பொதுத் தேர்தலில்: சஜித் தலைமையில் ஐ.தே.க களமிறங்கும்

பேராசிரியர் ஆஷூ மாரசிங்க திட்டவட்டமாக தெரிவிப்பு

0 1,099

எதிர்க்­கட்சி தலைவர் பத­வியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு வழங்கி பொதுத்­தேர்­த­லுக்­கான நட­வ­டிக்­கை­களை அவர் தலை­மையில் முன்­னெ­டுத்து செல்­வ­தற்­கான நட­வ­டிக்கைள் மேற்கொள்ளப்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆசு­மா­ர­சிங்க தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று முன்தினம் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் தோல்­வியைத் தொடர்ந்து பல விட­யங்­களில் மாற்­றங்கள் ஜன­நா­யக ரீதியில் கட்­சிக்குள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­ததை தொடர்ந்து கட்­சியின் தலைவர் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற வேண்­டு­மென்ற அவ­சியம் கிடை­யாது. சர்­வ­தேச அர­சி­ய­லிலும் அந்­நி­லைமை பின்­பற்­றப்­ப­ட­வில்லை. இலங்­கை­யிலும் அவ்­வா­றான நிலை­மைகள் காணப்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்தில் வகித்த பத­வி­களில் மாத்­தி­ரமே மாற்­ற­மேற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கட்­சியைப் பலப்­ப­டுத்தி பொதுத்­தேர்­தலின் வெற்­றியை இலக்­காகக் கொண்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதே தற்­போ­தைய பிர­தான தேவை­யாகக் காணப்­ப­டு­கின்­றது.

எந்­நி­லை­யிலும் கட்­சியைப் பிள­வு­ப­டுத்தும் நோக்கம் எவ­ருக்கும் கிடை­யாது.
எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு வழங்கி அவர் தலை­மையில் பொதுத்­தேர்­த­லுக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கப்­படும் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்­துக்­களும் கிடை­யாது. கட்­சியின் தலை­மைத்­துவம் தொடர்பில் கட்சித் தலைவர் முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முறை­யான பேச்­சு­வார்த்­தை­களை அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் முன்­னெ­டுக்­கின்றார்.

சரி­யான தீர்வு கிடைக்கப் பெற்­ற­வுடன் தலை­மைத்­து­வத்­திலும் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்த அவரே இட­ம­ளிப்பார்.

அமெ­ரிக்­காவின் மிலே­னியம் சவால் ஒப்­பந்தம் குறித்து தற்­போ­தைய அர­சாங்க உறுப்­பி­னர்கள் பல குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தார்கள். ஆனால் இன்று அவர்­களே 70 சத­வீதம் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன என்று குறிப்­பி­டு­கின்­றார்கள். ஒப்­பந்தம் குறித்து அர­சாங்கம் இது­வ­ரையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­வித்­த­லெ­த­னையும் விடுக்­க­வில்லை.அர­சியல் பிர­சா­ரத்­திற்­கா­கவே இந்த ஒப்­பந்தம் ஆளும் தரப்பினரால் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டது. நாட்டுக்கு நன்மை பயக்கும் பல விடயங்களுக்கு அரசியல் விடயங்களை கருத்திற்கொண்டு தடைகளை ஏற்படுத்தியவர்கள் இன்று எந்நிலைப்பாட்டுடன் இவ்வொப்பந்தம் குறித்து தீர்மானங்களை எடுப்பார்கள் என்று மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.