரு மதத்தை அல்­லது இனத்தை மாத்­திரம் முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி அதி­கா­ரத்­திற்கு வரும் ஒரு ஆட்­சி­யாளன் சர்வ மதங்­களை அனு­ச­ரிக்கும் தலைவன் முகம்­கொ­டுக்கும் பிரச்­சி­னை­க­ளை­விட அதி­க­ள­வி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்­டி­யி­ருப்­ப­துடன் அதற்­காக அதி­க­ள­வி­லான சிரத்தை எடுக்க வேண்­டியும் இருக்­கின்­றது. சிங்­கள இனம் அல்­லது பௌத்த மதம் ஆபத்­தொன்றை எதிர்­நோக்­கு­கி­ன­்றது என்­பது போன்ற சிறிய பிரச்­சி­னை­க­ளை­விட நாடு பாரிய பொரு­ளா­தார ரீதி­யான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கின்­றது.
1956 ஆம் ஆண்டில் பிர­தமர் பண்­டா­ர­நா­யக்­க­வினால் முகம் கொடுக்க நேர்ந்த துர­திஷ்­ட­வ­ச­மான சில விட­யங்கள் ஊடாக நாட்டின் புதிய ஜனா­தி­ப­திக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் இந்த நேரத்தில் கற்­றுக்­கொள்ள வேண்­டிய சில விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

1956 ஆம் ஆண்டில் பண்­டா­ர­நா­யக்க, சிங்­கள பௌத்­தர்­களின் உணர்ச்­சி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பதன் மூல­மாக ஆட்­சிக்கு வரு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்ட போதிலும் அவர் ஓர் இன­வாதத் தலை­வ­ரா­க அல்­லது மத­வாதத் தலை­வ­ராக இருக்­க­வில்லை. ஆட்­சிக்கு வந்­ததன் பிறகு தன்னை ஆட்­சி பீடம் ஏற்­றிய மத­வாத அமைப்­புக்­க­ளுக்கு கட்­டுப்­ப­டாது நியா­ய­மான முறையில் நடந்­து­கொள்­வ­தற்­கான இய­லுமை தனக்கு கிடைக்­கப்­பெறும் என்­ப­தாக அவர் நினைத்­தி­ருக்­கக்­கூடும். சிங்­க­ள­வர்­க­ளுக்கு அவர்­க­ளது மொழி உரி­மையை வழங்கும் போது, வட, கிழக்குப் பிர­தே­சங்­களில் தமிழ் மொழி மூல­மாக அவர்­க­ளது தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்­கான உரி­மையை தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான திட்டம் அவ­ரிடம் காணப்­பட்­டது. அதற்­காக அமைக்­கப்­பட்ட சட்­ட­மூல வரை­வு­கூட அவ­ரிடம் இருந்­தது.

எனினும், அது தொடர்­பாக பாரா­ளு­மன்றக் குழுக்­க­ளுடன் கதைக்­கும்­போது தமிழ் மொழிக்கு இட­ம­ளிக்­காது சிங்­கள மொழிக்கு மாத்­திரம் என்ற கொள்­கையை ஆணித்­த­ர­மாக முன்­வைத்தார். எனவே தன்­னி­ட­மி­ருந்த மொழிக்­கொள்கை தொடர்­பான சட்­ட­மூ­லத்தை அவர்­க­ளிடம் சமர்ப்­பிக்­காது பொருத்­த­மான வரை­வொன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக செயற்­கு­ழு­வொன்றை நிய­மித்தார்.

