மருத்துவ தவறுக்கு பலியான சிறுமி ஜப்ரா

0 1,085

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்­தி­யரும் தாதி­யர்­களும் விட்ட தவ­றினால் ஒரு சிறு­மியின் உயிர் பறிக்­கப்­பட்ட செய்தி அனை­வ­ரையும் கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் மண்­முனைப் பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் காங்­கே­ய­னோடை எனும் பிர­தேசம் அமைந்­துள்­ளது. இந்த காங்­கே­ய­னோடை பிர­தே­சத்தைச் சேர்ந்த 14 வய­து­டைய உவைஸ் பாத்­திமா ஜப்ரா எனும் சிறு­மியே வைத்­தி­யரும் தாதி­யர்­களும் விட்ட தவ­றி­னால் உயி­ரி­ழந்­த­வ­ராவார்.
காங்­கே­ய­னோடை பத்ர் ஜும்ஆப் பள்­ளி­வாசல் பகு­தியைச் சேர்ந்த பாத்­திமா ஜப்ரா காங்­கே­ய­னோடை அல் அக்ஸா மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்­வி­கற்று வந்தார்.

10 ஆம் தரம் படித்து 11 ஆம் தரத்­துக்கு சித்­தி­ய­டைந்த ஜப்ரா மூன்றாம் தவணைப் பரீட்­சை­யையும் எழுதி சிறந்த பெறு­பேற்­றையும் பெற்­றி­ருந்தார். 2004 டிசம்பர் 26 சுனாமி அடித்து மூன்று நாட்­களில் பாத்­திமா பிறந்­தி­ருந்தார். ஜப்ராவின் குடும்­பத்தில் நான்கு பிள்­ளைகள். ஜப்ரா குடும்­பத்தில் இரண்­டா­வது பிள்ளை. ஜப்ராவின் குடும்பம் மிகவும் வறு­மை­யா­னது. தந்தை கூலிக்கு ஓர் உண­வ­க­மான்றில் உப­ச­ரிப்­பா­ள­ராக தொழில் புரி­கின்றார்.

கடந்த வருடம் மாணவி ஜப்­ராவின் தாடையில் சிறிய கட்­டி­யொன்று ஏற்­பட்டு, அசௌ­க­ரி­யங்­களை உண்டு பண்­ணி­யதால் முதலில் காத்­தான்­குடி வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்­சைக்­காக தாய் அழைத்­துச்­சென்­றதும், குறித்த கட்டி வித்­தி­யா­ச­மா­ன­தென அறிந்து உடன் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­வைத்­தனர். எனினும் அங்கும் இக்­கட்­டியின் தன்­மையை கண்­ட­றிய முடி­ய­வில்லை. பின்னர் உட­ன­டி­யாக மக­ர­கம வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­வைத்து, அங்­கி­ருந்து கிடைக்­கப்­பெற்ற அறிக்­கையின் பிர­காரம் ஜப்ரா­வுக்கு ஏற்­பட்­டி­ருப்­பது புற்­றுநோய் கட்­டி­யென்­ப­தோடு, இரத்­தப்­புற்­று­நோயும் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அடை­யாளம் கண்­டுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை புற்­றுநோய் சிகிச்சைப் பிரிவில் கடந்த 9 மாதங்­க­ளுக்கும் மேலாக தொடர் சிகிச்சை அளிக்­கப்­பட்டு, ஆபத்­தான நிலையை கடந்து வந்த மாணவி ஜபரா கடந்த ஜூலை மாதம் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வீட்­டுக்கு அனுப்பி வைக்கும் போது அவ­ரிடம் வழங்­கப்­பட்ட நோய் நிர்­ணய அறிக்கை கொப்­பியில், ஒவ்­வொரு வாரமும் செவ்வாய்க் கிழ­மை­களில் இங்கு கிளினிக் வந்து இதில் எழு­தி­யுள்ள மருந்­து­களை பெறு­வ­துடன் ஊசி மருந்­தி­னையும் ஏற்றிச் செல்­ல­வேண்டும் என்றும் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அதன்­படி வாரந்­தோறும் தனது தாயுடன், பெரி­யப்­பாவின் ஆட்­டோவில் கிளினிக் சென்று மருந்­து­களை எடுத்துக் கொள்­வதும், ஊசி மருந்­து­களை போட்­டுக்­கொள்­வ­து­மாக இருந்தார்.

கடந்த 03.12.2019 அன்றும் வழமை போல் மாணவி கிளினிக் சென்றார். அங்கு மாதாந்தம் இம் மாண­விக்கு 2 மில்லி கிராம் ஊசி மருந்தே தொடர்ந்து வழங்­கப்­பட்டு வந்­துள்­ளது. ஆனால் அன்­றைய தினம் வைத்­தியர் 20 மில்லி கிராம் மருந்தை மாணவி ஜப்ரா­வுக்கு வழங்­கு­மாறு மாண­வியின் வைத்­திய அறிக்­கையில் எழு­தி­யுள்ளார்.

