சுவிஸ் தூதரக கடத்தல் விவகாரம் பின்னணி ஆராயப்பட வேண்டும்

0 712

கடத்திச் சென்று தடுத்து வைக்­கப்­பட்டு பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் இலங்­கையின் சுவிட்­சர்­லாந்து தூத­ரகப் பெண் அதி­காரி விவ­காரம் உள்­நாட்டில் மாத்­தி­ர­மல்ல சர்­வ­தே­சத்­திலும் சர்ச்­சை­களைக் கிளப்­பி­யுள்­ளது.

சுவிட்­சர்­லாந்து தூத­ர­கத்தின் விசாப் பிரிவின் சிரேஷ்ட குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­காரி கானியா பெனிஸ்ட பிரான்­சிஸே இவ்­வாறு கடத்­தப்­பட்டு துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்தச் சம்­பவம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நடை­பெற்­ற­தாகத் தெரி­விக்­கப்­பட்டு சுவிட்­சர்­லாந்து தூத­ர­கத்தின் இரண்டாம் நிலை அதி­காரி ராகுல் இன்பெச் மூலம் முறைப்­பாடு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது என்­றாலும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை குறித்த பெண் அதி­காரி தொடர்பில் எந்தத் தக­வல்­க­ளையும் பொலி­ஸா­ரினால் பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் இருந்­தது. இந்தக் காலப்­ப­கு­தியில் அப்பெண் தனது குடும்­பத்­தா­ருடன் சுவிட்­சர்­லாந்து தூதுவரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் தங்­கி­யி­ருந்­துள்ளார். இந்­நி­லை­யிலே கடந்த 8 ஆம் திகதி நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய அப்பெண் சி.ஐ.டி. க்கு வாக்­கு­மூ­ல­ம­ளிக்க வந்­துள்ளார் என நேற்று முன்­தினம் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற விசா­ர­ணை­க­ளின்­போது அரச சட்­ட­வாதி ஜனக பண்­டார மன்­றுக்குத் தெளி­வு­ப­டுத்­தினார்.

சம்­பவம் தொடர்பில் சுவிட்­சர்­லாந்து தூத­ரக இரண்டாம் நிலை அதி­காரி பொலி­ஸுக்கு எழுத்து மூலம் வழங்­கி­யி­ருந்த முறைப்­பாட்டில் ஐந்து நபர்கள் தனது தூத­ரக அதி­கா­ரியைக் கடத்­தி­ய­தா­கவும் பாட­சாலை பெற்றோர் கூட்­டத்­துக்கு சென்­ற­போது வெள்ளை காரில் வந்­தோ­ராலே கடத்­தப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மேலும் கடத்­தி­ய­வர்கள் இரண்டு மணி­நேரம் தடுத்து வைத்து பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் இலங்­கை­யி­லி­ருந்து சுவிட்­சர்­லாந்­துக்கு தப்­பிச்­சென்ற சி.ஐ.டி. யின் முன்னாள் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா தொடர்பில் விசா­ரித்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

முறைப்­பாட்­டுக்­க­மைய குறித்த பாட­சா­லையைச் சுற்­றி­யுள்ள 6 சி.சி.ரி.வி. கம­ராக்­களை சி.ஐ.டி. யினர் சோதனை செய்­த­போதும் அவ்­வா­றான சம்­பவம் இடம்­பெற்­ற­தற்­கான எந்தத் தக­வலும் வெளி­யா­க­வில்லை. இத­னை­ய­டுத்து சி.ஐ.டி. யினர் குறித்த பெண்ணின் தொலை­பேசி இலக்­கத்தைப் பகுப்­பாய்வு செய்­த­போது கடத்­த­லுக்கு உள்­ளா­ன­தாகக் கூறப்­பட்ட நேரத்தில் ஹுபர் வாடகைக் கார் ஒன்­றினை அவர் பதிவு செய்­துள்­ளமை தெரி­ய­வந்­தது.
அதன்­படி அவர் பம்­ப­லப்­பிட்டி பெல்­ம­யூரா தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்குச் செல்­வது சி.சி.ரி.வி. கம­ராக்­களில் பதி­வா­கி­யுள்­ளது. இந்­நி­லை­யி­லேயே அவர் கடந்த 8 ஆம் திகதி வாக்கு மூல­ம­ளிக்க சி.ஐ.டி. க்கு அழைக்­கப்­பட்டார்.

8 ஆம் திகதி முதல் தொட­ராக நாட்கள் அவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். சட்ட வைத்­திய அதி­கா­ரி­யி­டமும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டார். என்றாலும் பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்­கான அடை­யா­ளங்கள் அவரது உடலில் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. அவர் தனது வாக்­கு­மூ­லத்தில் வெள்ளை கார் உட்­பட அனைத்து தக­வல்­களும் பொய் என நீதி­மன்றில் ஒப்­புக்­கொண்­டுள்ளார். தானே அத்­த­க­வல்­களை தூத­ர­கத்­துக்கு வழங்­கி­ய­தா­கவும் ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

இந்­நி­லையில் பெண் அதி­காரி அர­சாங்­கத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யமை, பொய்­யான தக­வல்­களை வழங்­கி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டு­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் நேற்று ஆஜர் செய்­யப்­பட்டார். அவர் எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

குறிப்­பிட்ட தூத­ரக பெண் அதி­காரி ஏன் இவ்­வாறு செயற்­பட்டார்? இதன் பின்­ன­ணி­யென்ன? இச் சம்­ப­வத்­துடன் அர­சி­யல்­வா­திகள் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­னரா? எனும் விப­ரங்கள் முழு­மை­யாக ஆரா­யப்­ப­ட­வேண்டும்.

இச் சம்­பவம் தொடர்­பான தக­வல்கள் ஒன்­றுடன் ஒன்று முரண்­பட்­டி­ருக்­கின்­ற­மைக்கு காரணம் என்ன? அப்பெண் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதற்கு விடை தேடவேண்டியது அரசினதும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரதும் பொறுப்பாகும். சந்தேக நபரான பெண் இரண்டாவது தடவையாகவும் நாளை 19 ஆம் திகதி அங்கொடை மனநல வைத்திய பிரிவுக்கு முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கான உத்தரவு நீதிவானினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையினை நாடும் சர்வதேசமும் எதிர்பார்த்திருக்கிறது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.