குறித்த செயற்­கு­ழுவின் ஊடாக தமிழ் மொழிக்கு எந்­த­வி­த­மான இடமும் வழங்­கப்­ப­டாத அமைப்பில் எல். எச். மெத்­தா­னந்த உரு­வாக்­கிய மாதிரி மொழிச் சட்­ட­மூ­லத்­தினை சட்­ட­மூ­ல­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்குத் தெரி­வு­செய்­தனர். அதற்கு எதி­ராக தமிழ் மக்கள் எதிர்ப்­பினை தெரி­வித்­த­போது பண்­டா­ர­நா­யக்க செல்­வ­நா­ய­கத்­துடன் ஒப்­பந்­த­மொன்றை ஏற்­ப­டுத்­திக்­கொண்டார். அதற்கு எதி­ராக பௌத்த பிக்­குகள் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்தபோது பண்டாரநாயக்க உருவாக்கிய ஒப்பந்தம் அவரால் கிழித்தெறியப்பட்டது. அத்துடன் நாட்டில் முதன் முறையாக பாரியதொரு சிங்கள – தமிழ் கலவரமொன்றும் ஏற்பட்டது. பிரதமர் பண்டாரநாயக்க பெளத்தபிக்கு ஒருவரால் கொல்லப்பட்டதுடன், குறித்த அரசியல் நாடகமானது முடிவுக்கு வந்தது. சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற முதலாவது அரசியல் கொலையாக இது குறிப்பிடப்படுகின்றது. பண்டாரநாயக்கவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக முயற்சிசெய்த பௌத்த பிக்குகளின் அமைப்புக்களில் பிரதான அமைப்பாக கருதப்படுகின்ற ஐக்கிய பிக்குகள் முன்னணியின் அமைப்பாளராக கருதப்படும் களனி ரஜமகா விகாரையின் தலைவரான மாபிடிகம புத்த ரக்கித தேரரே பண்டாரநாயக்கவின் கொலைக்கான பிரதானமானவராகக் கருதப்படுகின்றார்.

இன அல்லது மதவாத அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஆட்சிக்கு வருவது இலகுவான விடயமென்ற போதிலும் அவர்களது அழுத்தங்களுக்கு உட்பட்ட அமைப்பில் நாடொன்றை ஆட்சி செய்வது மிகவும் சிரமமான விடயமாகும். நாட்டை தற்போதிருக்கும் நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமாயின் இலங்கையிலிருக்கின்ற தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணப்படவேண்டும். சிங்கள பௌத்தரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு தலைவருக்கு அவ்வாறு நம்பிக்கையைப் பெற்றிராத தலைவர் ஒருவரைவிட குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சிங்கள மக்கள் ஏற்கும்விதமாக வழங்க முடிவதாக அமையும். சிங்கள பௌத்த கிளர்ச்சிகளை முறையாக முகாமைப்படுத்திய விதத்திலும், இன, மத அடிப்படையில் பிரச்சினைகளை அணுகாமல் பரந்த பார்வையைச் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்கான ஆளுமையும் தைரியமும் குறித்த தலைவரிடம் காணப்படுமாயின் மாத்திரமே இது சாத்தியமானதாக அமையும்.

இவ்வாறானதொரு பிரச் சினையின்போது முழுமையான கட்டமைப்பு மாற்றமொன்றை நோக்காகக் கொண்ட மக்கள் யாப்பு உருவாக்கம் என்பது மாத்திரமே பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கான சிறந்த தெரிவாக அமைய முடியும். அது அரசாங்கத்தை மாத்திரமன்றி அனைத்து அரசியல் கட்சிகள், இனம், மதம், சாதி என்ற பேதங் களின்றி அனைத்து மக்க ளையும் நாட்டை மீட்டெடுப் பதற்காக ஒன்றுசேர்ப்பதாக அமையும்.

நாட்டின் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசியல் கட்சிகளை மாத்திர மன்றி பொதுமக்களையும் இணைத்துக்கொண்டு செயற் படுவதனால் அதற்காக சர்வ தேச அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை கலந்துரையாடி அவற்றைத் தீர்ப்பதற்கான சூழலை அது பெற்றுத்தருவதாக அமையும்.-vidivelli

  • விக்டர் ஐவன்

Leave A Reply

Your email address will not be published.