எழு­தப்­பட்ட மருந்தை பெறு­வ­தற்­காக குறித்த அறிக்கை வைத்­தி­ய­சா­லையின் மருந்­த­கத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. மருந்­த­கத்தில் பிர­தான மருந்து வழங்­குநர் இருக்­கத்­தக்­க­தாக பயிற்சி மருந்­த­கர்கள் ஜப்ராவுக்­கான மருந்தை தயா­ரித்­துள்­ளனர். அறிக்­கையில் எழு­தப்­பட்­டி­ருந்­த­வாறே 20 மில்லி கிராம் மருந்து தயா­ரிக்­கப்­பட்டு மீண்டும் மருந்து விடு­திக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.
இந்த 20 மில்லி மருந்தை ஜப்­ரா­வுக்கு ஏற்ற முற்­பட்ட நேரத்தில் மருந்தின் நிறம் வித்­தி­யா­ச­மாக இருந்­ததால் ஜப்ரா மருந்தை ஏற்ற முற்­பட்ட தாதியைப் பார்த்து, ‘‘மிஸ் இது கூடிய மருந்­தாக இருக்­கின்­றது போல…வழ­மை­யாக தரும் மருந்து போலில்­லையே‘‘ என்று கேட்­டுள்ளார்.

இதை­ய­டுத்து குறித்த தாதி உத்­தி­யோ­கத்தர் பிர­தான தாதி­யிடம் சென்று அந்தப் பிள்ளை இது அதி­க­ரித்த மருந்து என்று கூறு­கின்­றது என்று கேட்க பிர­தான தாதி உத்­தி­யோ­கத்தர் வைத்­தியர் எழு­திய வைத்­திய அறிக்­கையில் 20 மில்லி என எழு­தப்­பட்­டுள்­ளதால் அவ்­வாறே ஏற்­றுங்கள் எனக் கூற தாதியும் ஜப்­ரா­வுக்­கான மருந்தை ஏற்­றி­யுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்­பிய மாணவி ஜப்­ரா­வுக்கு உடல் நிலை மோச­ம­டை­வது போல் தெரி­ய­வர, உடன் புற்­றுநோய் வைத்­தி­ய­சாலை பிரி­வுக்கு தொலை­பேசி எடுத்து விட­யத்தை தெரி­வித்­ததும், நேரம்­பிந்­தாமல் அவ­ச­ர­மாக வைத்­தி­ய­சா­லைக்கு வாருங்கள் எனக் கூறி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து அவர் உட­ன­டி­யா­கவே வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இம் மாண­வியின் உடல் நிலையை அவ­தா­னித்த வைத்­தி­யரும் தாதி­யர்­களும் பதற்ற மடை­யவே பின்னர் அங்கு வந்த இந்தப் பிரி­வுக்குப் பொறுப்­பான புற்று நோய் பெண் வைத்­திய நிபுணர் 20 மில்லி எழு­திய வைத்­தி­யரை கடிந்து கொண்­ட­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

மாணவி ஜப்ராவின் நிலைமை மோச­ம­டைய இரத்த சுத்­தி­க­ரிப்­புக்­காக கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு 03.12.2019 அன்றே கொண்டு செல்­லப்­பட்டு அங்கு இரத்த மாற்று சிகிச்சை செய்­யப்­பட்டு பின்னர் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு 06.12.2019 அன்று கொண்டு வரப்­பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு உயிரைக் காப்­பாற்ற போரா­டி­னாலும் மாணவி ஜப்ர­ாவின் உயிரைக் காப்­பாற்ற முடி­ய­வில்லை.

இறை­வனின் நாட்­டப்­படி மாணவி ஜப்ரா திங்­கட்­கி­ழமை 09.12.2019 மாலை உயி­ரி­ழந்தார். (இன்னா லில்­லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

தவறை ஒப்புக் கொண்ட வைத்­தி­ய­சாலை

இதை­ய­டுத்து அவ­ச­ர­மாக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை நிரு­வாகம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது. இந்த சம்­பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசா­ர­ணை­களை நடாத்தி வரு­கின்­றனர்.

சிறு­மியின் உயி­ரி­ழப்பு மருந்து ஏற்­றப்­படும் போது நடந்த தவ­று­கா­ர­ண­மாக நடந்­தது தான் என்­பதை மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை நிரு­வாகம் வெளிப்­ப­டை­யாக ஏற்றுக் கொண்­டது.

‘‘புற்று நோயால் பாதிக்­கப்­பட்டு மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த காங்­கே­ய­னோடைச் சேர்ந்த 14 வய­து­டைய பாத்­திமா ஜப்ரா என்ற சிறு­மிக்கு கடந்த 3 ஆம் திகதி புற்று நோய் மருந்து ஏற்­றப்­படும் போது நடந்த தவ­று­கா­ர­ண­மாக பக்க விளை­வுகள் ஏற்­பட்டு அதற்­கு­ரிய சிகிச்சை பல­னின்றி 09.12.2019 திங்­கட்­கி­ழமை மாலை உயி­ரி­ழந்­துள்ளார்‘‘ என மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் டாக்டர் கே.கலா­ரஞ்­சனி ஊட­கங்­க­ளுக்கு பகி­ரங்­க­மாக தெரி­வித்தார்.

இது தொடர்பில் சுகா­தார அமைச்­சுக்கு அறி­வித்­துள்­ள­துடன் நடந்த தவறு தொடர்பில் ஆராய்­வ­தற்கு ஆரம்­ப­கட்ட விசா­ர­ணைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த மாண­வியின் உயி­ரி­ழப்பு தொடர்பில் சட்ட வைத்­திய அறிக்கை பெறப்­பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த நிலையில் இந்த சிறு­மியின் பெற்றோர் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு ஒன்றை செய்­தனர்.

இந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்ற நீதி­பதி ஐ.எம்.றிஸ்­வானின் கவ­னத்­திற்கு பொலிசார் கொண்டு சென்­றனர். இதை­ய­டுத்து சல­டத்தை பிரேத பரி­சோ­தனை செய்­யு­மாறு நீதி­பதி ஐ.எம்.றிஸ்வான் உத்­த­ர­விட்­ட­துடன் முழு­மை­யான விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறும் உத்­த­ர­விட்டார்.

பின்னர் சடலம் மட்­டக்­க­ளப்பு சட்ட வைத்­திய அதி­காரி திரு­மதி எச்.பி.டி.குண­சே­க­ர­வினால் நேற்று முன்­தினம் பிரேத பரி­சோ­தனை செய்­யப்­பட்­ட­துடன் சாட்­சி­யங்­களை திடீர் மரண விசா­ரணை அதி­காரி எம்.நசீர் நெறிப்­ப­டுத்­தினார்.

இதை­ய­டுத்து சிறு­மியின் சடலம் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்டு நேற்று முன்­தினம் அஸர் தொழு­கையின் பின்னர் காங்­கே­ய­னோடை பத்ர் ஜும்­ஆப்­பள்­ளி­வா­சலில் ஜனாசா தொழுகை நடாத்­தப்­பட்டு அங்­குள்ள மைய­வா­டியில் பெருந்­தி­ர­ளான மக்கள் கண்ணீர் மல்க நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.
அர­சியல் பிர­மு­கர்கள், முக்­கி­யஸ்­தர்கள் என பெருந்­தி­ர­ளான மக்கள் இந்த சிறு­மியின் ஜனாசா தொழு­கை­யிலும் நல்­ல­டக்­கத்­திலும் கலந்து கொண்­டனர்.
பிரேத பரி­சோ­த­னையின் பின்னர் குறித்த சிறு­மியின் இரத்த மாதி­ரியை இர­சா­யனப் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­து­வது என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இந்த சம்­பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசா­ர­ணை­களை நடாத்தி வரு­கின்­றனர்.

நீதி­மன்­றத்­திலும் பொலிஸார் இது தொடர்பில் வழக்­கொன்றை பதிவு செய்­துள்­ளனர்.

இதில் முதல் பிழை 20 மில்லி என எழு­திய வைத்­தி­ய­ரையே சாரும். இரண்­டா­வது பிழை மருந்­தக மருந்து வழங்­கு­நரை சாரும். மூன்­றா­வது பிழை பிர­தான தாதி­யையும், நான்­கா­வது பிழை மருந்தை ஏற்­றிய தாதி­யையும் சாரும். வைத்­தி­யர்கள் மற்றும் தாதி­யர்கள் என்­ப­வர்கள் உயி­ரைக்­காப்­பாற்ற போரா­டு­கின்­ற­வர்கள். அவர்­களின் பணி மகத்­தா­னது. ஆனால் இவ்­வா­றான சம்­ப­வங்கள் மிகப் பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்தி நிற்­கின்­றது.

வைத்­தி­ய­சாலை நிரு­வாகம் தவ­று­த­லாக நடந்து விட்டது என்று பிள்ளையின் பெற்றோரிடத்தில் மன்னிப்புக் கோரி விட்டு இலேசாக நகர்ந்து சென்று விடலாம்.

ஆனால் பிள்ளையின் பெற்றோரினதும் குடும்பத்தினதும் கண்ணீரும் கவலையும் மிகப் பரிதாபமாக உள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையைப் பொறுத்தவரைக்கும் அண்மைக்காலமாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறான ஒரு சில உயிரிழப்பு சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. நீதிமன்றம் வரை சென்றுள்ள சம்பவங்களும் இங்கு பதிவாகியுள்ளன.

ஜப்ரா கல்வியிலும் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் சிறந்த திறமைகளை வெ ளிக்காட்டிய ஒருவர். இம்முறை 10 ஆம் தரத்தில் மூன்றாம் தவணைப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து புதிய கல்வி ஆண்டில் 11 தரத்தில் கல்வியைத் தொடர ஆசையோடு காத்திருந்தார்.

ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறு. அவன் ஜப்ராவை தன்பால் அழைத்துக் கொண்டான். எல்லாம் வல்ல அல்லாஹ் சிறுமி ஜப்ராவுக்கு ஜென்னத்துல் பிர்தெளஸை வழங்குவானாக.-Vidivelli

  • எம்.எஸ்.எம்.நூர்தீன்

Leave A Reply

Your email address will not be published.